tag:blogger.com,1999:blog-78868219982412800812024-02-08T08:04:05.488-08:00சஞ்சாரம்அரசியல்,சமூக,கலை,இலக்கிய இதழ்ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-47756191400635742122010-11-22T06:55:00.000-08:002010-11-22T07:08:04.265-08:00தமிழில் சிறு பத்திரிக்கைகளுக்கான காலம் முடிந்து போய்விட்டதா?- மு.சிவகுருநாதன்<span style="color: rgb(153, 51, 0);">(</span><span style="color: rgb(153, 51, 0);">"சஞ்சாரம்</span><span style="color: rgb(153, 51, 0);">" </span><span style="color: rgb(153, 51, 0);">இதழை</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">வெளியிடும்</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">முன்பு</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">நாம்</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">அனுப்பிய</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">துண்டறிக்கை</span><span style="color: rgb(153, 51, 0);">.</span><span style="color: rgb(153, 51, 0);">இது</span> <span style="color: rgb(153, 51, 0);">சஞ்சாரம்</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">முதல்</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">இதழ்</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">உள்</span><span style="color: rgb(153, 51, 0);">அட்டையில்</span><span style="color: rgb(153, 51, 0);"> </span><span style="color: rgb(153, 51, 0);">வெளியானது</span><span style="color: rgb(153, 51, 0);">.)</span><br /><br />தமிழில்சிறு பத்திரிக்கைகளுக்கான காலம் முடிந்து போய்விட்டதாக ஓய்வு பெற்ற எழுத்தாளர்கள் அறிவிக்கிறார்கள். சிறு பத்திரிக்கை என்று<br />தொடங்கப்பட்டவையயல்லாம் பெரும் பத்திரிக்கையை நோக்கிய பாய்ச்சலில் இடைநிலை இதழ்களாக உருமாறி வருகின்றன. சிறு பத்திரிக்கை இயக்கத்திலிருந்து பெரும் பத்திரிக்கைக்குத் தாவுவதும் பெரும் பத்திரிக்கைகள் சிறு பத்திரிக்கை வாசகர்களைக் குறி வைத்து இதழ் நடத்துவதும் இங்கு சாத்தியமாகி உள்ளது.<br /><br />மய்யநீரோட்ட இலக்கிய, அரசியல், கலை வடிவங்களுக்கு மாற்றுக்களைக் வெளிக் கொணர்ந்த சிறு பத்திரிக்கை இயக்கம் இன்று தொய்வடைந்துள்ளது. சிறு<br />பத்திரிக்கைக்கான தேவையும், காலந்தோறும் புதிய பல நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் வேளையில் காத்திரமான விமர்சனங்களையோ, படைப்புக்களையோ இடைநிலை இதழ்களில் காண முடிவதில்லை. வாரம், வாரமிருமுறை இதழ்களுக்குப் போட்டியாக இடைநிலை இதழ்கள் எவ்வித கொள்கைகளும் இன்றி பக்கங்களை நிரப்பி வியாபாரத்தைப் பெருக்குகின்றன. சிறு பத்திரிக்கை மற்றும் பெரும் பத்திரிக்கைக்கான இடைவெளி முற்றிலுமாக அழிந்து இரண்டு தளங்களிலும் இயங்குபவர்கள் வியாபார நோக்கங்களுக்காக இணைந்து உலா வருவதை தற்போது அவதானிக்க முடிகிறது.<br /><br />சென்ற நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட<br />எழுச்சியும் தாக்கமும் தற்போதைய காலங்களில் முற்றிலும் சுணக்கம் கொண்ட<br />செயல்பாடுகளும் முடங்கிப் போன பலரது நிலையும் நம்மை கவலை கொள்ள வைக்கின்றன.<br /><br />தேஹ்ரிஅணை, சர்தார் சரோவர் அணை போன்றவற்றை அடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை சுற்று சூழலியர்களிடமிருந்து இந்துத்துவவாதிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரத்தில் கூட அக்பர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கேள்வி கேட்க முடிகிறது. ஆனால் ராமனுக்கான ஆதாரம் கேட்டால் தலைக்கு விலை அறிவிக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் இத்துத்துவாவிடம் இணக்கம் கொண்டிருக்கும் சூழலாக இது இருக்கிறது.<br /><br />பாலியல் கல்வியை எதிர்க்கும்இந்துத்துவா கட்சிக்கு இது பற்றி விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதவாதத்தை எதிர்க்க இன்றுள்ள ஒரே நம்பிக்கை இடதுசாரிகள் மட்டுமே. 123 அணுசக்தி ஒப்பந்தத்தில் இடதுசாரிகள் காட்டிய வேகத்தை போலல்லாது ‘ராமர் பாலம்’ பிரச்சனையில் இடதுசாரிகளின் நிலைப்பாடு மிகவும் கவலைஅளிப்பதாகவே இருக்கிறது.<br /><br />டீக்கடைகளில் தலித்துகளுக்கு இன்னும் தனிக்குவளைதான்.<br />ஆனால் தலித் இயக்கங்களும் தலைவர்களும் தனித்தமிழ் பெயர் சூட்டல்,<br />விடுதலைப்புலிகள் ஆதரவு என்று கலாச்சார வாதிகளாக மாறி வருகின்றனர்.<br />இவர்களுக்கு தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள தலித்துகள் பற்றி எவ்வித<br />அக்கறையும் இல்லை. உத்திரப் பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியின் வெற்றி பிராமணர்களின் வெற்றியாக கணிக்கப்பட்டு, தமிழகத்திலும் அது தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. தலித் -பிராமணர் கூட்டணி இயல்பானது என்று பிரச்சாரம்செய்யப்படுகிறது. அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரது செயல்பாடுகள் மலிவான முறையில் கொச்சைப்படுத்தப்படுகிறது.<br /><br />தலித் அரசியலின் கூர்மை மழுங்கடிக்கப்பட்டு தலித்துகள் கையில் அதிகாரம் என்பது தலைவர்களின் அதிகார போதை -துய்ப்பு என்பதாக புதிய பரிணாமம் கண்டுள்ளது. தலித்துகளில் ஓரங்கட்டப்பட்ட அருந்ததியர்கள் தனியே போராட வேண்டிய சூழல் இருக்கிறது. சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறை பல்வேறு தளங்களில் நிகழ்ந்து கொண்டு வருகிறது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக இந்துத்துவ சக்திகள் பிற்பட்டோரை தூண்டிவிடும் போக்கு உள்ளது.<br /><br />தமிழ்சினிமா எப்போதும் போல் குப்பைகளை உற்பத்தி செய்து கொண்டுள்ளது.<br />தமிழ்ப்பெயர் என்ற ஒரே காரணத்திற்காக இவற்றிக்கு மக்கள் வரிப்பணம் வாரி<br />இறைக்கப்படுகிறது. திராவிட இயக்க சென்சார் போர்டுகளின் உதவியுடன் பெரியார் படம் வெளியிடப்பட்டு அதில் முடிந்தவரை பெரியாரை<br />கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். அவரைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள்<br />அவரின் கொள்கைகளை கொஞ்சம் கூட நினைப்பது இல்லை.<br /><br />அரசியலைப்போலவே இலக்கியத்திலும் வாரிசுகளின் அடாவடித்தனங்களை சகிக்க முடியவில்லை. ‘இலக்கியமேஸ்திரிகள்’ எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள் வாசகன் - படைப்பாளி உறவு மீண்டும் அதிகாரத்தை நோக்கியதாக கட்டமைக்கப்படுகிறது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 102, 102);">இத்தகைய சூழலில் ஒரு சிறு பத்திரிக்கையின் பணி என்னவாக இருக்கமுடியும்? </span><br /><br />01. அனைத்துத் தளங்களிலும் மாற்றுக்களைத் தேடுதல்.<br /><br />02. சிறு பத்திரிக்கைச் சூழலில் இப்போது இருக்கின்ற இடைவெளியை நிரப்புதல்.<br /><br />03. தமிழ்ச்சூழலில் மீண்டும் விவாதத்திற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துதல்.<br /><br />04. எங்கோ ஓர் மூலையில் இயங்கும் ஒத்த கருத்து உடையவர்களை இணைத்துக்கொண்டு செயல்படுதல்.<br /><br />05.நிலவுகின்ற சமூக அமைப்பை கேள்விக்குட்படுத்துவதோடு மறைக்கப்பட்ட /<br />ஒதுக்கப்பட்ட வரலாறுகள் மற்றும் எழுத்துக்களை வெளிக்கொண்டு வருதல்.<br /><br />06. பெண்களின் எழுத்தை அதன் இயல்பான வீச்சோடு தணிக்கைகள் இன்றி வெளிப்படுத்துதல்.<br /><br />07. புலம் பெயர் எழுத்துக்களில் உள்ள மேட்டிமைத்தனங்களை நீக்கி அடித்தட்டு மக்கள் எழுத்தைப் பதிவு செய்தல்.<br /><br />08. அரவாணிகள் பற்றிய எழுத்துக்கள் மூலம் அவர்களது வலியை/வேதனைகளைப் பதிவு செய்வதோடு அவர்களது படைப்பாளுமையை இனம் காணல்.<br /><br />09. கதை, கவிதை, சினிமா, ஓவியம், சிற்பம், இசை போன்றவற்றோடு களஆய்வு, வாய்மொழி வரலாறு போன்றவற்றையும் தொகுத்தல்.<br /><br />10. யதார்த்த வகை எழுத்துக்களின் போதாமைகளை தவிர்க்க நான் லீனியர் எழுத்துக்களை பயன்படுத்தல்.<br /><br />11. வெகுஜன மக்கள் திரளின் சினிமா, இசை, அரசியல் இன்னபிற சொல்லாடல்களின்பால் கவனம் குவித்தல்.<br /><br />12. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்றவற்றால் கேலிக்குள்ளாகும் ஜனநாயகம்/சமூகம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தல்.<br /><br />சார்புஇல்லாத தனித்த செயல்பாடு என்று ஒன்று இருக்க முடியாது. நுண்ணரசியல் சார்பு மற்றும் முன்னுரிமை வேலைத்திட்டங்களின்படி எங்களது செயல்பாடு அமையும். நிறப்பிரிகை, கிழக்கு, அனிச்ச வழியில் சஞ்சாரமும் தலித்துகள், பெண்கள், அரவாணிகள், சிறுபான்மையினர், விளிம்பு நிலையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அனைவரின் ஊடாக அகமும் புறமும் பயணிக்கும். எங்களது கருத்துக்களோடும் செயல்பாட்டோடும் இசையும் தோழர்கள் அனைவரது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம். தங்களின்<br />கருத்துக்களையும் படைப்புகளையும் எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-74471999186649647072010-11-21T09:51:00.000-08:002010-11-21T09:52:50.766-08:00அக(கா)லமாகும் வதந்திகள் -செல்மா பிரியதர்ஸன்சாலையோரங்களில்<br />மரங்களை நட்டவன் கருணைமிக்கவன்<br />எனினும்<br />அந்திநேரங்களில் அடையவரும் பறவைகள்<br />வாகனப் பேரிரைச்சல்களைப்<br />பொருட்படுத்துவதில்லை<br />மரங்களை நட்டது<br />அசோகர்தான் என்று நம்புவது<br />சிறுவர்களின் வரலாற்றுப் பிரம்மைதான்<br />கோடை உலுப்பிய<br />புளியம் பழங்களைப் பொறுக்கிய<br />மூதாட்டிகளில் ஒருத்தி<br />சக்கரங்களில் நசுங்கிப் பிசாசாகத் தொங்குவதும்<br />சாலை வளைவுகளில்<br />தொடர்பலிகள் கேட்பதும்<br />பழங்கால வதந்திகள் என்று ஒதுக்குவதற்கில்லை<br />அரசாங்கம் என்பதும் சேவகம் செய்வது<br />அது சாலைகளை அகலமாக்கும்<br />அப்போது வெட்டிச் சரியும் மரங்கள்<br />பெருங் குரலெடுத்துச் சரியும் ஓசை<br />சாபமாக வானின் மீது படியும்<br />எனச் சொல்பவன் பயங்கரவாதி<br />வளர்ச்சிக்கு எதிரான அவன்<br />எங்காவது தொலைந்து போகலாம்<br />இப்போதும் வீழ்ந்த மரங்களிலிருந்து<br />கூடுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டு போகிறவர்கள்<br />சிறுவர்கள்தான்<br />ஒப்பந்தக்காரர்களின் கன்டெய்னர்கள்<br />சாலைகளை இறக்கிவைத்துவிட்டு<br />கிராமங்களின் நிழல்களை<br />தூக்கிச் செல்கின்றன<br />சாலையோர கல்லறைகளில் பிடுங்கி எறியப்பட்ட<br />கபால எலும்புகளைப் பதியனிட<br />மாற்றிடம் வேண்டி<br />பொக்லைன்களிடம் மன்றாடுவது வேடிக்கைதான்<br />அடையாத அந்திகளில்<br />சிறுவர்கள் சேகரித்த கூடுகளை<br />இரகசியமாய் திறந்து பார்த்துக் கொள்கையில்<br />திசை குழம்பிய பறவைகளின் உள்ளுறைந்த கூச்சல்<br />பெரும்பாலானோர் தங்களது இருப்பிடங்களை<br />கடந்தும் சென்றுகொண்டிருக்க<br />சிலர் சித்த பிரம்மையாகிவிட்டார்கள்<br />நீண்ட கன்டெய்ணர்களுக்காக<br />அகலமாக்கப்பட்ட சாலையின் முடிவில்<br />தெரியும் கட்டிடம் கூட<br />நமது பாராளுமன்றம் இல்லை என்று சொன்னால்<br />இனி அவர்களுக்குப் புரியப்போவதில்லை.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-7240702455681759022010-11-21T09:48:00.000-08:002010-11-21T09:50:24.358-08:00ச.ப்ரியா கவிதைகள்<strong>வெயில்கால இரவு</strong><br /><br />யானையின் தும்பிக்கை<br />லாவகத்துடன்<br />கபளீகரம் நிகழ்த்தும்<br />பொக்ளியர் இயந்திரத்தின் இரைச்சல்<br />பீறிட்டழும் மரங்களின் மரணஓலம்<br />வேர் நரம்புகளை<br />பிடுங்கியெறிந்து<br />நிரத்திய மண்பரப்பு<br />ஆலை கட்டிடங்களுக்கு அடியில்<br />பறவைகளின் கிறீச்சிடல்கள்<br />தொலைந்து போனதொரு வெளியில்<br />பரவியிருக்கிறது<br />சைரனின் சங்கொலி அலறல்<br />சாயக் கழிவு<br />கலந்த குளத்துநீரில்<br />நமக்கான சூரியனின் பிம்பம்<br />மங்கிய ஓளிர்தலில்<br />இன்னமும்<br />என் அறையில்<br />பசுமையும் நீர்செழிப்புமான<br />பச்சை நிறக்காடுகளை<br />ஒளிபரப்பிக் கொண்டேதானிருக்கின்றன<br />டிஸ்கவ்ரியும்<br />நேஷ்னல் ஜியோக்ரபிக் சேனலும்.<br /><br /><strong>வெயில்கால இரவு</strong><br /><br />தூரத்து மலையில்<br />நீண்டு நெளிந்து<br />பற்றியெறியும்<br />நெருப்பின் வேட்கை<br />வனம் விழுங்கிவிட்ட பிறகும்<br />நீள்கிறது<br />அஸ்தமன இருளின்<br />மலைமுகட்டில்<br />ஒரு இரவுச் சூரியனை<br />உயிர்ப்பித்துவிடும்படியாய்!ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-63123142781904903322010-11-21T09:02:00.000-08:002010-11-21T09:04:34.011-08:00உமா மகேஸ்வரி கவிதைகள்<strong>சித்திர அரூபம்</strong><br /><br />எல்லாமும் நகர்கின்றன<br />விரைந்து.<br />நிற்பதேயில்லை அவை<br />திரும்பியும் பார்ப்பதில்லை.<br />அவற்றை<br />மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்<br />மீண்டும்<br />எந்தச் சக்தியும்.<br />பறந்து மறைகின்றன<br />அவை.<br />இந்த அரூபச் சித்திரத்தின்<br />வளைவுகளோடு<br />இழைதல்<br />உன்னை மீறியதா?<br />சுழலும் இதே<br />திகிலின்பத்தில்<br />சுண்டப்பட்டு தொலைந்து<br />சிதறுவதும்?<br /><br /><strong>நுழைதலற்ற கதவுகள்</strong><br /><br />கார்த்திகை மழைநாளின்<br />கரிய இரவுகள்<br />நடக்கின்றன<br />ரகசியக் காலடிகளோடு,<br />கண்காணிப்புகளைத் தவிர்த்து.<br />இன்று உதயத்தின் விழிமூட<br />கிழக்குக் காற்றின்<br />நச்சரிப்புக்களைப்<br />பொருட்படுத்தாமல்<br />நீல வானில்<br />ஒரு அடர்திரை<br />இழுக்கப்படுகிறது.<br />புல்வெளிகளின் முணுமுணுப்பு<br />மூடிய கதவுகளோடு வீடுகள்.<br />இந்தப் பாலைத் தெருவில்<br />தனித்த பயணியின் பாதத்தடங்கள்<br />கடக்கின்றன<br />என் திறந்த வீட்டின் கதவுகளுக்குள்<br />நுழையாமல் தாண்டி.<br /><br /><strong>அழையாமை</strong><br /><br />செல்போன் ஒலியென<br />நடுங்குகிறது பாதி விழிப்பு.<br />கோதிக் கொண்டிருக்கிறது காற்று<br />கந்தலான இரவுகளை.<br />சுருண்ட ஓடுகளோடு<br />குறுகிக் கிடக்கும் காலம்<br />செத்த ஆமையாக.<br /><br />தூர மயான நெருப்பு<br />கேலிக்குளிர் வீசுகிறது<br />என் நாட்களின் மீது<br />அடிக்கடி.<br />உலர்ந்த முத்தங்களில்<br />இருந்து வடியும் சீழ்.<br /><br />உணர்ந்தேயிராத<br />தாய்மை இதழ் தேடி<br />கனகாம்பரத்தைத்<br />தொடுக்கையில்<br />உறுத்தும் பாதச் சிறகு.<br />விரிந்த விரல்களின் சல்லடையில்<br />யாருடையதோ கண்ணீர்.<br />பொருக்குக் காய்ந்த<br />உணர்வுகளுக்குள்<br />புனல் சிறகசைக்க<br />போதுவதேயில்லை<br />ஒற்றை அழைப்பு.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-76649581482911475682010-11-21T09:00:00.000-08:002010-11-21T09:02:03.233-08:00கைக்குட்டைக் கனவுகள் -பிரேம பிரபாதத்தம் கனவுகளை<br />யாருமறியாமல்<br />எடுத்துப் போகிறவர்கள்<br />பாக்யவான்கள்.<br />துவைத்து உலர்த்திய<br />கைக்குட்டையெனினும்<br />இழையின் ஓரங்களில்<br />மடிப்பின் பிளவுகளில்<br />கனவுகள் ஒளிந்திருக்கும்<br />சாத்தியக் கூறுகளுண்டு.<br />முகத்தருகே<br />கைக்குட்டையைக்<br />கொண்டு போக<br />உங்களை முத்தமிட்ட கனவுகள்<br />கண்களை மூடியபடி<br />தவிப்புடன் இருக்கும்<br />மீண்டுமோர் முத்தத்திற்காக.<br />சுவாசம் திணறும்<br />வாசனைத் திரவியங்களால்<br />போதையேறி<br />தள்ளாடிவிழும் கனவுகளை<br />உங்கள் வீட்டிலோ<br />அலுவலகத்திலோயிருந்தால்<br />அப்புறப்படுத்திவிடுங்கள்<br />துளியேனும் தாமதிக்காமல்.<br />முடிவாக ஒன்று<br />இனிமேலாவது<br />உங்கள் கைக்குட்டைகளை<br />நீங்களே பராமரியுங்கள்.<br />குறைந்த பட்சம்<br />கனவுகளின் ரகசியங்களை<br />பாதுகாக்கும் பொருட்டாவது.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-50101759282629693412010-11-21T08:58:00.000-08:002010-11-21T09:00:00.241-08:00இருத்தல் நிமித்தங்கள்... :-பு.க.சாலினிவெளிறிய வானில் வெண்மேகத் திட்டுகள்<br />களிபாளம் விட்ட மனதில் படரும் சஞ்சலப் படிவுகள்<br />மனித முகங்களின் மனப்போக்குவரத்தில்<br />மறைந்து சிதையும் தீற்றல் புள்ளிகள்<br />மின்னல் வேலியில் சருகுகள்<br />விள்ளல் முகம் நோக்கிய உறவுகள்<br />உன்மத்த உலகினையும் ஊழல் உப்பரிகைகளையும்<br />சிறை கொண்டன கேந்திரங்கள்.<br />அன்பின் வறுமை தெளிவின் வெறுமை<br />அன்றாடப் பூபாளம் நாட்காட்டியுடன்<br />மன்றாடும் நீலாம்பரி விழித்துளிகள்<br />மனிதச் சக்கைகளின் அகங்களில்<br />சரள சம்பிரதாயச் சரடுகள்<br />மரத் தக்கைகளுடன் சுவர்களில் புரளும் இதயச் சுவடுகள்<br />கண்களின் எதிர்பார்ப்பு விரிசல்கள்<br />கனவுக் கண்ணாடிஉடைசல்கள்.<br />கவலை எச்சக் கிழிசல்கள் கவியான ஆசைப் பிழியல்கள்<br />ஏகாந்தத்துடன் தனிமை உறவாடல்<br />எதிர்க்காற்றில் கருத்துக் களவாடல்<br />ஏசும் கண்களின் கடமை மீறல்<br />எக்களிக்கும் உயர்வின் உரிமை கோரல்<br />பட்ட மரத்தின் கிளை நுணுக்கங்களாய்<br />விட்டுத் தெறிக்கும் உணர்வுத் துணுக்குகள்<br />அத்தனைக்கும் மொத்தமாய்<br />தென்றலும் தேம்பியவாறு உறையும் மன இடுக்குகளில்<br />ஒளிப்பிழம்படிக்கும் நேரங்களில் நேசம் வார்க்கும்<br />அமுதமான அமைதி அமைக்கும்<br />ஆறுதல் அள்ளித் தெளிக்கும்<br />துன்பச் சுவடுகள் துடித்தழியும்.<br />இவையாவும்<br />இருட்டிய இருத்தலின்<br />ஒர் அமானுசிய அறையின்<br />சன்னல் கம்பிகளால் மட்டுமே.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-1568512908412431962010-11-21T08:57:00.001-08:002010-11-21T08:57:56.081-08:00ராணிதிலக் கவிதைகள்<strong>தோல்வி</strong><br /><br />இன்று காலையில், என் கண்கள்,<br />அந்தச் சூரியனை வேட்டையாடின.<br />என் காதுகளின் மடிப்பில்,<br />அமர்ந்தபடி,<br />குயில்கள் பாடுவதும் தப்புவதே இல்லை.<br />அந்தப் பவழ மல்லியின் நறுமணம்<br />என் மூக்கை நோக்கியே மலர்ந்து கவிழ்கிறது.<br />என் விரல்கள் தீண்ட,<br />வெம்மையில், அக்கனி மேலும் பழுக்கிறது.<br />இக் கருத்த பாதை,<br />என் கால்களிலிருந்து விடுபட்டு ஓடுகிறது. அந்தியையும்<br />சாய்த்து, வீடு திரும்புகிறேன். அறையின்<br />இருள், நிழலெனத் தோன்றுகிறது<br />இன்றைய சாயுங்காலத்திலிருந்து,<br />வழக்கம் போலவே,<br />எப்போதும் போல்,<br />நிழல்களிடம் தோற்பவன் ஆகிறேன்.<br /><br /><strong>இல்லை</strong><br /><br />என் முன்னால்<br />மழை பெய்கிறது<br />பெய்யும் மழைக்குப்<br />பின்புறம் இருக்கும் மலைக்கும் இது தெரியும்.<br />அது வலுத்துப் பெய்யும்போது<br />நீர்த்துளிகளையோ,<br />மலையையோ,<br />நாம் காண முடிவதில்லை.<br />அதன் கனக்கும் ஓசையில்,<br />நம்மின், மலையின் இறுக்கம் தளர்கிறது.<br />அப்போது<br />மலையுடன் நாமும் சேர்ந்து<br />கரைகிறோம் சட்டென, எதிர்<br />பார்க்காத மழை நிற்கிறது. நின்றபின்,<br />பார்க்கும்வேளை,<br />அங்கே மலை இல்லை.<br />மலையிலிருந்து காண,<br />அங்கே நான் இல்லவே இல்லை.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-56168582009029761112010-11-21T08:54:00.000-08:002010-11-21T08:56:09.772-08:00மைத்ரேயி கவிதைகள்1. ஒரு நீண்ட பயணத்தின் போது அறிந்தேன்.<br />நினைவுகளில் என் வாழ்வு மூழ்கிக் கொண்டிருந்ததை<br />ஏழு ஜென்மத்தின் காலங்களை விழுங்கிக் கொண்ட<br />அந்தப் பயணம், அந்த மனிதர்கள், அந்தப் பார்வைகள்...<br />சொப்பனத்தில் வருவது போன்ற கரங்களுடைய<br />அவன் மற்றும் அவனது எழுத்து<br />அதில் ஒர் கணம் நான் பிறந்து வாழலாம்<br />அவன் எனக்காக ஏழு ஜென்மம் எடுப்பான்<br />நான் இன்புறுவேன் நான் அதில் வாழ்ந்து விடுவேன்<br />எனது இதயத்தை எனது உணர்ச்சியை<br />எனது அன்பை<br />குன்றின் மணிகளாகக் கோர்த்து<br />அவன் அணியக் கொடுத்தேன் வரலாற்றிற்காக<br />கடலெல்லாம் நிலமாக மாறும்<br />நிலம் எல்லாம் நீலம் பாய்க்கும்<br />நான் அதில் மூழ்கி விடுவேன்.<br />காய்ந்த சருகான காலம் அந்த வருகை<br />அவனது பொய்கள் அவன் செய்கை அந்தப் பார்வை<br />அந்த முகம் இருளை வரவழைக்கும்.<br />சூன்யம் நிiந்த அவனது வாழ்வு<br />சுற்றுச்சூழல் நண்பர்கள் அனைவரும்<br />தோன்றுவர் வீணடிக்க காலத்தை<br />நினைவு எனக்குள் தோன்ற<br />படைத்திருப்பேன் கவிதையாக அவனை.<br /><br /><br />2. இமைகளை மூடி விழித்திருக்கிறேன்<br />காலையில் புலரும் முன்<br />இருண்ட ஒளியைப் பரப்புகிறது வெளி என்னுள்<br />எனது நீண்ட மெல்லிய பயணம்<br />அழகிய சிற்பங்களை சுமந்த கற்களின் உயரம்<br />இறந்த மரங்களில் உறவாடிய உயிர்கள்<br />நிகழ்ந்து கொண்டிருக்கிறது இவையனைத்தும்<br />அறுபது மணி நேர ஒலியைக் கேட்காததால்<br />எண்ண ஒட்டங்களை என்ன செய்வது<br />கண்களுக்குப் புரியவில்லை<br />கைகள் பதிவு செய்கின்றன<br />மரத்தின் இதழில் உயிர் பெறுகின்றன<br />எனது கவிதைகள்<br />இதயம் உருகியது நீராக அழுகையில்<br />நீரின் குமிழியில் அவனின் பிம்பம்<br />விரல் நுனியில் எடுத்துப் பருகினேன்<br />மணித்துளிகளாய் கரைந்து கொண்டிருக்கிறான்<br />ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன பயணங்கள்<br />எங்கள் தொடர்ச்சியில் இறக்கும் வருடங்கள்<br />ஒன்று இல்லாமல் போகும்.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-15639958204512578502010-11-21T08:49:00.000-08:002010-11-21T08:51:30.539-08:00வி.டி.ஜெயதேவன் கவிதைகள் -தமிழில்: யூமா வாசுகி<p><strong>வகுப்பறை</strong><br /><br />இந்த நான்கு சுவர்களுக்குள்,<br />சன்னல் கதவுகள் அடைக்கப்பட்ட<br />சிறை அறைகளுக்குள் வரிசையாகப் போடப்பட்ட<br />பெஞ்சுகளுக்குக் கீழே<br />பிறர் அறியாமல்<br />சிறிய கால்களை<br />ரகசியமாக ஆட்டியாட்டிக்கொண்டு<br />எல்லாவற்றையும் ரசிக்கிறோம்<br />என்று சிரித்தும்<br />எல்லாம் புரிகிறது என்று<br />இடையிடையே தலையாட்டியும்<br />பாடங்களின் சிறையிலடைக்கப்பட்ட<br />இளம் வண்ணத்துப் பூச்சிகள்.<br />அடி வேரறுத்து<br />சிமெண்ட் சட்டியில் வரையறுக்கப்பட்ட கால<br />பராமரிப்பில்<br />பறித்து நடப்பட்ட மரங்கள்<br />வலையில் வீழ்ந்த கிளிகள்<br />எந்த தெய்வத்தைக் கண்டாலும்<br />மத்தகம் குனிந்து கால் மடக்கி<br />தும்பிக்கை உயர்த்தி வணக்கம் சொல்கின்ற<br />காடு மறந்துபோன<br />குட்டிப் பேரானைகள்<br /><br /><strong>பகல் கனவு</strong><br /><br />வகுப்பறையில்<br />வாயைத் திறக்காதே என்று எரிகின்ற<br />கண்கள் முன்னால் எப்படியோ<br />கொண்டுவந்து உட்கார வைத்து அம்மா போனதும்<br />மனதின் சமையலறையில்<br />பதுங்கி நடந்து,<br />வாசலில் அலைந்து...<br />அதோ,<br />திருட்டுப் பூனை,<br />அம்மா விறகு எடுக்க<br />போன சமயம் பார்த்து<br />மீன் திருட வருகிறது.<br />கன்றுக்குட்டி<br />வேலியில் பாய்கிறது<br />சீதாப்பழ மரத்தின்<br />இலையடர் பசுமையில்<br />பச்சிலைக் குருவி கூக்குரலிடுகிறது...<br />மலைப்பாம்பு ஊர்ந்து ஊர்ந்து</p> <p><span><strong>தமிழில்: யூமா வாசுகி</strong></span></p>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-25483275897680122962010-11-21T08:48:00.000-08:002010-11-21T08:49:02.977-08:00பொதுப்புத்தி -கலாப்ரியாபொதுப் புத்திக்காரனாய்<br />ஞாபகமறதியுடன்<br />போராடிக் கொண்டிருந்தேன்<br /><br />பித்தளைப் பாத்திரத்தில்<br />பெயர் பொறிக்க வந்த<br />போது பழக்கம்<br /><br />வீட்டின் பெயரை<br />கல் வில்லையில்<br />செதுக்கித் தந்து<br />காசு வாங்கிய கையோடு<br />வேற்றூர் சென்று விட்டவன்<br />பெயர் என்ன<br /><br />அணை கட்டும் போது<br />இறந்த தொழிலாளிகளின்<br />அனைத்துப் பெயர்களையும்<br />பொறிக்க ஆரம்பித்த<br />தந்தையே காலமாக<br />முடித்துக் கொடுத்தவன் அவனாம்<br /><br />பசு வலி கண்டரற்ற<br />வெளியேறும் பனிக்குடத்துள்<br />தெரியும் கன்றின் தலை போல்<br />கல்லுக்குள் அசாதாரணச் சிலை<br />காணும் சிறப்புப் புத்திக்காரன்தான்<br /><br />துலங்கி வந்து கொண்டிருக்கும்<br />சிலைகளேனோ கடைசியில்<br />கொருவாய் விழுந்து போகுமென<br />நொம்பலப்பட்டுச் சொல்லிக்<br />கொண்டிருந்தான்<br /><br />எந்தச் “சிற்பியின் நரகத்”தில்<br />எந்த மொழிக் காரர்களுக்காய்<br />என்ன வடித்துக் கொண்டிருக்கிறானோ<br />எழுதப் படிக்கத் தெரியாத அவன்.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-38811364601202178902010-11-21T08:44:00.000-08:002010-11-21T08:47:05.872-08:00ஸ்நேகிதன் கவிதைகள்<strong>123 விளையாட்டு</strong><br /><br />நிபந்தனைகளற்ற இவ்வாட்டத்தில்<br />நாங்கள் 123 மட்டும் சொல்வோம்<br />நீங்கள் ஓட வேண்டும்<br />மரணத்தைத் துரத்த ஓடும் புல்லுண்ணியைப் போல<br />ஏறக்குறைய<br />உங்கள் சூழலும் அதுதான்<br />கொரில்லாவாய்ப் பதுங்கிப் பாய்ந்து<br />தொண்டைக் குழிகளைக் குதறவோ<br />சங்கிலிகளால் பிணைத்து<br />நகரவியலா உங்கள் சுயம் ரசிக்கவோ<br />உமிழ்ந்தே பழக்கப்பட்ட எங்கள் துப்பாக்கிகள்<br />உடல்களில் ரவைகளை நுழைக்கவோ<br />உங்கள் சனங்களின் குறிகளை<br />உங்களைக் கொண்டே அறுக்கப் பணித்தோ<br />எதுவும் நடக்கலாம்<br />நீங்கள் ஓடியாக வேண்டும்<br />நாங்கள் 123 மட்டும் சொல்வோம்<br /><br />விதிமுறைகள் குறித்து<br />மாற்றுக் கருத்தேதுமிருந்தால்<br />வெள்ளை யோனிகளிலிருந்து<br />வழிந்த திரவம் தோய்ந்த<br />துணிகளைக் தருகிறோம்<br />வேண்டுமானால்<br />வாயில் கட்டிக் கொண்டு<br />போராடுங்கள்...<br />போராடுங்கள்...<br /><br /><strong>கடல்கள்</strong><br /><br />மூதாதைகள் பயிற்றுவித்த ரகஸ்யம் சொல்லி<br />பசியாறிப் போகும் கடற்பறவைகளும்<br />முதுகில் மேயும் கலங்களின் புள்ளிகளும் நிறைந்த<br />காட்சிகள் நிறம் மாறும் கடல்கள்<br />ஆதியில் நிச்சலனத்தில் புதைந்திருந்தது<br />மௌனத்தின் கொடூர சுயம் சகிக்கவியலாது<br />வேட்கை கொண்ட தேடலின் உந்துதலில்<br />துடுப்புகள் வலிக்க வலிக்க<br />கயிறுகள் அவிழ்ந்து<br />ஓங்காரத்துடன் துவங்கியது<br />கரைகள் மீதான தேடல்கள்<br />சலித்து விடாத மீறல்கள்<br />பிறகொரு நாளில்<br />ஆழிருட்டுக்குள் புதைந்து போய் விட்ட<br />பேரமைதியின் மையம் தொட<br />ஒன்று கூடி தீர்மானித்த கோப்பைகள்<br />இன்றிரவுக்குள் கடல் குடிக்க வந்தன<br /><br />பின் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது<br />கடலுக்குள் கோப்பைககளும்<br />கோப்பைகளுக்குள் கடலும்<br /><br /><strong>காலத்தின் சிலுவை</strong><br /><br />காலம் தன் தெருக்களில் என்னை<br />சாட்டையாலடித்தபடி இழுத்து வருகிறது<br />கந்தலாடையுடன்<br />படர்ந்த மணற்பரப்பில் குருதியிறைத்தபடி<br />கடந்த காலங்களின்<br />சிலுவையின் கணம் அழுத்த அழுத்தச் சரிகையில்<br />மண்குடுவையிலிருந்த தண்ணீரை<br />நாவுகளுக்கு வார்க்கிறாய்<br />காவற்காரனின் சவுக்கடிகளை ஏற்றுக் கொண்டவளாய்<br />நான் சிலுவையில் சார்த்தப்படுகிறேன்<br />பெருவிரல் நுனியிலிருந்து<br />மெள்ளத் தளர்ந்து<br />கண்களில் நிற்கிறது என் ஆத்மரசம்<br /><br />நீ தண்ணீர் வார்க்கிறாய்<br /><br />விடைபெறுதலுக்கான கையசைப்புகள்<br />அடக்கித் தோற்று பீறிடும் கண்ணீர்<br /><br />மெல்லப் புதைகிறது இமைகள்<br />யுகாதி யுகங்களுக்கான பேரன்பை நிறைத்துக் கொண்டுஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-76409092115882535452010-11-21T08:42:00.000-08:002010-11-21T08:43:58.025-08:00விழிப்பின் இரகசியம் -விழி.பா.இதயவேந்தன்உறங்காமல் எப்போதும்<br />விழித்திருக்க நினைக்கிறேன் நான்.<br />நான் என்பது<br />பெயர் தாங்கியப் பலகை என்பதல்ல.<br />என் உயிர்கள் அடங்கிய<br />உடல், வீடு, உறவு...<br />என எல்லாம் தான்<br />என்னாலும்<br />என்னைச் சுற்றியும் வலைப்பின்னல்களாய்<br />வலம் வருகிறது பார்வையின் துகள்கள்.<br />விழிப்பின் இரகசியம்<br />அறிந்திருக்கவேண்டும் எவரும்<br />அறிஞர்கள், ஆன்மீகவாதிகளின்<br />விழிப்பு என்பது<br />அர்த்தங்கள் எல்லாம் வெவ்வேறானவை <span></span><br />கடும் சூழலில்<br />முட்டிமோதும் பிரச்சினைகளில்<br />இறுகிப்போய் கருகாமல்<br />வெளிச்சம் தேடி உடலென்பது<br />உறக்கம் கொள்ள மறுக்கிறது.<br />உறங்காமல் கிடப்பதைவிட<br />உறக்கத்திலும் தேவை விழிப்பு.ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-40875625573163162712010-11-21T08:36:00.000-08:002010-11-21T08:40:16.583-08:00என்னை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள் -கர்ட் வொன்னெகட்: தமிழில்:சா.தேவதாஸ்<em>1973இல் அமெரிக்காவின் வடக்கு டகோடாவிலுள்ள ஒரு பள்ளியில், கர்ட் வொன்னெகட்டின் நாவல் “Slaughterhouse five” தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அப்பள்ளியின் நிர்வாகக்குழுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதினங்களில் வரும் பாத்திரங்கள் நடந்து கொள்வதையும், பேசும் விதத்தையும் விளக்குகின்றார் கர்ட் வொன்னெகட் (Kurt Vonnegut). அதிகாரத்தின் ஒடுக்குமுறையினையும், எழுத்தாளரின் சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டுவதற்கு இக்கடிதம் நல்லதொரு உதாரணமாகும்.<br /><br />வொன்னெகட் மட்டுமல்லாமல், பெர்னார்ட் மலமூட், ஜேம்ஸ்டிக்கி, ஜோஸப் ஹெல்லர் போன்றோரின் நூல்களும் தொடர்ந்து பள்ளி நூலகங்களிலிருந்து தூக்கி எறியப்படுவதின் பின்புலத்தில், இக்கடிதத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.<br /><br />They Shoot writers, Don’t They? Ed.by George Theiner Faber and Faber,<br />நூலிலிருந்து தமிழ் வடிவம்: சா.தேவதாஸ்</em><br /><br />வடக்கு டகோடாவின் ட்ரேக்கிலுள்ள ஒரு பள்ளியில் அதன் வாயிற்காவலரால் என் நாவல் “Slaughterhouse five” நிஜமாகவே தீயிட்டுக் கொடுத்தப்பட்டது. அப்பள்ளி நிர்வாகக் குழுவின் அறிவுரைப்படி இது நிகழ்ந்தது. இந்நூலின் ஆரோக்கியமற்ற தன்மை குறித்து அக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. விக்டோரியா மகாராணியின் தரநிர்ணயப்படி கூட, ஒட்டுமொத்த நாவலில் இடம்பெறும் ஆட்சேபணைக்குரிய ஒரே வரி இதுதான் “Get out of the road, you domb mother fucker”. அமெரிக்காவின் மாபெரும் தோல்வியாக அமைந்த, 1944ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த Battle of the bulge-ன் போது, அமெரிக்கப் புரோகிதரின் நிராயுதபாணியிலான உதவியாளரை நோக்கி, அமெரிக்கப் படைவீரன் ஒருவனால் பேசப்படும் வாசகம் இது. இந்த உதவியாளன் எதிரியால் சுடப்பட இருக்கிறான்.<br /><br />எனவே, 16.11.1973இல் வடக்கு டகோட்டாவின் ட்ரேக்கின் சார்ல°ஸ்மக்கார்த்திக்குப் பின்வருமாறு எழுதினேன்.<br /><br />‘அன்பான ,<br /><br />“ட்ரேக் பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் ஆக இருக்கும் உங்களுக்கு இக்கடிதத்தினை எழுதுகின்றேன். இப்போது புகழ்பெற்றுள்ள உங்கள் பள்ளிக் கொதிகலனில் அழித்தொழிக்கப்பட்டுள்ள புத்தகங்களின் ஆசிரியர்களுள் ஒருவன் நான்.<br /><br />“உங்கள் நிர்வாகக்குழுவின் உறுப்பினர்களுள் சிலர், என் புத்தகம் தீங்கானது என்று குறிப்பிட்டுள்ளனர். இது என்னை அசாதாரணவகையில் அவமானப்படுத்துகிறது. உங்களைப் போன்றவர்களுக்கு புத்தகங்களும், எழுத்தாளர்களும் மிகவும் நிஜமற்றவர்களாக இருப்பதாக ட்ரேக்கின் செய்தி சுட்டிக்காட்டுகிறது. எந்த அளவுக்கு நான் நிஜமானவன் என்பதை நீங்கள் அறியும் பொருட்டு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.<br /><br />“ட்ரேக்கிலிருந்து வரும் அருவருப்பூட்டும் செய்தியை ஈர்க்கும் விதத்தில் நானும் என் வெளியீட்டாளரும் எதனையும் செய்திருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். இந்தச் செய்தியால் எங்கள் புத்தகங்களை எல்லாம் விற்றுவிடமுடியும் என்று மார்தட்டிய படி நாங்கள் ஒருவரையொருவர் தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு மறுதலித்திருக்கிறோம். தலையங்கப் பக்கங்களில் ஆவேசமான கடிதங்கள் எழுதியிருக்கவில்லை. நீண்ட பேட்டிகள் தந்திருக்கவில்லை. நாங்கள் கோபங் கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டிருக்கிறோம் மற்றும் வருத்தப்படுகிறோம். இக்கடித நகல்கள் வேறுயாருக்கும் அனுப்பப்பட்டிருக்கவில்லை.<br /><br />இப்போது உங்கள் கைகளில் இருப்பது ஒரே பிரதிதான். தம் பிள்ளைகளின் பார்வையிலும், உலகத்தவரின் பார்வையிலும், என் புகழினைப் பாழாக்கும் வகையில் நிறையவே செய்துள்ள, ட்ரேக்கின் மக்களுக்கான மிகவும் அந்தரங்கமான கடிதமாகும் இது. இக்கடிதத்தினை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாகும் தைரியமும் கண்ணியமும் உங்களுக்குண்டா அல்லது இதுவும் உங்கள் கொதிகலனின் பிழம்புகளால் தீக்கிரையாக்கப்படுமா?<br /><br />“இளைஞர்களின் மனங்களுக்கு நஞ்சூட்டி, பணம் பண்ணி அனுபவிக்கின்ற எலிபோன்ற நபர்கள் நாங்கள் என்று எங்களைக் கற்பிதம் செய்து கொள்வதை, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிச் செய்திகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம். சிறுவனாக இருந்தபோதே, கனமான கருவிகளைக் கையாண்டு பண்ணை வேலைகள் செய்த, திடசாலியான 51 வயது நபர் நான். என்னுடைய மூன்று பிள்ளைகளையும், மூன்று வளர்ப்புப் பிள்ளைகளையும் சேர்த்து வளர்த்துள்ளேன். அவர்கள் அனைவரும் நன்றாக உருவாகியுள்ளனர். அவர்களில் இருவர் விவசாயிகள். நான் இரண்டாம் உலகப்போரின்போது, தரைப் படையில் போரிட்டு, விருது பெற்றுள்ளவன். நான் பெற்றிருப்பவை கடும் உழைப்பால் ஈட்டியிருப்பவை. எதன்பொருட்டும் கைது செய்யப்பட்டிருக்கவோ, வழக்குத் தொடரப்பட்டிருக்கவோ கிடையாது.<br /><br />“இளைஞர்கள் என்னைப் பெரிதும் நம்புகிறார்கள்; அயோவா, ஹார்வர்ட் பல்கலைகழகங்கள் மற்றும் நியூயார்க்கின் சிட்டி காலேஜ் ஆகியவற்றில் பணியாற்றிள்ளேன். ஒவ்வொரு வருடமும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் தொடக்க விழாவில் பங்கேற்க, குறைந்த பட்சம் ஒரு டஜன் அழைப்பிதழ்கள் வருகின்றன. வேறெந்த அமெரிக்கப் புதின எழுத்தாளருடையதை விடவும், எனது புத்தகங்கள் அதிகப்படியாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன.<br /><br />“என் புத்தகங்களை வாசிக்க நீங்கள் சிரமம் எடுத்துக் கொண்டால், கல்வி கற்றவர்கள் நடந்து கொள்வது போல் நடக்க முயன்றால், அவை ஆபாசமானவை அல்ல என்பதை அறிந்து கொள்வீர்கள்; எவ்விதமான காட்டுத்தனமும் இருக்கிறதென்று வாதித்திட மாட்டீர்கள். மக்கள் மிக அன்பாகவும், அதிகப் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றே அவை மன்றாடுகின்றன. சில பாத்திரங்கள் முரட்டுத்தனமாய் பேசுவது உண்மையே. ஏனெனில் நிஜ வாழ்வில் மக்கள் முரட்டுத்தனமாய் பேசுகின்றனர். குறிப்பாக சிப்பாய்களும் கடினவேலை பார்ப்போரும் முரட்டுத்தனமாய் பேசுகின்றனர். மிகவும் பாதுகாப்பாயுள்ள நம் குழந்தைகளுக்குக் கூட இது தெரியும். இவ்வார்த்தைகள் சிறுவர்களை அதிகம் பாதிப்பதில்லை என்பது நமக்கும் தெரியும். நாம் சிறுவர்களாய் இருந்தபோது அவை நம்மைப் பாதிக்கவில்லை. நம்மைப் பாதிப்பவை கெட்ட காரியங்களும் பொய் சொல்வதும்தான்.<br /><br />“இவ்வளவு எடுத்துரைத்த பின்பும், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் முனைப்பாக இருப்பீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்: “சரிதான், ஆனால் சிறுவர்கள் என்ன புத்தகங்களை படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எங்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும்.” ஆனால், கடுமையும், அறியாமையும் அமெரிக்கத் தன்மை அற்றதுமான வழியில் அந்த உரிமையைப் பிரயோகித்து, அந்தப் பொறுப்பினை நிறைவேற்றினால், மக்கள் உங்களை மோசமான பிரஜைகளும் முட்டாள்களும் என்றழைப்பர். உங்கள் குழந்தைகள் கூட அவ்விதம் அழைத்திடும் உரிமை பெற்றிருப்பர்.<br /><br />“நீங்கள் செய்திருப்பது குறித்து நாடெங்கிலும் எழுந்துள்ள கூச்சல் - குழப்பத்தால், உங்கள் மாணவர் சமூகம் குழப்பமுற்றுள்ளதாகப் பத்திரிக்கைகளில் வாசிக்கிறேன். நல்லது, ட்ரேக் என்பது அமெரிக்க நாகரீகத்தின் ஓரங்கம் என்பதையும், இவ்வளவு அநாகரிகமாக நீங்கள் நடந்து கொண்டுள்ளதை சக அமெரிக்கர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை என்பதையும் நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள். புத்தகங்கள் என்பவை நல்ல காரணங்களினால் சுதந்திரமானவர்களுக்கு எரியூட்டும் தேசங்களுக்கெதிராக யுத்தங்கள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன என்பதை இதனின்றும் நீங்கள் அறியக்கூடும். நீங்கள் ஓர் அமெரிக்கர் எனில், உங்களுடைய கருத்துக்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கருத்துக்களும் சுதந்திரமாகப் பரவிட அனுமதித்தாக வேண்டும்.<br /><br />“இளைஞர் தம் கல்வி குறித்து உங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும்போது, நிஜமாகவே உங்களிடத்தே ஞானமும் முதிர்ச்சியும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டிட, நீங்களும் உங்கள் நிர்வாக்குழுவும் தீர்மானகரமாக இருப்பின், புத்தகங்களை நிந்திப்பது மற்றும் எரியூட்டுவது என்றும் மோசமான பாடத்தைச் சுதந்திரமான சமூகத்திலுள்ள இளைஞர்களுக்கு கற்பித்தீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.<br /><br />உங்கள் குழந்தைகள் சிறந்த முடிவுகளை எடுத்து உயிர்த்திருக்க வேண்டுமானால், எல்லாவிதமான அபிப்பிராயங்களும் தகவல்களும் அவர்களுக்குப் பரிச்சயமாயிருக்க வேண்டும் என்றும் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். “திரும்பவும் கூறுகிறேன். என்னை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள், நானொரு நல்ல பிரஜை மற்றும் மிகவும் நிஜமானவன்.”<br /><br />இது ஏழாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இது வரையிலும் எந்தப்பதிலும் இல்லை. நியூயார்க் நகரத்திலிருந்து இதனை நான் எழுதும் வேளையில் “Slaughterhouse fivef” பல பள்ளி நூலகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சட்ட ரீதியிலான யுத்தம் இன்னும் குமுறிக்கொண்டிருக்கிறது. முதலாவது சட்டத் திருத்தத்தை மூர்க்கமாக எதிர்க்கின்ற வழக்குரைஞர் களை இப்பள்ளி நிர்வாகம் அமர்த்தியுள்ளது. முதலாவது சட்டத்திருத்தத்தை எதிர்க்கின்ற வழக்கு ரைஞர்களுக்குப் பஞ்சமே கிடையாது - அது என்னவோ, குறுக்குப் புத்தியுள்ளவனின் குத்தகை ஒப்பந்தத்தில் இடம்பெறும் வாசகத்திற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல. <span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-83262406813213859062010-11-21T08:28:00.000-08:002010-11-21T08:34:53.562-08:00 மஞ்சள் காமாலை தடுப்பூசி திணிப்பு அரசு/மருத்துவர்களின் காமாலை பார்வையின் விளைவே -மருத்துவர் வீ.புகழேந்திகுறிப்பிட்ட ஒரு வியாதியால் ஒரு நாட்டில்/ இடத்தில் அதன் பாதிப்பு/இறப்பு விகிதம் அதிகம் இருக்குமானால், தடுப்பூசியின் காரணமாக, அது உறுதியாக தடுக்கப்படும் என்ற விஷயம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தால், அவ்வியாதியை தடுக்க செலவு குறைந்த மாற்று வழிகள் இல்லை என இருக்கும் சமயத்தில் மட்டுமே தடுப்பூசியை பயன் படுத்தி வியாதி வராமல் காப்பது நன்மை பயக்கும்.<br /><br /><span style="font-size:130%;">நம் நாட்டில் மஞ்சள்காமாலை தடுப்பூசியை அமுலுக்கு கொண்டுவர, அரசு/மருத்துவர்கள்/மருந்துக் குழுமங்கள் சொல்கின்ற காரணம்.</span><br /><br />1. இது ஒரு ஆட்கொல்லி வியாதி.<br />2. இதன் பாதிப்பு மக்களிடையே மிகவும் அதிகம். 10 சதவீதம் மக்கள் மஞ்சள் காமாலை நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.<br />3. இந்நோய் பாதிப்பின் காரணமாக ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு இறப்பு நிகழ்வது.<br />4. இந்நோய் காரணமாக ஈரல் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறப்பது.<br />5. இந்த தடுப்பூசி நம்பகமானது, பாதுகாப்பானது... போன்றவை.<br /><br />இனி இவை உண்மைதானா? மக்கள் நலன்தானா? இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்துவதற்கு காரணம்? போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கலாம்.<br /><br />People for Economical and Effective Medicare (PEEM) என்னும் இயக்கத்தைச் சேர்ந்த ஹைதராபாத் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு. பா°கர் ராவ் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.<br /><br />ஆட்கொல்லி, கொள்ளை நோயாக இருக்கும் பட்சத்தில் மட்டும் (அல்லது) கொள்ளை நோயாக உருவாகக் கூடிய அபாயமுள்ள வியாதிகளுக்கு எதிராக மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொறுத்த மட்டில் இது கொள்ளை நோயாகவோ (அ) உருவாகவோ வாய்ப்பு இல்லை என்பதை இருக்கின்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது ஆட்கொல்லி வியாதி என்பதும் உண்மைக்கு புறம்பானது. இவ்வியாதியால் பாதிக்கப் பட்ட பெரும்பாலோர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர். இவ்வியாதி பற்றிய உலகின் மிகச்சிறந்த வல்லுநர் திருமதி Dr. ஷீலா செர்லாக் கூறுவது.<br /><br />“மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் இக்கிருமிகள் (Hepatitis ‘B’ Virus) 100 பேர் உடம்பில் உட்புகும் போது 95 பேருக்கு அதன் உடனடி தாக்கம் (Acute Infection) தெரியும். அதில் 94 பேர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர். இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட 1% கீழானவர்களுக்கே இறப்பு நிகழும் போது இதை எப்படி ஆட்கொல்லி வியாதி என அழைக்கமுடியும்.”<br /><br />இந்தியாவைப் பொறுத்தவரை இவ்வியாதியின் உடனடித்தாக்கத்திற்கு ஆளானவர்கள் குறித்தான புள்ளி விபரங்கள்/ஆய்வுகள் இல்லை. இக்கிருமித் தாக்கத்தின் காரணமாக பாதிப்பு ஏதும் சிறிதளவு இல்லாமலும், ஆனால் அதே சமயம் இக்கிருமியை பிறருக்கு பரப்பக்கூடிய தன்மை கொண்டவர்கள் (Carriers) பற்றிய ஆய்வு/புள்ளி விபரங்கள் மிகவும் சிறிதளவில் உள்ளன. இவ்வாய்வுகளில் நோய் சுமப்பவர்கள் (careers) 1.62 – 4% எனத் தெரிய வந்துள்ளது. அதிலும் 1% இவ்வியாதியின் தீவிர பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.<br /><br />ஆக விஷயம் இப்படி இருக்க ஆந்திர மாநிலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும். (4.5 லட்சம் குழந்தைகள்) - Bill Gates Foundation உதவியுடன் கிடைத்த இத்தடுப்பூசிகள் போடுவது தேவைதானா? கொழுத்த வியாபாரியான பில் கேட்ஸ்கு ஆந்திரக் குழந்தைகள் நலன் மீதுதான் அக்கறையா? அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்படுவது, அவ்வூசிகளின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழந்தைகள் மீது இல்லாத கரிசனம், பில்கேட்ஸ்கு ஆந்திரக்குழந்தைகள் மீது மட்டும் எழக் காரணமென்ன? இத்தடுப்பூசியின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்கு ஆந்திர அரசே பொறுப்பேற்க வேண்டும்.<br /><br />இந்தியாவிலேயே நல்ல, தரமான மஞ்சள்காமாலை தடுப்பூசி குறைந்த விலையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வாங்குவதற்கு பதிலாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் விலை உயர்ந்த மருந்துக் குழுமத்தில் இருந்து வாங்கி ஆந்திர குழந்தைகளுக்கு கொடுப்பது, வெளிநாட்டு மருந்து குழுமத்தின் வணிக நலனை கருத்தில் கொண்டு ஆந்திரக் குழந்தை களை சோதனை விலங்குகளாக மாற்றுவதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.<br /><br />(வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் தடுப்பூசித் திட்டங்களே இந்திய குழந்தைகளை பரிசோதனை விலங்குகளாக மாற்றும் நோக்கத்துடனேயே உள்ளதை UNICEF அஸ்ஸாமில் செய்த ஆய்வில் 15 குழந்தைகள் (போலியோவில்) இறந்ததையும், கேரளாவில் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் ஆய்வில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், சமீபமாக ஹைதராபாத்தில் மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெரியவர்களுக்கு கொடுத்து சோதனை செய்ததில் 7 பேர் இறந்ததையும், இதே போல் பெங்களூருவில் மரபணு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தினை (இரண்டிலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்/அமைச்சகம் இருந்து அனுமதி பெறாமலே) பரிசோதித்தது குறித்து வழக்கு (PIL) தொடரப்பட்டிருப்பதையும், Glaxo மருந்து நிறுவனம் கிறித்துவ மடங்களின் உதவியோடு அனாதை குழந்தைகளிடத்து AIDS மருந்தின் பின் விளைவுகளை அனுமதி பெறாமலே சோதித்தும் - மக்கள் மீது இவர்கள் கொண்டுள்ள அக்கறையை தோலுரித்து காட்டியுள்ளது.) மேலும், மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பு 10% மக்களுக்குள்ளது எனும் தவறான புள்ளிவிபரத்தை அரசு/மருத்துவர்கள்/மருந்துக்குழுமங்கள் சொல்ல காரண மென்ன? மக்கள் நலனா? வணிக நலனா?.<br /><br />Arre Z Zuckerman எனும் புகழ்பெற்ற மருத்துவர் எழுதிய புத்தகத்தில் (பக்கம் 545) மஞ்சள் காமாலையின் (Hepatitis ‘B’ Virus) காரணமாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் (90%) தானாகவே இயல்பு நிலைக்கு திரும்புவர் என்பதும் 1% கீழ் தான் பாதிப்பு மோசமாக இருப்பதும் உள்ளது. இதன் காரணமாக American Public Health Service (USPHS) American Academy of Paediatrics (ARP) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் 1997ல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்க வேண்டும் எனும் ஆணையை திரும்ப பெற்றுள்ளது. அதே வருடம் Communicable Disease Control (தொற்று நோய் தடுப்பு அமைச்சகம்) and Epidemiology of US Federal Government நிறுவனமும் மஞ்சள் காமாலை பாதிக்கப்படாத தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் திரும்ப பெற்றுக்கொண்டது.<br /><br />US Federal Government மஞ்சள் காமாலையால் கருவுற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது மட்டும் (Hbs Ag Positive) பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் பரவலாம் என்பதற்காக, அக்குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி கொடுக்கலாம். மீதிக்குழந்தைகளுக்கு இது தேவையில்லை. ஏனெனில் இந்நோய் பெரும்பாலும் பெரியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோயாக உள்ளதால் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியால் பலன் அதிகம் இல்லை.<br /><br /><span style="font-size:130%;">இனி மஞ்சள் காமாலை (Hepatitis ‘B’) குறித்து உலக வல்லுநர்களின் கூற்றை பார்ப்போம்.</span><br /><br />1. சிறு குழந்தைகளுக்கு (1 வயதிற்கு கீழ்) மஞ்சள் காமாலை தொற்றும் வாய்ப்பும் 1-3% (Us Department of Public Health1996)<br /><br />2. கருவுற்ற பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலொழிய பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதனால் US Federal Authorities அனைத்து குழந்தைகளுக்கும் இது கொடுக்க வேண்டிய தேவையில்லை (1999ம் ஆண்டு அறிக்கை)<br /><br />3. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட பெரும்பாலும் முடியாத பிறந்த குழந்தைகள்/சிறு குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி தேவையில்லாமலே கொடுக்கப்படுகின்றது. (Pat Griggin Mackie)<br /><br />4. இந்த தடுப்பூசியால் எவ்வளவு காலம் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், பாதுகாப்பை பெருக்க கூடுதல் ஊசி தேவையா என்பதும் தெளிவாக இல்லை. (National Vaccine Information Center- USA. Harrison’s Principles of Internal Medicine).<br /><br />5. மஞ்சள் காமாலை நோய் கண்டு, அதிலிருந்து விடுபட்டவர்கள் வாழ்க்கை முழுக்க அந்தநோய் திரும்ப தாக்காத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாக்கப்படுகின்றது. (Robbin’s Pathologic Basis of Disease 1994)<br /><br />6. சிசு கருப்பையில் இருக்கும் காலத்திலே பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் போது HBs Ag Positive இருந்தால் இத்தடுப்பூசியால் எந்த ஒரு பயனும் இல்லை. Zucker Man 1993.<br /><br />7. ஏற்கனவே ஒருவர் Carrier ஆக இருந்தால் அவருக்கும் இந்த தடுப்பூசியால் ஒரு பயனும் கிடையாது. (National Drug Bulletin 2001).<br /><br />8. 1987ல் மரபணு மாற்ற தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இத்தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான விளக்கம் இல்லை. மேலும் குழந்தை பருவத்தில் கொடுக்கப்படும் இவ்வூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு கொடுக்கும், அவர்கள் பெரியவர் களாக வளர்ந்த பருவத்திலும் பாதுகாப்பை கொடுக்குமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. குழந்தைகள் மீது பரிசோதிக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. (Morbidity and Mortality Report Jan.1997)<br /><br />9. 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இத்தடுப்பூசி கொடுத்தால், அவர்களுக்கு நோய் தடுப்பைக் காட்டிலும் இவ்வூசியின் பின் விளைவுகள் காரணமாக இறப்போ/பிற பின் விளைவுகளோ ஏற்படுவது 3 மடங்கு அதிகமாக உள்ளது. (Association of American Physicians and Surgeons, Dr.Jane Orient 08.07.1999)<br /><br />10. அமெரிக்காவில் கட்டாயப்படுத்தப்படாத ஒரு தடுப்பூசியை, அங்கு விற்க முடியாத/கடினமான, தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை வளரும் நாடுகளின் கையில் திணித்து, பரிசோதனை விலங்குகளாய் மாற்றுவது மட்டு மின்றி/இலாபமும் அரசு/மருத்துவர்கள்/ மருந்துக் குழுமங்களின் துணையோடு சம்பாதிக்க நினைப் பதை என்னவென்று சொல்லுவது. பில்கேட்ஸின் கரிசனம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.<br /><br />இந்தியா போன்ற ஏழை (ஆக்கப்பட்ட) நாடுகளில் தடுப்பூசியின் பின் விளைவுகளை ஆராய தொடர் ஆய்வு (Followup) செய்யப்படாமல் போவதால் இத்தடுப்பூசியினால் ஏற்படும் பிரச்சினைகளும் பின் விளைவுகளும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனினும் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களையாவது நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.<br /><br />நியூசிலாந்தில் மஞ்சள்காமாலை தடுப்பூசி திட்டத்திற்கு பின் அங்கே சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. Newzealand Medical Journal 24.05.1995.<br /><br />Dr. Philip Incao, Ohio House of Representative Columbus Ohio முன் கொடுத்த வாக்குமூலத்தில் 1987ம் ஆண்டு முதலே பல மருத்துவ உலக ஆய்வுகளில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக நாட்பட்ட (Chronic) தன் நோய் எதிர்க்கும் திறனை தானே அழிக்கும் வியாதிகள் (Auto Immune Disorders) நரம்பு மண்டலங்களை பாதிக்கும் (Neurological) வியாதிகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும் எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.<br /><br />மஞ்சள் காமாலை தடுப்பூசியின் மோசமான பின் விளைவுகளை அறிய மே 1999ல் US Senate Congressional Hearing by its Subcommittee ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 81 புகழ்பெற்ற இது குறித்தான மருத்துவ கட்டுரையிலிருந்து Dr. Buston A Wais Bren என்பவர் பட்டியலிட்டு பின்வருவனவற்றை கூறுகிறார். அவை.<br /><br />1. Convulsion (வலிப்பு நோய்)<br />2. Bell’s Palsy (முக ஜன்னி)<br />3. Lumbar Neuro Pathy (இடுப்பு, நரம்பு வலி)<br />4. Optic Beuritis (கண்பார்வை பாதிப்பு)<br />5. Transverse Myelitis (தண்டுவட பாதிப்பின் காரணமாக கை, கால் வாதத்தால் பாதிக்கப்படுவது.)<br />6. Polyneuropathy (பல நரம்புகள் பாதிக்கப்படும்).<br />7. Myasthenia Gravis (தசைகளை தளர்த்தி பாதிக்கும் நோய்) அமிதாப்பச்சன் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். விஷயம் இப்படி இருக்க தடுப்பூசி விளம்பரம்/பணம் போன்றவற்றிற்கு அவர் ஆசைப்படுவதை என்னவென்று அழைப்பது?<br />8. Demyelination (நரம்பு உறைகள் பாதிக்கப்படுதல்)<br />9. Multiple Sclerosis (மூளை,பிற நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஒரு வகை நோய்)<br />10. Guillion Barre Syndrome (நரம்புகளை பாதிக்கும் நோய்)<br />11. Encephalitis (மூளைக் காய்ச்சல்)<br />12. Uvetis (கண்களை பாதிக்கும் நோய்)<br />13. Rheumatoid Arthritis (மூட்டுகளை பாதிக்கும் நோய்)<br /><br />இவை அனைத்தும் உலக மருத்துவ ஏடுகளில் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயங்கள். பல இறப்புகளும் பதிவாகியுள்ளன.<br /><br />அமெரிக்காவில் Nicholas, Lyla Rose, Mathew... போன்ற பல ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர்.<br /><br />இணைய தளத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் பாதிப்பு 1000 பக்கங்களை எளிதில் தாண்டும்.<br /><br />இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதிப்புகள் என்றால், ஏற்றுக்கொள்ளப்படாத பாதிப்புகள்?<br /><br />ஆக தீவிர மஞ்சள்காமாலை தடுப்பூசித்திட்டத்தை கைவிட்டு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் அதனைக் கொடுப்பது சிறந்தது. அயோடின் சத்துக் குறைவு உள்ள இடங்களில் மட்டும் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவது நல்லது. எல்லோரும் அயோடின் கலந்த உப்பைத் தான் உட்கொள்ள வேண்டும் என்பது சரியில்லாதது).<br /><br />Hepatitis B Virus காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை பாதிப்பு பெரும்பாலும் பெரியவர்களுக்கு (Adults) என்றிருக்க, ஒட்டு மொத்தமாக குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி கொடுப்பது நல்லதன்று.<br /><br /><strong>மாற்று:</strong><br /><br />அரசானது கருவுற்ற அனைத்துப் பெண்களையும் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என அறிய Hbs Ag பரிசோதனை செய்வது மட்டும் நல்லது. பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களின் (Hbs Ag Positive) குழந்தைகளுக்கு மட்டும் இத்தடுப்பூசி போடுவது நல்லது. இது பாதுகாப்பானது, விலையும் குறைவு, தேவையற்று அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும் இத்தடுப்பூசிகளை நம்மூரிலே தயாராகும் தரம் நிறைந்த குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துக் குழுமங்களிடமிருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், யாருக்குக் கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.<br /><br /><strong>கொடுக்கக்கூடாதோர் பட்டியல்</strong><br /><br />1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படாத (Hbs Ag Negative) கருவுற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்.<br /><br />2. Hbs Ag Positiveகுழந்தைகளுக்கு<br /><br />3. முழு வளர்ச்சி இல்லாத குறைப்பிரசவ குழந்தைகளுக்கு (Premature born Children)<br /><br />4. சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு எடை குறைவான குழந்தைகள் (Malnourished and undernourished Children<br /><br />5. இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் (Anemic Children)<br /><br />6. அதிக சளித்தொல்லையால் (Respiratory infection) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு<br /><br />7. ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு (Children with History of Allergy)<br /><br />முக்கிய பிரச்சனை என்னவெனில் பெற்றோர் அனுமதியின்றி (Informed Consen) பெரியவர்களுக்கும் ஒப்புதல் இன்றி (அதன் சாதக/பாதங்களை விளக்கிய பின்னரும்?!) யாருக்கும் இதைக் கொடுக்க கூடாது. இது “உரிமை மீறல்” பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். விஷயம் தெரிந்து கொள்வது (Right to correct) சாதக/பாதகங்களை (விளக்கப்பட்டால் தானே?) தெரிந்த பின்னர் தன் உடல் நலன் குறித்தான முடிவெடுக்கும் உரிமைகள் நோயாளிகள்/மக்கள் தெரிந்து பின்பற்றுவது முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் பலரும் சத்துகுறைவால் பாதிக்கப்பட்டு, எடைக் குறைந்தும், இரத்த சோகையால் பாதிக்கப் பட்டும் இருக்கும், தற்போதைய சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது கொஞ்சம் கூட பொருந்தாத ஒன்று.<br /><br />யார் யாருக்கு இத்தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும் என (CDC-USA) வரையறுத்ததைக் காண்போம்.<br /><br />1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களுக்கு (Hbs Ag Positive) பிறக்கும் குழந்தைகளுக்கு<br /><br />2. விபரீதமாக Hbs Ag இரத்தம் ஒருவர் உடம்பில் கலக்கும் (இது பரிசோதிக்காத இரத்தம் ஒருவர் உடம்பில் ஏற்றுகையில் இதன் பாதிப்பு வரலாம்)<br /><br />3. Hbs Ag Positive உள்ள ஒருவரிடத்து உடலுறவு கொள்ளும்போது இதன் பாதிப்பு ஏற்படலாம்.<br /><br />4. குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மஞ்சள் காமாலையின் பாதிப்பு (Acute Hepatitis B Infection) இருக்கையில் அக்குடும்பத்திலுள்ள 1 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக கொடுக்கலாம்.<br /><br />அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசியை பொறுத்தவரை மருத்துவர்களால்/மருந்து குழுமங்களால் உருவாக்கப்படும் தேவையற்ற, பொய்யான மாய வலையில் சிக்காமல் இந்நோய் பரவ முக்கிய காரணமாக நீர், இரத்தம்/இரத்தப்பொருட்கள் ஒருவருக்கு ஏற்றுகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய பாதுகாப்புகள், பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியை அனைத்து மக்களும் பெற, அனைவருக்கும் (குறிப்பாக ஏழைகளுக்கு) அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்கள் (அனைவருக்கும் உரிய இடம், உண்ண சத்தான உணவு (வறுமை நீங்கி) அனைவருக்கும் வேலைப்பாதுகாப்பு, நிரந்தர வேலை, தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படல்), உடுக்க உடை, பாதுகாக்கப் பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதே நிரந்தர தீர்வை நோக்கிய பாதையாக அமையும். தடுப்பூசிகளை விடவும் இவை முக்கியமானவை. நீண்ட கால, நிரந்தர தீர்வைப் பற்றியான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அவை செலவு குறைந்து இருப்பது தெளிவாக புரியும்.<br /><br />தடுப்பூசி/மருந்தின் சாதக பாதங்களை விளக்கி, பின் மக்கள்/நோயாளிகள் கொடுக்கும் ஒப்புதல் (iகேடிசஅநன உடிளேநவே) இல்லாமல் குழந்தைக்கோ/பெரியவருக்கோ தடுப்பூசி கொடுத்தால், அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சட்டப்படி மருத்துவர்களும், மேலும் அத்தடுப்பூசியை உயர்த்திப் பிடிக்கும் மருந்து உற்பத்தி யாளர்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, ஏன் அரசோ பொறுப்பேற்க வேண்டும்.<br /><br />மஞ்சள் காமாலை ஆட்கொல்லி தடுப்பூசியை தவிர்க்கவும்<br /><br />By Barry Forbes The Tribune/ Thomson News paper, Sunday Feb 07, 1999 “Who is calling the shots” நிகழ்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகள், பாதிப்பு காரணமாக அது கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. அதில் பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட “Hep B” மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டம், அவ்வூசி “Multiple Sclerosis” எனும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியை ஏற்படுத்தியதின் விளைவாக நிறுத்தப்பட்டது.<br /><br />பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் விளைவாக Multiple Sclerosis என்னும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டதால், UK Smithkline Beechem நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற முடிவு அவ்விருவருக்கும் அந்த மருந்து குழுமம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.<br /><br />கனடா நாட்டில் 18,000 நான்காம் வகுப்பை சேர்ந்த மாணவர்களைக் காக்க Manitoba என்னுமிடத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மஞ்சள் காமாலை தடுப்பூசி பின் விளைவுகள் காரணமாக நீதி கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். Wyoming, Newhampshire, Illinois (USA) போன்ற பிற மாநிலங்களிலும் பெற்றோர் இத்தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.<br /><br />அமெரிக்காவில் மட்டும் 1990-1998 -க்கு இடைப்பட்ட காலத்தில் 17,497 பேர் காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகளால் ( Adverse Reactions) பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 5,983 பேர் உயிரை பாதிக்கும் அளவிற்கு, மருத்துவமனையில் அவசியம் சேர்ப்பதற்கு, நிரந்தர உடல் ஊனத்திற்கோ, இறப்பு... முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.<br /><br />1999-ல் 0-1 வயது அமெரிக்க குழந்தைகளில் 54 பேருக்கு மட்டுமே அந்நோயின் தாக்கம் தென்பட்டுள்ளது. ஆனால் அதே வருடத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3.9 மில்லியன். 1 வயதிற்கு கீழான குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 0.001%. இது மிக, மிகக் குறைவு. அதனால் அங்கு தடுப்பூசி கட்டாயமயமாக்கப்படவில்லை.<br /><br />Who wins? அமெரிக்க பொதுமக்களே இத்தடுப்பூசி திட்டத்தின் காரணமாக பணரீதியாகவும்/பிறரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலனடைந்திருப்பது the foxes in charge of the henhouse-Merch, Smithkline beechem எனும் பெரும் மருந்துக் குழுமங்கள் தான். அமெரிக்க சட்டப்படி, தடுப்பூசியின் பின் விளைவுகளுக்காக இவ்விரு மருந்து நிறுவனங்களையும் நீதி மன்றத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது. Merch நிறுவனத்திற்கு மட்டும் இத்தடுப்பூசி விற்பனையின் விளைவாக கிடைக்கும் ஒரு வருட பணம் 1 பில்லியன் டாலர்கள் ஆகும்.<br /><br />Dr.Bonnie Dunbar - செல்களில் (cell) ஏற்படும் மாற்றங்கள் குறித்தான ஆய்வில் மிக முக்கியமானவர். மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு பிறகு பலரும் இறப்பு உட்பட மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், எனத் தெளிவாக கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 140-320 பேர் தான் மஞ்சள் காமாலை (Hepatitis ‘B’ Virus) காரணமாக இறக்கின்றனர்.<br /><br />15,000 பிரஞ்ச் குடிமக்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கெதிராக அரசு மீது தொடர்ந்த வழக்கின் காரணமாக பின் விளைவுகள் இருப்பதை அரசு ஒப்புக் கொண்டு அக்டோபர் 1998ல் பிரஞ்ச் சுகாதார அமைச்சகம் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொடுத்து வந்த மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தை கை விட்டது. National Vaccination Information center கணக் கெடுப்புபடி அமெரிக்காவில் 1996ல் மட்டும் 14 வயத்திற்கு கீழ் 872 பேர் காமாலை தடுப்பூசி காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 13 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.<br /><br />இந்தியாவில் திரு. பாஸ்கரராவிற்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி பாதிப்பின் காரணமாக 70 பேர் தொலைபேசி செய்ததாகவும், 2 இறப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2004ல் சேலத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுத்து பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி உள்ளது. கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தீபனுக்கு (தற்போது வயது 5) மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக வலிப்பு நோய் வந்துள்ளது.<br /><br />1990ல் இங்கிலாந்தில் 598 மருத்துவர்களை உள்ளடக்கிய ஆய்வில் 50% மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட மறுத்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டியும் 50ரூ மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். (British Medical Journal 27.01.1990).<br /><br />மஞ்சள் காமாலை தடுப்பூசியானது, மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவரின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதால் (அவர்களுக்கு AIDS வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால்) ஊசி போடப்படுபவர்களுக்கும் AIDS தொற்றும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் விளைவாகவே AIDS திட்டமிட்டு பரப்பப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் தான் அமெரிக்காவில் முதலில் மஞ்சள் காமாலை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அங்கு தான் AIDS தாக்கம் அதிகம் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளன.<br /><br />பெரும்பாலான குழந்தைகளைப் பொறுத்தவரை, காமாலை தடுப்பூசியில் கிடைக்கும் பாதுகாப்பைக் காட்டிலும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் 100 மடங்கு அதிகம் என்று Dr. Jane orient தலைவர் (AAPS) கூறுகிறார். 1991ல் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்கப்பட்ட 358 காம்பிய (Gambia) குழந்தைகளில் 20ரூ மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. (Lancet Study).<br /><br /><strong>கல்பாக்க கதை: அணுசக்தி நிர்வாகமும், மஞ்சள் காமாலை தடுப்பூசியும்.</strong><br /><br />மருத்துவரான நான் கல்பாக்க கதிர்வீச்சின் பாதிப்பை (Multiple Myloma - எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய், இந்தியாவிலே, கல்பாக்கத்தில் அதிகம் என்றும், அதற்கான காரணம் இங்குள்ள கதிர்வீச்சு தான் என (புள்ளி விபரங்களுடன்) நிறுவிய பின், அதுவரை பெருமளவில் சுற்றுப்புற மக்களுக்கு ஒன்றும் செய்யாத அணுசக்தி நிர்வாகம், பல மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தி (என்னை ஓரங்கட்ட) அதில் மஞ்சள் காமாலை தடுப்பூசியை இலவசமாக பலருக்கும் கொடுத்து (கெடுத்து) வருவது வேடிக்கையாக உள்ளது.<br /><br />சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை (இக்கட்டுரையை) படித்த பின் என்ன சொல்ல போகின்றனர் என்பதை கேட்க ஆவலாக உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் அமெரிக்கர்கள் செய்யும் எதற்கும், எதிராக செய்வதை நினைத்து ஒரு வகையில் சந்தோஷமே. அமெரிக்காவில் Multiple Myloma - வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை கொடுக்கப்படுகிறது. இங்கு அது இல்லை. அங்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயமயமாக்கப்படவில்லை. இங்கு அதை அவர்கள் ஒருவேலை கட்டாயமாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மருத்துவ முகாம்களில் கலந்து கொண்ட பல அணு சக்தி மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, என்பதும் குறிப்பிடத் தக்கது.<br /><br /><strong>பின் குறிப்பு:</strong><br /><br />“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது”<br /><br />மருத்துவ சேவையை கடும் எதிர்ப்பிற்கிடையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தாலும் அதன் மூலம் தண்டனை பெற்றவர்கள் மிகமிகக் குறைவே. இந்திய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பானது, மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்காக குற்றவியல் வழக்கு அவர்கள் மீது தொடர முடியாது என்றும், பாதிப்பு/இறப்பிற்காக நஷ்ட ஈடு மட்டுமே கோர முடியும் என்பது மருத்துவர் கையில் எல்லையற்ற அதிகாரத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது நீதிமன்றங்கள் மக்கள் உரிமை/நலன்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகிறது.<br /><br /><span style="font-size:85%;">உதவி: திரு. பாஸ்கரராவ் பேட்டி<br />Pharmabiz இதழ் ஜனவரி 2003</span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-13014832226156729362010-01-13T10:05:00.001-08:002010-11-21T09:59:25.812-08:00ஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும்<span style="color: rgb(204, 0, 0);font-size:130%;" >ஐந்தாவது வேதமும், புரோகிதக் கூத்தும் <span style="color: rgb(0, 153, 0);font-size:100%;" ><br />சி.அறிவுறுவோன், <br />சோலை <span> சுந்தரபெருமாள்</span></span></span><br /> <br /><br /> பகவத்கீதைக்கு ஏராளமான உரைகள் வெளி வந்துள்ளன. ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய உரைநூல்களும் இதில் அடங்கும். கீதையின் சார்பாளர்கள் இந்த உரைநூல்களை லட்சக்கணக்கில் அச்சாக்கி இலவசங்கள் மூலம் பரப்பச் செய்கின்றனர். வெற்றியும் பெற்றுள்ளார்கள். மறுப்பதற்கில்லை. அமோக விளைச்சலும் உண்டு.<br /><br /><br />இந்நிலையில் தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்களில் முதன்மை பங்கு வகிக்கும் தேவாரம், திருவாசகத்திற்கு உரைகள் எழுதப்படவில்லை. எழுத ஆட்கள் இல்லை என்பதால் இல்லை. இவைகளுக்கு உரைகள் எழுதக்கூடாது என்ற சட்டமே இருந்திருக்கிறது. இந்தச் சட்டங்களை அமுலாக்கியவர்கள் சைவ, வைணவ, பிராமணியப் புரோகிதர்கள் தான். தமிழ் மறைகளுக்கு உரை எழுதினால் அவற்றின் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்று மூடாக்கு போட்டு இருக்கும் ரகசியத் தன்மையை இந்த கட்டுரையில் எழுத இயலாது. அது வேறு தளத்தில் எழுதப்படவேண்டும்.இந்த நூல்களுக்கு உரைகள் வெளிவந்திருந்தால், ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் ‘பகவத்கீதை’ கேள்விக்கணைகளுக்கு தாங்க முடியாமல் கரைந்து போயிருக்கும். இப்படியான பூடகத்தன்மையோடு கீதையின் மெல்லிய இழைகள் கூட அறுபடாமல் காத்து வருவதில் இந்து மதத்திற்கு முழு பங்கு உண்டு. வெகுவாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் மக்களைத் திரட்டி வைத்து தங்களது மேலாதிக்கத்தில் தக்க வைத்து வரும் பிராமணிய புரோகிதர்கள் அரசாளும் தகுதி உடைய அறிவாளிகள் என்ற அடையாளத்திற்கு உட்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனுள்ளே அவர்களின் சூட்சமங்கள் பொதிந்து கிடக்கின்றன.<br /><br />வேதத்தை ஏற்றுக்கொண்ட அரசும் ஏற்றத்தாழ்வுள்ள வர்ணமும் ஒழுங்குப்படுத்தி வைத்திருக்கும் சூத்திர சாதியினுள் பிறந்த, வே.இந்திரசித்து சமகிருதத்தை முறையாக பயின்றவர். சமஸ்கிருத பண்டிதர்களுடன் விவாதித்தவர். இன்றும் விவாதத்திற்கு தயாராக இருப்பவர். தமிழ் இலக்கியங்களிலும் பயிற்சி உடையவர் என்றும் அறியமுடிகிறது. அவர் ‘பகவத்கீதை ஒரு பார்வை’ என்ற ஆய்வை வெளி யிட்டுள்ளார். இந்நூல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆயினும் பரவலாக அறியப்படவில்லை. இந்த ஆய்வினுள் பயணிக்கும்போது நமக்கு ஏராளமான தரவுகள் கிடைக்கின்றன.<br /><br />இந்நூலுள் சொல்லப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் மாறுபட்டவை. இன்றைய காலகட்டத்தில் கவனத்துக்குரியவை. இந்து மதம் இந்தியாவின் பெரிய மதம் என்ற ஒரே காரணத்துக்காக அதற்குத் தனி மதிப்பும் முதன்மையும் அளிக்கப்படவேண்டும் எனும் ஒரு கோரிக்கையையே அரசியல் கோரிக்கையாக மக்கள் முன்வைத்து அதிகாரத்தை வென்றெடுக்க முயலும் அரசியல் சக்திகளின் உள்நோக்கத்தைத் தோலுரித்துக் காட்ட இந்நூல் பேரளவில் பயன்படும்.<br /><br />இந்நூல் பத்தொன்பது உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. அதில் ‘தமிழ் வைணவ நெறியும் கீதையும்’ எனும் தலைப்புள் காணப்படும் தகவல்கள் உற்று நோக்கத்தக்கவை. வைணவத்தின் பன்னிரு ஆழ்வார் களும் இயற்றிய எந்த ஒரு நூலிலும் கிருஷ்ணன் அர்ச்சுணனுக்கு ஓதியதாகச் சொல்லப்படும் பகவத் கீதை ஒரு இடத்தில்கூட குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார். பன்னிரு ஆழ்வார்களும் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம் வைணவர்களுக்கு உயிர்மூச்சானது. அதைக்கூறாத எதையும் வைணவச் சார்பானதாக வைணவர்கள் கருதுவதில்லை. தொல் காப்பியர் காலமுதலே மாலியம் என்று சொல்லப்படும் வைணவம் தமிழகத்தில் நிலவி வருவதைத் தொல் காப்பிய வரிகளை எடுத்துக்காட்டிக் கூறியுள்ளார்.<br /><br /> <span style="color: rgb(51, 255, 255);font-size:100%;" > ‘திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே’,<br /> ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’,<br /> ‘நாராயணா எண்ணா நா என்ன நாவே’</span><br /> <br />என்னும் சிலப்பதிகார வரிகளை எடுத்தாண்டு எட்டெழுத்து மந்திரம் சிலப்பதிகார காலத்திலேயே தமிழ்மக்களிடம் வேர்கொண்டுள்ளதை நிறுவியுள்ளார். அவரே பிற்காலத்திலே எழுதப்பட்ட கம்பராமாயணத்துள் எட்டெழுத்து மந்திரம் வரவில்லை என்பதால் வைணவர்கள் கம்பராமாயணத்தை வைணவநூலாக ஏற்க மறுத்ததால் கம்பர் பிறகு இரணியவதத்தைக் கம்பராமாயணத்துள் நுழைத்து அதனுள் எட்டெழுத்து மந்திரத்தை போதித்துள்ளார் என்று காட்டியுள்ளார். இதனால் வைணவர்கள் எட்டெழுத்து மந்திரத்தை எத்துணை உயிர் மூச்சாகக் கருதினர் என்பதை விளக்கியுள்ளார்.<br /> <br />கடவுள் நாற்பத்தைந்து பெயர்களால் அழைக்கப்படுவதைக் குறிப்பிட்டு அவற்றுள் நாராயணா என்னும் பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்று காட்டியுள்ளார். (பக்கம் 93) ஆகவே கீதை வைணவப் பெரியார்கள் வணங்கும் பகவான் கிருஷ்ணன் அல்லது கண்ணனால் அர்ச்சுணனுக்கு ஓதப்பட்டிருந்திருக்குமானால் உறுதியாக அதனுள் நாராயணா எனும் பெயர் வந்திருக்கும். வரவில்லை என்பதால் வேறு யாரோ ஒரு கண்ணனால் அல்லது கிருஷ்ணனால் கீதை சொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தெளிவான முடிவிற்கு வருகிறார். இதை மறுக்க முடியாது. பகவான் கண்ணனை மறுப்பது நூலாசிரியர் நோக்கமன்று. பிராமணியத்தை மறுப்பதும் சனாதனத்தை மறுப்பதுமேயாகும். ஆகவே, வைணவ நூல்களை வேதசாரத்தை எதிரொளிப்பவை என்று இட்டுக்கட்டி எழுதும் எழுத்துக்களைக் கடுமையாகச் சாடுகிறார்.<br /> <br />அடுத்துக் கவனத்தில் கொள்ளவேண்டியது பன்னிரண்டாவது உட்தலைப்பாகும். இதனுள் கீதை பத்துக் குற்றங்களும் நிரம்பிய நூல் என்று நிறுவியுள்ளதாகும். பவனந்தி முனிவரின் நன்னூல் நூற்பாவை மேற்கோள் காட்டி நிறுவியுள்ளார். ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் வேறுவழியில்லை.<br /> <br /> ‘கீதை காட்டும் இந்துமதக்கடவுள்’, ‘இந்துமதக் கடவுள் இரக்கமற்றவன் அறநெறி அறியாதவன்’, ‘இந்துமதம் காட்டும் கடவுள் - கருணையற்றவன்’, ‘இந்துமதக் கடவுள் குறுகிய மனம் படைத்தவன்’, ‘இந்துமதக் கடவுள் - சொல்வன்மையற்றவன்’, என்னும் தலைப்புகளில் மிகச்சரியாக ஆய்வை மேற்கொண்டு உள்ளார் என்பது புலனாகிறது. இவற்றைப் படிப் போர்க்கு இந்துமதக் கொடுங்கோன்மை கடவுளிடமிருந்தே தொடங்குகிறது என்பது புலனாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.<br /><br /> ‘ஆத்மாவைப்பற்றி - பகவத்கீதை’ எனும் தலைப்புள் பகவத்கீதையுள் ஆத்மக்கோட்பாடு குழப்பப்பட்டுள் ளதை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் ஆன்மா இல்லை. அழிக்கப்படுவதும் இல்லை. உடல்கள் மட்டுமே அழிகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன எனும் கோட்பாடு நன்றாகக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப்போரில் மதன்லால் திங்க்ரா முதல் காந்திவரை ஆத்மா அழியாது உடல் தான் அழியும் எனும் கோட்பாடு மதவாதிக்கும், வினை மறவர்க்கும், அஹிம்சாவாதிக்கும் அச்சத்தை அகற்ற உதவிய கோட்பாடு என்பதில் ஐயமில்லை என்றாலும் தற்காலக் குற்றவியல் சட்டம், தண்டனைச் சட்டம் ஆகியவை ஆன்மா அழியாது உடல்தான் அழியும் என்பதால் ஒரு கொலையை கொலையன்று என்று ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்ளா. ஆனால் பிராமணத்தியோடு உறவுகொண்ட சூத்திரன் கொல்லப்படவேண்டும் என்பதும் அது கொலையன்று என்பதும் மனுநீதி என்பதை மறந்துவிடுவதற்கில்லை. ஆகவே மனுநீதியை மக்கள் நீதியாக்க உயர்த்திப் பிடிக்கப்பட்ட கீதையின் ஆன்மக்கோட்பாட்டின் உடல்தான் அழியும்; ஆன்மா அழியாது எனும் பகுதி கொலையை நியாயப்படுத்த உதவுவதாகும் என்பதை உணரவேண்டும்.<br /> <br />‘மரணமில்லா பெருவாழ்வு குறித்து இந்துமதம்’ எனும் தலைப்பில் மனிதன் இறக்கும் நேரமே முதன்மையானது என்று குறிக்கப்பட்டுள்ளது. மனிதன் இறக்கும் நேரம் நல்ல நேரமாக இருந்தால் எவ்வளவு பெரிய அயோக்கியனும் பிறவிப்பெருங்கடல் நீந்தியவனாகிப் பேரின்பம் அடைவான். கெட்ட நேரத்தில் இறப்பவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவன் பிறவி அறுபடாது; மறுபிறவி எடுக்கவேண்டியதாகிவிடும் என்று கிருஷ்ணன் வாய்மொழியாகப் பகவத்கீதையில் ஒலிக்கும்போது பிராமணர்களின் புரோகிதத்துக்கு முதன்மை வந்து விடுகிறது. எண்குணத்தான் தாளை வணங்காதத் தலை என்று வள்ளுவர் குறிப்பிடுவதில் வரும் எட்டு குணங் களும் இந்நூலுள் 63ஆம் பக்கத்தில் (கீதை ஓஐஏ: 24-25) குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பௌத்தக் கோட்பாடு. கீதையால் உள்வாங்கப்பட்டுள்ளதற்கு எடுத்துக் காட்டாகும். அதற்கு இந்நூலாசிரியர் கூறியுள்ள விளக்கம் பொருந்துவதாய் இல்லை. எப்படி இருப் பினும் கீதை புரோகிதத்துக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் பிராமணியத்தை ஊக்குவிக்கிறது என்பது நன்கு உணர்த்தப்பட்டுள்ளது.<br /> <br /> இனி ஐந்தாவது வேதம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மகாபாரதம் கீதை இடம் பெறாதிருந்தால் அப்பெயர் பெற்றிருக்க முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. இந்தியாவில் சொத்தும், சாதியும் கூடப்பிறந்தவை. அரசும் ஏற்றத்தாழ்வுள்ள வர்ணமும் உடன் பிறந்தவை. அதனால்தான் முதலாளித்துவ சனநாயக காலகட்ட அரசு கூட வர்ணத்துக்கு மாறாக வகுப்பை உயர்த்திப்பிடிக்க வேண்டியதாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். வர்ணத்தை மறுவுயிர்ப்பு செய்ய எண்ணினாலும் பாரதீய ஜனதா கட்சி வகுப்புகளை உயர்த்திப்பிடிப்பதன் நோக்கம் இதில்தான் அடங்கியுள்ளது.<br /> <br />குலக்குழு (சாதி) ஆட்சிக்கு மாறாக ஒரு தனி ஆள் ஆட்சிக்கு வித்திட்டுச் சொத்து வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் வித்திட்ட போராகும். இதைத் தொடர்ந்தே பேரரசுகள் உருவாகி வளர்ந்தன. சிற்றரசுகளை ஒழித்துக்கட்டி மகதப்பேரரசு உருவானதும், பாரி போன்ற இனக்குழுத் தலைவர்களை ஒழித்துக்கட்டி சேர, சோழ, பாண்டியர்கள் எனும் முடிமன்னர்கள் உருவானதும் இதன்பிறகே. வடக்கே சமண பௌத்த மதங்கள் தலையெடுத்து பௌத்தம் அரச மதமானதும் தெற்கே களப்பிரர் ஆட்சியைப் பிடித்து பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் முதலான வற்றை அழித்து மக்கள் சொத்தாக்கியதும் நிகழ்ந்து முடிந்தபின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பக்தி இயக்கங்கள் தலையெடுக்கின்றன.<br /> <br />அவற்றால் பௌத்தம் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் பிராமணியம் அரியணை ஏறுகிறது. இவ்வாறு மீண்டும் பிராமணியம் அரியணை ஏற முயற்சி செய்த காலத்தில் அல்லது அரியணை ஏறிய கொஞ்ச காலத்திலேயே கீதை எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரம் ஒன்றை கீதையிலிருந்தே காட்டியுள்ளார். ‘சாதித் தொழிலை செய் கூலியை எதிர்பாராதே’ எனும் தலைப்பில் 103ஆம் பக்கத்தில் உள்ளது.<br /><br /> “இந்த அழிவற்ற யோகத்தை (வழியை) நான் முன்னர் வி°வானுக்குப் (சூரியனுக்கு) பகர்ந்தேன். வி°வான் மனுவுக்குச் சொன்னான். மனு இக்ஷ்வாகு வுக்குச் சொன்னான்” (பகவத்கீதை IV: 1)<br /> <br /> “இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். அந்தயோகம் கால மிகுதியால் அழிந்தது”. (பகவத்கீதை IV: 2)<br /><br /> “அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன். இது மேலான மறையாகும்.” (பகவத்கீதை IV: 3)<br /><br /> இதில்வரும் மேலான மறையும் யோகமும் வர்ண முறையையும் வர்ணத்துக்குரிய தொழிலைச் செய்யும் படி வற்புறுத்துவதுமேயாகும்.<br /><br /> ‘சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம்’ (பகவத் கீதை IV: 13) என்பது ‘நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டன’ என்று கீதை ஆசிரியன் பகவான் கிருஷ்ணன் கூறுவதாக அமைந்தது.<br /><br /> ‘அந்தயோகம் காலமிகுதியால் அழிந்தது’ என்று ‘அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன்’ என்று சொல்லப்பட்டதால் நால் வர்ணமும் குலத்தொழிலும் அழிந்துபோனதால் அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டி சொல்லப் பட்டது என்றே பொருள்படுகிறது. பௌத்தத்தாலும் களப்பிரராலும் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட வில்லை. காலமிகுதியால் அழிந்தது என்று சொல்லப் பட்டுள்ளது என்றாலும் உண்மை அதுவன்று என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பௌத்தமும், களப்பிரரரும் சிதைத்தனர்; அழித்தனர் என்பதே சரியாக இருக்கும். எனவே கீதை, மகாபாரதம் தோன்றி நீண்ட நெடுங்காலம் கடந்தே எழுதிச் சேர்க்கப் பட்டிருந்திருக்க முடியும்.<br /><br /> ‘ஆராய்ச்சியாளர் பார்வையில் கீதை’ எனும் தலைப்பினுள் ஜோசப் இடமருகு குறிப்பிடும் அறிஞர்களின் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன என்றாலும் நூலாசிரியர் பகவத்கீதை இறைவனால் படைக்கப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை என்றும் பகவத்கீதையில் காணப்படும் 18 அதிகாரங்களும் ஒரே புலவனால் எழுதப்பட்டிருக்கலாம் என்பதற்கு இடமில்லை. ஏனெனில் முரண்பட்ட கருத்துக்கள் மிகுதியும் காணப்படுகின்றன. பல்வேறு காலங்களில் வாழ்ந்த வெவ்வேறு புலவர்களின் பாடல் களின் தொகுப்புத்தான் பகவத்கீதை என்று எழுதியுள்ளார்.<br /><br /> ஆக, பகவத்கீதை பகவான் என்று அறியப்பட்ட கண்ணனால் செய்யப்பட்டது அன்று பெயர் தெரியாத யாரோ ஒரு புலவரால் அல்லது வெவ்வேறு புலவர் களால் வெவ்வேறு காலங்களில் செய்யப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். பகவத்கீதை இலக்கணப்படி ஓர் ஒழுங்கான நூலன்று என்று தெளிவாக்கி விடுகிறார்.<br /><br /> பிராமணியத்தை மிக நுட்பமாக அம்பலப்படுத்துகிறார். வேதம் சிறுதெய்வ வழிபாட்டினை உயர்த்திப் பிடிப்பது என்பதை மொழி நூலறிஞர் ஞா. தேவ நேயப்பாவாணர் அவர்கள் கூற்றை மேற்கோளாகக் காட்டி நிறுவியுள்ளார். எனவே, வேதத்தின் சாரமாக உபநிஷதங்களைக் காட்டுவது பித்தலாட்டம் என்று கூறியுள்ளார். ‘உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்து பிரம்ம சூத்திரத்தில் அடக்கம். பிரம்மசூத்திரத்தில் வேதவியாசர் சுருதி என்று குறிப்பிடும் இடங்களில் உபநிஷதங்களையும் °மிருதி என்று குறிப்பிடும் இடங்களில் அநேகமாய் பகவத்கீதையையுமே கருத்தில் வைத்து பேசுகிறார்’ என்று (பக்கம் 27) ஒரு மேற்கோளை காட்டுவதன் மூலம் பிரம்மசூத்திரத்திற்கு மூலமே உபநிஷதங்களும் கீதையும் என்றாகி விடுகிறது. இவை மூன்றுமே இந்துக்களுக்கு வேதநூல்களாகும். இவற்றுக்கான ஒட்டுமொத்த பெயரே ‘பிர°தான திரயம்’ என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இதில் வராத இன்றியமையாத செய்தி ஒன்று உண்டு.<br /><br /> ஸ்ருதி என்பது ஒரு வழிபாட்டுமுறையாக நெருப்பில் ஆகுதி செய்து வழிபடும் முறை. ஆகமம் உருவவழிபாட்டை வலியுறுத்துவது ஸ்ருதி என்பது ஆரிய வழிபாட்டு முறை. ஆகமம் என்பது இந்தியத் தொல்குடி மக்களுக்கு உரியது. இரண்டும் இணைந்தே வேதாகமம் ஆனது. ஆரியரும் இந்தியத் தொல்குடி மக்களும் இணைந்ததன் பண்பாட்டு வெளிப்பாடே வேதாகமம். ஆனால் பிராமணியம் ஆகமத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேதமே அனைத்திற்கும் மூலம் என்று கதைகட்டுகிறது. அதையே பிராமணர்கள் ஆரியர் வழித்தோன்றி யவர்கள் என்று கூறவும் செய்கிறது. உண்மை மறைக்கப்படுகிறது. ஆனால், உபநிஷதங்கள் சத்திரியர் களால் உருவாக்கப்பட்டவை. அதனாலேயே அரசு உருவாக்கத்தில் யாகங்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டது. அதனால் தான் வேதகாலத்திற்குப் பிறகு ஸ்ருதி வழிபாட்டுமுறை முதன்மைப்பட்டது. ஸ்ருதி வழி பாட்டு முறைக்கும், வேதகால வழிபாட்டு முறைக்கு மான முட்டல் மோதலை ரிக்வேதத்தில் வரும் மீமாம் சகனின் பாடல்கள் மூலம் அறியலாம்.<br /><br /> ஸ்மிருதியாகக் கருதப்படும் பகவத்கீதை மகாபாரதத்தில் இணைக்கப்பட்டதால்தான் மகாபாரதம் ஐந்தாவது வேதம் என அழைக்கப்படும் நிலையைப் பெற்றது. இது திட்டமிடப்பட்ட ஓர் உருவாக்கமே என்பதில் ஐயமில்லை. அது பிராமணர்களாலும் சத்ரியர்களாலும்தான் நிகழ்ந்திருக்கமுடியும். ஆகவே, இந்துமதத்தைப் பிராமண வர்ணத்தில் மதம் என்று மட்டும் கருதமுடியாது. இன்றைய நிலையில் பிராமணர் மற்றும் ஆளும் வர்க்கமதமாகத்தான் அதைப் பார்க்க முடியும். பிராமணியத்தை ஏற்காதவர்களையும் கடவுள் நம்பிக்கை இல்லாவர்களையும் கூட இந்துக்கள் என்று கணக்கெடுக்கும் மோசடி நடந்து வருகிறது.<br /><br /> ‘கீதை நூலாசிரியர் நெஞ்சம்’ (பக்கம் 95) எனும் 12வது உள்தலைப்புத் தேவையில்லாதது மட்டும் இல்லை, ‘ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் கீதை’ (பக்கம் 33) எனும் 4வது உட்தலைப்புக்கு மாறானது. இந்தத்தலைப்புத் தேவைதான் என்று நூலாசிரியர் கருதுவாராயின் அங்கதமாகச் சொல்லப்படும் கருத்துக் கள் கொடுங்கோன்மையை வளர்க்கவும் பயன்படுத்த முடியும் என்றாகிவிடும். அங்கதத்தின் தேவை அடிப் பட்டுப்போகும்.<br /><br /> மேலும் அங்கதம் என்பது புகழ்வதுபோல் இகழ்வதாகும். கீதையின் தலைவன் தன்னைப்பற்றித் தானே கூறுவதாகும். தன்னைத் தானே புகழ்ந்துகொள்வதையும் மிகைப்படுத்திக் கூறிக்கொள்வதையும் தறுக்குரை என்றுதான் கூறவேண்டுமே தவிர அங்கத மென்று கூறமுடியாது. ஐம்புலன்களால் உணர முடியாத சாதாரண அறிவாலும் உணரமுடியாத ஞானநிலையிலேயே அறியமுடியும், உணர முடியும் என்று சொல்லப்படுகிற கடவுள் தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளாவிட்டால் ஞானிகள் கூற்றை மட்டுமே நம்பவேண்டியிருக்கும். கடவுளே அர்ச்சுணனுக்குக் கூறுவதால் எளியமக்களுக்கு நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அது தறுக்குரையாகவும் தோன்றாது.<br /><br /> ஆகவே, கீதையை எழுதியவர் ஒருவரோ, பலரோ மக்களை ஏமாற்றும் நோக்கில் நயவஞ்சக உணர்வோடு கடவுளே கூறுவதுபோல்எழுதிச் சேர்த்துள்ளனர் என்பதே உண்மை. எனவே 12வது உள்தலைப்பு இந்த நூலின் உள்ளடக்கத்திலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளதை உணர்ந்து நூலாசிரியர் திரும்பப் பெற்றுக்கொண்டால் குழப்பமற்ற ஒரு நல்ல ஆய்வு நூலாகவே விளங்கும் என்பதில் ஐயமில்லை.<br /><br /> ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-73414172371270794372010-01-13T09:54:00.000-08:002010-11-22T06:25:35.578-08:00எல்லைத்தமிழன் கவிதைகள்<span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">மழையை ரசித்தல்</span><br /><br />குடையை பிடித்துக் கொண்டு அல்ல<br />மழையில் நனைந்து கொண்டே<br />மழையில் ரசிப்பது தான் அமர்க்கு அழகு<br />என்கிறார் புட்டா*<br />மழையில் நனைந்து கொண்டே<br />உழுகிறான் உழவன்<br />மழையில் நனைந்து கொண்டே<br />படுத்துக் கிடக்கிறான் பாதசாரி<br />மழையில் நனைந்து கொண்டே<br />வாழ்கிறார்கள் ஏழைகள்.<br /><br />* புட்டா: கவிஞர் விக்ரமாதித்யனின் மற்றொரு புனைபெயர்<br /><br /><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">பறத்தல்</span><br /><br />பறக்கத் தயாராகும் பருவத்தில்<br />கனவுத்தீ படர்ந்து பிடிக்கும்<br />இனிக்கும் தீயின் ஆவல்<br />உடல் முழுக்க பரவி<br />சிறகுகள் அசையும்<br />பறத்தலில்<br />காற்றின் அலைக்கழிப்பும்<br />மரக்கிளைகளின் தடையும்<br />மேகங்களின் வேகமும்<br />சிறகுகளை வலுவாக்கும்<br />அல்லாதவற்றின் சிறகுகள்<br />முறிந்து தொங்கும்<br /><br /><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">நண்பர்களும் எதிரிகளும்</span><br /><br />எதிரிகளுடனான சண்டையை<br />நண்பனிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்<br />சண்டைக்கான காரணங்கள்<br />வலுவாக இருக்கின்றன<br />எல்லா சண்டைகளும்<br />காரணங்களுடன் தான் நிகழ்கின்றன<br />நேற்று நெருக்கமாக நடந்தவர்கள்<br />பிரியமும் அன்பும் கொண்டவர்கள்<br />இன்று கீரியும் பாம்பும்<br />நேற்றைய நண்பர்கள் தான்<br />இன்றைய எதிரிகள்<br />இன்றைய எதிரிகள்<br />நாளை நண்பர்கள் ஆகலாம்<br />ரணக்கீறல்களுடன் பிரிந்தோம்<br />பேச்சின் முடிவில்<br /><br /><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);">இரவின் மடி</span><br /><br />வெளியெங்கும் நிசப்தம்<br />குடிகொண்டிருந்த போதும்<br />மனக்கதவுகள்<br />மூட மறுக்கும் வேளைகளில்<br />தூக்கம் ஏழேழு கடல் தாண்டி சென்று விடுகிறது<br />பாடுகள் சுமந்து எப்போதும்<br />சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்<br />இயேசுவைப் போல<br />சிலுவையில் அறையப்படுகிறது எனது தூக்கமும்<br />புரண்டு புரண்டு நினைவுகள் அகற்றியும்<br />மண்டை சூடாகி தகிக்கிறது<br />நிகழ்வுகளின் காயங்ளில் வெடித்துக் கிளம்பும்<br />புதிய பாதை<br />படைப்பின் மூலவேர்கள் தேடி அலையும்<br />மானிடப் பரப்பின்<br />அயர்ந்து தூங்கும் பின்னிரவு<br />காகங்களின் கரைதலில்<br />விழித்தெழும் காலை.<br /><br />ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-77236513174176085652010-01-13T09:39:00.000-08:002010-11-22T06:28:00.324-08:00சிக்கல்- சு.தமிழ்ச்செல்வி<span><span><br />லில்லி டீச்சருக்கு தினந்தோறும் இது ஒரு பெரும் பிரச்சனையாய் போய்விட்டது. படுக்கையை விட்டு மகள் ஜெனிட்டா எழுந்துவிட்டால் போதும். ஆறு மணியிலிருந்து ஏழரை எட்டுவரைகூட மகளோடு கழிப்பறையில் மல்லுக்கட்ட வேண்டியதாயிருக்கிறது. பருப்பை ஓர் அடுப்பிலும் பாலை மற்றோர் அடுப்பிலும் வைத்துவிட்டு வந்து மகள் எழுந்து விட்டாளா என்று பார்த்தாள். அவள் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். சில சமயம் விழித்துக் கொண்டாலுமே கூட தூங்குவது போல் பாவனை செய்யக்கூடியவள்.<br />“ஜெனி... ஜெனி....”<br />“ம்”<br />“எழுந்திருக்கல?”<br />“ம்... எழும்புறம்மா.”<br />“பொழுது விடிஞ்சிடுத்துடி எழுந்துரு”<br />ஜெனிட்டா சோம்பல் முறித்து எழுந்து உட்கார்ந்தாள்.<br />“பல் வெளக்கிட்டு வா. பால் தாறேன்.”<br />லில்லியின் கணவன் சேவியர் காலையிலேயே எழுந்து சாம்பாருக்கு தேவையான வெங்காயம், காய் இவற்றை நறுக்கி வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்குப் போயிருந்தான். அதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைப்பவன். காபி, டீ எதையும் வீட்டில் அவன் எதிர்பார்ப்பதில்லை. வழியில் ஏதாவது ஒரு கடையில் குடித்துக்கொள்வான். இதைக்கூட அவன் லில்லிக்கு செய்யும் உபகாரமாய் நினைத்தான்.<br />லில்லிக்குத்தான் நிறைய தலைவலி. காலைச் சிற்றுண்டி, மதியச்சாப்பாடு செய்யவேண்டும். அடுக்குக் குவளைகளில் மகளுக்கும் கணவனுக்கும் தனக்கும் தனித்தனியாய் எடுத்துவைக்க வேண்டும். பாட்டில் தேடி தண்ணீர் நிரப்பி, துண்டுதேடி, பைதேடி... இதெல்லாம் போதாதென்று ஜெனிட்டாவின் குடலோடு வேறு தினமும் குத்துச்சண்டை நடத்த வேண்டிருக்கிறது லில்லிக்கு. ஜெனிட்டாவை கழிப்பறைக்கு அனுப்புவது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. பலி பீடத்துக்குப் போக பயந்து பின்னுக்கு இழுக்கும் ஆட்டைப்போல பார்க்க பாவமாக இருக்கும். என்ன செய்து தொலைப்பதென்று எதுவும் புரியாமல் விழிப்பாள் லில்லி.<br />அப்படி என்னதான் இருக்குமோ அவள்குடலில். இம்மியும் இளகிக்கொடுக்காத கல்குடல். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தாகிவிட்டது. ஜெனிட்டாவுக்கு குடல் பிரச்சனை ஒரு பங்கென்றால் வலிக்கும் என்ற பயம் பத்து பங்காக இருந்து காலைக்கடன் கழிப்பதே பெரும் சிக்கலாகிக் கொண்டிருந்தது. கழிப்பறைக்குள் கால்வைக்கக்கூட பயந்தாள் ஜெனிட்டா.<br />‘நாட்டுல ஒரு டாக்டர் கூடவா ஒழுங்கா படிச்சி வந்திருக்க மாட்டாங்க. தினசரி காலையில குழந்தைய வெளிக்கு போக வைக்க முடியாத டாக்டருங்க என்ன படிச்சிட்டு வந்திருப்பாங்க.’ லில்லியின் கையாலாகாத்தனம் மருத்துவர்களின் மீது கோபமாகத் திரும்பும்.<br />ஜெனிட்டா குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே அவளுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. குழந்தை தினமும் வெளிக்குப் போகாது. மலம் இறுகிக் கொள்ளும். அப்போதெல்லாம் குழந்தையைக் காலில் போட்டு முருங்கைக் கீரையின் சிறு காம்பை ஓட்டைக்குள்விட்டு பிடித்துக்கொள்வாள். முருங்கைக் காம்பு வைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் மலம் எவ்வளவு இறுகி இருந்தாலும் வந்துவிடும். இருப்பினும் மலத்துளையைக் சுற்றி தெறிப்புகள் ஏற்பட்டு ரத்தம் கசிவதை தடுக்க முடியாது. பிறகு அதற்கு மருந்து தடவிக்கொண்டிருப்பாள் லில்லி.<br />ஜெனிட்டாவை மழலையர் பள்ளியில் சேர்த்த பிறகு முருங்கைக் குச்சி மருத்துவம் முடியாமல் போய் விட்டது. தான் வளர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்வாளோ என்னவோ காலில் உட்காராமல் ஆட்டம் காட்ட ஆரம்பித்து விட்டாள். இப்போது இரண்டாம் வகுப்பிற்கு வந்துவிட்டாள். மருத்துவர்கள் அவ்வப்போது நீட்டு நீட்டான மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறார்கள். அதை மலத்துளைக்குள் விடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அப்படியும் இரண்டு நாட்களுக்குத்தான் நிவாரணம் கிடைக்கிறது. வளர்ந்தால் சரியாகிவிடும் என்கிறார்கள். கீரையும் பாலும் முட்டையும் நிறையக் கொடுக்கச் சொல்கிறார்கள். லில்லியும் கொடுத்துத்தான் பார்க்கிறாள். இவற்றை விடவும் கடை பண்டங்களைத்தான் ஜெனிட்டா அதிகமாய் விரும்பித் தின்று தொலைக்கிறாள். ஒரே பெண்பிள்ளை விரும்பித் தின்பதை வாங்கிக் கொடுக்காமலும் இருக்க முடியவில்லை.<br />அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு பாலை ஆற்றியபடி ஜெனிட்டாவைக் கூப்பிட்டாள். போராட்ட நேரம் ஆரம்பமாகப் போகிறதே என்ற ஒருவிதமான மிரட்சியுடன் உட்கார்ந்திருந்தவள். “என்னம்மா?” என்றாள்.<br />“பல் வெளக்கிட்டல்ல”<br />“ம்”<br />“இந்தா இதக்குடி”<br />கவனமாய் பால் டம்ளரை வாங்கிக் கொண்டவள் லில்லியின் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தாள்.<br />“நல்லா ஆத்திட்டன். சுடாது. சீக்கிரமாக் குடி.”<br />“ம்”<br />“வெண்டைக்காய் நறுக்கணும். என்னால நின்னுட்டு இருக்க முடியாது. குடிச்சிட்டு வா சீக்கிரமா” சமையலறைக்குத் திரும்பினாள்.<br />“அம்மா”<br />“என்னடி?”<br />“இன்னக்கி எனக்கு ஆய் வரல்லம்மா”<br />“என்னக்கித்தான்டி ஒனக்கு அது தானா வந்துச்சி?”<br />“...”<br />“எப்பத்தான் இந்த பிரச்சனைத் தீருமோத் தெரியலையே ஆண்டவரே” அருவாமனையை எடுத்துவைத்து கழுவிய வெண்டைக்காய்களை நறுக்க ஆரம்பித்தாள்.<br />“ஜெனி இன்னுமா பால் குடிக்கிற?”<br />“இன்னும் கொஞ்சம் இருக்கும்மா”<br />“குடி மடக்கு மடக்குன்னு”<br />“ரொம்ப ஆறிப்பொயிட்டுதும்மா. வயத்தப் பெரட்டுது”<br />“வெத வெதன்னு குடுத்தா சூடா இருக்கு குடிக்க முடியலம்பே. ஆத்திக்குடுத்தா சில்லுன்னு இருக்கு கொமட்டுதும்ப. நீ என்னக்கித்தான் நல்லாருக்குன்னு சொல்லி குடிச்சிருக்குற. சீக்கிரம் குடி.”<br />“எனக்குப் போதும்மா”<br />“குடிடி எல்லாத்தையும் குடிச்சாத்தான் ஆய் வரும்”<br />“அம்மா இன்னக்கி மட்டும் வேண்டாம்மா. எனக்கு ஆயி வரலம்மா”<br />“இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நீ பாலக்குடிச்சிட்டு இப்ப பாத்ரூமுக்குள்ள போவணும் சொல்லிட்டன். நேத்தைக்கு முழுசா வயத்தவிட்டு கழிஞ்சிருந்தாக் கூடஇன்னக்கி, இருந்துட்டுப்போன்னு விட்டுடலாம். ஆட்டாம் புழுக்கையாட்டம் ரெண்டு வந்து விழுந்துது. அதோட எழும்பிட்ட. இன்னக்கிம் இருக்கலன்னா என்ன அர்த்தம்”<br />“ஆண்டவர் மேல சத்தியமா எனக்கு ஆயி வரல்லம்மா”<br />“சத்தியம் பண்றியா நீ. ஏற்கெனவே ஓம் ஒடம்புல முக்காவாசி கல்லாவே இருக்கு. இதுல ஆண்டவர்மேல ஆணயிட்டு வேற சத்தியம் பண்றியா? ஒனக்கும் ஒப்பனுக்கும் ஈவு எறக்கங்குறதே இருக்காதாடி. ஒரு பொட்டச்சி கெடந்து புள்ளக்கிட்ட எவ்வளவு போராடுறாள்னு ஒப்பனும் பாவப்பட மாட்டேங்கிறான். நம்ப அம்மா இவ்வளவு கெஞ்சி கூத்தாடுதேன்னு ஓந்நெஞ்சிலயும் சொரக்கமாட்டங்குது. நான் என்னடி பாவம் பண்ணினேன். ஒங்க ரெண்டு பேருக்கிட்டயும் நான் ஒவ்வொரு நாளும் நரகத்த அனுபவிக்கிறன் தெரியுமாடி. ஆண்டவரே என்னை எதுக்காக இப்படி சோதிக்கிற.”<br />தன் அம்மா புலம்புவதை சகித்துக்கொள்ள முடியாத ஜெனிட்டா “சரிம்மா நான் பாத்ரூமுக்குப் போறன்” என்று எழுந்து வந்தாள். சமையல்கட்டை அடுத்திருந்த கழிப்பறையுடன் கூடிய குளியலறைக்குள் நுழைந்தாள்.<br />“ஜெனி இரு இந்தா இத வாங்கிட்டு போடி”<br />“பேப்பர் வேண்டாம்மா. நான் டாய்லெட் பேஷின்லயே போயிக்கிர்றன்”<br />“அதெல்லாம் வேணாம். நீ எப்பவும் போல பேப்பர்லயே போ நீ போனியா போகலையான்னு எனக்குத் தெரிய வேணாம்”<br />“நான் சொல்றம்மா”<br />“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். நானே பாத்துக்கிர்றன். நீ பேப்பர்லயே போ”<br />முறைப்புடன் தாளை வாங்கிக்கொண்டவள் கோபத்தில் படீரென கதவை அடித்துச் சாத்தினாள்.<br />“பாத்துடி. கதவு ஒடஞ்சிடப்போகுது. வீட்டுக்காரங்ளுக்கு காதில விழுந்துட்டா அப்பறம் அதுக்குவேற நான் விளக்கம் சொல்லிக்கிட்டு நிக்கணும். இப்ப அதுக்கெல்லாம் நேரம் இருக்காச் சொல்லு.”<br />விசில்வந்த குக்கரை இறக்கி வைத்துவிட்டு வெங்காயம் தக்காளி வதக்கிக்கொட்டி புளிக்கரைசல் சேர்த்து சாம்பாரை கொதிக்கவிட்டாள். ரசத்திற்காக சூடான பருப்புத் தண்ணீருக்குள் முழு தக்காளியை எடுத்துப் போட்டிருந்தாள். ரசம் வைக்க வேண்டும், வெண்டைக்காய் வதக்கவேண்டும். கடைசியாய் ஆளுக்கு இரண்டு தோசை ஊற்றவேண்டும். எத்தனையைச் செய்வது? ரசமும் வெண்டைக்காய் பொரியலும் மட்டும் இருந்தாலே போதும். அவளும் ஜெனிட்டாவும் பெரும்பாலும் ரசத்தில்தான் சாப்பிடுவார்கள். சாம்பார் என்றால் ஜெனிட்டாவுக்கு ஆகவே ஆகாது. லில்லிக்கும் சிலசமயம் பிடிக்காமல்தான் போய்விடுகிறது. காரசாரமாய் வத்தல் குழம்போ, புளிக்குழம்போ வைத்தால் இரண்டு வாய் அதிகமாய்ச் சாப்பிடலாமென்று தோன்றும். ஆனால் அவளின் கணவன் சேவியருக்கு சாம்பாரைத் தவிர வேறு எதுவும் பிடிக்காது. தினமும் பருப்பை கடைந்து காய்போட்டு வேகவைத்து இறக்கி வைத்துவிட வேண்டும். மூன்று வேளைக்குமே சோறும் சாம்பாரும் கொடுத்தாலும் தின்றுவிட்டுக் கிடப்பான்.<br />“ஜெனி”<br />“என்னம்மா?”<br />“என்னடி பண்ற உள்ள?”<br />“ஆயி இருக்கப் போறம்மா”<br />“நீ ஒக்காந்திருக்கிற மாதிரி தெரியலையே. நின்னுக்கிட்டுல்ல இருக்கிற”<br />“சுவத்தில பெரிய பல்லி ஒண்ணு தாவுச்சிம்மா. அதான் எழுந்தன்”<br />“சரி ஒக்காந்து இரு”<br />“ம்”<br />‘கதவை மூடி வைத்துவிட்டுக்கூட உள்ளே நிம்மதியாய் நிற்க முடியவில்லையே ஆண்டவரே’ முணுமுணுத்துக் கொண்டாள் ஜெனிட்டா.<br />இந்நேரம் இந்த ஜெனிட்டா குமாரமங்கலம் சுந்தரமூர்த்தி அய்யங்கார் வீட்டு வாரிசாய்ப் பிறந்திருந்தால் இதுபோன்ற பிரச்சனையெல்லாம் அங்கேயும் ஏற்பட்டிருக்குமா என்று ஒரு கணம் நினைத்தாள் லில்லி. இதுபோல் ஒவ்வொரு சம்பவத்தையும் அந்தக் குடும்பத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்கும் பழக்கம் லில்லிக்கு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இப்போது இது மட்டும்தான் அவளால் முடிகிறது. வேறு என்ன செய்வது? எல்லாமேதான் நடந்துமுடிந்து விட்டதே. திரண்டு வந்த கார்மேகம் மழை பெய்யாமலே கலைந்து போனதைப் போல லில்லி கண்ட கனவுகள் அனைத்தும் வீணாய் சிதைந்து போய்விட்டதே.<br />லில்லி படித்த அதே பள்ளியில் அதே வகுப்பில்தான் ரெட்டைத்தெரு ராமானுஜ அய்யங்கார் மகள் வனஜாவும் படித்தாள். ஏழாம் வகுப்பிலிருந்தே இருவருக்கும் நல்ல பழக்கம். வகுப்பில் அவளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், மற்ற ஆசிரியர்கள் அவளிடம் காட்டும் அக்கறை ஆகியவற்றை பார்த்த லில்லி வனஜா பேசும் அய்யங்கார் ஆத்து பாஷையும் அவளுடைய பழக்கவழக்கங்களும் ரெண்டும் கெட்டானாய் இருந்த லில்லியைக் கவர்ந்துவிட்டன.<br />வனஜாவின் பாஷையை தானும் ஓரளவு பேச கற்றுக் கொண்டாள் லில்லி. போதாக்குறைக்கு கடவுளின் அருள் பெற்ற பிள்ளைகள் மட்டும் தான் அய்யங்கார் ஆத்தில் வந்து பிறப்பார்கள் என்றும் வனஜா அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்தாள். இது தானொரு அய்யங்கார் வீட்டு பெண்ணாய்ப் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தை லில்லியின் மனதில் ஏற்படச் செய்திருந்தது. வனஜாவைப் போலவே நடந்துகொள்ள ஆசைப்பட்டாள். மீன், முட்டை, கறி இவற்றை ஒதுக்கியதோடு அவற்றைக் கண்டால் குமட்டவும் செய்தாள். இவைகளை விரும்பிச் சாப்பிடும் தன் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் ஒருவிதமான அசூயையுடன் பார்த்தாள் தான் ஒரு மதம் மாறிய கிருத்துவப் பெண் என்ற அடையாளத்தை சிரமப்பட்டு மறைக்க முயற்சித்தாள்.<br />ஆசிரியர் பயிற்சி படிக்க லில்லி வனஜாவைப் பிரிந்து கடலூர் சென்றுவிட்ட போதும் வனஜாவை மட்டுமே அவள் உற்ற தோழியாய் நினைத்தாள்.<br />கடவுளின் அருள்பெற்ற வனஜாவை ஒருநாள் தற்செயலாய் சினிமாக்கொட்டகை வாசலில் பார்த்தாள் லில்லி. அவள் வேறொரு ஆணுடன் தோள்கள் உரச உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்தாள். லில்லி அதைப்பார்த்து அதிர்ந்துதான் போனாள்.<br />“என்ன வனஜா நீ இவன்கூட வந்திருக்கிற?”<br />“ஏய் அவன் இவன்னு ஏக வசனத்துல பேசாதடி. காதுல விழுந்துடப்போறது. அவரு இப்ப தாலுக்கா ஆபீஸ்ல நல்ல வேலயில இருக்கார் தெரியுமோ. மாதம் பதினெட்டாயிரம் சம்பளம் வாங்குறாராக்கும்”<br />“வாங்கட்டுமே அதுக்காக நீ ஏண்டி அவன்கூட வரணும்?”<br />“என்ன இது கேள்வி. சும்மா பொழுதுபோகாமயா நான் சுத்தறேன். நாங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறம்.”<br />“வீட்டுக்குத் தெரியுமா?”<br />“ஒனக்குத் தெரியாதா? எங்கக்கா கூட இப்படித்தான் வேற ஜாதிக்காரன விரும்பி வீட்டுக்குத் தெரியாமே கல்யாணம் பண்ணிண்டா. இப்ப திருக்கோவிலூருல ஜம்முன்னு வாழறா”<br />“அதிருக்கட்டும் ஒங்க வீட்டுல இதுக்கு ஒத்துக்குவாங்களாடி?”<br />“திரும்பத்திரும்ப என்ன இது கேள்வி. யாரு ஒத்துக்கணுங்கிற? நான் இவர்கூடத்தான் வாழப்போறன். இவர் ஒத்துண்டா போறாதா?” என்றவள்<br />“கல்யாணத்துக்குப் பிறகு சொல்றன். ஒருநாள் எங்க ஆத்துக்கு வந்துட்டுப் போ” என்றவாறே அவனுடன் வண்டியில் ஏறிப்போய்விட்டாள்.<br />குடும்ப மானத்தையும் கௌரவத்தையும் கட்டிக் காக்க வேண்டிய பெண் இப்படி பொறுப்பில்லாமல் போகிறாளே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டாள் லில்லி.<br />படிப்பு முடிந்த ஓராண்டுக்குள் லில்லிக்கு திருவண்ணாமலைப் பக்கம் வேலையும் கிடைத்தது. மேற்கொண்டு அஞ்சல் வழியில் படிக்க விண்ணப்பித்திருந்தாள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இளங்கலை கணிதம் எடுத்துப் படித்தாள். செமினார் வகுப்புகளுக்கு திருவண்ணாமலைக்குச் செல்வாள். வகுப்பில் வைத்துத்தான் முதன் முதலில் விக்னேஷ்வரனை சந்தித்தாள். பக்கத்து பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்து வகுப்பைக் கவனித்தார்கள். அடிக்கடி இவளைப் பார்த்து புன்னகைத்தான். நெற்றிப்பட்டையும் கழுத்தை ஒட்டி தொங்கிக்கொண்டிருந்த ஒற்றை ருத்ராட்சக் கொட்டையும் பதிலுக்கு இவளையும் புன்னகைக்க வைத்தது.<br />இரண்டொரு நாளில் வனஜாவின் பிரிவை ஈடுசெய்வதாய் இருக்கும் இவனது நட்பு என்று நம்பினாள். நன்றாகப் பேசினான் அவன். வனஜா பேசும் அதே பாஷையில் இனிக்க இனிக்க அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத்தோன்றும் லில்லிக்கு. நாளாவட்டத்தில் அவன் உரிமையோடு அவளைத் தொட்டுத் தொட்டு பேசவும் ஆரம்பித்தான். லில்லிக்கு அப்படி அவன் நடந்துகொள்வதுகூட உள்ளுர மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது. அவனிடமிருந்து விலகிநின்று பழக வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை.<br />தனிமையில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் தன் வீட்டிற்கு வந்த பிறகு லில்லி கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் முக்கியமான பூஜைகளின்போது சொல்ல வேண்டிய சுலோகங்கள் பற்றியும் ஒவ் வொன்றாக அவளுக்குக் கற்றுக்கொடுத்தான். மூன்றாண்டு முடிவில் கல்யாணம் பற்றி பேசும் போது தான் விக்னேஷ்வரன் வீட்டில் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது லில்லிக்கு தெரியவந்தது. இவ்வளவு ஆசைஆசையாய் பழகி கடைசியில் பிரிவதா? லில்லியால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லா கனவிலும் மண் விழுந்துவிட்டது என்று கலங்கித் தவித்தாள்.<br />கடைசியாய் சந்தித்தபோது விக்னேஷ்வரன் சிறியதொருபிள்ளையாரைக் கொடுத்து “லில்லி இது எங்க தாத்தாவோட அப்பா காலத்துலேருந்து எங்காத்து பூஜை அறையில் இருந்தது. இத என்னோட ஞாபகமா நீ வச்சிக்க. ஒனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாக்கூட இத எடுத்து கைல வச்சிக்கிட்டு நான் சொல்லிக்கொடுத்த சுலோகத்த சொல்லு. கஷ்டமெல்லாம் வெலகிடும். மனசார நான் ஒன்ன விரும்பினதுக்கு என்னால செய்ய முடிஞ்சது இது மட்டும்தான். என்ன மன்னிச்சிடு லில்லி” என்று தழுதழுத்தான் அவனின் கலங்கிய கண்களைப்பார்த்து நெகிழ்ந்து போய்விட்டாள் லில்லி. “பரவால்ல, நீங்க அழுதா, என்னால அத தாங்கிக்க முடியாது. நான் எப்பவும் ஒங்கள நெனச்சிட்டேத்தான் இருப்பேன்.” என்று பதிலுக்கு இவளும் உணர்ச்சிகளை கொட்டிவிட்டு பெருந்தன்மையோடு பிரிந்துவந்து விட்டாள்.<br />லில்லியால் நிம்மதியாய் இருக்கமுடியவில்லை. தன் தோழி வனஜாவிடம் பிரச்சனையை சொல்லிப் பார்க்கலாமா என்று நினைத்தாள் அவள் மூலமாக ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமென்ற நப்பாசையில் அவள் வீட்டுக்குப் போனாள்.<br />வனஜா அதற்குள் இரண்டு பிள்ளைகளை பெற்றிருந்தாள். இரண்டும் நல்ல சூட்டிகையாய் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தன. வனஜாவை ஒரு ராணியைப்போல் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான் அவளுடைய கணவன்.<br />பேச்சை ஆரம்பித்து மெதுவாக தன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள் லில்லி. எல்லாவற்றையும் கேட்ட பிறகு. “எங்கிட்ட ஒரு வார்த்த இதப்பத்தி சொல்லியிருந்தா முன்கூட்டியே நான் ஒன்ன தடுத்திருப்பனே. இப்படி ஏமாந்திட்டியேடி” என்று லில்லிக்காக உண்மையாகவே வருந்தினாள் வனஜா.<br />“நீயெல்லாம் வேறு ஆள கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலயா. எனக்கு மட்டும் ஏண்டி இப்படி?”<br />மெதுவாக இவளின் காதோரம் குனிந்து.<br />“எங்க மனுஷாள் தம் வீட்டு பொண்ணுங்க எந்த கீழ்சாதி பையன விரும்பினாலும் கல்யாணம் பண்ணிண்டு தொலையட்டுமுன்னு விட்டுடுவாங்க. ஆனா ஆண்பிள்ளைகள மட்டும் அப்படி ஒருநாளும் விடவே மாட்டாங்க. குலம் கோத்திரம், பதினாறு பொருத்தம் எல்லாம் பாத்துதான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. எங்க பையனுங்க வேற பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சி நீ எங்கயாவது பாத்திருக்கிறியா சொல்லு”<br />மௌனமாய் உட்கார்ந்திருந்தாள் லில்லி.<br />“வேத்தாள ஆத்துக்குள்ளயே சேக்கமாட்டாங்க. அதுவும் மாட்டுப்பொண்ணா சேக்கணுமுன்னா முடியுமா சொல்லு”<br />தன்னை விக்னேஷ்வரன் ஏன் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதற்கான காரணம்கூட லில்லிக்கு நியாயமாக தெரிந்தது. வேறுவழியில்லை என்று நினைத்து தன் மனதை தேற்றிக் கொண்டாள்.<br />பிறகு வீட்டில் ஏற்பாடு செய்த சேவியருடன் மோதிரம் மாற்றிக்கொண்டு அவனுக்கு மனைவியான போதும் விக்னேஷ்வரன் கொடுத்த பிள்ளையாரை மட்டும் மறக்காமல் தன்னுடனே வைத்துக் கொண்டாள். மரப்பிள்ளையாரும் சுலோகமும் அவளுக்கு அவ்வப்போது கைகொடுத்து உதவியதாகவும் நம்பினாள்.<br />தன் மகள் ஜெனிட்டாவின் கையில் அந்த பிள்ளையாரைக்கொடுத்து சுலோகத்தை சொல்லச்செய்யலாமா என்று அடிக்கடி தோன்றும். அவள் தன் அப்பாவிடம் சொல்லி ஏதாவது புதுப்பிரச்சினை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இது நாள் வரை அப்படி செய்யாதிருந்தாள். ஆனால் இனிமேலும் யோசிக்கக்கூடாது. இன்றைக்கு அதை செய்துவிட வேண்டும். ஜெனிட்டாவே கூட இது என்ன ஏதென்று ஆயிரம் கேள்விகளைக் கேட்கலாம். கேட்கட்டும். கேள்விக்கு பதில் சொல்வது முக்கியமில்லை. நமக்கு காரியம் நடந்தாக வேண்டும். அதுதான் முக்கியம் என்று நினைத்தவள்.<br />“ஜெனி” என்றாள் கழிப்பறையைப் பார்த்து.<br />“ம்”<br />“என்ன ஆச்சா?”<br />“இன்னும் இல்லம்மா.”<br />“இரு வர்றன்.” என்றவள் அலமாரியில் மறைத்து வைத்திருக்கும் பிள்ளையாரை எடுத்துவரப் போனாள். அதே நேரம் “லில்லி தயிர் வேணுமா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான் சேவியர்<br />“ரெண்டு ரூபாய்க்கு வாங்குங்க” என்றவள் ‘போச்சி இவன் வந்துட்டான். இன்னக்கும் முடியாது’ என்று தனக்குள்ளே அலுத்துக்கொண்டாள்.<br />“மணி எட்டு ஆயிடுத்துடி ஜெனி... இனிமே எப்ப குளிக்கிறது எப்ப சாப்பிடுறது. தலவேற கட்டணும்.” சத்தம் போட்டாள்.<br />“நான் குளிக்கிறம்மா”<br />“இன்னொரு தடவ ஒக்காந்து பாரு ஜெனி”<br />“....”<br />“கிருமிகள் ரெத்தத்துல கலந்துரும் ஜெனி.”<br />“முடியலம்மா வலிக்குது.”<br />“ஒக்காந்து ட்ரை பண்ணி பாரு ஜெனி”<br />கழிப்பறைக்குள்ளிருந்து அழும்குரல் கேட்டது.<br />“என்ன ஜெனி அழுவுறியா?”<br />இன்னும் சற்று உரக்க தேம்பினாள் அவள்.<br />“கதவ தொற ஜெனி. இப்ப எதுக்கு அழுவுற?”<br />ஜெனிதா கதவைத் திறந்து பேப்பரைக் காட்டிவிட்டு மேலும் சத்தமாய் அழுதாள். பேப்பரில் இரண்டு மூன்று சொட்டு ரெத்தம் மட்டும் இருந்தது.<br />“எப்பவும்தான் ரெத்தம் வரும். அதோட டாய்லெட்டும் வந்துரும். இன்னக்கி ரெத்தம் மட்டும் வந்துருக்கு. உள்ள இழுத்துக்கிட்டியாடி. இறுக்கி இறுக்கிவச்சி என்னடி பண்ணப்போற. அய்யோ கடவுளே... ஆண்டவரே... என்னால தாங்க முடியலயே...” தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள் லில்லி.<br />இவற்றையெல்லாம் கவனித்தபடியே தயிரை வாங்கிவந்து வைத்த சேவியர் “லில்லி அவள விடு. நீ பள்ளிக்கொடம் கௌம்புற வேலயப்பாரு” என்றான்.<br />திரும்பி இவனைப் பார்த்தாள்.<br />“நானும் ஜெனியும் ஊருக்குப் போறம். நம்ம கொல்லயில இன்னக்கி அறுப்பு அறுக்குதாம். எங்கப்பா வரச்சொல்லி பேசுனாங்க”<br />“பள்ளிக்கொடம்?”<br />“நான் ஒரு வாரத்துக்கு மெடிக்கல் லீவு வரும்போதே பாபு வாத்தியார்கிட்ட குடுத்துட்டு வந்துட்டன்.”<br />“அப்ப ஜெனி?”<br />“அவளுக்கும் ஒரு வாரம் லீவு சொல்லிட வேண்டியது தான்.”<br />“என்னங்க இப்புடி திடீருன்னு?”<br />அதான் சொன்னேன்ல. அறுப்பு அறுக்குதாம். அண்ணங்க யாரும் வீட்டுக்கு வரலயாம். எங்கப்பா பாவம். வயசானவங்க அவங்க. என்ன செய்வாங்க. இந்த முறை நான்தான் போகணும்.”<br />“ஜெனி எதுக்கு?”<br />“நான் மட்டுந்தான் போவமுன்னு நெனச்சன். இப்பத்தான் இவளயும் கூட்டிப் போகலாமுன்னு தோணுச்சி. பாவம் தெனமுந்தான் °கூல் போறா. ஒரு வாரம் ஊருல வந்து இருக்கட்டுமே. பக்கத்துவீட்டு புள்ளங்ககூட விளையாடிட்டு வரட்டும். கிராமத்து அனுபவமும் அவளுக்கு கெடச்ச மாதிரி இருக்கும்”<br />“அப்ப நான் மட்டும் தனியா இருக்கணுமா?”<br />“நீயும் வேணுன்னாலும் லீவு போட்டுட்டு வாயேன்”<br />“அதெல்லாம் முடியாது. எங்க ஸ்கூல்ல ஏற்கனவே ரெண்டு பேரு மெடிக்கல் லீவுல இருக்காங்க”<br />“அப்பன்னா சனிக்கெழம வா. நாங்க இப்ப போறம்.”<br />“ஜெனி இப்படி இருக்காளே”<br />“அவள நான் பாத்துக்கிர்றன்.”<br />“அவ வயிறு ரெண்டுநாளா ரொம்ப சிக்கலாருக்குங்க.”<br />“நான் பாத்துக்கிர்றன்.”<br />“ஒங்கக்கிட்ட கூச்சப்படுவாங்க.”<br />“அத விடு. எங்கம்மா இருக்காங்கல்ல. அவங்க பாத்துப்பாங்க. இப்ப அவள யாங்கூட கிளப்பி விடு.”<br />“போற வழியில நெல்லை விநாயகா ஸ்வீட் ஸ்டால்ல கொஞ்சம் தின்பண்டம் வாங்கிக்கிட்டு போங்க.”<br />“ஊருல இல்லாத தின்பண்டமா?”<br />“ஒரு வாரம். ஒண்ணுமில்லாட்டி ஏங்கிப் போயிடுவாங்க.”<br />“எனக்குத் தெரியாதா, கொல்லய சுத்தி சோளம் வெளஞ்சிநிக்கிது. களத்துமேட்டுல ஒருபக்கம் பயத்தங்கா. இன்னொரு பக்கம் தொவரை. கேப்ப கருதும் கம்மங்கருதும் வாட்டிக்குடுப்பாங்க எங்கம்மா. அந்த வாசனயே அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்பா. நீ வேணுன்னா அவளக் கேட்டுப் பாரேன்.”<br />“ஆமாம்மா அனிதா மேரியக்கா நிச்சயதார்த்தத்துக்குப் போனப்ப எனக்கு ஆயா வாட்டிக் கசக்கிக் குடுத்தாங்கம்மா. ஆனா என்னாலதான் நெறயா திங்க முடியல. அப்பா கூட்டிட்டு வந்துட்டாரு.”<br />“சரி சரி போதும் போ”<br />அழைத்துக் கொண்டு போயே விட்டான்.<br />ஒரு வாரத்திற்கு ஜெனிட்டாவோடு மல்லுக்கட்ட வேண்டியதில்லை என்று சற்று நிம்மதியாய் இருந்த போதும் ஜெனிட்டாவைப் பற்றி கவலையாகவே இருந்தது. ‘கிராமத்தில் போய் தினமும் எப்படி வெளிக்குப் போவாளோ யாரும் பார்க்காமல் இஷ்டப்படி முக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்க பாத்ரூம் வசதிகூட இல்லையே’ இதுவரை ஒவ்வொன்றையும் மகளுக்கு பார்த்துப் பார்த்து தன் கையாலேயே செய்து பழக்கப்பட்டுவிட்டாள் லில்லி. ஜெனிட்டா இல்லாதது வெறுமையாய் இருந்தது. ஊரில் வைத்தே அவளுக்கு இந்தமுறை பிள்ளையார் வைத்தியத்தை செய்துபார்த்துவிடுவது என்று திட்டமிட்டுக் கொண்டாள். சனிக்கிழமை எப்போதும் வரும் என்று காத்திருந்தாள்.<br />சனிக்கிழமை விடிந்ததும் விடியாததுமாக கிளம்பி விட்டாள். ஊருக்கு வரும் முதல் பேருந்தில் வந்திறங்கி லில்லியை சேவியர் எதிர்கொண்டு அழைத்துப் போனான். வீட்டிற்கு போவதற்குள் ஜெனிட்டாவைப் பற்றி ஆயிரம் விசாரிப்புகள்.<br />அம்மா வரும் என்று ஜெனிட்டாவுக்கு தெரியும். இருந்தபோதும் எப்போது வருவாள் என்று அதைப் பற்றி அவள் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை. லில்லி வீட்டிற்கு சென்ற நேரத்தில் அவள் வீட்டிலும் இல்லை.<br />“ஜெனி எங்க அவளக்கூப்பிடுங்க.”<br />“நீ காப்பி குடிச்சிட்டு வா. நம்ம களத்துமேட்டுக்குப் போவம். ஜெனி அங்கதான் போயிருப்பா.” இருவரும் களத்துமேட்டிற்குப் போனார்கள். லில்லி தன் முந்தானை மறைப்பிற்குள் பிள்ளையாரை எடுத்து வைத்துக்கொண்டு வந்திருந்தாள்.<br />நெல் பட்டறைகளைக் காட்டி “இந்த வருசம் நல்ல விளைச்சல்” என்றான் சேவியர்.<br />“அதிருக்கட்டும் ஜெனி எங்கங்க?”<br />பழைய புதர்மண்டிய திட்டை நோக்கி கையைக் காட்டினான். புதர்களின் மறைவில் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் ஊசியா? உலக்கையா? நூலா? கேட்டுக் கொண்டு தூரமாகவும் பக்கம் பக்கமாகவும் பாவாடையை மழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். முந்தைய இரவில் அவர்களின் பாட்டி சொன்ன ஆறுமரக்கால் பல்லுக்காரன் பிடித்துக் சென்று அடைத்துவைத்துள்ள பிள்ளைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படியெல்லாம் அந்த பல்லுக்காரனிடமிருந்து தப்பித்து வரலாம் என்று தீவிரமாய் யோசித்து ஆளுக்கு ஒரு யோசனையாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.<br />லில்லி தன் மகள் ஜெனிட்டாவின் குரல் வரும் திசையில் பின்பக்கமாய் சென்று அவர்கள் யாரும் அறியாதவாறு மறைந்து நின்று கொண்டாள். குனிந்து ஜெனிட்டா உட்கார்ந்திருக்கும் இடத்தை உற்று பார்த்தாள்.<br />ரெத்தம் சிந்தாமல் வலிய வேதனை எதுவுமில்லாமல் அதுபற்றிய உணர்வுகூட இல்லாமல் வெகு அனாயசமாய் புதர் மறைவில் ஜெனிட்டா உருவாக்கியிருந்தாள் பொன்னிறத்தில் மின்னும் அதை. அது தன் முந்தானைக்குள் மறைத்து எடுத்து வந்திருக்கும் பிள்ளையாரைப் போன்று உருவத்தில் அப்படியே ஒத்திருந்தது. இதழ்கடையில் சிறு புன்னகை நெளிய இது இனிமேல் தேவையில்லை என்று நினைத்தவள் கையிலிருந்ததை நழுவவிட்டாள். கணவன் நிற்குமிடம் நோக்கி நடந்தாள். தூரத்தில் மாதாகோவில் மணி ஒலித்துக்கொண்டிருந்தது. <span></span><br /></span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-46487007303746532532010-01-13T09:35:00.000-08:002010-11-22T06:17:45.965-08:00செய்திகள் - குறிப்புகள் - கருத்துகள்:-மு.சிவகுருநாதன்<span><span><br /><span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);">பாமரனின் பாசிசக்குரல்</span><br /><br />லயோலா கல்லூரியின் காட்சி ஊடகவியல் துறையினர் நடத்திய ‘கனாக்காலம் - 2007’ என்ற கருத்தரங்கில் ‘சினிமாவும் சமூகமும்’ என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்த கவிஞர் லீனா மணிமேகலை ‘துப்பட்டா’அணியாததால் கல்லூரிவாசல் வரை சென்று திரும்பினார். அந்த கருத்தரங்கில் பாலு மகேந்திரா, அஜயன்பாலா, ஞாநி, பாமரன் போன்றோர் கலந்து கொண்டனர். இது பற்றி கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை ‘இந்த இடம் எங்களுக்கு கோயில் போன்றது’ என்று கூறுகிறார். அவருடைய பார்வையில் அது சரியானதுதான். ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட பாமரன் பண்பாடு, நம்பிக்கைகள் பற்றி நிறைய பிதற்றியிருக்கிறார் (குமுதம் ரிப்போர்ட்டர் - 27.12.2007).<br /><br />பெரியார் வள்ளலாரையும், சங்காரச்சாரியையும் பாமரனைப்போல ஒன்றாகப் பார்க்கவில்லை; வேறுபடுத்தித்தான் பார்த்தார். விநாயகர் சிலை உடைத்தல், ராமர் படத்தை செருப்பால் அடித்தல் போன்ற எதிர்க் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெரியாரை பாமரன் பண்பாட்டின் பெயரால் கொச்சைப்படுத்துகிறார். “இந்துக்கள் தவிர பிற மதத்தினர் உள்ளே வரக் கூடாது. ஆண்கள் மேலாடையுடன் வரக் கூடாது, பெண்களே வரக்கூடாது” என்றெல்லாம் விதிகள் உள்ளது செருப்பைக் கழற்றிப் போட வேண்டும் என்பதைப் போல. மேலும் ‘தலித்கள், சூத்திரர்கள் கோவிலுக்கு நுழையக்கூடாது, அர்ச்சகர் ஆகக் கூடாது, தேர் இழுக்கக் கூடாது, டீக்கடையில் தனி கிளாஸில்தான் டீ குடிக்க வேண்டும்... என்றெல்லாம் விதிகள் உள்ளன. பண்பாடு கருதி பாமரன்கள் இவற்றைக் கடைபிடிக்கட்டும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை.<br /><br />“சண்டைக்கோழி” வசனப் பிரச்சினையில் போராட்டம் செய்தவர்கள் ‘சிவாஜி’ ‘அங்கவை, சங்கவை’ பிரச்சினையில் எங்கே போனார்கள்? “என்றெல்லாம் ‘சோ’வைப்போல மிகவும் அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதே போல் நாமும் கேள்வி எழுப்பலாம். எல்லாவற்றிற்கும் முன் நிபந்தனைகள் விதிக்கும் பாமரன் போன்றவர்கள் எதற்கு குரல் கொடுத்தார்கள் - கொடுக்கவில்லை என்று விரிவாக எழுத இங்கு இடமில்லை.<br /><br />தமிழ் சினிமா சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள், அரவாணிகள், மாற்றுத்திறனுடையோர் போன்றோரை ஒவ்வொரு படங்களிலும் இழிவான முறையில் சித்தரித்து வருகிறது. தொடக்க கால கருப்பு-வெள்ளைப் படங்களிலிருந்து பாமரன் போன்றவர்கள் போற்றும் பருத்திவீரன், கற்றது தமிழ் போன்ற படங்கள் வரை இந்நிலைதான். அதைப்பற்றியெல்லாம் பாமரன் உள்பட பலர் தட்டிக் கேட்டதில்லை. ‘சிவாஜி’ படத்தில் ‘அங்கவை-சங்கவை’ கதாபாத்திரங்கள் மூலம் இவர்கள் கருமைநிறமுடைய பெண்களை கொச்சைப்படுத்தப்பட்டதற்காக கொதிக்கவில்லை.<br /><br />பதிலாக தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க்குடிப்பெருமை மீதான தாக்குதல் என்று தாங்கமுடியவில்லை இவர்களால். அங்கவை-சங்கவைக்குப் பதிலாக குட்டி ரேவதி, லீனா மணிமேகலை என்று பெயர் வைத்திருந்தால் பாமரன்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் ரஜினி, சுஜாதா, சங்கர், மன்னிக்கவும் ஷங்கர், சாலமன் பாப்பையா போன்ற வியாபாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள். பாமரன் போன்றவர்கள் எழுதியும், பேசியும் வருபவை மாற்றுச் சிந்தனைகள் என்ற போர்வையில் கலாச்சார போலீஸ்களின் பாசிசக் குரலையே.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);">சமச்சீர் கல்வி</span><br /><br />சமச்சீர் கல்வி பற்றி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். முத்துகுமரன் குழுவின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டு விட்டது. “மக்கள் விரும்பினால் சமச்சீர் கல்விமுறை வரும்” என்றார் திருச்சியில் பேசிய குழுவின் தலைவர் முத்துக்குமரன். மக்களின் விருப்பத்தை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை.<br /><br />அரசு மெட்ரிக் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் மதிப்பெண் பட்டியலில் 1100க்குப் பதிலாக 500க்கு அளிக்கப்படும் என்ற ‘புரட்சி’கரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமச்சீர் கல்வி வெறும் மதிப்பெண் பட்டியலுடன் நின்று விடும் அபாயம் இருக்கிறது.<br /><br />10-ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்க, ஆதரவாக வந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைய ஏதுமில்லை. மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்பாடம் சுமையாக இருப்பதாகச் சொல்லி குறைக்க வைக்கிறார்கள். (தமிழ் என்று ‘இந்துத்துவா’ தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம் என்பது வேறு விஷயம்.) நாம் இதரப் பாடங்களில் சுமை குறைக்கப்பட வேண்டும் என்கிறோம். அரசு மதிப்பெண் சுமையைக் குறைத்து 1100ஐ 500க்கு மாற்றித்தர சித்தமாக உள்ளது. இதேபோன்று இனி மெட்ரிக் மற்றும் அரசுப்பள்ளிகளில் ஒரே வண்ணச் சீருடை, ஒரே நேரத்தில் தேர்வு, பெயரில் உள்ள மெட்ரிக் என்ற வார்த்தை நீக்கம் போன்ற ‘அதிரடி’ திட்டங்களையும் செயல்படுத்தலாம்.<br /><br />சர்வ சிக்ஷ அபியான் (SSA) திட்டத்தில் எந்த அளவிற்கு முன்னேற்றம் என்பது அதன் மூலம் பலனடைந்தவர்களுக்கே வெளிச்சம். இன்னமும் சேர்க்கை விண்ணப்பத்தில் “பெரியம்மை தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளதா?”, என்று கேட்பதைப் போல “பள்ளியில் சேர்க்கப்படவேண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் சேர்க்கப்படாமல் இல்லை” என்று கண்ணைமூடிக் கொண்டு எழுதி வைத்திருக்கிறார்கள் கல்வி அலுவலகங்களில். SSA திட்டத்தைப் பற்றி உணர்ச்சி மேலிட, பக்திப்பெருக்கோடு எம்.எல்.ஏ. ரவிக்குமார் காலச்சுவடு பிப்ரவரி 2008 இதழில் ‘விஜயகுமார் சார், உங்களை வணங்குகிறேன்!’ (கமல் சார், ரஜினிசார் என்பது போல) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.<br /><br />ஆந்திரமாநிலம் ரிஷி வாலியிலிருந்து கொண்டு வரப்பட்ட செயல்வழிக் கற்றல் (ABL) அம்மாநிலத்திலேயே நடைமுறையில் இல்லை. இதில் ஈடுபடும் அதிகாரிகள், ஆசிரியர்கள் வீட்டுக் குழந்தைகள் இப் பள்ளிகளில் படிப்பதும் இல்லை. அரசு சிறப்பானது என்று சொல்கிற திட்டத்தை ஏன் ஆங்கிலப் பள்ளிகளில் அமல்படுத்தவில்லை? என்பது போன்ற பல்வேறு வினாக்கள் எழுப்பப்படுகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து தரையில் அமர்ந்திருந்தால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது, அரசு நடத்தும் சமத்துவ விழாக்கள் மற்றும் அடிக்கடி எடுக்கப்படும் ‘ஒழிப்பு’ உறுதிமொழிகளைப் போல. எண்ணங் களிலும் செயல்பாட்டிலும் தோழமை உணர்வு வரவேண்டும். மேலும் திட்ட இயக்குநர் விஜயகுமாரை ‘தமிழ்நாட்டு பாவ்லோ ஃபிரேயர்’ ஆக மிகைப்படுத்தி கற்பனை செய்ய வேண்டியதில்லை.<br /><br />தொடர்ந்து ரவிக்குமார், “தாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்து அத்வானி அழுததாக ஒரு செய்தியைப் படித்தேன். அத்வானி மட்டுமல்ல, நரேந்திர மோடி கூட அழுது விடுவார்” என்றும் எழுகிறார். தமிழ்நாட்டில் மோடி ரசிகர்களுக்கு பஞ்சம் இருக்காது போலிருக்கிறது. அந்த இருவருக்கும் ‘பர்ஸானியா’ படத்தைப் போட்டுக் காட்ட ரவிக்குமார் ஏற்பாடு செய்யலாம். பாவம், அழுதவர்களை கொஞ்சமாவது மகிழ்ச்சிப்படுத்தலாம் அல்லவா?<br /><br /><span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);">சமத்துவமில்லாத பொங்கல்</span><br /><br />தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் கொண்டாட உத்தரவு வருகிறது. கிராமங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் மிகவும் கவனமாக தனித்தனி பானைகளில் பொங்கலிட்டு டி.வி.களில் பேட்டியும் கொடுக்கிறார்கள். எல்லா சாதியினரும் அவரவர் வீட்டு அரிசியை ஒன்றாகப் பொங்கி சாப்பிடுவார்களா? தலித் வீட்டு பொங்கலை பிற சாதியினர் ஏற்றுக் கொள்வார்களா? மத நீக்கம் செய்யப்பட்ட பண்டிகைகள் சாத்தியமா? என்று தெரியவில்லை. இங்கு பொங்கல் உள்பட அனைத்துப் பண்டிகைகளும் மத அடையாளங்களுடன் தான் நிகழ்த்தப்படுகிறது. வீடுகளில் நடைபெறும் இந்நிகழ்வு களை அரசுக் கொண்டாட்டமாக மாற்றத் தேவையில்லை.<br /><br />இதே போல் கல்வியில் மத நீக்கம் நடைபெறவேயில்லை. மொழிப் பாடங்கள் மற்றும் வரலாற்றில் (அறிவியலையும் சேர்த்து) மதக் கூறுகள் ஆழப்படிந்த இந்துத்துவா, தமிழையும், வரலாற்றையும் குழந்தை களிடம் சொல்லிக் கொடுத்து வருகிறோம். சர°வதி படம், சரஸ்வதி பூஜை (கலைமகள் ஆராதனை விழாவாம்) கொண்டாடாத பள்ளிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டம் தொடங்கி, அனைத்து விழாக் களும் மத அடையாளத்துடன் தான் நடத்தப் படுகின்றன. மதம்/சாதி நீக்கம் சாத்தியப்படாத வரையில் சமத்துவத்திற்கு வாய்ப்பில்லை.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);">நரேந்திர மோடியை வாழ்த்தும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி</span><br /><br />குஜராத் 2002-ல் இனப்படுகொலை நடத்தி, குஜராத்தில் கோர வெறித்தாண்டவமாடிய ‘மரண வியாபாரி’ நரேந்திரமோடி நமது போலியான ஜனநாயக அமைப்பைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வராயிருக்கிறார். வாழ்த்து சொல்லும் சம்பிர தாயம் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுமானால் தேவைப்பட்டிருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவருக்கு என்ன அவசியம் வந்தது?<br /><br />மேலும் மோடி மதவெறியுடன் கூடவே, ‘கர்மயோக்’ என்ற குஜராத் அரசு செலவில் வெளியிடப்பட்ட நூலில், “மலமள்ளுவது புனிதமான பணி அதைச் செய்பவர்கள் ‘யோக நிலை’ அடைவார்கள் என்றும் எழுதி தலித்துகளை கேவலப்படுத்தியுள்ளார். தமக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று நினைக்கிறாரா? கிருஷ்ணசாமி. இந்நிலையில்தான் தலித் ஒற்றுமை அவசியமாக இருக்கிறது.<br /><br />“பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நீங்கள் ஈட்டிய வெற்றி ஈடு இணையற்றது. நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள். சி.எம். என்றால் காமன் மேன் என அளித்த விளக்கம் அற்புதம். வருங்காலத்திலும் சாமானியர்களின் முதல்வராகத் திகழ்ந்து, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்க வேண்டும். உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களைக் காட்டிலும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களே உங்களுக்குப் பெரிதும் கை கொடுத்துள்ளன. அந்தத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது பகுதிக்கு என்ற பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கும் சமமாக அமைய வேண்டும். காலம் காலமாக சமுதாய ரீதியாக ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்கள் மீது தனி கரிசனமும் கவனமும் செலுத்த வேண்டும்.” தினமணி (திருச்சி), 27 டிசம்பர், 2007.<br /><br />பல்லாயிரம் முஸ்லீம்களை கொன்று குவித்தும் லட்சக்கணக்கில் மக்களை அகதிகளாக்கியும் கிடைத்த வெற்றி ஈடு இணையற்றதுதான். இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக குஜராத் ‘மாதிரி’யை ஒரிசா போன்ற பிற மாநிலங்களுக்கும் செயல்படுத்தத் துவங்கியுள்ளது சங் பரிவார் கும்பல். குஜராத்தில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை காவிமயப்படுத்துவது மோடிக்கு அவர்கள் மீதுள்ள கரிசனம் இன்றி வேறென்ன? ரஜினியின் உண்ணாவிரதத்திற்கு சென்று அருகே அமர்ந்து கொண்டது போல மதுரையில் நடத்தும் ‘சமநீதி சமூக மாநாட்டிற்கும்’ மோடியை அழைத்து கவுரப்படுத்தியிருக்கலாம்.<br /><br />விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் மோடியின் ‘கர்மயோக்’ நூலுக்கு எதிர்ப்பு அறிக்கை (30.11.2007) வெளியிடப்பட்டது. மேலும் நரேந்திர மோடியின் தமிழக வருகையை எதிர்த்து பாசிச எதிர்ப்பு முன்னணி (AFF) ஜனவரி 14, 2008-ல் நடத்திய கருப்புக் கொடி முற்றுகைப் போராட்டத்தில் இணைந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.<br /><br /><span style="color: rgb(255, 102, 0); font-weight: bold;">அடித்தள மக்களுக்கு எதிரான போராட்ட வடிவங்கள்</span><br /><br />பிறரை வருத்தாமல் தன்னையே வருத்திக் கொள்ளும் உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களையே காந்தி விரும்பினார். எதிர்க்கலாச் சாரவாதியான பெரியாருக்கு உண்ணாவிரதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இன்று நடக்கின்ற போராட்டங்கள் அடித்தள மக்களின் வாழ்வை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது. மண்டல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது ‘ஷூக்களுக்கு பாலிஷ் போடும் போராட்டம் நடைபெற்றது. தமிழக மருத்துவ மாணவர்களின் போராட்டத்தில் தெருக் கூட்டுதல், எருமை, கழுதைகள் மேய்த்தல்... இன்னபிற கலக(!?) போராட்ட வடிவங்கள் அரங்கேறின. இவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசாத, எழுதாத அரசியல் தலைவர்களோ, பத்திரிக்கைகளோ இல்லை (பா.ம.க. தவிர). அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இல்லாவிட்டால் அவர்களும் இதில் இணைந்திருப்பார்கள்.<br /><br />ஒரு இதழ் இவர்களின் போராட்ட வடிவங்களை பாராட்டி தனிக் கட்டுரையே வெளியிட்டது. இந்த மாதிரியான போராட்டங்கள் நடத்துவோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? (வன்கொடுமைச் சட்டம் நீதிமன்றத்தில் என்ன பாடுபடுகிறது என்பது ராஜேஷ் சுக்லாவின் கட்டுரையில் தெரிகிறது). வைக்கோலையும் குப்பைக் கூளங்களையும் போட்டு கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தும்போது அதை அணைக்க காவல்துறை படும்பாட்டை தொலைக்காட்சிகளில் அடிக்கடி காணமுடிகிறது. சிலசமயம் படுகாயம் கூட ஏற்படுகிறது. ஆனால் மேற்கண்ட போராட்டங்களின் மீது காவல்துறையோ, பொதுமக்களோ எவ்வித வருத்தமும் அடைவதில்லை போராட்டக் காரர்கள் இனிவரும் காலங்களில் மலமள்ளும் போராட்டம், சாக்கடையை சுத்தம் செய்யும் போராட்டம் போன்றவற்றையும் நடத்தலாம். அரசும் இவர்களது சேவயைப் பயன்படுத்திக்கொண்டு கஷ்டப்படும் தொழிலாளிக்கு ஒரு நாளாவது ஓய்வு அளிக்கலாம்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">குமுதமும் ஞாநியும்</span><br /><br />ஞாநி முன்பு வெளியிட்ட “தீம்தரிகிட” இதழ் ஒவ்வொன்றிலும் கீழ்க்கண்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். “தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமையுடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம். படைப்பாளியின் உரிமையை தன் உரிமையாக அறிவித்து வரும் குமுதம் குழும இதழ்களைத் தவிர.” இதைப் படித்ததும் எழுத்துரிமைப் போராளி பிம்பம் வந்து தொலைக்கிறது. தற்போது குமுதத்தில் ஞாநியின் ‘ஓ... பக்கங்கள்’ பெருத்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. குமுதம் தன்னுடைய வாசகங்களை மாற்றிக் கொண்டதாக யாரும் நினைக்க வேண்டாம்; அப்படியேதான் இருக்கிறது. மேலே உள்ள ஞாநியின் வாசகங்களைப் பார்க்கும் போது ஒன்று சொல்ல தோன்றுகிறது. “கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே”. (நன்றி-குமுதம்). இதற்கு பதில் ஞாநியிடம் இருக்கிறதோ இல்லையோ காலச்சுவடு கண்ணனிடம் கண்டிப்பாக இருக்கும்.</span></span><span><span><br /><br /><br /><br /></span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-77133263680927716822010-01-13T09:21:00.000-08:002010-02-02T10:39:02.309-08:00ஒரு தாதா கவிதை செய்வது எப்படி?<span class="Apple-style-span" style=";font-family:LT-TM-Nehru;font-size:85%;" ><table style="text-align: left;" width="840" border="0" cellpadding="0" cellspacing="0"><tbody></tbody></table><table style="text-align: left;" width="840" border="0" cellpadding="0" cellspacing="0"><tbody><tr><td class="bltxt" style="font-weight: normal; color: rgb(0, 0, 0); text-decoration: none;font-family:Latha;font-size:12px;"><span style="font-weight: bold;"><span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" >ஒரு தாதா கவிதை செய்வது எப்படி?</span><br /><span style="color: rgb(255, 102, 102);"><br />ஆங்கிலம் வழி தமிழில்: கண்ணன். எம்</span><br /><br />தேவைப்படும் பொருட்கள்:<br /><br />ஒரு செய்தித்தாள், ஏதோவொரு கத்திரிக்கோல்.<br /><br />நீங்கள் செய்ய நினைக்கும் கவிதையின் நீளம் கொண்ட ஒரு கட்டுரையை, செய்தியை செய்தித் தாளிலிருந்து வெட்டி எடுங்கள். வெட்டி எடுக்கப்பட்ட கட்டுரையின், செய்தியின் வார்த்தைகளை ஒவ்வொன்றாக, மிக கவனமாக வெட்டி எடுங்கள். வெட்டி எடுத்த வார்த்தைகள் அனைத்தையும் ஒரு பையில் இட்டு குலுக்குங்கள். குலுக்கிய பின் பையின் உள்ளிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக வெளியே எடுங்கள். அவற்றை மிகுந்த கவனத்துடன் பையிலிருந்து எடுத்த அதே வரிசையில் ஒரு தாளில் பிரதியெடுங்கள்.<br /><br />இப்போது உங்கள் முன் உங்களைப்போலவே உங்கள் கவிதை.<br /><br />அதன் முன் சுயம் ததும்பும்<br />படைப்பாளியாக நீங்கள்.<br /><br />வக்கிரம் நிறைந்த மந்தைக்கு இதை<br />ரசிக்கத் தெரியாது.<br /><br /><span style="color: rgb(204, 0, 0);">- டிரிஸ்டன் ஸாரா</span><br /><br />(<span style="color: rgb(255, 153, 255);">Tristan Tzara (1986 - 1963)</span><br /><br /><br />நான் திரும்பச் சொல்கிறேன்:<br />அனைத்தையும் விட்டு விடுங்கள்.<br />‘தாதா’ வை விட்டுவிடுங்கள்<br />மனைவியை விட்டு விடுங்கள்; காதலியையும் கூட,<br />உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் விட்டுவிடுங்கள்<br />உங்கள் குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு விடுங்கள்<br />உங்களுடைய நிழலிருந்து விடுபடுங்கள்<br />தேவைப்பட்டால், உங்களுடைய சுகமான<br />வாழ்க்கையையும் ஒளிமயமான வாழ்க்கையையும் விட்டுவிடுங்கள்<br />நெடுஞ்சாலையில் நில்லுங்கள்<br /><br />-<span style="color: rgb(51, 0, 153);"> ஆந்த்ரே ப்ரத்தோன்</span><br /><span style="color: rgb(0, 102, 0);">(Andre Breton (1986-1966)</span><br /><br /><span style="color: rgb(102, 255, 153);">ஆங்கிலம் வழி தமிழில்: கண்ணன்.</span><br /><br /></span><br /></td></tr></tbody></table></span><span class="Apple-style-span" style=";font-family:LT-TM-Nehru;font-size:85%;" ><table style="text-align: left; border-left: 1px solid gray; border-right: 1px solid gray;" width="998" align="center" border="0" cellpadding="0" cellspacing="0"><tbody></tbody></table></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-20172427209439712392010-01-13T09:13:00.000-08:002010-11-22T06:35:01.002-08:00கருப்பு ஓவியன் கோயாஅம்மண மஜா (Naked maja) மற்றும் ஆடையணிந்த மஜா (Clothed maja) என்னும் பிரசித்தி பெற்ற இரட்டை ஓவியங்கள் மேற்கத்திய ஓவியங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும். உலகின் தலைசிறந்த ஓவிய மேதைகளில் ஒருவரும் சமகால சமூக, அரசியல் நடப்புகள் மீதான விமர்சனங்களை தனது படைப்புகளில் மிகுந்த செய்நேர்த்தி யோடும் கடும் அழுத்தத்தோடும் பதிவு செய்தவருமான ஸ்பானிய ஓவியர் கோயா (Goya)வின் புகழைத் தேக்கியிருக்கும் படைப்புகளில் ஒன்றுதான் அந்த இரட்டை மஜாக்கள். கட்டில் மீது படுக்கை வசமாக ஒன்றும், நிறுத்து வசமாக ஒன்றுமாக அடுத்தடுத்து இரட்டைத் தலையணைகள் இட்டு, அதன் மீது சற்றே ஒருக்களித்த நிலையில், மடக்கப்பட்ட கைகளை தலைக்குப் பின்னே கோர்த்தபடி படுத்திருக்கும் அம்மண மஜா; அதே மாதிரியான போசில் இருக்கும் ஆடையணிந்த மஜா. இதில் அந்த நாட்களை அதிர்ச்சியூட்டியது அம்மண மஜா ஓவியம்.<br /><br />ஸ்பானியக் கலையில் பெண்களின் நிர்வாணம் அரிதாகவே இருந்த காலகட்டம் அது. சமயத்தால் தடை செய்யப்பட்ட அந்தக் கருப்பொருளை சமரசம் செய்துகொள்ளாத நேர்மையுடனும் பாலிச்சை கொண்டிருக்கும்படியாகவும் கோயா வரைந்தது கலை வரலாற்றில் சினமூட்டுவதாக அமைந்தது. அம்மண மஜாவை கோயா மிகுந்த தத்ரூபத்துடன் வரைந்திருந்தார். முந்தைய மேற்கத்திய ஓவியங்களிலும் இத்தகைய தத்ரூபத்தைக் காணமுடியுமெனினும் மஜாவின் சரும நிறமும், முப்பரிமாணங்களும், ஒளி-நிழல்-நிழலீடுகளும் இன்றைய புகைப்படங்கள் அளவுக்கு துல்லியமாக கைவரப்பெற்றிருந்தன. மேலும், பழைய நிர்வாண ஓவியங்களில் அழகுபடுத்தலுக்காக அக்குள்களும், யோனியும் மழிக்கப்பட்டிருக்கும். மஜாவிலோ யோனி மழிக்கப்படவில்லை, சரும நிறத்தோடு இயைந்துபோகும் படியாகவும், அடத்தியற்றுமாக இளம் பழுப்பு நிற மென்ரோமங்கள் அழகுணர்ச்சியோடு தீட்டப்பட்டிருந்தன. ஆனால், அக்குள் பகுதி மழிக்கப்பட்டதாக இருக்கிறது. எனவே, இது திட்டமிட்ட செயல் எனப் புரிந்துகொள்ள முடியும். கவனக் குவிப்பும், பாலிச்சைத் தூண்டலும் கோயாவின் நோக்கமாக இருக்கலாம். முந்தைய அழகியல் கண்ணோட்டங்களுக்கு எதிரான மாற்றுக் கண்ணோட்டமாகவும் இருக்கலாம்.<br /><br />இவ்வோவியம் அம்மண மஜா (Naked maja) என்றுதான் குறிப்பிடப்படுகிறதே அன்றி நிர்வாண மஜா (Nude Maja) என்று குறிப்பிடப்படுவதில்லை. அம்மணம் என்பது வெகுளிமையான குழந்தைகளின் ஆடையற்ற நிலையைச் சுட்டுவதற்கு மட்டுமே பொருந்தும். நிர்வாணம் என்பது பெரியவர்களின், அறிதலுடன் கூடிய ஆடையற்ற நிலை. இதில் வெகுளிமையைக் குறிக்கும் அம்மணம், மஜாவின் நிர்வாணத்துக்கு மாற்றுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதும், ஆனால் அதற்கு மாறாகவே அவ்வோவியம் பாலிச்சையைத் தன்னுணர்வாகக் கொண்டிருப்பதுமான முரண்பாடுகள் பற்றியும் நாம் சிந்திக்கலாம்.<br /><br />அம்மண மஜா கூடுதல் பாலிச்சையானது (Sexuality) எனில் ஆடையணிந்த மஜா அதிகம் சிற்றின்பகரமானது (erotic). அம்மண மஜாவைப் பார்த்துவிட்டு இதைப் பார்ப்பது ஒப்பீட்டு அனுபவத்துக்கு வழி வகுக்கும். அந்த ஆடைகளுக்குள்ளான, நாம் முன்பு பார்த்திருக்கக்கூடிய நிர்வாணத்தை நினைவுகளில் கிளர்த்தும். அதே சமயம் நீங்கள் அம்மண மஜாவைப் பார்த்திருந்திராவிட்டாலும் கூட ஆடையணிந்த மஜாவில் கதகதப்பான சிற்றின்ப உணர்வைக் காணலாம்.<br />இம்ப்ரஷனிஸத்தின் முன்னோடியான எட்வர்ட் மானே (Edouard Manet)யின் பேரற்புதமானதும், உலகளவில் உள்ள செவ்வியல் உச்சபட்ச படைப்பு (Classic master piece)களில் ஒன்றாக தற்போது அங்கீகரிக்கப்படுவதுமான ஒலிம்பியா (Olympia) என்னும் 1863ம் வருடத்து ஓவியம் அம்மண மஜாவின் தாக்கத்தால் உருவானதே.<br /><br />உலகெங்கும் காலந்தோறும் பெண்ணுடல் என்பது ஓவியர்கள் மற்றம் சிற்பிகளின் பேரார்வத்துக்குரிய கருப்பொருளாகவே இருந்து வருகிறது. வளைவு நெளிவுகளும், மேடு பள்ளங்களும், மென்மையும், எழிலும் கொண்ட பெண்ணுடலானது அழகின் ஆராதகர்களான ஓவிய, சிற்பக் கலைஞர்களைத் தணியாத வேட்கையுடன் கவர்வதில் வியப்பொன்று மில்லை. கருப்பு ஓவியங்கள் எனப்படும் பீதியூட்டுகிற குரூப ஓவியங்களில் தனித்த பேரெடுத்த கோயாவினுள் அழகின் ஆராதிப்பும் இருந்தது என்பதுதான் ஆச்சரியம். அல்லது இதன் மறுதலையாக, அழகின் ஆராதிப்பு கொண்டிருந்த கோயாவுக்குள் எப்படி இந்த குரூப வெளிப்பாடுகள் என்று வியக்க வேண்டியிருக்கும்.<br />அவரது உச்ச படைப்புகளான (Masterpiece) போர்டி யாக்ஸின் பால்காரி (The milkmaid of Bordeaux), டோனா இஸபெல்டி போர்ஸெல் (Dona Isabel de porcel), டான் மேனுவல் ஓசாரியோ டி மேன்ரிக் ஸுனிகா (Don Manuel Osorio de Manrigue Zuniga), மே இரண்டு (Dos de Mayo), குடை (The Parasol) போன்ற அழகு பொலியும் ஓவியங்களைப் பார்ப்பவர்களுக்கு வன்முறையும் குரூரங்களும் கோரங்களும் குரூபமும் கொண்ட அவரது மறுபக்க ஓவியங்கள் அதிர்ச்சியூட்டுவனவாகவும் இருக்கலாம்.<br /><br />18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கத்திய ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த போக்கு புதுச் செவ்வியல் (New-classicism). இது ரோம் மற்றும் க்ரீஸில் உள்ள செவ்வியல் கலைகளின் தாக்கத்தினால் உருவானது. ஓவியம், சிற்பம் மற்றும் கட்டிக் கலைகள், இலக்கியம், இசை ஆகியவற்றில் கிரேக்க, லத்தீன் செவ்வியல் பாணியின் புத்தெழுச்சியை சாரமாகக் கொண்ட புதுச்செவ்வியல் காலகட்டத்தவர்தான் கோயாவும்.<br /><br />1746 மார்ச் 30ம் தேதி வடக்கத்திய ஸ்பெயினில் அரகோன் மண்டலத்தில், ஸரகோஸாவுக்கு அருகிலுள்ள Fuendetodos என்னும் ஒரு தொலைதூர குக்கிராமத்தில் கோயா பிறந்தார்.அவரது தந்தை தங்க மெருகிடும் கைவினைஞர். தனது இளம் வயதுகளை குக்கிராமத்தில் கழித்த கோயாவின் குடும்பம் பின்னர் ஸரகோஸா நகரத்துக்குக் குடிபெயர்ந்தது. அங்கிருந்த ஓவிய ஆசிரியர் ஜோஸ் லூஸன் (Jose Luzan) என்பவரது ஓவியக்கூடத்தில் 13 வயதில் பயிற்சி மாணவராக சேர்ந்தார். பின்பு தனது தனித்திறனால் மேட்ரிட் (Madrid) டில் அகாடெமிக் பயிற்சி பெற்றார். 1770ல் 24ம் வயதில் அதை உதறித்தள்ளி இத்தாலிக்குத் திரும்பிய அவர், ஸோப்ராடியல் அரண்மனையில் தனது முதல் முக்கிய ஒப்பந்தப் பணியாக ஆறு ஓவியங்களைச் செய்தார். ஏற்கனவே, எல் பிலர் (El Pillar) பேராலயத்தின் சுவர் ஓவியத்துக்கான போட்டியிலும் அவர் வெற்றிருந்தார்.<br /><br />1773 ஜூலையில் ஜோஸெஃபா பாயேவு (Josefa Bayeu)வுடன் நடந்த திருமணம், அவளது ஓவிய சகோதரர்களான ஃப்ரான்சிஸ்கோ மற்றும் ரமோன் பாயேவுடனான தொடர்புகளுக்கு வழிவகுத்து அவரது ஓவியப் பணிகளுக்கு குறிப்பிடத்தக்க பயனளிப்பதாக அமைந்தது.<br /><br />சரகோஸாவின் வெற்றிகரமான ஓவியராகத் திகழ்ந்த அவர் அரசரின் முதல் ஓவியரான மெங்°ஸின் அழைப்பில் ராயல் அலங்காரத் திரைச்சீலைத் தொழிற்சாலை (Royal Tapestry Factory)யில் ஃப்ரான்சிஸ்கோ பாயேவுவின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணி புரியலானார். இடைவிட்டு இடைவிட்டு இருபது ஆண்டு காலம் அங்கே பணிபுரிந்தார். பெரிய அளவில் எண்ணெய் ஓவியமாகத் தீட்டப்படும் அவரது ஓவியங்கள் பின்பு நெசவாளர்களால் கம்பளியில் துல்லியமாகப் பிரதியெடுக்கப்பட்டன. 28ம் வயதில் அவர் தனது ஆசிரியர் லூஸனைக் காட்டிலும் அதிக சம்பாத்தியம் கொண்டவராக ஆகியிருந்தார்.<br />கோயாவின் ஆற்றல் மிக்க ஓவியத்துவ ஆளுமை விரைவிலேயே அவரது சித்திரங்களில் சமகால ஸ்பானிய வாழ்வு மற்றும் தொன்று தொட்டு நிலவும் பழக்கங்களின் நவீனமுறுதல் குறித்த அவரது சொந்த தரிசனங்களோடு வெளிப்படலாயிற்று. அஸ்ட்டூரியஸ் இளவரசர் மற்றும் இளவரசிக்காக அவர் செய்த ஓவியங்கள் அரண்மனையை அலங்கரித்தன. புத்துணர்வு வீரியமும் யதார்த்தவியலும் கொண்ட கோயாவின் ஓவியங்கள் ஸ்பானிக் கலையின் ஊக்க மூட்டும் காவலர்களாக விளங்கிய இளவரசருக்கும், இளவரசிக்கும் சிறந்த உணர்வெழுச்சியைக் கிளர்த்துவதாக இருந்தன.<br /><br />அரச குடும்பத்தினர் குளிர்காலத்தில் தங்கியிருக்கும் மாட்ரிட்டின் புறப்பகுதியில் உள்ள பேர்டோ அரண்மனையில் இளவரசியின் உணவுக் கூடத்தை அலங்கரிப்பதற்காக கோயா வரைந்த சித்திரங்களில் ஒன்றுதான் அவரது அருமையான ஓவியங்களில் ஒன்றான ‘குடை’ ஓவியம். நுண்ணிய அரை நிறமிகள் (half-tone), ப்ரகாசமான வண்ணம், மற்றும் ஆச்சாரமற்ற, மின்னாற்றல் கொண்ட தொகுப்பமைவு (Composition ஆகியவற்றுடன் கூடிய ஓவியம் அது.<br />1780ல் ஸ்பெயினுக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான போரினால் திரைச்சீலைத் தொழிற்சாலைப் பணியிலிருந்து கோயா விலக்கப்பட்டார். ஃப்ரான்சிஸ் பாயேவுவின் ஒத்தாசையினால் மேட்ரிட்டின் ராயல் அகாடமியில் அங்கத்தினரானார். அங்கிருப்பவர்களின் அனுமதியினால் மேன்மையான தொகுப்புகளைச் செய்யும் வழிவகை ஏற்பட்டு வெலாஸ்க்விஸ் (Velazquez)ன் ஓவியங்களை மறுஆக்கம் செய்தார். அந்தத் தருணத்தில்தான் (1778-1780) அவரது முதல் முக்கியமான செதுக்கோவியம் (Etching), குரல்வளையை நெறித்துக் கொல்லும் தண்டனைக்குரிய மனிதன்’ (The Garotted Man) செய்யப்பட்டது.<br />கோயாவின் தனித்த அடையாளங்களான ‘கருப்பு ஓவிய’ங்களின் துவக்கம் மேற்கூறிய எட்சிங்கிலிருந்தே துவங்குவதாகக் கொள்ளலாம். அதுவரையில் வழமையாக ஓவியர்கள் எடுத்துக் கொள்வது போன்ற கருப்பொருள்களையே எடுத்துக்கொண்டிருந்த கோயா, இதில் தான் வழமைக்கு மாறுபட்ட, துக்கமூட்டும் கருப்பொருளை முதல் முறையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருசிறு மரத்திண்டின் மீது அமர்ந்து தரையில் கால் நீட்டியிருக்கும் தண்டனைக் குரியவன், அத்திண்டோடு இணைந்த செங்குத்துக் கட்டையின் மீது சாய்ந்திருக்கிறான். மடியில் இருக்கும் கோர்த்த கைகளுக்குள் சிலுவை. அருகிலேயே தாங்கியின் மீது பெரிய மெழுகுவர்த்தி ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. கட்டைக்குப் பின்னால், சுவரில் இடப்பட்ட துளையிலிருந்து வந்திருக்கும் கயிற்றில் அவன் கழுத்து இறுக்கப்பட்டிருக்கிறான். கொல்லப்பட்டபோது அவன் துடிதுடித்து கைகால்களை உதறவில்லையா? மடி மீது கோர்த்த கைகளுக்குள் சிலுவையையும்விடாமல் பிடித்துக்கொண்டு அமைதி யாக, ஆடாமல், அசையாமல் பிரேதக்களை படிந்த அவனது முகத்தின் மீது அந்த மெழுகுவர்த்தி ஏன் இப்படி இரக்கமற்ற ஒளி வீசுகிறது?<br /><br /><br />சபலங்கள் (Caprices) எனத் தலைப்பிடப்பட்ட எண்பது செதுக்கோவியத் தொகுப்பைப் பின்னர் 1797-1799ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் கோயா செய்தார். சமூக, அரசியல் அங்கதங்களோடு கூடிய அப்படைப்புகள் அவரது கூரிய விமர்சனங்களுக்கும், நுண்ணிய தொழில்நுட்பத்திறனுக்கும், நேர்த்திமிகு கலை மேதைமைக்கும் சான்றுகள். அதிலிருந்து நான்கு ஓவியங்களை மட்டும் இப்போது காணலாம்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">1. அங்கே அவர்கள் பிய்த்தெடுக்கப்படுவதற்காகப் போகிறார்கள்.<br />(There they go plucked)</span><br /><br />விபச்சார விடுதியொன்றில் இரு விபச்சாரிகள் தங்களின் இழிவான வாடிக்கையாளர்களை விரட்டியடிக்கும் காட்சி, கோயா தனது விமர்சனத்தை விரிவுபடுத்தி, குறியீட்டுத் தன்மையில் இதை சித்தரித் திருக்கிறார். விபச்சாரிகளின் கைகளில் நீண்ட ஒட்டடைக்கழி. ஒருத்தி அடிக்க ஓங்கிய நிலையில், இன்னொருத்தி குப்பையைப் போல தள்ளிவிடும் நிலையில் வாடிக்கையாளர்களின் உருமாற்றம்தான் wighlight. அவர்கள் மனித முகத்துடன் கூடிய, இறகு பிடுங்கப்பட்ட கோழிகளாக இருக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக இருவர் அறைக்குள் வெளியேறிக் கொண்டிருக்க, இன்னொருவர் திறந்த கதவின் நிலைப்படியிலிருந்து தாவிக் குதிக்கும் தறுவாயில் இறகு பிடுங்கப்பட்ட இறக்கைகளை விரித்திருக்கிறார்கள்.<br />பின்புலத்தில் உள்ள, கடுமையான முகபாவம் கொண்ட கிழட்டுப் பணிப்பெண்களுக்கு மேலே இறகு பிடுங்கப்படாத இரண்டு மனிதக் கோழிகள் தப்பித்துப் பறந்து கொண்டிருக்கின்றன. இங்கே இறகு பிடுங்கப்படுதல் என்பது வாடிக்கையாளர்களின் உடைமைகளைப் பறிப்பதற்குக் குறியீடாகிறது. அவர்களது வழுக்கைத் தலைகள் பால்வினை நோய்களுக்கான முன்அறிகுறி. போலவே, ஒடிந்து கட்டுப்போடப்பட்டிருக்கும் கால்கள் ஆண்மையின்மையை உருவகப்படுத்துகின்றன.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">2. காற்றடிப்பு (Blow):</span><br /><br />அச்சமூட்டும் இந்த தெளிவானவரைவு சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஆண்கள் கொள்ளும் தகாத புணர்ச்சியை நீடித்த பயமூட்டும் துர்சொப்பனங்கள் போல வரைந்ததாகும். அரையாடை அணிந்த ஆண் சூனியக்காரக்கிழவன் நிர்வாணமாக்கப்பட்ட குழந்தை ஒன்றின் கை கால்களை சேர்த்துப் பிடித்துக்கொண்டு, ஆசன வாயிலிருந்து வெளியேறும் அபாண வாயுவினால் தணல் அடுப்புக்கு காற்று வீசச் செய்து கொண்டிருக்கிறான். முன்புலத்தில் உள்ள நிர்வாணக் கிழவனும், பின்புலத்து இருளில் முகம் மட்டும் துலங்கும், பிசாசுகள் போலக் காட்சியளிக்கும் இரு உருவங்களும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.<br /><br />இச்சித்தரிப்பின் நடுவே உள்ள சிறு இடைவெளியின் மத்தியில் ஒரு கிழவன் சிறு குழந்தையின் ஆண்குறியை சும்பனம் செய்துகொண்டிருக்கிறான். குழந்தையின் முகமோ மற்ற உடல் பாகங்களோ காட்டப்படுவதில்லை. அதற்கு இடமும் இல்லை. தேவையும் இல்லை. இவர்களுக்கு மேலே இருளுக்குள் மங்கலான சித்தரிப்பில் ஒருவன் இரு சிசுக்களை கைக்கொன்றாக ஏந்தியிருக்கிறான். அதன் பின்னால் அரை அரூபத் தோற்றத்தில் ஒருவனது உருவம் கைகளை சிறகுகள் போல் விரித்து பறக்கும் பாவனையில், காமத் திளைப்பின் பரவசத்துக்கான உருவகிப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">3. இப்போது அவர்கள் நேர்த்தியாக அமர்ந்திருக்கிறார்கள்</span><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"> (Now they are sitting pretty):</span><br /><br />நகைச்சுவை மிளிரும் இவ்வோவியம், தன் தோற்றம் பற்றிய கர்வம் கொண்டவர்களின் அறிவீனத்தை இயல்புக்கு மீறிய முறையில் நையாண்டி செய்வதாகும். புதுப்பாணி (Fashion)க்கு பலியான இரு இளம் பெண்கள் தங்களின் முட்டாள்தனத்தையும் கள்ளங்கபடமற்ற தன்மையையும் காட்சிப்படுத்தும் விதமாக தங்களின் பாவாடையை மிகவும் குட்டையாக, ஆனால் இடுப்பில் கட்டாமல் மேலுயர்த்தி, இடைவெளியை தலையில் முக்காடிட்டு அணிந்திருக்கிறார்கள். ஒருத்தி நின்ற படியும், ஒருத்தி அமர்ந்தபடியுமாக இருக்கும் அவர்கள் உள்ளாடைகள் ஏதும் அணிந்திராததால் முக்கால் தொடை வரையிலான அரை நிர்வாணம் நகைப்புக்கும் ஆபாசத்துக்கும் உரியதாகிறது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">4. Thou who canst not:</span><br /><br />இரண்டு சாமான்ய மனிதர்கள் தங்களது முதுகில் கழுதைகளைச் சுமந்து திணறியபடி குனிந்து நிற்கும் இந்த ஓவியம் பிடிவாதமான மதியீனத்துக்குக் குறியீடாகவும், மேல்தட்டினரும் கிறிஸ்துவ மத குருமார் (Clerics)களும் மக்கள் மீது செலுத்துகிற ஆதிக்கத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் உள்ளது. சராசரியர்களான அந்த மக்கள் மீது கழுதைகள் சேணமிட்டு அமர்ந்திருப்பது, தங்களின் தாங்கொணாத் துயரங்களை குருட்டுத் தனமாக ஏற்றுக்கொள்ளும் சமூக அடக்கிவைத்தலை விமர்சிப்பதாக அமைகிறது. குதிரைச் சவாரி செய்பவர்கள் அதை வேகமாக ஓடச் செய்வதற்காக தங்கள் காலணிகளின் பின் பகுதியில் பொருத்தியிருக்கும் குதிமுள் ஒரு கழுதையின் குளம்பில் கட்டப் பட்டிருப்பது இந்த விமர்சனத்தை இன்னும் கூர்மைப்படுத்துகிறது.<span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-41610904934340315132010-01-13T09:11:00.000-08:002010-11-22T06:41:18.280-08:00சாதிப்பிரச்சனைகளில் நீதிமன்றத் தீர்ப்புகள்: ராஜேஷ் சுக்லா-தமிழில்: அ.மார்க்ஸ்<span><span><br /><br />நீதிமன்றத் தீர்ப்புகளை யாரும் நீதிபதிகளின் உள் நோக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கக் கூடாது. விமர்சித்தால் “நீதிமன்ற அவமதிப்பு”க்குள்ளாக நேரிடும். இத்தகைய பாதுகாப்பு வளையத்துக்குள் கீழ் உள்ள நீதிமன்றங்களின் உயர்சாதிச் சார்பு குறித்துச் சிலவற்றை இங்கே விவாதிக்க வேண்டியது அவசியம்.<br /><br />இன்றைய நீதிமுறைக்கும் சாதி அமைப்பிற்குமுள்ள உறவை விளங்கிக் கொள்ள புகழ்பெற்ற வழக்குரைஞர் ஃபாலி எப். நாரிமன் கூறிய கூற்று ஒன்று உதவக்கூடும். அவர் சொன்னார் “முன்னாள் சட்ட அமைச்சரும் ஒரு தலித்துமாகிய பி.சிவசங்கர் ஒருமுறை கூறினார்: ஒரே நாளில் இரு நீதிபதிகள் பதவி ஏற்றால் அவர்களில் மேல்சாதிக்காரரை முதலில் பதவிப்பிரமாணம் எடுக்க வைப்பது என்பதை சில மாவட்டங்களில் கொள்கையாகவே வைத்துள்ளனர். அப்போதுதான் பதவி உயர்வு வரும் போது அவருடன் பதவி ஏற்ற குறைந்த சாதிக்காரரைக் காட்டிலும் அவருக்கு முன்னுரிமைகிட்டும்”.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">சில வழக்குகளும் தீர்ப்புகளும்:</span><br /><br />மே 2005ல் இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) யின் தலைவர் வி.பி.ஷெட்டி என்பவர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (1939) கீழ் கைது செய்யப்பட்டார். அவ்வங்கியின் பொது மேலாளரான பாஸ்கர் ராம்டெக் என்ற தலித் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் இக்கைது நடந்தது. “பொது மக்களின் பார்வைக்குட்பட்ட ஓரிடத்தில்” பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்துதல் என்கிற நிபந்தனை இவ் வழக்கில் பொருந்தி வரவில்லை என மும்பை உயர்நீதிமன்றம் கூறியது. ஒரு தனி அறையில் சம்பவம் நடந்ததாகக் கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது. ஏதோ ஷெட்டியின் வீட்டு வரவேற் பறையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது சம்பவம் நடந்தது என்பது போல தீர்ப்பை வாசிக்கும் ஒருவருக்குத் தோன்றக் கூடும். உண்மை என்னவெனில் உலக வர்த்தக மையத்தில் உள்ள IDBI வளாகத்தில் இருக்கும் தலைவரின் அறையிலேயே இச்சம்பவம் நடந்தது.<br /><br />பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தவருக்கான நிரப்பப்படாத காலியிடங்களைப் பின்னோக்கி நிரப்புவது தொடர்பாகப் பேசப்போன சந்தர்ப்பத்தில்தான் சம்பவம் நடைபெற்றது. வன்கொடுமைச் சட்டத்திற்குப் பதிலாக “சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம் (PCRA) 1969”ல் வழக்கைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியது. காவல் துறையும் அவ்வாறே செய்தது. இவ்விரு சட்டங்களின் அடிப்படையிலும் நீதிமன்றங்கள் எவ்வாறு தீர்ப்புகள் வழங்கியுள்ளது என்று அறிவது பலனுடையதாக இருக்கும்.<br /><br />1996ல் PCRA சட்டத்தின் கீழ் கிருஷ்ணன் நாயர் என்பவர் மீது வழக்கொன்று தொடரப்பட்டது. தலைச்சேரித் தொகுதிக்கு நடைபெற்ற கேரளச் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்றின்போது குட்டப்பன் என்பவர் பற்றி உதிர்த்த “சாதியக்” கருத்துக்களுக்காக அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி’ மாநாடொன்றில் கிருஷ்ணன் </span></span><span><span>நாயர்</span></span><span><span> பேசும் போது “அந்த அரிஜன் குட்டப்பன் மேசை மேலே ஏறி குதிக்கிறான்” என இகழ்ந்து பேசினார். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் அவர் பேசியதை சாட்சிகள் நீதிமன்றத்தில் கூறினார். “தீண்டாமை நோக்கில் இந்த அவமானம் மேற்கொள்ளப்பட்டது அல்லது அவமதிக்க முயற்சி செய்யப்பட்டது” என்கிற அடிப்படையில் புகார் செய்யப்பட்டுள்ளது என கூறமுடியாது என்பதால் PCRA சட்டத்தின்கீழ் இக்குற்றம் நடந்ததென்று சொல்ல இயலாது என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.<br /><br />சரி, வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இக்குற்றம் வருமா என்றால், மேற்படி சம்பவம் பொதுமக்களின் பார்வையில் நடைபெற்றதுதான் என்றாலும் தீண்டாமை அடிப்படையில் அவமதிக்கப்படுதல் என்கிற குற்றம் இங்கே முழுமையடையவில்லை. ஏனெனில் கிருஷ்ணன் நாயனார் அவ்வாறு பேசும்போது குட்டப்பன் எதிரில் இல்லை என்றது நீதிமன்றம். மலசலம், குப்பை, செத்த உடலின் பகுதிகள், இவை போன்ற எதையேனும் பட்டியல் சாதியினரின் வீட்டுக்குள் அல்லது அருகில் வீசி எறிவது போன்ற நடவடிக்கைகளில் வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர் சம்பவத்தின் போது எதிரே இருக்கவேண்டும் என்பது தேவையில்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.<br /><br />புல்சிங் வழக்கில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீண்டாமை நோக்கில் அவமதிக்கும் உத்தேசத்துடன் சம்பவம் நிகழ்ந்ததா என்கிற பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டது. ‘லோதி தாக்கூர்’ என்னும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபு புல்சிங், ‘சமர்’ என்னும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல்லாவின் வீட்டை இடித்ததோடு பல்லாவின் மனைவியையும் 5 நாட்கள் கடத்திச்சென்று விட்டான். டிராக்டரை ஏற்றிக் கொன்றுவிடுவேன் எனச் சொல்லி பல்லாவை மிரட்டவும் செய்தான். இது குறித்து போலீசில் புகார் செய்ததற்காக பல்லாவை நோக்கி, “ஏய் சமரா, என்னைப்பற்றி புகாரா செய்தாய்? என்னை அவமதித்ததற்காக உன்னிடம் 5000 ரூபாய் வாங்கியே தீருவேன்” என்றான்.<br /><br />புல்சிங் மீது இன்னொரு வழக்கும் உண்டு. சமர் சாதியைச் சேர்ந்த பர்சாதி என்பவருடன் அவருக்கு ஒரு நிலத்தகராறு இருந்தது. இது தொடர்பாக ஒரு நிகழ்வில் பர்சாதியை நோக்கி, “ஏய் சமர்...! இங்கிருந்து ஓடு. இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொல்வேன்,” என்றான். சாலை வழியே தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பர்சாதியின் மனைவியை நிறுத்தி, “ஏய் சமரிச்சி, இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா, இந்த வழியே நீ போனால் உன்னை உதைப்பேன்’ என்றும் கூறினான்.<br /><br />PCRA சட்டத்தின் 7(d) பிரிவின் கீழ் இவ்விரு சம்பவங்களின் அடிப்படையிலும் இரு தனித்தனி வழக்குகள் புல்சிங்கின் மீது பதிவு செய்யப்பட்டன. இப்பிரிவின் கீழ் புல்சிங்கின் குற்றங்கள் அமைகின்றனவா என்பதை அறிய உயர்நீதிமன்றம் இரு அளவு கோல்களை உருவாக்கியது.<br /><br />(i) பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சார்ந்தவராக இல்லாத போதிலும் கூட இந்த அவமானம் நேர்ந்திருக்குமா? ஆம் எனில் 7(d) பிரிவு இதற்குப் பொருந்தாது. மாறாக பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே இந்த அவமானம் நேர்ந்திருக்கும் பட்சத்தில், அதாவது அவர் உயர்சாதியாக இருந்திருந்தால் இந்த அவமானம் நேர்ந்திராது என்றால் புல்சிங் செய்தது தீண்டாமை எனக் கருதலாம் எனக் கூறிய நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்குமிடையே வேறு பிரச்சினைகள் இருக்குமானால் சாதி ரீதியாக திட்டினாலும் கூட அது “தீண்டாமை”யைக் கடைபிடித்ததாகாது என்று வரையறுத்தது. 7(d) பிரிவில் இல்லாத “மட்டுமே” என்கிற சொல்லை நீதிமன்றம் இங்கே தன் வசதிக்கேற்ப சேர்த்துக் கொண்டது.<br /><br />(ii) இரண்டாவது கேள்வி: உயர்சாதிக்காரர்களுக்கும் தாழ்ந்த சாதிக்காரர்களுக்கும் இடையிலான பிரச்சினை தனிப்பட்ட காரணங்களினால் இருக்கிற தென்றால் செய்யப்பட்ட அவமானம் “தீண்டாமை” அடிப்படையிலாகாது. சண்டை, தகராறு எதுவும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட அவமானமே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் வரும் என்றது நீதிமன்றம்.<br /><br />PCRA சட்டத்தின் மூலவடிவம், “தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் - 1955’, என்பது 1976ல் தான் அதற்கு ஞஊசுஹ சட்டம் எனப்பெயரிடப்பட்டது. தீண்டாமை பேசுவது, கடைபிடிப்பது ஆகியவற்றைத் தண்டிப்பதற் காகவே இச்சட்டம் உருவாக்கப்பட்டது. தீண்டா மையை ஒழிப்பது என்கிற அரசியல் சட்ட குறிக் கோளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே இது. ஒரு சட்டத்திற்கு இவ்வாறு பல விளக்கங்கள் சாத்தியமானால், சட்டம் என்ன குறிக்கோளுக்காக இயற்றப்பட்டதோ அதை நோக்கியதாக உள்ள விளக்கத்திற்கே முன்னுரிமையளிக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக தனது அளவுகோல்களை நிர்ணயித்துக் கொண்டது நீதிமன்றம். சாதீய ரீதியான இழிவுகள் தொடர்புள்ள எந்தச் சண்டை, தகராறுகளுக்கும் சாதீயக் காரணங்களே காரணமாக உள்ளன என்பதே எதார்த்தம். அவை என்னவோ இரு “சமமானவர்களுக் கிடையே” நடைபெறும். தனிப்பட்ட சண்டை அல்ல. “ஒரு சமரை ‘சமர்’ என அழைப்பது அவரை அவ மதிப்பதாக இருக்கலாம். ஆனால் அது தீண்டாமை அடிப்படையிலான அவமதிப்பாக இருக்க வேண்டியதில்லை”, எனவும் நீதிமன்றம் கூறத்துணிந்தது.<br /><br />மேற்கண்ட இரு அளவுகோல்களின் அடிப்படையில் பல்லா, பர்சாதி என்கிற இரு சமர்களும் புல்சிங்குடன் தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்த தால் மேற்படி குற்றங்கள் இரண்டுமே “சாதாரண அவமதிப்புகள்” (Insults simpliciter) தானே ஒழிய தீண்டாமை அடிப்படையிலானதல்ல எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். பல்லா, பர்சாதி, பார்சாதியின் மனைவி ஆகியோர் பட்டியல் சாதியில் பிறந்தவர்கள் என்பது வழக்குடன் தொடர்பில்லா ஒரு சம்பவம். பல்லா எந்த சாதியில் பிறந்திருந்த போதிலும் அந்த அவமானம் அன்று நிகழ்ந்திருக்கும். PCRA சட்டத்தின் 12ம் பிரிவின்படி குற்றச்சம்பவம் தீண்டாமை அடிப்படையிலானது என்பதை நீதி மன்றம் முன் ஊகித்துக் கொள்ளவேண்டும். (Presume). ஆனால் உயர்நீதி மன்றமோ பிரிவு 12ன் படியான முன் ஊகிப்பு என்னவாக இருந்த போதிலும் இவ்விரு வழக்குகளையும் பொருத்தமட்டில் 7(d) பிரிவின் கீழ் எந்தக் குற்றமும் நடைபெறவில்லை என அதிரடியாகக் கூறியதோடு புல்சிங்கை இரு வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்தது.<br /><br />1997ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு: ஹரிதாஸ் என்பவர் பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்தி மிரட்டியதாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். பாதிக்கப்பட்டவர் இது குறித்த புகாரைச் சற்று தாமதமாகவே கொடுத்திருந்தார். இந்தத் தாமதமத்திற்கு கூட ஹரிதாஸ் தான் காரணம் எனவும், புகார் கொடுத்தவர் சொல்லியிருந்தார். புகாரில் வெளிப்படும் வெறுப்பிற்கும், தாமதம் குறித்துச் சொல்லப்படும் காரணத்திற்கும் இருவருக்கும் (அதாவது குற்றம் சாட்டப்பட்ட ஹரிதாசுக்கும் பாதிக்கப்பட்ட தலித்துக்கும்) இடையே இருந்த விரோதச் சூழலே காரணம் எனக் கூறிய நீதிமன்றம் ஹரிதாஸை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">இரட்டை டம்ளர் வழக்கம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியதீர்ப்பொன்று: </span><br /><br />தேநீர்க் கடைகள், ஓட்டல்கள், தர்மசாலைகள், முதலியவற்றில் தீண்டாமை காரணமாக இத்தகைய வழக்கம் கடை பிடிக்கப்படுவது PCRA சட்டத்தின்படி குற்றம். 12 மணி நேரம் தாமதமாகப் புகார் கொடுக்கப்பட்டது எனக் காரணம் கூறி நீதிமன்றம் ஒரு ஓட்டல் உரிமையாளரின் மீதான இத்தகைய இரட்டை டம்ளர்கள் வழக்கொன்றைத் தள்ளுபடி செய்தது. டம்ளர்கள் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன எனப் புகார் தெளிவாக எழுதப்படவில்லை என்பதும் பிராசிகியூஷன் தரப்பு சாட்சிகள் உறவினர்களாக இருந்தனர் என்பதும் வழக்கைத் தள்ளுபடி செய்தவற்கான மேலும் இரு காரணங்களாகச் சொல்லப்பட்டன.<br /><br />தீண்டாமை ஒழிக்கப்பட்டதன் விளைவாகப் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பட்டியல் சாதியினருக்கு மறுப்பது PCRA சட்டத்தின் 17ம் பிரிவின் கீழ் ஒரு குற்றம் அதே போல யாரேனும் ஒருவரையோ இல்லை ஒரு சிலரையோ சைகைகளாளோ, வார்த்தைகளாளோ தீண்டாமை கடைப்பிடிக்குமாறு தூண்டுவதும், பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்துவதும், அவமானப்படுத்த முனைவதும் கூட PCRA சட்டத்தின் கீழ் குற்றங்களே.<br /><br />துனிசந்த் என்னும் ஒரு நபர், தலித்துகள் உள்பட அந்தக் கிராமத்திலுள்ள அனைவரையும் தன் மகளின் திருமண விருந்திற்கு அழைத்திருந்தார். நங்கு, சனா என்கிற இரு பட்டியல் சாதியினர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த உயர்சாதியினர் ஏழுபேர் தாங்கள் அங்கே சாப்பிட மாட்டோம் என்றனர். நங்கு, சனா இருவரும் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. துனிசந்தும், நேரடி சாட்சிகளும் அளித்த சாட்சியங்கள் “பொதுத் தன்மையில்” (General nature) இருந்தது எனவும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரும், கூறியது என எந்தக் குறிப்பிட்ட சொற்களும் கூறப்படவில்லை எனவும் கூறிய உச்சநீதி மன்றம் PCRA 7ம் பிரிவின் கீழான குற்றமல்ல இது எனக்கூறி குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது.<br /><br />இதுவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் PCRA சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பட்டியல் சாதியினருக்கு எதிராகவும், உயர்ந்த சாதியினருக்கு ஆதரவாகவும் உயர்நீதி மன்றங்களும் உச்சநீதிமன்றமும் செயல்பட்ட சில நிகழ்வுகளைப் பட்டியலிட்டோம். இனி ‘சதி’ (உடன்கட்டை) தொடர்பான வழக்கொன்றில் குற்றம் புரிந்த உயர் சாதியினரை காப்பாற்றிய கதையைப் பார்ப்போம்:<br /><br />1987 செப்டம்பர் 4ம் தேதியன்று ராஜஸ்தானிலுள்ள தியோராலா என்னுமிடத்தில் ரஜபுத்திரர்கள் நடத்திய உடன்கட்டை, அன்று இந்திய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய நிகழ்வு. ரூப் கன்வர் என்கிற 18 வயதுப் பெண் இறந்து போன தன் கணவனின் (மால்சிங்) சடலத்துடன், ஆடை ஆபரணங்கள் எல்லாம் அணிவிக்கப்பட்டு உறவினர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கணவனின் சிதை மீது ஏற்றி “சதிமாதாகி ஜே” என்ற முழக்கங்களுடன் குடும்பத்தாராலேயே எரித்துக் கொல்லப்பட்டாள். சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ரஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அது நடைபெற்றது.<br /><br />பெண்கள் இயக்கங்கள் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக 1987 அக்டோபர் 9 அன்று “ராஜஸ்தான் சதி (தடுப்பு) அவசரச்சட்டம் - 1987” இயற்றப்பட்டது. சதி நிகழ்வைக் கொண்டாடுவதற்கும் இது தடை விதித்தது. ‘சதி தர்ம சுரக்ஷண சமிதி” என்னும் அமைப்பு தன் பெயரிலிருந்த ‘சதி’ என்னும்சொல்லை நீக்கிவிட்டு ‘தர்ம சுரக்ஷண சமிதி’ என்ற பெயரில் உருவிய வாளுடன் ரூப்கன்வரைப் புகழ்ந்ததும், சதியை ஆதரித்தும், முழக்கங்கள் இட்ட வண்ணம் பெரும் பேரணி ஒன்றை நடத்தியது. ஆல்வார், சிகார் போன்ற இடங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. புதிய அவசரச்சட்டத்தின்படி 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. (பின்பு இந்த அவசரச் சட்டம் ‘ராஜஸ்தான் சதி தடுப்புத் சட்டம் - 1987’ என்ற பெயரில் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது).<br /><br />1996 அக்டோபர் 11 அன்று நீம்காதாணா மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ரூப்கன்வரை எரித்துக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட 32 பேரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்தார். எரித்துக் கொன்றதற்கு நேரடி சாட்சியங்கள் கிடையாது எனவும் ரூப்கன்வர் சிதை மீது அமர்ந்திருந்தபோது அவர் உயிருடன் இருந்தார் என்பதை நிறுவ பிராசிகியூஷன் தவறிவிட்டது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.<br /><br />2004 ஜனவரி 31 அன்று சதியைக் கொண்டாடியதற்காகத் தொடுக்கப்பட்ட நான்கு கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். (முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர் ராஜேந்திரசிங் ராதோர், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் தின் மருமகனும் ‘பாரதீய யுவ மோர்ச்சா’ தலைவருமான பிரதாப்சிங் கச்சாரியா, ராஜ்புத் மஹா சபைத் தலைவர் நரேந்திரசிங் ரஜாவத், முன்னாள் ஐஹளு அதிகாரி ஓம்கார் சிங், வழக்கறிஞர் ராம்சிங் மனோகர் முதலானோர் சதி கொண்டாட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களில் சிலர்)<br /><br />புதிய சட்டப்படி கணவனின் இறந்த உடல் அல்லது கணவருடைய ஏதேனும் ஒரு பொருளுடன் அவரது விதவையை உயிருடன் எரிப்பதோ புதைப்பதோ குற்றம். எரிக்கப்படுபவரின் சம்மதத்துடன் அது நிறைவேற்றப்பட்டதா என்பது கேள்வியல்ல. இது தொடர்பான சடங்குகள் நிகழ்த்துவது, ஊர்வலங்கள் செல்வது முதலின தண்டனைக்குரிய “கொண்டாட்டங்கள்” ஆக வரையறுக்கப்படும். கோயில்கட்டுவது, நிதி திரட்டுவது முதலியனவும் இதில் அடங்கும்.<br /><br />சதி குறித்து சட்டத்தில் கூறப்பட்டுள்ள மேற்படி வரையறையைப் புறந்தள்ளிய நீதிமன்றம் சதி என்றால், “உறுதியான குணம், கற்பு, கணவனுக்கு அர்ப்பணிப்பு, முழு வாழ்விலும் ஒரு ஆடவனுடன் மட்டுமே உறவு வைத்திருத்தல்” என்று பொருள்படும் எனப் புது விளக்கம் அளித்தது. இந்த வகையில் சீதை, அனுசுயா முதலியவர்கள் எல்லாம் ‘சதிகள்’ எனவும் அவர்கள் பெயரை முழங்குவது சதியைக் கொண்டாடுவது ஆகாது எனவும் விளக்கமளித்தார் நீதிபதி. குறிப்பான ஒரு சம்பவத்தைப் புகழ்ந்து கொண்டாடினால் மட்டுமே அது குற்றமாகும் என்றும் கூறப்பட்டது. ரூப்கன்வர் எரிக்கப்பட்டது ‘சதி’ நடவடிக்கை என்பதே (நீதிமன்றத்தில்) நிறுவப்படாததால் அந்த நிகழ்வைக் கொண்டாடியது சதி கொண்டாட்டமாகாது எனவும் நீதிமன்றம் கூறியது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">பன்வாரி தேவி வழக்கு: </span><br /><br />ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்கிற கிராமப்பணியாளர் ஒருவரை 1992 செப்டம்பர் 22 அன்று ராம்கரன் குஜார் தலைமையில் வந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று பாலியல் வன்முறைக்குட்படுத்தியது. 1985 முதல் அரசின் வளர்ச்சித் திட்டம் ஒன்றில் பணியாற்றி வந்த பன்வாரிதேவி குழந்தைத் திருமணத்திற்கு எதிராக வெற்றிகரமான இயக்கம் நடத்தியவர். ராம் கரன் குஜாரின் ஒரு வயது மகளின் ‘திருமணம்’ உள்பட பல குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். 1995 நவம்பர் 15 அன்று ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எல்லோரும் நடுத்தர வயதினர், பொறுப்பான குடிமக்கள் எனக் கூறப்பட்டது. பொதுவாகப் பதின் வயதிலுள்ளவர்கள் தான் பாலியல் வன்முறைக் குற்றங்களை இழைப்பர் என்று கூறியதோடு நிற்காத நீதிமன்றம், “குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லோரும் உயர்சாதி ஆண்கள், பன்வாரியோ, தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள். எனவே, பாலியல் வன்முறை சாத்தியமில்லை” எனக் கூறியது.<br /><br /><span style="font-style: italic; color: rgb(255, 153, 102);">நன்றி: EPW அக்.21, 2006</span><br /><br /><br /><br /></span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-29056141274027634122010-01-13T09:00:00.000-08:002010-11-21T10:20:35.983-08:00‘அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ<span><span>‘<span style="color: rgb(255, 102, 0);font-size:130%;" >அங்கிள் சாம்’க்கு எழுதிய கடிதங்கள்: சாதத் ஹசன் மண்ட்டோ<br />தமிழாக்கம்: ராமாநுஜம்</span><br /><br />(இந்திய காலனிய எதிர்ப்பில் ஒரு சாரார் 'பாரத மாதா' என்ற உருவகத்தை உருவாக்கியது போலவே, அமெரிக்காவுக்கு 'அங்கிள் சாம்' என்ற உருவகமும், பிரிட்டிஷாருக்கு 'ஜான் புல்' என்ற உருவகமும் உருவாக்கப்பட்டது. இந்த உருவகங்கள் எந்தத் தனிநபரையும் குறிப்பதில்லை. உலகில் பல நாடுகளுக்கு இத்தகைய உருவகங்கள் உண்டு. இந்த உருவகங்கள் தோற்றம் கொண்ட கதைகளும், அதன் அரசியலும் மிக மிக சுவாரசியமானவை.<br /><br />அங்கிள் சாமுக்கு மண்ட்டோ எழுதிய ஒன்பது கடிதங்கள் சிறு வெளியீடாக 2001ல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. முதல் கடிதம் 1951-ல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கடிதம் எந்த ஆண்டு என்று தெரியவில்லை. மூன்றாவது கடிதத்திலிருந்து 1954 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதங்களில் மண்ட்டோவின் கதைகள், கட்டுரைகளில் காண முடியாத வேறுபட்ட பல தன்மைகளை இதில் காண முடிகிறது. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. இந்த விளையாட்டை மண்ட்டோ மிகத் திறம்பட விளையாடி உள்ளார். இந்தக் கடிதங்கள் அவர் உயிரோடு இருக்கும் போது பிரசுரம் செய்யப்பட்டதா என்று தீர்மானமாகத் தெரியவில்லை. இந்த இதழில் முதல் மூன்று கடிதங்கள் மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. - தமிழாக்கக் குறிப்பு)<br /><br /><span style="color: rgb(51, 102, 255);font-size:180%;" ><span>1</span></span><br /><br />31 லஷ்மி மேன்ஷன், 16, டிசம்பர் 1951<br />ஹால்ரோடு,<br />லாகூர்.<br /><br />அன்புள்ள அங்கிள்,<br /><br />வணக்கம்.<br /><br />நீங்களோ அல்லது ஏழு சுதந்திரங்களும் பெற்று இருக்கும் உங்கள் நாட்டில் எவருமே அறிந்திராத உங்களுடைய பாகிஸ்தான் சகோதரனின் மகனிடமிருந்து உங்களுக்கு இந்தக் கடிதம் வருகிறது.<br /><br />என்னுடைய நாடு, இந்தியாவிலிருந்து ஏன் துண்டிக்கப்பட்டது என்றும், ஏன் உயிர்பெற்றது என்றும், ஏன் சுதந்திரம் அடைந்தது என்றும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே உங்களுக்கு எழுதும் உரிமையை நான் எடுத்துக் கொள்கிறேன். என் நாட்டைப் போலவே நானும் சுதந்திரம் பெற்றுவிட்டேன் - மிகச் சரியாக அதே பாணியில், அங்கிள், இறகுகள் துண்டிக்கப்பட்ட பறவை எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை. எல்லாம் அறிந்த உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். உங்களுக்கு நான் இதை விளக்கத் தேவை இல்லை.<br /><br />என் பெயர் சாதத் ஹசன் மண்ட்டோ. இப்போது இந்தியாவிலிருக்கும் ஓர் இடத்தில்தான் நான் பிறந்தேன். என் தாய் அங்குதான் புதைக்கப்பட்டு இருக்கிறாள். என் தந்தை அங்குதான் புதைக்கப்பட்டிருக்கிறார். எனக்குப் பிறந்த முதல் குழந்தையும் அந்தத் துண்டு நிலத்தில்தான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறான். இருந்தாலும் அந்த நிலம் இனியும் என்னுடைய நாடு அல்ல. இப்போது என்னுடைய நாடு பாகிஸ்தான். இதை நான் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தபோது ஐந்தாறு தடவைகள் மட்டுமே பார்த்திருக்கிறேன்.<br /><br />நான் அகில இந்தியாவிற்கும் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன். என்னுடைய கதைகள் பல தொகுப்புகளாக வெளியாகி உள்ளது. மக்கள் என்னை மதிக்கிறார்கள். ஒன்றுபட்ட இந்தியாவில் நான் மூன்றுமுறை விசாரிக்கப்பட்டேன். பாகிஸ்தானில் இதுவரை ஒரே ஒரு முறைதான். என்ன இருந்தாலும் பாகிஸ்தான் சிறு குழந்தைதானே!<br /><br />பிரிட்டிஷ் அரசாங்கம் என்னுடைய எழுத்துகள் ஆபாசமானது என்று கருதியது. என் சொந்த அரசாங்கமும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை விட்டுவிட்டது. ஆனால் என்னுடைய அரசாங்கம் அப்படிச் செய்யுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கீழ் நீதிமன்றம் எனக்கு, மூன்று மாத கடுங்காவல் தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. மேல் நீதிமன்றத்தில் நான் முறையிட்டதால் விடுவிக்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய அரசாங்கம் நீதி நிலை நாட்டப்படவில்லை என்று நம்புவதால் என்னை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், நான் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் என்ன தீர்மானிக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.<br /><br />என்னுடைய நாடு உங்களுடைய நாடாக இல்லாததைக் கண்டு நான் வருந்துகிறேன். உயர்நீதிமன்றம் என்னைத் தண்டிக்குமானால், என் நாட்டில் எந்த செய்தித்தாளும் என் புகைப்படத்தையோ, வழக்கு பற்றிய குறிப்புகளையோ வெளியிடாது.<br /><br />என் நாடு ஏழ்மையானது. இங்கு பளபளக்கும் காகிதங்களோ, சிறந்த அச்சு இயந்திரங்களோ கிடையாது. இந்த ஏழ்மைக்கு உயிருடன் இருக்கும் நானே சாட்சி. அங்கிள், நீங்கள் நம்ப மாட்டீர்கள். இருபத்திரண்டு புத்தகங்களுக்கு ஆசிரியனாக இருந்தும் எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போகக்கூட என்னிடம் வசதிகள் ஏதும் கிடையாது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். என்னிடம் பேக்கார்ட்டே, டாஜோ கிடையாது. ஏன், ஏற்னெவே உபயோகப்படுத்தப்பட்ட கார்கூட என்னிடம் கிடையாது.<br /><br />நான் எங்காவது போக வேண்டும் என்றால் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒரு பத்திக்கு ஏழு ரூபாய் வீதம் செய்தித்தாளில் என்னுடைய எழுத்து வெளிவந்து, இருபது முதல் இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் டோங்காவை எடுத்துக் கொண்டு உள்ளூர் விஸ்கியை வாங்கக் கிளம்பி விடுவேன். இந்த விஸ்கி மட்டும் உங்களுடைய நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்குமானால், அந்த சாராயத் தொழிற்சாலையை அணுகுண்டு போட்டு அழித்திருப்பீர்கள். அதனுடைய தரம் அப்படிப்பட்டது. அதைக் குடிப்பவன் ஓராண்டுக்குள் சொர்க்கத்திற்கு அனுப்பப்படும் உத்தரவாதம் கண்டிப்பாக உண்டு. நான் தடம் புரண்டு போகிறேன். நான் செய்ய விரும்புவது, என்னுடைய சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெலுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கத்தான். அவருடைய God’s Little acre' என்ற நாவலுக்காக வழக்குப் போட்டதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியும். அதாவது நான் இங்கு சந்தித்த அதே குற்றச்சாட்டு: ஆபாச இலக்கியம்.<br /><br />அங்கிள், என்னை நம்புங்கள். ஏழு சுதந்திரங்களையும் உடைய உங்களுடைய நாட்டில் அவருடைய நாவல் ஆபாசமானது என்று வழக்கு தொடரப்பட்டதைக் கேள்விப்பட்ட போது, நான் அதிர்ச்சியுற்றுப் போனேன். உங்களுடைய நாட்டில் அனைத்துமே அதனுடைய மறைப்புகள் அகற்றப்பட்டு, காட்சிப் பொருளாக வைக்கப்படுவதுதானே சகஜமானது. அது பழமாகட்டும். பெண்ணாகட்டும், இயந்திரமாகட்டும், மிருகங்களாகட்டும், புத்தகங்களாகட்டும், நாட்குறிப்புகளாகட்டும், நிர்வாணப் பொருட்களின் பேரரசர் நீங்கள் என்பதால் ஏன் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல் மீது வழக்குப் போட்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.<br /><br />நான் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை ஒரு ஓட்டு ஓட்டவில்லை என்றால் கால்டுவெல் வழக்குப் பற்றி கேள்விப்பட்ட அந்த கணத்திலே நான் அடைந்த அதிர்ச்சியில் எங்களுடைய உள்நாட்டு மதுவை மிக அதிக அளவில் குடித்துத் தற்கொலை செய்து கொண்டிருப்பேன். ஒரு வழியில், என் போன்றவர்களை ஒழித்துக்கட்டும் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அங்கிள், நான் அடித்தொண்டையிலிருந்து கத்தியிருந்தால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்க முடியாது. இயற்கையாகவே நான் மிகவும் கடமை உணர்வு கொண்டவன். என்னுடைய நாட்டை நான் நேசிக்கிறேன். கடவுளின் அருளால் இன்னும் சில நாட்களில் நான் இறந்துவிடுவேன். நான் என்னையே கொலை செய்து கொள்ளாவிட்டாலும், இன்று கோதுமை மாவு விற்கும் விலையில் வெக்கங்கெட்டவன் மட்டுமே அவனுக்கு இந்தப் பூமியில் விதிக்கப்பட்ட நாட்களை முழுமையாக வாழ முடியும்.<br /><br />ஆக நான் கால்டுவெல் தீர்ப்பைப் படித்துவிட்டு, பெருமளவு உள்ளூர் சாராயத்தைக் குடித்து என் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தேன். அங்கிள், உங்களுடைய நாட்டில் எல்லாவற்றிலும் ஒருவித செயற்கை அலங்காரத்தன்மை உண்டு. ஆனால் என்னுடைய சகோதரன் கால்டுவெல்லை விடுவித்த நீதிபதியிடம் நிச்சயமாக எவ்வித செயற்கை அலங்காரத்தையும் காண முடியவில்லை. ஒரு வேளை அந்த நீதிபதி - என்னை மன்னிக்கணும், எனக்கு அவருடைய பெயர் தெரியாது; உயிரோடு இருந்தால் என் மதிப்பிற்குரிய வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்தவும்.<br /><br />தீர்ப்பில் அவருடைய கடைசி வரிகள், அவருடைய அறிவார்ந்த தளத்தின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்: "இது போன்ற புத்தகங்களை ஒடுக்குவதின் மூலம் அந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும், அது மக்கள் மத்தியில் அவசியமில்லாமல் ஆவலை உருவாக்கி, தேவையில்லாமல் காம உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பதையே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நினைக்கிறேன். அமெரிக்க சமூகத்தில் ஒரு சாரார் பற்றிய உண்மையையே அவர் வெளிப்படுத்துகிறார் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன். உண்மை என்பது எப்போதும் இலக்கியங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்பதே என் கருத்து."<br /><br />என்னை தண்டித்த நீதிமன்றத்திலும் நான் இதையேதான் சொன்னேன் என்றாலும் அது எனக்கு மூன்று மாத கால கடுங்காவல் சிறை தண்டனையும் முந்நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. என்னுடைய நீதிபதி உண்மையும் இலக்கியமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார். பெரும்பாலானோரும் இதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். நான் மூன்று மாத கால கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தயாராக உள்ளேன். ஆனால், நான் முந்நூறு ரூபாய் அபராதத்தைக் கட்டக்கூடிய நிலையில் இல்லை. அங்கிள், உங்களுக்குத் தெரியாது. நான் வறுமையில் இருப்பவன். கடின உழைப்பிற்கு பழக்கப்பட்டவன். பணத்திற்குப் பழக்கப்பட்டவன் இல்லை. எனக்கு முப்பத்தொன்பது வயசுதான் ஆகிறது. என் வாழ்க்கை முழுக்க நான் கடினமாக உழைத்துள்ளேன். இதை மட்டும் நினைத்துப் பாருங்கள். பிரபலமான எழுத்தாளனாக இருந்தும் என்னிடம் பேக்கார்ட் கார் கிடையாது.<br /><br />என் நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு என்று எப்படியோ சமாளிக்க முடிகிறது. ஆனால் என்னுடைய பல சகோதரர்கள் இவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் கிடையாது.<br /><br />என் நாடு ஏழ்மையான நாடாக இருக்கட்டும். ஆனால் அது ஏன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது? அங்கிள், நான் நிச்சயமாகச் சொல்கிறேன் இதற்குக் காரணம் நீங்களும் உங்களுடைய சகோதரன் ஜான்புல்-ம் தான் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. காரணம் அது உங்களுடைய காதுகளுக்கு இனிமையான இசையாக இருக்காது. நான் உங்களை மதிக்கும் இளையவனாக இருப்பதால் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அப்படி இருக்கவே விரும்புகிறேன். என் நாடு இத்தனை பேக்கார்ட், பைக் மற்றும் மாக்ஸ் ஃபேக்டர் ஒப்பனையைக் கொண்டிருந்தாலும் ஏன் ஏழ்மையில் உள்ளது என்று நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். அங்கிள், இது உண்மைதான். ஆனால் ஏன் என்ற காரணத்தை நான் சொல்லப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய இதயத்தைத் திறந்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். (உங்களுடைய அதி புத்திசாலி மருத்துவர்களால் உங்களுடைய இதயம் வெளியே எடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்)<br /><br />பேக்கார்ட் மற்றும் பைக்கில் பயணிக்கும் என்னுடைய நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் உண்மையில் என்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களில்லை. எங்கு என்னைப் போன்ற ஏழைகளும், என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு. இவையெல்லாம் கசப்பான விஷயங்கள். ஆனால் இங்கு சர்க்கரைத் தட்டுப்பாடு உள்ளது. இல்லையென்றால் என்னுடைய வார்த்தைகள் மீது தேவைப்படும் அளவிற்குப் பூசியிருப்பேன். அதனால் என்ன? சமீபத்தில் நான் ஈவ்லின் வாக்கின் புத்தகம் ‘த லவ்ட் ஒன்ஸ்’ படித்தேன். அவர் உங்கள் நண்பரின் நாட்டைச் சேர்ந்தவர்தான். என்னை நம்புங்கள், உடனடியாக இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அந்தப் புத்தகத்தால் பாதிக்கப்பட்டேன்.<br /><br />உலகத்தில் உங்களுடைய பகுதியில் பல மேதாவிகளைக் காண முடியும் என்று எப்போதும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்த பின் வாழ்க்கை முழுதும் அவருடைய விசிறியாகவே மாறிவிட்டேன் என்று சொல்லலாம். எத்தகைய செயல்! நான் சொல்கிறேன் உண்மையிலேயே அங்கு மிகவும் துடிப்புள்ள மனிதர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.<br /><br />உங்களுடைய கலிபோர்னியாவில் இறந்தவர்களை அழகுபடுத்த முடியும் என்றும், அந்தக் காரியத்தைச் செய்வதற்குப் பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன என்றும் ஈவ்லின் வாக் தெரியப்படுத்துகிறார். நமது அன்புக்குரியவர் உயிரோடு இருக்கும்போது எவ்வளவு கோரமாக இருந்தாலும் இறந்த பின் அவர் ஆசைப்பட்ட அழகை அவருக்குக் கொடுக்க முடியும். சில படிவங்களில் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். முடிக்கப்பட்ட பொருளின் தரம், சிறப்பானதாக இருக்கும் என்பது மட்டும் உத்தரவாதம்; தேவைப்படும் பணத்தை நீங்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்வரை. இறந்து போனவரை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் அழகுபடுத்த முடியும். இந்த நளினமான காரியத்தைச் செய்வதற்குப் பல நிபுணர்கள் உண்டு.<br /><br />நம் அன்புக்குரியவரின் மோவாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவருடைய முகத்தில் அழகான புன்னகையை நட்டு வைக்க முடியும். அவருடைய கண் இமைகளைத் திறந்து வைப்பதோடு, நெற்றியைப் பார்ப்பதற்குப் பளபளவென்றும் மாற்றி அமைக்க முடியும். அதாவது இறந்தவர் கல்லறைக்குள் வைக்கப்பட்ட பின், அவருடைய கணக்கைத் தீர்ப்பதற்கு வரும் இரண்டு தேவ தூதர்கள் குழம்பிப் போகும் அளவிற்கு இவையெல்லாம் அவ்வளவு அற்புதமாக செய்து முடிக்கப்படும்.<br /><br />அங்கிள், கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களுடைய மக்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. உயிரோடு இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகு படுத்தப்படுவதையும் ஒருவர் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு அது பற்றி நிறைய பேச்சுகள் உண்டு. ஆனால் அது போலவே இறந்தவரையும் அழகு படுத்த முடியும் என்பதை இங்கு ஒருத்தரும் கேள்விப்பட்டதே கிடையாது. சமீபத்தில் உங்கள் நாட்டுப் பிரஜை ஒருவர் இங்கு வந்தார். சில நண்பர்கள் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அப்போது நான் சகோதரன் ஈவ்லின் வாக்கின் புத்தகத்தைப் படித்திருந்தேன்.<br /><br />உங்கள் நாட்டைச் சேர்ந்தவருக்கு, அவர் புரிந்து கொள்ள முடியாத இரு வரி உருதுக் கவிதையைப் படித்துக் காண்பித்தேன். எப்படி இருந்தாலும் உண்மை என்னவென்றால், அங்கிள் நம்முடைய முகம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு அதைச் சிதைத்து விட்டோம். ஆனால் உயிரோடு இருந்ததைக் காட்டிலும் இறந்தபின் அழகுபடுத்துவதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால் இந்தப் பூமியில் வாழ்வதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. மற்ற நாங்கள் எல்லோரும் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.<br /><br />எங்களுடைய ஆகப் பெரிய உருதுக் கவிஞன் காலிப் நூறு வருடங்களுக்கு முன் எழுதினான்:<br /><br />மரணத்திற்குப் பின் அவமானப்படுவது என் விதியாக இருந்தால்<br />என் முடிவைத் தண்ணீரில் மூழ்கி எதிர்கொண்டிருப்பேன்<br />அது என் சவ அடக்கத்தைத் தவிர்த்திருப்பதோடு<br />என் இறுதி ஓய்விடத்தில் தலை மீது கல்லேதும் விழுந்திருக்காது.<br /><br />உயிரோடு இருக்கும்போது அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு காலிப் அச்சம் கொண்டது கிடையாது. தொடக்கத்திலிருந்து இறுதிவரை எப்போதும் அவன் அப்படிதான் இருந்தான். ஆனால் மரணத்திற்குப் பின் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு அச்சம் கொண்டான். அவன் மிகவும் பண்பட்டவன். தன்னுடைய மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்று மட்டும் அவன் அச்சம் கொண்டிருக்கவில்லை, அவன் சென்ற பிறகு என்ன நடக்கும் என்று மிகத் தெளிவாகவும் உணர்ந்திருந்தான். அதனாலேயே அவன் தன்னுடைய மரணம் தண்ணீரில் மூழ்கி ஏற்பட்டால் சவ அடக்கமோ கல்லறையோ அவசியமில்லாமல் போகும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.<br /><br />அவன் உங்களுடைய நாட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு அவா கொள்கிறேன். அவனது கல்லறைக்கு அவனை மிகப் பிரமாண்டமான ஊர்வலத்தில் எடுத்துச் சென்று, அவன் ஓய்வெடுக்கும் இடத்தில் வான் உயர கட்டிடத்தைக் கட்டியிருப்பீர்கள் அல்லது அவன் விருப்பம் சாத்தியப்பட்டிருந்தால் கண்ணாடிப் பெட்டிக்குள் அவனது உடல் வைக்கப்பட்டு மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் சென்று வருவது போல, அவனைப் பார்க்கப் போயிருப்பார்கள்.<br /><br />உங்களுடைய நாட்டில் இறந்த மனிதர்களை அழகுபடுத்தும் நிறுவனங்கள் மட்டுமில்லாமல் இறந்த மிருகங்களுக்கும் அது சாத்தியமாகும் என்று சகோதரர் ஈவ்லின் வாக் எழுதுகிறார். ஒரு நாய் ஒரு விபத்தில் தன்னுடைய வாலை இழந்துவிட்டால் அதற்குப் புதியதாக ஒரு வாலைப் பொருத்திவிடலாம்.<br /><br />உயிரோடு இருக்கும்போது அதுக்கு எத்தகைய உடல்ரீதியான குறை இருந்தாலும், மரணத்திற்குப் பின் அதையெல்லாம் சரி செய்து விடலாம். பிறகு அது சடங்குகளோடு புதைக்கப்பட்டு மலர்வளையங்கள் அதன் கல்லறை மீது வைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் நம் அன்பிற்குரியது இறந்த தினத்தன்று அதனுடைய எஜமானனுக்கு இதுபோல் பொறிக்கப்பட்ட அட்டை ஒன்று அனுப்பப்படும்: “சொர்க்கத்தில் உங்களுடைய டாமி (அல்லது ஜெஃபி) அதனுடைய வாலை (அல்லது காதை) ஆட்டிக்கொண்டே உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது’’<br /><br />இவையெல்லாம் எதை உணர்த்துகிறது என்றால் எங்களைக்காட்டிலும் உங்களுடைய நாட்டில் நாய்கள் எவ்வளவோ நல்ல நிலையில் உள்ளது. இங்கு இன்று நீங்கள் இறந்தால் நாளை மறக்கப்பட்டு விடுவீர்கள். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்து போனால், உயிரோடு இருப்பவர்களுக்கு அது ஏற்படுத்திய பேரிழப்பால் இப்படித்தான் கதறுவார்கள்: “இந்தப் பாவப்பட்டவன் ஏன் இறந்தான்? அவனுக்குப் பதிலாக நானல்லவா இறந்திருக்க வேண்டும்’’. அங்கிள் உண்மை என்னவென்றால், எங்களுக்கு வாழவும் தெரியாது. சாகவும் தெரியாது. நான் இதையும் கேள்விப்பட்டேன்.<br /><br />உங்களுடைய நாட்டுப் பிரஜை ஒருவர் அவர் இறந்த பின் எத்தகைய சவஅடக்கம் அவருக்குக் கொடுக்கப்படும் என்று தீர்மானமாகத் தெரியாததால், அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு சவ அடக்கம் எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்று நிகழ்த்திக் கொண்டாடினாராம். அவர் விருப்பப்பட்டால் ஒழிய எதுவுமே நடக்காத, செல்வம் கொழித்த, பகட்டான அவருடைய வாழ்க்கைக்கு இது தகுதியுடையதுதான். அவருடைய சவ அடக்கத்தில், காரியங்கள் சரியாகச் செய்யப்படாமல் போகும் சாத்தியங்களை அவர் ஒழித்துக் கட்ட விரும்பினார். உயிரோடு இருக்கும்போதே தன்னுடைய இறுதிச் சடங்குகளை அவரே நேராக நின்று பார்த்தது அவரளவில் நியாயமானதுதான். ஏனெனில் மரணத்திற்குப் பின் நடப்பவை எல்லாம் இங்கும் இல்லாதது; அங்கும் இல்லாதது.<br /><br />நான் சற்று முன்தான் ‘Life’ (நவம்பர்-5 1951 சர்வதேச வெளியீடு) இதழைப் பார்த்தேன். அமெரிக்க வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். இரண்டு பக்கங்கள் விரிந்திருந்த அந்த விவரணை உங்கள் நாட்டின் ஆகச்சிறந்த கொள்ளைக்காரனின் இறுதிச் சடங்கை விவரித்திருந்தது. நான் வில்லிமொரீட்டியின் (அவனின் ஆன்மா சாந்தி அடையட்டும்) படத்தைப் பார்த்தேன்.<br /><br />சமீபத்தில் $55,000க்கு விற்கப்பட்ட அவருடைய மிகப் பிரம்மாண்டமான வீட்டையும் பார்த்தேன். இந்த உலகத்தின் கவனச் சிதறல்களிலிருந்து தப்பிக்க அவன் வைத்திருந்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் பார்த்தேன். கண்கள் மூடியிருக்க இறந்து போனதுபோல் அவன் படுக்கையில் கிடந்த படத்தையும் பார்த்தேன். $5000 விலை நகைப்பெட்டியும், அவருடைய சவ அடக்கத்திற்கு எழுபத்தைந்து கார்கள் ஊர்வலமாக வந்த படங்களும் அதில் இருந்தது. கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன், அது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. என் வாயில் மண் விழட்டும். ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால், வில்லி மோரீட்டியை விட பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் உங்களுக்கும் நடத்தப்பட வேண்டும்.<br /><br />பயணம் செய்வதற்கு ஒரு மிதி வண்டி கூட இல்லாத ஏழ்மையில் இருக்கும் பாகிஸ்தான் எழுத்தாளனின் உண்மையான வேண்டுதல் இதுதான். உங்களுடைய நாட்டில் உள்ள தொலைநோக்குப் பார்வை கொண்டுள்ளவர்கள் போல், நீங்களும் உயிரோடு இருக்கும்போதே உங்களுடைய இறுதிப் பயணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். இதை நீங்கள் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. எதையுமே தவறாகவே செய்யும் பழக்கமுடையவர்கள் இதிலும் தவறு செய்யக்கூடும். நீங்கள் இறந்தபின் உங்களுடைய உடல் தகுதியான அளவிற்கு அழகுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படாமல் போகலாம்.<br /><br />இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேர்வதற்கு முன்னதாகவே கூட உங்களுடைய இறுதி ஊர்வலத்திற்கு நீங்களே சாட்சியாக இருந்திருக்கக் கூடும். நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்பதால் மட்டுமல்ல, நீங்கள் என்னுடைய தந்தையின் சகோதரர் என்பதாலும் தான் நான் இதையெல்லாம் சொல்கிறேன்.<br /><br />என் சகோதரன் எர்ஸ்சின் கால்டுவெல்லுக்கும், அவரை ஆபாச வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரியப்படுத்தவும். நான் என்னை அறியாமல் ஏதாவது தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />உங்களின் ஏழைச் சகோதரனின் மகன்<br />சாதத் ஹசன் மண்ட்டோ<br />பாகிஸ்தானில் குடியிருப்பவன்<br />(இந்தக் கடிதத்திற்குப் போதுமான அளவு தபால்தலை இல்லாததால் தபாலில் சேர்க்க முடியவில்லை.)<br /><br /><span style="font-weight: bold; color: rgb(51, 102, 255);font-size:180%;" >2</span><br /><br />31 லஷ்மி மேன்ஷன்,<br />ஹால்ரோடு,<br />லாகூர்.<br /><br />என் மதிப்பிற்குரிய அங்கிள்,<br /><br />வணக்கம்.<br /><br />நான் சமீபமாக உங்களுக்கு ஏதும் எழுதவில்லை. உங்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றாலும் உங்கள் தூதரகத்திலிருந்து ஒரு நாகரிகமான மனிதர் - அவருடைய பெயர் எனக்கு இப்போது நினைவில் இல்லை, சில நாட்களுக்கு முன் உள்ளூர்க்காரர் ஒருவரோடு என்னைப் பார்க்க வந்தார். அந்த நாகரிகமான மனிதரோடு நடந்த உரையாடலின் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.<br /><br />நாங்கள் ஆங்கிலத்தில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வாழ்க்கை முழுக்க என்னால் புரிந்து கொள்ள முடியாத, அமெரிக்க மொழி அல்ல அது.<br /><br />நாங்கள் முக்கால் மணிநேரம் பேசினோம். ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு பாகிஸ்தானியையோ, ஒரு இந்தியனையோ சந்திக்கும்போது சந்தோஷப்படுவது போலவே என்னைச் சந்தித்ததிலும் சந்தோஷப்பட்டார். அவரைச் சந்தித்ததில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தேன். உண்மை என்னவென்றால், வெள்ளைக்கார அமெரிக்கர்களைச் சந்திப்பதில் நான் எப்போதுமே மகிழ்ச்சி அடைந்தது கிடையாது.<br /><br />தயவு தாட்சண்யம் அற்ற என்னுடைய வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். போன யுத்த சமயத்தில், நான் பம்பாயில் இருந்தபோது ரயில் நிலையமான பம்பாய் சென்ட்ரலில் நான் என்னையே கண்டேன். அந்த நாட்களில் நகரம் முழுக்க எங்கு பார்த்தாலும் அமெரிக்கர்கள்தான். பாவப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களை எவரும் சீண்டவில்லை. பம்பாயைச் சேர்ந்த ஆங்கில-இந்தியப் பெண்மணிகள், யூதப் பெண்கள், பார்ஸி பெண்கள் நாகரிகம் என்பதால் கண்ட இடத்தில் படுத்தவர்கள் இப்போது ஒரு அமெரிக்கனோடு கைகோர்த்து நடப்பதைப் பார்க்க முடிந்தது.<br /><br />அங்கிள், நான் சொல்வதை நம்புங்கள். உங்களுடைய படைவீரர்களில் ஒருவர் ஒரு ஆங்கில-இந்தியப் பெண்ணுடனோ, யூதப் பெண்ணுடனோ, பார்ஸி பெண்ணுடனோ, கைகோர்த்து பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கடந்து செல்ல நேர்ந்தால், அவர்கள் பொறாமையால் வெந்து எரிவதைப் பார்க்க முடிந்தது.<br /><br />இந்த உலகத்தில் உண்மையிலேயே நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான மனிதர்கள்தான். எங்களுடைய படை வீரர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவில் பாதி அளவைக்கூட பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய அலுவலக உதவியாளனுக்குக் கூட மூச்சு முட்டும்வரை ஒரு வயிற்றை அல்ல, இரண்டு வயிறுகளை நிரப்பிக் கொள்ள முடிகிறது.<br /><br />அங்கிள், நான் தவறாகப் பேசுவதற்கு மன்னித்துவிடுங்கள். ஆனால் உண்மையிலேயே இது மாபெரும் ஏமாற்றும் வேலை இல்லையா? இதற்கெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? இதையெல்லாம் சொல்வதற்கு ஏற்ற இடம் இது இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், உங்கள் நடத்தைகள் எல்லாம் வேறு எதற்காகவும் அல்லாமல் ஒரே ஒரு குறிக்கோளை மட்டுமே கொண்டது: பகட்டாய் வெளிப்படுத்துவது. ஒருவேளை நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் தவறு செய்வது மனித இயல்புதானே! நீங்களும் மனிதர்தான் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையென்றால் அதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.<br /><br />நான் தடம் புரண்டு போகிறேன். பம்பாய் சென்ட்ரலில் உங்களுடைய படை வீரர்கள் பலரைப் பார்த்தது பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் என்றாலும் சில கருப்பர்களையும் எதிர்கொண்டேன். உண்மையைச் சொல்லத்தான் வேண்டும் என்றால், அந்தக் கருப்புப் படை வீரர்கள் வெள்ளைக்காரர்களைக் காட்டிலும் திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.<br /><br />உங்களுடைய மக்கள் பெரும்பாலானோர் ஏன் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வெள்ளையர்கள் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் நீக்ரோ என்றழைக்கப்படும் கருப்பர்கள் கூட அதை அணிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது? எனக்கு எந்தக் காரணமும் தெரியவில்லை. இப்படியும் இருக்கலாம். இவையெல்லாம் உங்களுடைய பெரிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். நீங்கள் ஐந்து சுதந்திரங்களைப் பெற்றுள்ளதால் உங்களால் சுலபமான நிரந்தரமான தூக்கத்திற்கு ஆளாகப்படுகிறவர்கள் - நீங்கள் அப்படி செய்வது உண்டுதானே, உங்களை உங்களுடைய கண்ணாடிகள் மூலம் மட்டுமே பார்க்கப்படுவதை நீங்கள் விரும்பியிருக்கலாம்.<br /><br />பம்பாய் சென்ட்ரலில் நான் ஒரு நீக்ரோ படை வீரரைப் பார்த்தேன். அவருடைய புஜங்களின் உறுதியைப் பார்த்த அந்த கணத்திலேயே என் உயரத்தில் பாதியாக நான் சுருங்கிப்போனேன். எப்படியோ என் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவரை நோக்கி நடந்தேன். அவர் முதுகைச் சுவரில் சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மூட்டை முடிச்சுகள் அவருக்கு அருகில் இருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன.<br /><br />என்னுடைய காலணிகளைத் தரையில் தேய்த்து நான் சத்தம் எழுப்ப, அவர் கண்களைத் திறந்து பார்த்தார். நான் அவரிடம் ஆங்கிலத்தில், ‘நான் இவ்வழியே போய்க் கொண்டிருக்க, உங்கள் ஆளுமையில் மெய் மறந்து நின்றுவிட்டேன்’ என்றேன். பிறகு அவரை நோக்கி நட்புக்கரம் நீட்டினேன்.<br /><br />கண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்தப் படை வீரர், தன்னுடைய திடகாத்திரமான கையால் என் கையைப் பிடிக்க, என் கை எலும்புகள் சுக்குநூறாவதற்கு முன்பே என் கையை விடுவிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய கருத்த உதடுகளில் பெரிய புன்னகை தோன்றியது, அவர் என்னிடம், ‘நீங்கள் யார்?’ என்று சுத்தமான அமெரிக்க உச்சரிப்பில் கேட்டார்.<br /><br />என் கையைத் தடவிக் கொடுத்தபடியே, ‘நான் இங்குதான் வாழ்கிறேன்’ என்றேன். மேலும், ‘நான் உங்களை இந்த நிலையத்தில் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றியது’ என்றேன்.<br /><br />‘இங்கு நிறைய படை வீரர்கள் இருக்கிறார்கள். ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று கேட்டார்.<br /><br />இது சிக்கலான கேள்வி என்றாலும் நான் சிரமப்படாமல் அதற்கு பதில் தந்தேன். ‘நான் கருப்பு நீங்களும் அப்படியே. நான் கருப்பின மக்களை நேசிக்கிறேன்’ என்றேன். மிகப்பெரிய சிரிப்பை வெளிப்படச் செய்தார். அவருடைய கருத்த உதடுகள் அவ்வளவு அழகாக இருந்தது. அதில் முத்தமிடவேண்டும் என்று தோன்றியது. கதை முற்றும்.<br /><br />அங்கிள், உங்களுடைய பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். ‘பாத்திங் பியூட்டி’ என்ற உங்களுடைய திரைப்படம் ஒன்றை முன்பு ஒரு முறை பார்த்தேன். ‘இத்தனை அழகான கால்களை எங்கிருந்து எப்படி அங்கிள் ஒன்று திரட்டினார்' என்று என் நண்பர்களிடம் பின்னர் கேட்டேன். ஏறக்குறைய இருநூற்றி ஐம்பது கால்கள் அதிலிருந்தது என்று நினைக்கிறேன். அங்கிள் உங்கள் நாட்டில் பெண்கள் கால்கள் அப்படித்தான் இருக்குமா? அப்படி இருந்தால் கடவுள் புண்ணியத்தில் (அதாவது உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருந்தால்) குறைந்தபட்சம் அதை பாகிஸ்தானில் கண்காட்சியாக்குவதைத் தடுத்து நிறுத்துங்கள்.<br /><br />இங்கு பெண்களின் கால்கள் உங்கள் நாட்டுப் பெண்களின் கால்களைவிட அழகாக இருப்பதுகூட சாத்தியம். ஆனால் அதை இங்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாங்கள் எங்களுடைய மனைவிமார்கள் கால்களை மட்டுமே பார்த்திருக்கிறோம். மற்ற கால்கள் எல்லாம் எங்கள் பார்வைக்குத் தடை செய்யப்பட்டதாகும். உங்களுக்குத் தெரியும்தானே, நாங்கள் மரபைப் போற்றுபவர்கள்.<br /><br />நான் மீண்டும் தடம் புரண்டு போகிறேன் என்றாலும் இம்முறை மன்னிப்புக் கோரப்போவதில்லை. ஏனெனில் இத்தகைய எழுத்துகள்தான் உங்களுக்குப் பிடித்திருக்கும். என்னைப் பார்க்க வந்த அந்த நாகரிகமான மனிதர், உங்களுடைய தூதரகத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி விட வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்காக ஒரு கதை எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். எனக்கு ஆங்கிலத்தில் எழுதத் தெரியாததால், எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவரிடம், ‘சார் நான் உருது எழுத்தாளன். ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும் என்று எனக்குத் தெரியாது’ என்றேன்.<br /><br />“நான் உருது மொழியில் ஒரு பத்திரிகை கொண்டு வருவதால், எனக்கு உருதுக் கதைதான் வேண்டும்” என்று பதில் தந்தார். இதற்கு மேலும் விசாரிக்க விரும்பாததால், ‘நான் சம்மதிக்கிறேன்’ என்றேன்.<br /><br />கடவுள்தான் என்னுடைய சாட்சி. உங்கள் உத்தரவின் பேரில்தான் அவர் என்னைப் பார்க்க வந்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை உங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை, இவருக்கு நீங்கள் படிக்க கொடுத்திருக்கலாம்.<br /><br />இதையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். எத்தனை காலத்திற்குப் பாகிஸ்தானுக்கு உங்களுடைய கோதுமை தேவைப்படுகிறதோ, அதுவரை நான் உங்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ள முடியாது. ஒரு பாகிஸ்தானி என்ற முறையில் (என்னுடைய அரசாங்கம் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட குடிமகனாக என்னைப் பார்க்கவில்லை என்றாலும்) நான் கடவுளிடம் இதைத்தான் வேண்டிக் கொள்கிறேன்.<br /><br />உங்களுக்கு உண்ணத் தகுந்த கீரை வகைகளும் வரகு தானியமும் தேவைப்படும் காலம் ஒன்று வரும். அன்று நான் உயிரோடு இருந்தால் நிச்சயமாக அதையெல்லாம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.<br /><br />என்னிடம் கதை கேட்ட அந்த நாகரிகமான மனிதர், அதற்கு நான் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறேன் என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.<br /><br />அங்கிள், பொய் சொல்வது உங்களுக்கு சாத்தியமானது - நிஜமாகவே அப்படிச் சொல்வதோடு, அதை ஒரு கலையாகவே அதை மாற்றிவிட்டீர்கள். ஆனால் எனக்கு அப்படி செய்யத் தெரியாது.<br /><br />இருந்தாலும் அன்றைய தினம் நான் பொய் சொன்னேன்.<br /><br />‘என் கதைக்கு ரூபாய் இருநூறு கேட்கிறேன்’ என்றேன்.<br /><br />உண்மை என்னவென்றால் இங்கு பெரும்பாலான வெளியீட்டாளர்கள் ஒரு கதைக்கு நாற்பது முதல் ஐம்பது ரூபாய் வரை தான் கொடுப்பார்கள். அதனால் என் கதைக்கு 200 ரூபாய் வேண்டுமென்று சொன்னபோது மிகவும் அசிங்கமாகவும், அவமானமாகவும் உணர்ந்தேன். ஆனால் எல்லாம் கடந்துவிட்டது.<br /><br />அங்கிள், நான் அதிர்ச்சியடைந்த அதே அளவிற்கு நீங்கள் அனுப்பி வைத்த அந்த நாகரிகமான மனிதரும் அதிர்ச்சியடைந்தார். (இது உண்மையா அல்லது நடிப்பா என்று எனக்குத் தெரியாது) ‘வெறும் இருநூறு ரூபாய் தானா... நீங்கள் குறைந்தபட்சம் ஐநூறு ரூபாயாவது கேட்க வேண்டும்’ என்று சொன்னார்.<br /><br />ஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கேட்கலாம் என்று அதிகபட்ச கற்பனையில்கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்பதால், அவர் பதில் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. இருந்தாலும் நான் சொன்னதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதால், ‘இங்க பாருங்க சார்., இருநூறு ரூபாய்தான் இது சம்பந்தமாக இதற்கு மேலும் எந்தப் பேச்சு வார்த்தைக்கும் நான் தயாரில்லை’ என்று பதில் தந்தேன்.<br /><br />நான் குடித்திருப்பதாக நினைத்து அவர் திரும்பச் சென்று விட்டார். நான் குடிக்கிறவன் தான். எதைக் குடிக்கிறேன் என்று என்னுடைய முதல் கடிதத்தில் விவரித்துள்ளேன். அங்கிள், இங்கு தயாரிக்கப்படும் அந்த விஷத்தைத் தொடர்ந்து ஐந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருந்தும், நான் உயிரோடு இருக்கிறேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எப்போதாவது இங்கு வர நேர்ந்தால் இந்தக் கேடுகெட்டதை உங்களுக்கும் குடிக்கக் கொடுக்கிறேன். நீங்களும் அதைக் குடித்துவிட்டு உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு என்னைப்போல் உயிரோடு இருக்கலாம்.<br /><br />எப்படியிருந்தாலும் அடுத்தநாள் காலை நான் வராண்டாவில் சவரம் செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய இந்த நாகரிகமான மனிதர் மீண்டும் தோன்றி, "இங்கே பாருங்கள். இருநூறு ரூபாய்தான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். முந்நூறு ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்.<br /><br />நான் நல்லது என்று சொல்லி அவர் கொடுத்த முந்நூறு ரூபாயை வாங்கிக் கொண்டேன். அந்தப் பணத்தை என் சட்டைப்பையில் வைத்தபின் அவரிடம், ‘நான் உங்களிடம் நூறு ரூபாய் அதிகமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எழுதுவது உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அதில் மாற்றங்கள் செய்யும் உரிமையும் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்' என்றேன்.<br /><br />இதற்குப் பிறகு அவர் என்னைப் பார்க்க வந்ததே கிடையாது. நீங்கள் அவரைச் சந்திக்க நேர்ந்தாலோ அல்லது உங்களிடம் அவருடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்போதோ உங்கள் பாகிஸ்தான் சகோதரரின் மகனுக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.<br /><br />அந்த முந்நூறு ரூபாயை நான் ஏற்கனவே செலவு செய்துவிட்டேன். உங்களுக்கு அந்தப் பணம் திரும்ப வேண்டும் என்றால், மாதத்திற்கு ஒரு ரூபாய் என்ற வீதத்தில் திரும்பக் கொடுத்து விடுகிறேன்.<br /><br />உங்களுடைய ஐந்து சுதந்திரங்களோடு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.<br /><br />உங்களுக்குக் கீழ்ப்படிந்த<br />உங்கள் சகோதரனின் மகன்.<br />சாதத் ஹசன் மண்ட்டோ<br /><br /><span style="color: rgb(51, 102, 255);font-size:180%;" >3</span><br /><br />31, லஷ்மி மேன்ஷன், 15, மார்ச் 1954<br />ஹால் வீதி, லாகூர்.<br /><br />அன்புள்ள அங்கிள்,<br /><br />வணக்கம்.<br /><br />நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இதை எழுதுகிறேன். விஷயம் என்னவென்றால் நான் நோயுற்று இருந்தேன். எங்களுடைய கவித்துவ மரபில் நோய்க்கான மருந்து என்பது நீண்ட கழுத்துள்ள குவளையிலிருந்து, உமர்கயாமின் கவிதைகளிலிருந்து நேரடியாகத் தோன்றும் ஒயிலான கவர்ச்சி மங்கைகள், அருமருந்தை ஊற்றிக் கொடுப்பதில்தான் உள்ளது. இருந்தாலும் நான் இதையெல்லாம் வெறும் கவிதை என்றே நினைக்கிறேன். குவளையை ஏந்தி வரும் அழகு மங்கைகள் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இங்கு தாடி முளைத்த கோரமான வேலையாட்கள் கூட குவளை ஏந்தி வருவது கிடையாது.<br /><br />இந்த மண்ணிலிருந்து அழகெல்லாம் ஓடோடி விட்டது. பெண்கள் முகத்திரைக்கு வெளியே வந்துவிட்டார்கள் என்றாலும், அவர்களுடைய முகத்தை ஒரே ஒருமுறை பார்த்தால் போதும், முகத்திரைக்குப் பின்னாலேயே அந்த முகங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. உங்களுடைய மாக்ஸ் ஃபேக்டர் அவர்களுடைய முகங்களை மேலும் கோரமாக்கிவிட்டது. இலவச கோதுமை, இலவச இலக்கியம், இலவச ஆயுதங்கள் என்று நீங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். மிகத் தூய்மையான இருநூறு அமெரிக்கப் பெண்மணிகளை நீங்கள் ஏன் இங்கு அனுப்பி வைக்கக்கூடாது? குறைந்தபட்சம் குடிப்பதற்கு எப்படி ஊற்றிக் கொடுக்க வேண்டுமோ அப்படியாவது அவர்கள் ஊற்றிக் கொடுக்கட்டும்.<br /><br />நான் நோயுற்றுப் போக, அசாத்திய வேகம் கொண்ட அந்த மதுதான் காரணம் நான் கடவுளைச் சபிக்கிறேன். கலப்படம் ஏதும் இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்வதென்றால் - அது விஷம். எனக்கு ஏனென்று தெரியாததும் இல்லை. புரிந்து கொள்ள முடியாததும் இல்லை. ஆனால் கவிஞன் மீர் எழுதிய வரிகள் என் நிலைப்பாட்டிற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.<br /><br />எவ்வளவு சாதாரணமானவன் இந்த மீர். மருந்து விற்பவனின் மகன்தான் அவனை நோயுறச் செய்தான்மருந்து விற்பவனின் மகன்தான் அவனுக்கு மருந்துகளை வாங்கி வர ஓடினான். எந்த மருந்து விற்பவனின் மகனால் அவன் நோயுற்றிருக்கிறான் என்று மீர் அறிந்திருந்தும், ஏன் அதே மருந்து விற்பவனின் மகனிடம் மருந்தை எதிர்பார்க்கிறான் என்று யாருக்குத் தெரியும். நான் எவனிடமிருந்து என் விஷத்தை வாங்குகிறேனோ அவன் என்னைக் காட்டிலும் மோசமாக நோயுற்றுக் கிடக்கிறான். நான் உயிரோடு இருப்பதற்குக் காரணம் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டுப் போனதுதான். அவன் நிலையில் எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை இல்லை.<br /><br />மூன்று மாதங்கள் மருத்துவமனையின் பொது வார்டில் இருந்தபோது அமெரிக்காவிலிருந்து எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் நோயுற்று இருந்ததையே நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று டெராமைசின் புட்டிகளை எனக்கு அனுப்பி வைத்து, அதற்காக இந்த உலகத்திலும் அடுத்த உலகத்திலும் நற்பெயரைப் பெற்றிருப்பீர்கள்.<br /><br />அயல்நாடுகளில், எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் செய்ய நிறைய இருக்கிறது என்றாலும் எங்களுடைய அரசாங்கம் எந்த நிலையிலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் ஓவியர்கள் மீது கொஞ்சமும் ஈடுபாடு காட்டப் போவதில்லை.<br /><br />என்னால் நினைவில் கொண்டு வர முடிகிறது. புலம்பிக் கொண்டிருந்த எங்களுடைய முந்தைய அரசாங்கம் ஃபிர்தௌஸி -இ- இஸ்லாம் ஜூலந்தரியை மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று பாடல்களைப் பிரபலப்படுத்தும் நிறுவனத்தின் இயக்குநராக நியமித்தது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட பிறகு அவருக்குக் கொடுக்கப்பட்டது எல்லாம் ஒரு வீடும் ஒரு அச்சு இயந்திரமும்தான். இன்று நீங்கள் செய்தித்தாள்களை விரித்துப் பார்த்தால் என்ன பார்க்க முடிகிறது?<br /><br />பாகிஸ்தானுக்கு தேசியகீதம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டதால், ஹஸிப் ஜூலந்தரி புலம்பிக் கொண்டிருக்கிறார். உலகிலேயே பெரிய இஸ்லாமிய நாட்டிற்குத் தேசியகீதம் எழுதுவதற்கும், ஏன் அதை இசை வடிவில் கொடுப்பதற்கும் உள்ள ஒரே கவிஞர் அவர்தான். பிரிட்டிஷார் போய் விட்டதால் அவர் தன்னுடைய பிரிட்டிஷ் மனைவியை விவகாரத்து செய்துவிட்டார். இப்போது அவர் ஒரு அமெரிக்க மனைவியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கிள், கடவுளுக்குப் புண்ணியமாகட்டும். அவருக்கு இந்த விஷயத்தில் ஏதாவது உதவி செய்து, மிக மோசமான முடிவிலிருந்து அவரைக் காப்பாற்றுங்கள்.<br /><br />உங்களுடைய சகோதரன் மகன்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், இந்த சகோதரன் மகன் போன்ற உண்மையானவனை நீங்கள் அணுகுண்டு வெளிச்சத்தில் கூட காண முடியாது. அதனால் நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் வேண்டுவது எல்லாம் இதுபோல் ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட வேண்டும்: ‘அதாவது உங்கள் நாடு (காலம் முடியும் வரை கடவுள் அதைக் காப்பாற்ற வேண்டும்) ஆயுதங்கள் கொடுத்து எங்கள் நாட்டிற்கு (இந்த நாட்டில் உள்ள மதுபான தயாரிப்பாளர்களை அந்தக் கடவுள் ஒழித்துக் கட்டட்டும்) உதவ வேண்டுமானால் சாதத் ஹசன் மண்ட்டோவை உங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்’.<br /><br />ஒரே இரவில் என்னுடைய மதிப்பு எங்கோ போய்விடும். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நான் ‘ஷாமா’ மற்றும் ‘டைரக்டரி’யில் வரும் குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மிக முக்கியமானவர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவார்கள். உங்களுடைய வழக்கமான பல்லிளிப்பை ‘ஏர் மெயிலி’ல் எனக்கு அனுப்பி வைக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதை என் முகத்தில் ஒட்ட வைத்துக்கொண்டு வருகிறவர்களை ஒழுங்காக அப்போதுதான் வரவேற்க முடியும்.<br /><br />இது போன்ற பல் இளிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ''நீ கழுதை', ' நீ வழக்கத்திற்கு மாறாக அதி புத்திசாலி', 'எனக்கு மன அமைதியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சந்திப்பில் கிடைக்கவில்லை', 'நீ அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட்', 'நீ பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி', நீ உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்து', 'நீ கோக்கோ-கோலா' இத்யாதி.. இத்யாதி...<br /><br />பாகிஸ்தானில் நான் வாழ விரும்ப காரணம், பூமியில் இந்தத் துண்டுப் பகுதியை நான் நேசிக்கிறேன். இதிலிருந்து புறப்படும் தூசியெல்லாம் நிரந்தரமாக என் இதயத்தில் படிந்து விட்டது. இருந்தாலும் என் ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்கு உங்கள் நாட்டிற்கு வருவேன். என் இதயத்தைத் தவிர மற்ற எல்லா பகுதிகளையும் உங்கள் நாட்டு நிபுணர்களிடம் கொடுத்து அதையெல்லாம் அமெரிக்காவாக மாற்றிக் கொள்வேன். எனக்கு அமெரிக்க வாழ்க்கைமுறை பிடித்திருக்கிறது.<br /><br />உங்கள் டி-சர்ட் வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது. அது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு விளம்பரங்களுக்கும் ரொம்பவும் உபயோகமானது. ஒவ்வொரு நாளும் அன்றைய பிரச்சார வரிகளை அதில் அச்சடித்து ஷ¨ஸானிலிருந்து காபி ஹவுஸ் முதல் சீன உணவகம் வரை போனால் அதில் உள்ள வரிகளை எல்லோரும் படிக்கலாம். டீ-சர்ட் போட்டுக் கொண்டு, நீங்கள் அன்பளிப்பாகக் கொடுத்த பைப்பை என் பற்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு, மாலுக்குப் போக எனக்கு பேக்கார்ட்டு வண்டியும் தேவை. என்னைப் பார்த்தவுடன் எல்லா முற்போக்கு மற்றும் முற்போக்கு அல்லாத எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களுடைய நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.<br /><br />ஆனால் பாருங்கள் அங்கிள், காருக்கு பெட்ரோலை நீங்கள்தான் வாங்கித் தர வேண்டும். இருந்தாலும் எனக்கு பேக்கார்ட்டு கிடைத்த அந்த நொடியிலேயே 'ஈரானின் ஒன்பது மணங்கு எண்ணெயும் ராதையும்' என்று கதை எழுதுவதாக உறுதிமொழி தருகிறேன். என்னை நம்புங்கள். அந்தக் கதை பிரசுரமாகும் அந்தக் கணத்திலேயே ஈரான் எண்ணெயோடு உள்ள எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பிறகு உயிரோடு இருக்கிற மௌலானா ஜபார் அலிகான் 'லாய்ட் ஜார்ஜும் எண்ணெயும்' என்ற கவிதையை மாற்றி எழுத வேண்டி வரும்.<br /><br />நான் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம் குட்டிக் குட்டியான அணுகுண்டுகளை நீங்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக நீண்ட நாட்களாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளேன். அது என்னவென்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுவது இயற்கையானதுதான்.<br /><br />நீங்கள் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். ஹிரோஷிமாவை நிர்முலமாக்கினீர்கள். நாகசாகியை தும்பும் தூசுமாக்கினீர்கள். ஒவ்வொன்றும் அதனதன் வடிவில் என்று பல ஆயிரம் குழந்தைகள் ஜப்பானில் பிறப்பதற்குக் காரணமானீர்கள். எனக்கு வேண்டியதெல்லாம், எனக்குச் சில சலவை இயந்திரங்களை அனுப்பி வையுங்கள். இது அப்படித்தான்: இங்கு பல முல்லா வகையறாக்கள் சிறுநீர் கழித்த பிறகு ஒரு கல்லை எடுத்து, ஒரு கையை நாடா அவிழ்க்கப்பட்ட சல்வாருக்குள் விட்டு சிறுநீர் கழித்த பிறகு சொட்டக்கூடிய துளிகளைக் கல்லில் பிடித்து, அவர்கள் நடையைத் தொடருகிறார்கள். இதைப் பொதுவில் எல்லோரும் பார்ப்பது போல் செய்கிறார்கள். நான் விருப்பப்படுவது எல்லாம் அப்படி ஒருவன் தோன்றும் அந்த சமயத்தில் நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த அணுகுண்டை எடுத்து அவன் மீது வீச அந்த முல்லாவும் அவன் பிடித்துக் கொண்டிருக்கும் கல்லும் புகையாக மாற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.<br /><br />எங்களோடு நீங்கள் போட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதை நீங்கள் அப்படியே தொடர வேண்டும். இந்தியாவோடும் இதற்குச் சமமான ஒன்றை நீங்கள் கையெழுத்திட வேண்டும். போன யுத்தத்தில் நீங்கள் உபயோகித்து இப்போது பயனற்று இருக்கும் ஆயுதங்களை எல்லாம் எங்கள் இருவருக்கும் விற்பனை செய்யுங்கள். இந்தக் குப்பைகள் எல்லாம் உங்களிடமிருந்து அகற்றப்படுவதோடு, உங்களுடைய ஆயுதத் தொழிற்சாலைகளும் இனிமேல் வேலையற்று இருக்காது.<br /><br />பண்டிட் ஜவகர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு சூரிய ஒளியில் வைத்தவுடன் வெடிக்கும் துப்பாக்கி ஒன்றை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். நானும் காஷ்மீரைச் சேர்ந்தவன்தான். ஆனால் முசல்மான். அதனால்தான் எனக்கென்று சிறிய அணுகுண்டுகளைக் கேட்கிறேன்.<br /><br />இன்னும் ஒரு விஷயம். எங்களால் அரசியல் சாசனத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் தயவுபண்ணி சில நிபுணர்களை அனுப்பி வையுங்கள். ஒரு தேசம், தேசியகீதம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனம் இல்லாமல் இருக்க முடியாது - உங்களுடைய விருப்பமும் அதுவாக இருந்தால் மட்டும்.<br /><br />இன்னும் ஒரு விஷயம். இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்தவுடன் ஒரு கப்பல் முழுக்கத் தீப்பெட்டிகளை எனக்கு அனுப்பி வைக்கவும். இங்கு தயாரிக்கப்படும் தீக்குச்சிகள் ஈரானில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளோடு உரசினால்தான் பற்ற வைக்க முடிகிறது. பாதிபெட்டி வரை உபயோகித்த பின், மிச்சத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் உதவியில்லாமல் உபயோகிக்க முடியாமல் வீணாகிறது. ஆனால் அது தீக்குச்சி போல் அல்லாமல் பட்டாசுபோல் நடந்து கொள்கிறது.<br /><br />அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மேலங்கி அற்புதமானது. அவை இல்லாமல் எங்கள் லண்டா பஜார் வெறிச்சோடிக் கிடக்கும். அங்கிள், நீங்கள் ஏன் எங்களுக்கு டிரவுசர்களையும் அனுப்புவதில்லை. நீங்கள் உங்கள் டிரவுசர்களைக் கழற்றுவதே கிடையாதா? அப்படி ஒருவேளை செய்தால், அதை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள். இதிலும் ஒரு செயல்திட்டம் இருக்க வேண்டும். எங்களுக்கு டிரவுசர் இல்லாமல் மேலங்கியை மட்டும் அனுப்பி வையுங்கள். டிரவுசரை எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி வையுங்கள். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய டிரவுசரும் மேலங்கியும் நீங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு போரிட்டுக் கொள்ளும்.<br /><br />சார்லி சாப்ளின் தன்னுடைய அமெரிக்கப் பிரஜா உரிமையைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கேள்விப்பட்ட விஷயம் என்ன? அந்தக் கோமாளி என்ன செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறான்? நிச்சயமாக அவன் கம்யூனிஸத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க உங்கள் நாட்டில் வாழ்ந்தவன், பேரும் புகழும் பெற்றவன், பணமும் சம்பாதித்தவன், அவன் செய்தது போல் செய்திருப்பானா? எவராலும் கவனிக்கப்படாமல் லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிந்ததை அவன் மறந்துவிட்டான் போலும்!<br /><br />அவன் ஏன் ருஷ்யாவிற்குப் போகவில்லை? ஆனால் அங்குதான் கோமாளிகளுக்குப் பஞ்சமே இல்லையே. அவன் இங்கிலாந்துக்குத்தான் போக வேண்டும். அப்போதாவது அங்குள்ளவர்கள் அமெரிக்கர் போல் வாழ்க்கையில் வாய்விட்டுச் சிரிக்கக் கற்றுக் கொள்ளட்டும். தற்போதைய நிலையில் அவர்கள் எப்போதும் துயரம் நிறைந்தவர்களாகவும், தற்பெருமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய போலித்தன்மைகளில் சிலவற்றைக் கிழித்து எறிவதற்கு, இதுதான் சரியான சந்தர்ப்பம்.<br /><br />ஹெட்டி லாமருக்கு காற்றில் ஒரு சுதந்திரமான முத்தம் கொடுத்து நான் இந்தக் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.<br /><br />உங்கள் சகோதரனின் மகன்<br />சாதத் ஹசன் மண்ட்டோ.<br /><br /><span style="color: rgb(0, 153, 0);font-size:130%;" >குறிப்புகள்:</span><br /><br />1. ஹஸிப் ஜுலந்தரி - சுதந்திரத்திற்கு முன் மிக முக்கியமான உருதுக் கவிஞர். ஷாநாமா -இ-இஸ்லாம் என்ற இஸ்லாமிய வரலாறு பற்றிய காவியப் படைப்பின் மூலம் பிரபலமானவர். ஷாநாமா என்ற காவியத்தைப் படைத்த பாரசீகக் கவிஞன் ஃபிர்தௌசிக்கு சமமாக ஒப்பிடக்கூடியவர். ஹசீஃப் பிரபலமாக ஃபிர்தௌசி -இ- இஸ்லாம் என்று அழைக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் தேசியகீதம் எழுதும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட அவரும் அதைச் செய்து முடித்தார். இருப்பினும் தன்னுடைய திறமைக்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு இருந்தது. அவரை மனிதனாகவோ, கவிஞனாகவோ மண்ட்டோ ஏற்றுக் கொள்ளவில்லை.<br /><br />2. டெல்லியிலிருந்து வெளிவந்த 'ஷாமா', லாகூரில் இருந்து வெளிவந்த 'டைரக்டர்' இரண்டும் பிரபலமான உருதுப் பத்திரிகைகள். அச்சமயத்தில் இப்பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தி நிறைய பணத்தைப் பரிசாகக் கொடுத்தது.<br /><br />3. ஸெலின் காப்பி ஹவுஸ், பாக் டீ ஹவுஸ், செனே உணவகம் எல்லாம் லாகூரில் உள்ள மாலில் உள்ள பிரபலமான உணவகங்கள். எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் அங்கு ஒன்று கூடுவது வழக்கம். பாக் டீ ஹவுஸ் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.<br /><br />4. மௌலானா ஜாஃபர் அலிகான்: கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். 'ஜமீன்தார்' என்ற செய்தித்தாளை நிறுவியவர். 1950களில் இறந்து போனார்.<br /><br /></span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-328671812400423692010-01-13T08:49:00.000-08:002010-11-21T10:31:54.883-08:00நந்தன் கதை:ஒரு மறுவாசிப்பு-மு.சிவகுருநாதன்<span><span><br /><br />வரலாற்றுக்கும் புனைவுக்குமான இடைவெளி சொல்லப்பட்ட/எழுதப்பட்ட/தொகுக்கப்பட்ட அல்லது சொல்லப்படாத/எழுதப்படாத/ தொகுக்கப்படாத வரலாற்றின் இடைவெளியைப் போன்றது தான். புனைவுகளே வரலாறாக கட்டமைக்கப்பட்டிருக்கிற நிலையில் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யவும், மறுவாசிப்பு செய்யவும் புனைவுகள் பெரும்பங்காற்ற முடியும். பழம் புனைவுகளை கேள்விக்குட்படுத்து வதும், புதுப்புனைவுகளை உருவாக்குவதும் வரலாற் றின் இடைவெளிகளைக் கடக்க/நிரப்ப பெரிதும் பயன்படும்.<br /><br />அக்னியில் ஆகுதி பெய்து கடவுளை வழிபடும் வழக்கமுடையவர்கள் பிராமணர்கள் (ஆகுதி - யாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள்) ஆகுதியாக, வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் நந்தன்களும் ராமலிங்கன்களும் தீயிட்டு எரிக்கப் படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.<br /><br />நந்தன் கதை வரலாறா அல்லது புனைவா என்ற கருத்திற்குள் செல்லாமல் நந்தன் என்றொரு மனிதன் வாழ்ந்திருப்பானேயானால் அக்கால சமூகச் சூழல் களில் பின்னணியில் ‘மரக்கால்’ என்ற நாவலைப் படைத்துள்ளார் சோலை சுந்தரபெருமாள். ‘மரக்கால்’ ஒரு குறியீட்டுப் பெயர்; பல்வேறு உள்ளர்த்தங்கள் பொதிந்தது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமை, போராட்டமாய் இன்றும் தொடர்கின்ற நிகழ்வுகள். இக்குறியீடு நாவலில் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.<br /><br />நாவலைப்பற்றி பேசாமல் நாவல் என்ன பேசுகிறது என்று பார்ப்போம்.<br /><br />“பிரம்மதேயங்கள் மக்களுக்கு எந்தக் குறையும் வைக்காமல் தான் செயல்படுகிறார்கள்”. சவுண்டிப் பார்ப்பனர்களுக்கு சிவாச்சாரிகளுக்கும், அந்தந்த குடும்பத்தினர்களுக்கு ஏற்றார்போல் பிரம்மதேயம் படியளந்துவிடும் (பக். 20). இரும்புக் கொல்லர்கள், மரத்தச்சர் மற்றும் கொத்தர்களுக்கு, அவரவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்றார்போல பிரம்மதேயம் படியளக்கிறது. அவர்களின் குடிசைகளைச் சீர் செய்ய தென்னை மட்டை, பாளை, மூங்கில்களை கட்டளை கொடுக்கிறது. கனகதாசியின் வசந்த விலாசத்தில் மட்டும் குச்சிப்பந்தம் எரியவிட 14படி பசு நெய் அளந்து விடப்படுகிறது (பக்.22).<br /><br />ஆதனூர் பறையர்கள் தங்களுடைய குடிசைகளைப் பத்து அடி உயரக் குறுமாடி வைத்து குறுக்குவில் போட்டுக் கட்டிக் கொள்ள ஆதனூர் பிரம்மதேயம் அனுமதி தந்திருந்தது (பக்.23). இந்த சிறப்பு உரிமை பெற்றவர்கள் ரெண்டு படை சுவர் எழுப்பி அதன் மேல் மூங்கில் சாத்துப் போட்டுக் கட்டிக்கொள்ள முடியும். பிறர் கூம்பாக் கணக்கா சாத்து நிறுத்தி, கொப்பறையாகத்தான் குடிசை கட்டிக் கொள்ள வேண்டும் (பக்.23). நந்தன் கச்சலையை திருமணம் செய்ததற்கு, கட்டளைப் படியாக மஞ்சள் துணியோடு மஞ்சள் துண்டு கட்டிய கயிறுடன் பச்சரிசி, கருப்பொட்டி, தேங்காய் பழத் தோடு கூடிய பெரு மடக்கை, செவலை வளத்திக்கு (நந்தனின் தாய் தந்தை) வழங்கப்படுகிறது (பக்.25).<br /><br />நந்தன் - கச்சலை, சோடி சேர்ந்ததும், பிரம்மதேயம் அவர்களைத் துணைக்குடிக்கான வழி வாகை செய்யக் கண்காணிகளுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தது (பக். 26). சிறுகாணி அம்பட்டனுக்கு பண்ணை அடிமை களுக்கு கொடுக்கும் தினப்படி, பிரம்மதேயக் கட்டளையே கொடுத்துவிடும் (பக்.30). சூத்திரத் தெருவிற்கு தீவட்டிகள், அது அணையாமல் எண்ணெய் போட தலையாரி, சண்டாளர்கள் தீவட்டியிலிருந்து குச்சி பந்தங்களைப் பற்ற வைக்கும் உரிமை, புயல், மழை இருப்பினும் அரசமரத்தடி துவட்டி ஏற்றி வைக்கப்படுவதை உறுதி செய்யும் பிரம்மதேயம் (பக்.32). செட்டியாரின் முறையீடான தீர்வைக் குறைப்பு மற்றும் கூடுதல் சோற்றுப் பட்டைக்கு உடன் இணங்கும் பிரம்மதேயம் (பக்.33). பறையர்களின் தலைக்கட்டுக்கள் மாசம் முச்சூடும் கறி ஆக்க மிளகாய் செலவு குட்டானில் அளந்து வைக்கப்படுதல் (பக்.34) என்று பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது பிரம்மதேயம்.<br /><br />‘பார்ப்பானுக்கு மூப்பன் பறையன் அவன் கேட்பார் இன்றி செத்தான்’ என்ற பழிபாவம் தன் இனத்திற்கு வந்துவிடக்கூடாதுங்கிறதில் உணுப்பாய் இருக்கும் மருதவாணம் பிள்ளை தலை எடுத்த பின்னர்தான் பண்ணை அடிமைகளுக்குத் கள்ளுபடி போட பிரம்மதேய அதிபரிடம் அனுமதி வாங்கினார். (பக்.101)<br /><br />பண்ணையடிமைகளுக்கு உணவுக்குப்படி அளப்பதைப் போலவே ‘கள்ளும்’ வழங்க ஏற்பாடு செய்துள்ளார், மருதவாணம் பிள்ளை. மேலும், “இதுபோல மழை வெள்ளக்காலத்தில் தென்னை மர சாணர்கள் வடிக்கும் கள்ளை, சால்களில் நிரப்பிப்போட்டு இருப்பது சீறிக்கொண்டு கிடந்தாலும் இதுபோல மழை வெள்ளக்காலங்களில் கிடந்து லோலுபடும் இந்த பண்ணை அடிமைகள் உடம்பையும் மனசையும் சூடுபடுத்திக்கொள்ள, உடம்பு வலியை மறக்கடிக்கவும், கசாயம் காய்ச்சிக் குடிச்சிக்க வேண்டிய கசகசப் பட்டையையும், லவங்கப்பட்டையையும் கொல்லி மலை செட்டி மூலம் வாங்கி வைத்துக் கொண்டு மழைக்காலப்படியோடு இதுகளையும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார் மருதவாணம்பிள்ளை (பக்.102).<br /><br />இதுமாதிரி அளக்கவேண்டிய படிகளனைத்தும் அளந்தும், குடிசை போடவும், சாப்பிடவும் வழிவகை செய்கின்றன பண்ணை மாகாணங்கள். அவர்கள் செய்ய மறுத்தாலும் வாதாடிக் கேட்டுப்பெற மருத வாணம் பிள்ளை போன்ற வள்ளல்கள் இருக்கிறார்கள். இந்த பண்ணையடிமைகளுக்கு இது போதாதா? சிவதரிசனம் வேறு வேண்டுமாக்கும்.<br /><br />திருப்பங்கூர் திரிலோகநாதரை தரிசிக்க பறையர் பண்ணையடிமைகளுக்கு பிரம்மதேய அதிபர் முத்து சாமி தீட்சிதர் அனுமதியும் அளிக்கிறார். இதைவிட வேறு என்ன வேண்டும்? காலந்தோறும் அடிமையாக்கிட இது போதாதா?<br /><br />இவை எல்லாவற்றிற்கும் மேலாக மாட்டுப் பொங்கல் நாளில் சினைப்பிடிக்காத வறட்டு மாடுகள் மற்றும் பாரவண்டி, ஏருக்குப் பயன்படுத்தி பாடாவதியான மாடுகளை பறைச்சேரியின் தலைக்கட்டுக்கு அனுப்பி கறிபோட்டு பிரித்து பங்கிடும் பிரம்மதேயம் (பக்.180). மேலும், கணபோகத்தில் குடி உரிமையுள்ள அனைத்து சாதியினருக்கும் ஓட்டுவில்லை வீடுகளாகக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்ற திட்டப்படி ஓட்டு வீடுகள் கட்டப்பட்டது. அடிமைப் பட்டு கிடக்கும் பறையர் பண்ணை அடிமைகளையும், அவர்கள் பசி என்று நோவாமல் வயிற்றுச் சோற்றுக்கும் இடுப்புத் துணிக்கும் சத்திரம் கவனித்துக் கொண்டு இருக்கிறதோட குந்துமிடத்தையும் சேர்த்துப் பேசி முடிவு எடுத்துவிட வேண்டும் என்ற நினைப்பில் பேச்சை கிளப்பி விட்டிருக்கும் ஞானசம்பந்தப்பிள்ளை (பக்.115).<br /><br />பிரம்மதேயம் பண்ணை அடிமைகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தது சனாதான தர்மம். பண்ணை அடிமகளுக்குச் சலுகை காட்டப்பட்டதாகவும் படியளக்கப்பட்டதாகவும் நாவலில் காணமுடிகிறது. இதனால் ‘மரக்காலுக்கு’ போதிய முக்கியத்துவம் இல்லாமற் போகிறது.<br /><br />வேத மதங்களுக்கெதிராக சைவ மதம் அனைத்துப் பிரிவுகளிலிருந்து சிலரைப் பொறுக்கியெடுத்து அறுபத்து மூவராக ஆக்கியிருப்பதை ஜனநாயகத் தன்மை கொண்ட விஷயமாக பார்ப்பது (பக்.5), சைவசமயக் கொடுமைகள், ஆதிக்கங்கள், வைதீகத் தன்மைகள், போன்றவற்றைப் பின்னுக்கு தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது. சைவத்தை வேத மதத்திற்குக் கெதிராகவும், பார்ப்பனீயத்துக்கு எதிரானதாகவும் கட்டமைப்பது மற்றொரு பார்ப்பனீயமாகவே மாறி விடும். சைவத்தை அவ்வளவு Positive ஆக பார்க்க வேண்டியதில்லை.<br /><br />நாவலில் சைவ ஆதரவுக் கூறுகள் நிறைய இருக்கின்றன. “ஓம், ஓம்” என்ற மந்திரத்தின் ஓசை வெளிப்படக் காற்றையே உட்கொண்டு காற்றையே வெளிப்படுத்தினார். சிவமே அவருள் குடிகொண்டது போல் மகாதேவ ஈ°வரரின் ஆலயத்தை அடையப் போகும் அவரை, அவர் கடந்த பின் போவாரின் மீது அவர் கவனம் மேலெழுந்தவாரியாகக் கூடபடவில்லை. இப்படி நடந்து ‘சிவ சிவ’ மந்திரத்தை ஆன்ம வெளியில் உள்ளடக்கிப் போகும் போது வெளிப்படும் அவரின் நடையில் கூட இன்று ஒரு மாற்றம் தெரிந்தது”.<br /><br />“இந்த மண்ணில் சிவம் ஒன்றே இருந்தது. மன்னர் களிலிருந்து சாதாரணத் தொழில் வழி மக்கள் வரையிலும் சிவத்தையே போற்றி வணங்கினார்கள்” (பக்.221).<br /><br />“அந்த வஞ்சகர்கள் சிவனையும் தங்களுடைய கடவுளர் என்று சுவீகரித்து சிவமதத்தை அழித்து சர்வமும் வேதமதமாக்கும் திட்டத்துடன் பல பிரம்மதேய அதிபர்களைத் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...” அந்தப் பரதேசியின் பேச்சைக் கேட்ட மருதனுக்கு சர்வமும் விளங்கிற்று (பக்.222).<br /><br />“சைவப் பரதேசிங்க சனங்க கூடும் இடங்களில் எல்லாம் வேதமதத்துக்குக் காரவங்களை, கடுமையா சாடி தமிழ் மொழிதான் சிவனுக்கு உகந்த மொழின்னும் தெய்வ மொழின்னும் பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கிறத கொள்ளிடக் கரையில் கேட்டுக்கிட்டுதான் வந்திருக்கிறேன்....” (பக்.233).<br /><br />நந்தன் கதையில் சைவத்திற்கு தானே முக்கியத்துவம் இருக்க முடியும்? என்று கேட்கலாம். ஆனால் அதே காலகட்டத்தில் இங்கு இருந்த பவுத்த, சமண மதங்கள் பற்றிய விவரணைகள் மிகவும் குறைவு.<br /><br />“இப்போது இந்த திராவிட தேசத்தில் நீச சமண மதத்துறவிகள் பண்ணை மாகாணங்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நீச சாதிக்காரனுங்களை எல்லாரையும் ஒன்றுதிரட்டும் நோக்கத்தில் செயலில் இறங்கியிருக்கிறார்கள் என்பது ருசுவாகியிருக்கிறது” (பக்.76).<br /><br />“அக்கம்பக்கமெல்லாம் சமணமத சாமியாருங்க கலகத்தைக் கௌப்பிவிட்டு குட்டையைக் குழப்பி மீன் புடிக்கிறானுங்க. நம்ம பிரம்மதேயத்துல சமணமதத் துறவிங்க இதைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கானுங்க.” (பக்.104).<br /><br />“ராஜாங்கம், நீசனுங்களையெல்லாம் சமண மதத்தில் சேர்க்க தந்திர உபாயத்தைப் பத்தி யோசித்து வருகிறதாகவும் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக அதிகாரத்துக்கு கொண்டு வந்தா சமண மதத்தையும் பரப்ப முடியும்ன்னு சமணத்துறவிகள் சொன்னதையும் பரிசீலிக்கிறதாகவும் இருக்காம்” (பக்.233).<br /><br />இவற்றையெல்லாம் சைவமேன்மை பேசப்பயன்படுத்தலாமே தவிர நடைமுறைப் பொருத்தப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />மருதவாணம் பிள்ளை பண்ணையடிமைகளுக்கு மட்டும் சலுகை காட்டியவரல்ல. முத்துசாமி தீட்சிதர் மற்றும் கனகதாசி என்று அவரின் கடைக்கண் (பக்.69) பார்வை பட்டோர் பட்டியல் நீண்டது. இதைப் போலவே சிவவடிவேலு உடையார், ஞானசம்பந்தம் பிள்ளை போன்ற சைவத் தொண்டரணியினர் சைவப் புகழைப் பரப்பி நிற்கின்றனர் நந்தனைவிட அதிகமாக.<br /><br />“அவருக்கு ஒன்று என்றால் ‘சூ’ என்ற கூடிகொள்ள சாதிக்காரவங்க மட்டுமில்லாம மேலண்ட, வடவண்ட பறையர்த்தெரு சனங்களும் இருக்கு. இப்புடி ஒன்னடி முன்னடியா வாழறதுங்க ஞானசம்பந்தன் பிள்ளை கிழிக்கிறக் கோட்டை இதுநாள் வரையிலும் யாரும் தாண்டினது இல்லை” (பக்.109).<br /><br />பறையர்களும் வெள்ளாளர் உள்பட இதரச் சூத்திரர்களும் ‘ஒன்னடி முன்னடியா’ வாழுகிற சூழலில் பிரச்சினைக்கு வேலை ஏது? அவரவர்களுக்கு இட்ட வேலையையும், விதிக்கப்பட்ட அத்துக்களையும் தாண்டும் போது தான் சிக்கல் வருகிறது.<br /><br />சிவவடிவேலு உடையார் பண்ணை அடிமைகளுக்கு உள்ள நித்தியப்படியை தவறாமல் அளந்து விடுகிறார். (பக்.109) “உடையான் ஒன்பது குடிக்கு “ஓடு” பிரிக்கிற உரிமையைத் தாரை வார்த்துக் கொடுத்துட்டு சாதி வெள்ளாளன் பார்த்துக்கிட்டு இருக்கமுடியாது,” என்று தன்னோட அங்காளி பங்காளியிடம் பேசும் சிவவடிவேலு உடையாரால் ஞான சம்பந்தம் பிள்ளையைத் தீண்ட முடிவதில்லை. (பக்.109).<br /><br />“உடையாருங்க குடி ஒன்பதுன்னு சொன்னாலும் இன்னிக்கு வேளாளக்குடியில, பாதிய, தொட்டுட் டாங்க” (பக்.110) உடையாருக்கு பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இவர்களை சைவம் ஒன்றிணைக்கிறது.<br /><br />“எப்பவாவது இதுபோல அவசரமாய் ஊர் மன்றத்தைக் கூட்டும் போதெல்லாம் ஞானசம்பந்தம் பிள்ளை, சிவவடிவேலு உடையாரை நந்தவனத்துக்கு அழைத்துக் கொண்டு போய் உக்காந்து பேசியிருந்து விட்டுத்தான் வருவார்.” (பக்.111)<br /><br />இவர்கள் கூடி எடுக்கும் முடிவுதான் ஊர் மன்றம் எடுக்கும் முடிவு. பார்ப்பனீயத்திற்கு கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த சிவமதமும்.<br /><br />நாவலில் கனகதாசி, அவள் மகள் நீலாம்பரி, தர்மவர்த்தினி, கேசி போன்ற தாசிகள் வருகிறார்கள். இதில் கேசி கனகதாசியின் துணையாக வருபவள். எடுபிடி வேலைகள் செய்யத்தொடங்கி இசை, தாளக்கட்டை தட்டி சுப்ரமணிய சிவாச்சாரியின் ‘தேவைக்கு’ உடன்பட்டு, அவள் இடத்திற்கு புதிய காணிக்கை வந்தபின், சுக்கிர வன்னியனால் வசப்படுத்திக் கொள்ளப்பட்டவள் (பக்.14). கேசியும் அவன் தோதுக்கு ஈடுகொடுத்துக்கொண்டு மிதிப் பட்டுக் கிடக்கும் கூளம் போலக் கிடந்தாள் (பக்.15).<br /><br />“கனகதாசி பனிரெண்டு வயதைத் தொட்டதும் அவள் பூப்பெய்திய சடங்கைப் பிரம்மதேயமே கொண்டாடி சந்தோஷிக்க பிரம்மதேய அதிபர் ஏற்பாடு செய்திருந்தார்” (பக்.67) “மகன் வாலிப பருவத்தின் முறுக்கில் அவன் கனகதாசியின் கொள்ளை அழகிலும் உடம்பின் சூட்சுமத்திலும் லாகிரியை உண்டவன் போல”, (பக். 67) கிடந்த முத்துசாமி தீட்சிதருக்கு வாத்ய ஸ்யானரின் காம சூத்திரத்தின் வழிகாட்டலை அள்ளி வழங்கியவள்.<br /><br />அவள் மகள், “நீலாம்பரி மாரில் இறுக்கலாகக் கட்டியிருக்கும் கரு நீலநிற கச்சை நெளிவு சுழிவுகளை அடக்கி வைத்துக் கொள்ளவில்லை. அவளின் திரட்சியான, அங்கலாவண்யங்களை முழுமையாக இறுக்கித் தன் வசப்படுத்த வாய்ப்பு இல்லாமல் ஒண்டிக் கிடந்தது” (பக்.68).<br /><br />இந்த அழகை மகாதேவ ஈஸ்வரர் காண வேண்டு மல்லவா? அதற்குத்தான் சாயரட்சை காலத்தில் கனகதாசி செய்யும் சோடசோபசாரப் பூஜை; இப்பூஜை தாசியின் நிர்வாணத்தை ஈ°வரன் பெயரால் காட்சிப்படுத்துவது. அர்ப்பணம் முடிக்க அரை நாழிக்கு மேல் ஆகும் (பக்.70).<br /><br />“கனகதாசியின் கூந்தலிலும் கழுத்திலும் மலர்ச் சரங்கள் மட்டுமே பற்றிருந்தன. மாரிலும் இடுப்பிலும் கட்டியிருந்த கச்சை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வெண்திரையில் கருவறை வாயில் சர விளக்கின் ஒளியில் நிழலாகத் தெரிந்த கனகதாசியை அவள் பெற்று இருக்கும் நிர்வாணத் தோற்றத்தை ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது.” (பக்.70)<br /><br />முத்துக்கள் பதித்த மயில் சிவிகையில் கனகதாசி, நீலம்பரி ஆகியோர் பவனிவரும் உரிமை முத்துசாமி தீட்சிதரால் அளிக்கப்பட்டது. சனாதானத்திற்கு எதிரானதாக கூறப்பட்டாலும் (பக்.67) முத்துசாமி தீட்சிதரால் காற்றில் பறக்கவிடப்பட்டது தாசிகளின் வாழ்வும் உரிமைகளும் கூடத்தான்.<br /><br />தர்மவர்த்தினியும், “குழந்தைப்பாக்கியத்தை உனக்குக் கொடுத்து விட்டுத்தான் தைப்பிறப்பில் தில்லைவலத்தில் உள்ள உத்தமநாச்சியின் மகள் சிவகாமவல்லிக்கு பல்லக்கு பரிவாரம் அனுப்பி வைக்க இருக்கிறேன்”, என்று சிவவடிவேலு உடையார் சொல்லும்போது நெகிழ்ந்து போய் அவரின் முயக்கத்திற்கு ஈடுகொடுத்தாள் (பக்.120).<br /><br />தர்மவர்த்தினி தன்னை வஞ்சித்து விட்ட சிவ வடிவேலு உடையாரை பழிவாங்க நந்தனோடு சேருகிறாள். “அவனுள் இருந்த சிவநெருப்புப் பிளம்பு ஒன்று இரவை விழுங்கினது போல் புதுவாசலை திறந்துவிட்டிருந்தது. தர்மவர்த்தினி ஒரு எல்லையில் இருந்து மறு எல்லையை கடந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் மனம் புடைத்து திணறிக் கிடந்தாள் அவள் உடம்பு இரை விழுங்கியப் பறவைபோல நெகிழ்ந்து கிடந்தது” (பக்.141).<br /><br />நான்கு தாசிகளும் சுயமற்றவர்கள். பிரம்மதேய அடிமைகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. தர்மவர்த்தினி செய்கையை கலகமாக பார்க்க முடியவில்லை. நந்தனின் தோற்றமும் கண்டுகண்டான தேகமும் அவன் முகத்தில் தேங்கி யிருக்கும் ‘சிவ’களையும் அவளை வசியப்படுத்தின (பக்.138). நீசப்பறையனை கூடுவதற்கு சிவலோகநாதனின் அருள் கிடைத்திருக்க வேண்டும்.<br /><br />இவர்கள் நால்வரைத் தவிரவும் கணிகையர்த் தெரு யுவதிகள் முத்துசாமி தீட்சிதரைக் கண்டு கனவில் சல்லாபித்து தங்கள் ‘உடம்பு’ பெருகி வடிபவர்கள் (பக். 90). இவ்விடத்தில் மாதவி - மணிமேகலை கதையும் சொல்லப்படுகிறது.<br /><br />வளத்தி (நந்தனின் தாய்), கச்சலை (நந்தனின் மனைவி), குட்டா (அக்கா மகள்) ஆகிய தலித் பெண்களைப் பற்றிய வருணனைகள் தாசிகளைப் பற்றி வருணனைக்கு எவ்விதமும் குறைவு வைக்கவில்லை.<br /><br />“அவளைப் பாக்கும் போது பனிரெண்டைப் பெத்த உடம்பாகத் தெரியவில்லை. சுருக்கமோ, தளர்ச்சியோ இல்லாமல் திம்முன்னு இருந்தாள். அவள், தான் இன்னும் நாற்பது வயதைக் கூட தொடவில்லை என்று தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தாள்.” வளத்தி (பக்.24).<br /><br />“பனிரெண்டு வயசில் மூப்பில் இருந்த நந்தனைப் பிடித்துக் கொண்டு ஆதனூருக்கு வந்தபோது இருந்த உடம்பு, அவள் சின்னசாதி செட்டியோடு ஓடும்போது, ஒருபிடி தூக்கலாயும், எடுப்பாயும் தான் தெரிந்தாள், “கச்சலை (பக். 28).<br /><br />“உன்னையே கட்டிக்கிறேன்னு நிக்கிற ஒக்கா மொவ குட்டா பொதபொதுன்னு வளர்ந்து வீராந்து நிக்கிறா... மொச்சை கண்ட நமப்புல உன்னையே சுத்திக்கிட்டு நிக்கிறவள சீராபேரா அடிச்சி வெரட்டிடாம, அவளை கட்டிக்கடா...” (பக். 47).<br /><br />இந்த வருணனைகள் முத்துசாமி தீட்சிதர், மருத வாணம் பிள்ளை, ஞானசம்பந்தம் பிள்ளை, சாம்பசிவ குருக்கள், சிவவடிவேலு உடையார், ராமு மழவராயன், சுக்கிர வன்னியன் போன்றோரின் நீசப்பறைச் சாதிப் பெண்கள் பற்றிய எண்ணங்களுக்கு நிகரானது.<br /><br />கோயில் கட்டளை அடிமைகள் தவில் வாசிக்கும் போது அவர்கள் கள் குடித்து வந்திருப்பதனால் இசைக் கருவிகளில் காட்டும் தடுமாற்றத்தைக் கேட்க முடிந்தது (பக்.89). மாட்டுத் தோல் கூட அவர்களுக்கு சொந்த மில்லாத போது கள் குடிப்பதும், இசையில் தடுமாறுவதும் எப்படி தவறாக இருக்கமுடியும்?<br /><br />நாவலின் இறுதியில் கலகக்காரனான மருதன் நந்தனோடு சேருகிறான். அவனும் சேர்ந்து தில்லை செல்லும் முடிவெடுகிறான் பக்.224).<br /><br />“நீ முதலில் மனுசனா வாழும் உரிமைக்காவ கலகம் பண்ணியிருக்கணும், நாங்க அதைச் செஞ்சோம். ஆனா, நீ சிவதரிசனம் காணும் உரிமைக்கு போராடியிருக்க”, என்று நந்தனை விமர்சிக்கிறான் மருதன் (பக்.216).<br /><br />இருப்பினும் நந்தனின் முடிவை மாற்ற முடியாமல் அவனுக்கு உதவி செய்யப்போய் உயிரையும் விடுகிறான் மருதன். மருதனது கலகக்குரலும் நந்தனது சிவ தரிசனத்தில் காணாமற் போய்விட்டது. இன்றும் கூட நந்தன்கள் தோன்றிக்கொண்டேயிருக்கிறார்கள். அக்னியில் ஆகுதியாக வீழ்ந்து மடிய.<br /><br />“ஆரிய வேதமதக்காரர்கள் இந்த மண்ணில் காலடி வைக்கும்போது அவர்கள் தலைவன் கிருஷ்ணன்” என்று சைவப் பரதேசி கூறுகிறான் (பக்.221).<br /><br />“குரு ஷேத்திரத்தில் கிருஷ்ணன் எதிரியின் பக்கத்தில் போரிடும் தனது மக்களாகிய யாதவர்களை குறி வைத்துப் பேசுகிறான்”(பக்.33. - மாயையும் யதார்த்தமும் - டி.டி. கோசாம்பி).<br /><br />“பல்வேறு மரபினரே ஒன்றாகக் கருதத் தொடங்கிய போது இவர்களை ஒன்றிணைத்து கிருஷ்ணன் என்ற ஒரே மரபு உருவாயிற்று. ஆயினும் முற்றிலும் புதியதான ஒரு மரபை உருவாக்கும் பிரச்சினை இல்லை. ஏதாவது ஒரு வகையில் கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். பின்னர் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டனர் (பக்.34, மேலே குறிப்பிட்ட நூல்).7<br /><br />கிருஷ்ணன் யாதவர்களின் தலைவன். இவனும் பிராமனீயத்தால் உள்வாங்கப்பட்டான் என்று எண்ண இடமிருக்கிறது.<br /><br />‘மரக்கால்’ நந்தன் கதையை ஒரு நோக்கில் மறுவாசிப்பு செய்கிறது. தொடக்கத்தில் கூறியது போல் இவை போன்ற புனைவுகள் பல்வேறு தளங்களில் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும். நந்தன் கதையிலும் வேறுபட்ட வாசிப்புகள் சாத்தியமே.<br /><br />சோலை சுந்தரபெருமாளின் இதர நாவல்களிலிருந்து ‘மரக்கால்’ சிறிது வேறுபட்டிருந்தாலும், முந்தைய நாவல்களின் பாதிப்பை பல்வேறு இடங்களில் உணர முடிகிறது. ‘நஞ்சை மனிதர்கள்’, தொடங்கி ‘மரக்கால்’ வரையிலும் பல பொதுத் தன்மைகள் இருக்கவே செய்கின்றன.<br /><br />நாவலை வாசிக்கும் போது ஏற்படுகிற சலிப்பு நாவலின் வடிவம், அமைப்பு முறையை மாற்றி வேறொரு உத்தியாக மாற்றியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. நாவலாசிரியரின் தேடல், உழைப்பு, ஆர்வம் ஆகியன பாராட்டத்தகுந்தது. இவை போன்ற புனைவுகளை மறு கட்டமைப்பு செய்யும் கலை, இலக்கிய வடிவங்கள் தமிழில் நிறைய வெளிவர வேண்டும்.<br /><br />மரக்கால் (நாவல்)<br />ஆசிரியர்: சோலை சுந்தர பெருமாள்,<br />வெளியீடு: பாரதி புத்தகாலயம்,<br />421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,<br />சென்னை - 600 018<br />பக். 287, விலை ரூ. 130<br /><br /></span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-73271465553763288092010-01-13T08:42:00.000-08:002010-11-21T05:08:27.172-08:00புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது: வழக்கறிஞர் பொ.இரத்தினம்<span><span><br /><br /><span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" >புத்தரின் போர்க்குணம் அறிவு ரீதியானது: வழக்கறிஞர் பொ.இரத்தினம்</span><br /><br /><br />மனித உரிமை செயல்பாட்டாளர்களில் முன்னணியில் இருப்பவர் வழக்கறிஞர் பொ. இரத்தினம் அவர்கள். உச்சநீதிமன்றத்திலும் குஜராத் பழங்குடி மக்கள் மத்தியிலும் செயல்பட்டு, தமிழ்நாட்டில் தளி, அத்தியூர் விஜயா, மேலவளவு முருகேசன் கொலை, திண்ணியம், விருத்தாச்சலம் கண்ணகி - முருகேசன் கொலை போன்ற நூற்றுக்கணக்கான வழக்குகளுடன் நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வருபவர். சமூகநீதி வழக்கறிஞர் மையம், புத்தர் பாசறை, சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் மூலம் அடித்தட்டு மக்களுக்கான மனித உரிமை செயல் பாட்டை முன்னெடுப்பவர். சமத்துவப் போராளிகள் என்ற அமைப்பின் மூலம் பவுத்தம், மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் போன்றவற்றின் வெளிச்சத்தில் புதிய சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க அறைகூவல் விடுப்பவர்.<br /><br />இயல்பாகவே Victim-களின்பால் இணக்கம் உள்ளவர். நீதித்துறையினரையும், தலித் தலைமைகளையும் அம்பலப்படுத்தி நிறைய துண்டறிக்கைகள் வெளியிட்டு பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளார். பவுத்தம், அம்பேத்கரியம் சார்ந்து முழுக்க முழுக்க அறம் சார்ந்த நிலைப்பாடுகளுக்கு முன்னுரிமை தருபவராக இருக்கிறார். தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாது தன்னுடைய அறம் சார்ந்த அளவுகோலின் அடிப்படை யில் நேருக்குநேர் பேசும் இயல்புடையவராக இருக்கிறார். இதே மதிப்பீட்டினடிப்படையில் குடியை வெறுக்கிறார். வெளிப்படையான இயல்பான பேச்சுக்கிடையில் அவருக்குள்ளிருக்கும் கிராமத்து மனிதர் வெளிப்படுகிறார். நேர்மை, சத்தியத்தின் மீது உறுதியான பற்றுதலும், அது மீறப்படும் போது மிகுந்த ஆவேசமும் வெளிப்படுகிறது. ‘சஞ்சாரம்’ இதழுக்காக மதுரையில் பதிவு செய்யப்பட்ட விரிவான நேர்காணல் இது.<br />சந்திப்பு: மு.சிவகுருநாதன், மணலி அப்துல்காதர்<br />சமூகப் பொறுப்பு மிக்க வழக்கறிஞர் பணியில் அடித்தட்டு மக்களுக்காக நிறைய வழக்குகளில் ஆஜராகி வழக்காடியிருக்கிறீர்கள். பவுத்தம், அம்பேத்கரியம் பற்றி நிறைய பேசி வருகிறீர்கள். இளமைக்கால அனுபவங்கள், பெற்ற உந்துதல்கள் பற்றி விரிவாக சொல்லுங்கள்?<br /><br />1970களில் உயர்நிலைப்பள்ளிப் பருவத்தில் கொச்சைத் தமிழில் இல்லாது நல்ல தமிழில் வெளிவந்த கல்கண்டு ரொம்ப பிடிக்கும். அதில் வரும் செய்திகள், சங்கர்லால் துப்பறிகிறார் போன்றவை மாணவர்களுக்கு பிடிக்கும். வந்ததும் வாங்கி படிப்போம். அதுல ‘பூச்செண்டு’ என்ற மாணவர் இதழ் நடத்திய மாணவர்குழுவின் பேட்டி வந்தது. ராசேந்திரன் என்ற சென்னையில் ஒரு கல்லூரி முதல்வராக இருந்தவர்தான் அதன் ஆசிரியர்.<br /><br />நான் திருச்சி தேசிய கல்லூரியில பி.காம். படிச்சிக்கிட்டு இருந்தபோது கல்கண்டு பேட்டி மூலம் அறிமுகம் கிடைச்சுது. அப்பத்தான் மதுரை மருத்துவக்கல்லூரியில மாலன் பார்மஸி படிச்சுக்கிட்டு இருந்தார். அவரும் அவருடைய தம்பியும் ‘பூச் செண்டு’ல பங்கெடுத்துகிட்டாங்க. நான், சென்னையில சிலபேர், அண்ணாமலை பல்கலைக் கழகத்துல படிச்ச குமணன்னு ஒருத்தரு, அவரு மலேசியாவில் பத்திரிக்கை நடத்தியவர். இப்ப இறந்துட்டார். திருச்சி பெரியார் கல்லூரியில் படிச்ச இன்னொருத்தர் போன்ற முற்போக்கு சிந்தனையுள்ள மாணவர்களும் இணைஞ்சு அந்த இதழில் பங்கெடுத்தோம்.<br /><br />சமூக அக்கறையுள்ள மாணவர்களிடம் மேலோட்டமான ஒரு முற்போக்கு சிந்தனை இருக்கும். அதில சிலபேர் ‘இந்திய இளைஞர் இயக்கம்’ நிறுவனும் அப்படியின்னு அதற்கான அமைப்பை உருவாக்கினோம். அதன் பிறகுதான் மார்க்சியம் முழுமையா படிக்க ஆரம்பிச்சோம். எந்த மார்க்சிய அமைப்போடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. இதுல முக்கியமா உள்ளவங்க மார்க்சியப் பார்வையில சமூகத்தை மாத்தணும், அதற்கு சட்டம் படிப்பதன் மூலம் மக்களைத் திரட்டுவது, அவர்களுடன் பணிசெய்வது போன்றவற்றிற்கு உதவியா, இருக்கும்ன்னு யோசிச்சோம். அப்ப திருச்சியிலிருந்து விடுமுறை கிடைச்சா சென்னைக்கு போயிருவேன்.<br /><br />நான் நாமக்கல் அருகே திண்டமங்கலம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன். சென்னைக்குச் சென்ற போதுதான் நகரவாழ்க்கை குறித்த புரிதல் கிடைத்தது. 1974ல் 6 மாதம் சென்னையில் தங்கியிருந்து நாங்க மூணுபேர் சேர்ந்து ‘மூவேந்தர்’ன்னு ஒரு கடை நடத்தினோம். அந்த வருசந்தான் சென்னை சட்டக் கல்லூரியில சேர்ந்தேன். சாரு மஜூம்தார் அணி உருவாகி சட்டக்கல்லூரியில் 3, 4 பேரு இருந்தாங்க. T.S.S.மணி சென்னை வந்து போவார். அப்ப வெங்கடரமணி பாண்டிச்சேரி லா காலேஜ்ல சேர்ந்திருந்தார். சென்னையில ‘புது நிலவு’ன்னு பெரிய சைஸில் 4 பக்க இதழ் மாதம், இருமாதம் அப்படின்னு மார்க்ஸியப் பார்வையில நடத்தினோம். பிராட்வே மாணவர் விடுதி சிறிய அறை. 10 பேர் உட்காருவோம், மார்க்சியம், லெனினியம் தொடர்பான நூல்களை சேர்ந்து, படித்து, விவாதிச்சுத்தான் மார்க்சியம் கத்துக்கிட்டோம். எந்தக் குழுவுலயும் சேராமல் நாங்கள் active வ இருப்போம். மாவோ நூல்கள் எல்லாம் இலங்கை வழியா வரும். நாங்களும் படிச்சிருவோம். T.S.S.மணி வந்து அதையும் இதையும் புரட்டுவார். அவருக்கு எப்பவுமே புரட்டிப்போடற வேலைதான்.<br /><br />கிராமத்திலிருந்து வந்திருந்ததாலே எனக்கு சாரு மஜூம்தாரை படித்தவுடன் வினோதமாக இருந்தது. தலையை வெட்டுறத்துல எனக்கு ஈர்ப்பு இல்லை. “நீங்கள் எல்லாம் மாட்டிக்கிவீங்க. கிராமத்துல சாதி அப்படியே இருக்கு. ஒரு சாதிக்காரன வெட்டிப்புட்டா கோவணம் இல்லாதவங்கூட சாதிதான் பார்ப்பானே ஒழிய நீங்க வர்க்க எதிரியை வெட்டிப்புட்டிங்கன்னு உங்களை சேர்த்துக்கமாட்டான்” அப்படின்னு மணி கிட்ட சொல்வேன்.<br /><br />‘தேன்மழை’ன்னு ஒரு பத்திரிக்கை வந்தது. அதுல ஆடு ML Movement-ன் தாக்கத்தில் நிறைய புதுக்கவிதைகள் வரும். கையெழுத்து பிரதிகள் மாணவர்கள் மத்தியில் நிறைய வெளிவரும். குடிசைப்பகுதியினருடன் சேர்ந்து வேலை செஞ்சோம். மேற்கு மாம்பலத்தில் விஜய பத்ரி என்பவர் இருந்தார். அவர் மேயர் கிருஷ்ணமூர்த்தி யோட வேலை செஞ்சவர். அவரோட சேர்ந்து குடிசைப் பகுதி பணிகளைச் செய்தோம். மேயர் கிருஷ்ணமூர்த்தி எல்லாக் கட்சியையும் எதிர்த்து Independent ஆக பதவிக்கு வந்தவர்.<br /><br />குடிசைப்பகுதியில் என்ன மாதிரியான பணிகள் செய்தீர்கள்?<br /><br />குடிசைப் பகுதி மக்கள் மீது வரும் பொய் வழக்குகள், குடிசைகளை அப்புறப்படுத்துதல் போன்றவற்றை எதிர்த்து பணிசெய்தோம். குடிசைப் பகுதியில இயக்கம் கட்டுறது பெரிய விஷயம். மாவோ சொல்றமாதிரி லும்பன்கள், அவங்களை நீங்க அடிமையா இருக்குறீங்கன்னு சொல்லி புரியவைத்து, செயல்படுத்துவது மிகவும் கடினமான ஒண்ணு. இப்ப இருக்கிற வள்ளுவர் கோட்டம் அப்ப குடிசைப்பகுதி. குடிசைப்பகுதி மக்களை விரட்டிட்டுதான் வள்ளுவர் கோட்டம் கட்டினாங்க. அதே மாதிரி ஆயிரம் விளக்குப்பகுதியில் பாரதி நினைவாலயம் கட்டுறதுக்கு நோட்டீஸ் எல்லாம் கொடுத்தாங்க. நாங்க வழக்கு போட்டு Stay வாங்கியிருந்தோம். ஒரு கமிட்டி போட்டாங்க. அதுல நா.மகாலிங்கம், எஸ்.ஆர்.கே. எல்லாம் இருந்தாங்க. அவங்க மக்களை விரட்டிட்டா பாரதி நினைவாலயம் கட்டப்போறீங்க? இந்த இடம் வேண்டாம். வேற இடம் பாருங்கன்னு சொல்லிட்டாங்க.<br /><br />பெரிய கட்சிக்காரர்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது?<br /><br />நாங்க கடற்கரையில் வாரம் ஒருதடவை பேசிப் பழகுற பயிற்சி எடுத்துக்கிட்டோம். அப்போது சமூக அவலங்களைச் சொல்வோம். அரசாங்கம், கட்சி, அவர்களின் செயல்பாடுகளைத் திட்டுவோம். ஒரு தடவை பிரசிடென்சி காலேஜ்ல உள்ள தி.மு.க. மாணவர்கள் போலீஸ்கிட்ட சொல்லி பிரச்சினைக்கு வந்துட்டாங்க. நாங்கள் எல்லாத்தையும் விமர்சனம் பண்றோம். உங்களுக்கு தி.மு.க.வை பிடிக்கும்போலன்னு சொல்லி அனுப்பினோம். நேரடியான மிரட்டல்கள் இல்லை.<br /><br />இந்த மாதிரியான பின்புலத்தை வீட்டில் பெற்றோர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள்?<br /><br />அப்பா 3ம் வகுப்பு படித்த நடுத்தர விவசாயி. அதனால கிராம அதிகாரிங்கிற கவுரவ பதவியில இருந்தார். அப்பாவுக்கு எங்களை படிக்க வைக்கணுமுன்னு ஆசை இருந்தது. எங்கள் வீட்டுல மூணு பேர்ல நான்தான் பெரிய பையன். வீட்ல டாக்டராக்கணும் அப்படின்னு நினைச்சாங்க. அப்ப நாங்கூட MBBS படிச்சுட்டு Law படிக்கணும்ன்னு நினைச்சேன். ரெண்டும் இருந்தாதான் கிராமத்துல மக்கள் பணிகளைச் செய்யமுடியும்னு நினைச்சேன். சகோதரர் ஒருத்தர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில இருந்துட்டு இப்ப நாமக்கல்ல கண் மருத்துவரா இருக்கார். நான் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருப்பேன். அம்மாவுக்காக மத்து போட்டு தயிர் கடைந்து, மோர் போட்டு, சாப்பிட்டுட்டு வேகமாக பள்ளிக்கு ஓடுவோம். கால்ல செருப்பெல்லாம் கிடையாது. வக்கீல் தொழிலுக்கு வந்து 2 வருசம் கழித்துதான் கடிகாரம் கட்ட ஆரம்பிச்சேன். வீட்ல பெருசா கட்டுப்பாடுகள் இல்ல. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.<br /><br />வீட்ல கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தவில்லையா?<br /><br />B.Com., முடிச்சி Law போறப்பவே சொந்தக்காரப்பொண்ணா கட்டிக்கிடனும்னு சொன்னாங்க. இல்லை, நான் Law முடிக்கணுன்னு சொல்லிட்டேன். Law முடிக்கிற முன்பே அந்தப் பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆயிட்டு. என் கருத்துக்கு ஒத்துவர்ற மாதிரி இருந்தால் கட்டிக்கிறேன், அந்த பொண்ணுக்கிட்டே பேசணும், நான் இப்படித்தான் இருப்பேன், சொத்து சேர்க்க மாட்டேன், அப்படின்னு சொல்வேன். வக்கீல்னா அவங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் இல்ல. அதனால முன்கூட்டியே சொல்லிருவேன்.<br /><br />சட்டக் கல்லூரி அனுபவங்கள்...?<br /><br />1974ல் சட்டக் கல்லூரியில படிக்கிற நக்சலைட் மாணவர்களுடன் Interaction ஏற்பட்டுது. அவங்களோடு மனம் விட்டு பேசிக்குவோம். 1972 தமிழ் வகுப்பு தொடங்கியாச்சு. ஆனால் 1974ல் தொடங்காம இருந்தாங்க. சேலம் சட்டக் கல்லூரி Correspondent தனபாலன் அப்ப எங்களுக்கு ஆசிரியரா இருந்தார். அவர் கலைஞரை போய் பார்த்து அனுமதி வாங்கிட்டு வந்துர்றேன்னு சொன்னார். ஆனா நடக்கல.<br /><br />அப்பத்தான் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மாணவர்களின் பித்தலாட்டம் புரியுது. Grade Sheet-ல Medium போடமாட்டாங்க. தமிழ் மீடியம்னு போட்டா அவர்கள் வரத் தயாரா இல்லை. அவர்களுக்கு தமிழ்ல படிக்கிறோம்னு வெளியே தெரியக்கூடாது. தமிழ்ல தேர்வு எழுதினால் பாஸ் பண்ணிடலாமுன்னு மட்டும் நினைச்சாங்க. நாங்க வழக்குமன்றம் தமிழ்ல வரணுன்னு நினைச்சோம். அதுக்கு தமிழ்ல படிக்கணுன்னு ஆசைப்பட்டோம். மாணவர்களைத் திரட்டி ‘தமிழ் வாழ்க’ன்னு முழக்கம் போட்டோம். அப்போதைய தி.மு.க. அரசு பேச்சுவார்த்தையில “தமிழ்ல வகுப்பு தொடங்குவோம். ஆனால் தேர்வு ஆங்கிலத்தில்தான் இருக்கும்னு சொன்னாங்க.<br /><br />எங்க போராட்டத்துக்கு ஆதரவா காங்கிரஸ் பொன்னப்ப நாடார், கம்யூனிஸ்ட் கே.டி.கே.தங்கமணி, ஆகியோர் வந்தாங்க. ‘நல்ல கோரிக்கைன்னாங்க’ நீங்கள் இவ்வளவு நாள் என்ன பண்ணுனீங்கன்னு சத்தம் போட்டோம். கடைசியா தமிழிலும் தேர்வு எழுதலாம் அப்படின்னு உத்தரவு போட்டாங்க. அப்ப புத்தகங்கள் தமிழ்ல இல்லை. முன்பு சட்டக் கல்லூரி இயக்குநராக இருந்த பழனிச்சாமி ‘பன்னாட்டு சட்டங்கள்’ ன்னு ஒரு நூல் எழுதியிருந்தார். தீங்கியல் தொடர்பான நூல் ஒருத்தர் எழுதியிருந்தார். மறைமலை அடிகள் நூலகத்திலிருந்து எடுத்து நாங்களே நோட்ஸ் எழுதிக்குவோம். முக்கால் வாசி பாடத்துல நான் முதல் மாணவனா வந்தேன். தமிழ்ன்னா வேகமாக எழுதிடமுடியும் இல்லையா?<br /><br />கிராமப்புறத்தில் சாதாரண பள்ளிக் கூடத்தில் படித்துவிட்டு தமிழில் தேர்வும் எழுதி விட்டு கோர்ட்டில் ஆங்கிலத்தில் வாதிடுவது தடையாக இருந்ததா?<br /><br />நான் உயர்நிலைப்பள்ளி இறுதி ஆண்டுகளில் பிளிட்ஸ் மற்றும் கரன்ட் போன்ற பத்திரிகைகளையும் படித்தேன். வழக்குமன்றத்தில் ஆரம்பத்துல கொஞ்சந்தானே பேசுவோம். படிப்படியாக நாம முழுசா உள்வாங்கிக்கிறோம். அதனால ஒண்ணும் சிரமம் இல்லை.<br /><br />வழக்கறிஞர் படிப்பு முடிந்தவுடன் உங்களது தொடக்ககால செயல்பாடுகள்?<br /><br />1977ல் சட்டப்படிப்பு முடித்தபிறகு வழக்கறிஞர் கே.வி.சங்கரன் அறிமுகம் கிடைத்தது. அவர் மதுரைக்காரர்; அய்யர்; மனைவி அவரவிட்டு பிரிஞ்சுட்டாங்க; இரண்டு பையன்கள். வெறுப்பாகி ரொம்பத் தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டார். குவார்ட்டரை ‘ராவா’ அப்படியே ஊத்திக்கிடுவார். ஒரு Chain Smoker வேற, பிறகு கொஞ்ச நாட்கள் நன்றாக இருந்தார். ‘அப்பு’ காணாமற்போன விசாரணைக் கமிஷன் வந்தது. எமர்ஜென்ஸி காலத்துல திருப்பத்தூர் சீராளன் என்ற இளைஞனை போலீசார் கொலை செய்கிறார்கள். அதை கையில் எடுத்தோம். எமர்ஜென்ஸி முடிஞ்ச பிறகு நாடு முழுவதும் சிவில் உரிமை பத்தின விவாதம் மேலேழும்பியது..<br /><br />அப்பத்தான் வால்டர் தேவாரத்தோட அட்டூழியம் தொடங்கியது. தர்மபுரியில 4, 5 மா.லெ. அமைப்புகள் இருக்கும். கே.வி. சங்கரன்கிட்ட வழக்கு கொடுப்பாங்க. ஒரு FIRல 2, 3 அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இருப்பார்கள். வழக்க எடுத்துக்கிட்டு வரும்போது அவங்க ஆளுக்கு மட்டும் பெயிலை போடுங்கன்னு சொல்வார்கள். சங்கரன் என்கிட்ட கொடுப்பார். நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன். ஏங்க தோழமையின்னு சொல்றீங்க ஏன் பிரிக்கிறீங்கன்னு கேட்பேன். சின்னப்பசங்க,. இளம் வயசு. பிரிக்காதீங்க அப்படின்னு சொல்வார் சங்கரன். அவரை கூப்புட்டுப்போய் தண்ணி போட வச்சு மீண்டும் ஒரு மாதிரியா ஆக்கிட்டாங்க.<br /><br />கிராமத்துல படிச்சுட்டு நகரத்து வழக்கு மன்றத்தைப் பார்ப்பது புதிய அனுபவம். வெளியே இருந்து பார்க்கும்போது உள்ளே நடக்கிற சதிகள் எல்லாம் தெரியாது. கோர்ட்டில் விவாதம் முடிச்சுட்டு வந்து உட்கார்ந்திருப்பார் சங்கரன். அவர் பொய் பேச மாட்டார். தீர்ப்பு வந்தபிறகு வெறுப்பாகி தொடர்ந்து smoke பண்ணுவார். தண்ணி அடிப்பார். ஜட்ஜ்கள் எல்லாம் சாதி பாக்கும்போது சங்கரன் ரொம்ப பாதிப்படைவார். எனக்கு இப்பத்தான் புரியுது சங்கரன் ஏன் அப்படி இருந்தார்னு. ஜட்ஜ்கள் வெளிப்படையாகவே அநியாயமாக ஒரு தீர்ப்பு எழுதுவார்கள். அப்ப நேரடியாக திட்டமுடியாது. தனியே உட்கார்ந்து சிகரெட்டை தொடர்ந்து ஊதிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான்.<br /><br />அப்ப இடதுசாரி வழக்கறிஞர்கள் அணியாக இருந்து செயல்பட்டது இல்லை. இப்பவும் இல்லை. அதனால் தான் நீதிபதிகளை அம்பலப்படுத்த முடியாமல் போகிறது. ராமச்சந்திரன்னு ஒருத்தர் பார் அட்-லா இருந்தார். ரொம்ப short temper. நியாயத்திற்காக போராடும்போது சில நீதிபதிகள் சாதி சார்ந்தவர்களாகவும், பித்தலாட்டகாரர்களாகவும் பேசி வைத்தே தீர்ப்பு சொல்வார்கள். அதை நேரடியாக எதிர்க்க முடியாது. மேல்முறையீடு போனாலும் அப்படித்தான் இருக்கும். சட்டத்துல நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு இருக்க முடியாது. இதனாலே பலபேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு Balance இருக்காது.<br /><br />ஓரளவுக்கு ஒழுங்காக செயல்பட்ட நீதிபதிகள் குறித்து சொல்ல முடியுமா?<br /><br />ஒரு தலித் ரயில்வே தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கலை. அதற்கு அவர் கடுமையாக திட்டி விடுகிறார். அதற்காக அவரை வேலைநீக்கம் செய்கிறார்கள். அதற்கு சட்டப்படி அப்படி பண்ண முடியாது. Increment ஐ வேணுமுன்னா தள்ளி வைக்கலாம். குற்றத்திற்கு சமமான ஒரு தண்டனைதான் கொடுக்க முடியும். சங்கரன் இந்த வழக்கை நடத்தும் போது கூட நின்று பார்த்துக்கிட்டு இருக்கேன்.<br /><br />ஜி.ராமசாமின்னு ஒருத்தர் அட்டார்னி ஜெனரலாக கூட இருந்தார். ஜட்ஜ்களெல்லாம் கூட நியூயார்க் Globalisation Conference க்கு கூட்டிக்கிட்டு போனார். அவர் ரயில்வேக்கு appear ஆனார். தொழிலாளி கொடுத்த representation வரவேயில்லை அப்படிங்கிறார். அது ரொம்ப முக்கியமானது. இல்லன்னா ஒண்ணும் பண்ணமுடியாது. ஜட்ஜ் பைலை வாங்கி புரட்டினார். அதுல representation இருக்கு. அவரே அதைப் பார்த்துட்டு இதோ இருக்கு அப்படின்னு சொல்றார். அப்படியிருந்தும் சங்கரன் நிறைய வாதாடியும், மனுவைத் தள்ளுபடி பண்றாங்க. அப்ப சங்கரனுக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்? வெளியில் வந்துதொடர்ந்து சிகரெட்டை குடித்துக் கொண்டிருந்தார். அப்ப அவர்கிட்ட அதிகம் பேசமாட்டேன். அவரும் எதையும் மனசு விட்டு வெளியே சொல்ல மாட்டார்.<br /><br />சூரியமூர்த்தின்னு ஒரு ஜட்ஜ் வந்தார். CPI-ல வழக்கறிஞராக இருந்தவர். ஜோலார்பேட்டை பக்கத்தில ரெட்டைக் கொலை வழக்கு. சாரு மஜூம்தார் அணியினர் செய்த வர்க்க எதிரிகள் அழித்தொழிப்பு. இளைஞர்களுக்கு bail கேட்டிருந்தோம். ஜார்க்கண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கற்பகவிநாயகம் அப்ப அடிஷினல் பி.பி. நீதிபதி சூரியமூர்த்தி, கற்பக விநாயகத்தைப் பார்த்து சொல்றார். “Mr. PP, Have your read Lenin’s State and Revolution”, அவர் இல்லைன்னு தலையாட்டுகிறார். அவர் அன்னைக்கும் படிக்கலை. இன்னைக்கும் படிக்கலை. “State and Revolution” படிக்காம வக்கீல் வேலை பார்க்கக் கூடாது. அதைப் படிச்சாத்தான் சமூகம், அரசு பற்றி புரியும். சின்ன புத்தகந்தான். அதைப் படிக்காமல் இருக்குறீங்களேன்னு சொல்லிட்டு. என் வீட்ல ஸ்டாலின், மார்க்ஸ், லெனின் Collected Works எல்லாம் இருக்குன்னு நிறைய சொல்லிட்டு பெயிலும் கொடுத்திட்டார். அதுமாதிரி 1, 2 நீதிபதிகள் ஒழுங்கா வருவாங்க. தொடர்ந்து நேர்மையாக இருக்கமாட்டாங்க. 1, 2ல இப்படிச் சொல்லிட்டு அப்புறமாக பல்டி அடிச்சுருவாங்க.<br /><br />குஜராத் சென்ற பின்னணி குறித்து சொல்லுங்கள்?<br /><br />சாரு மஜூம்தார் குழுவுல இருந்தவங்க தனித்தனிகுழுவாக போய்விட்டார்கள். அதுல நிறைய பிளவுகள் வந்தன. குழுவாக சேர்ந்து இயங்கமுடியாதது வருத்தமாக இருந்தது. நாங்க புதுநிலவு Group. நல்லா செயல்படுவோம். அப்புறம் குடிசைப்பகுதியில் வேலை செய்தது நல்ல அனுபவம். சில இடங்களில் ரிட் போட்டு மக்களை வெளியேற்ற முடியாமல் செய்தோம். மக்களை இயக்கப்படுத்த முடியலை. ஆடு ML Movement நிறைய உடைவுகளைச் சந்தித்தது. இப்படிப்பட்ட விரக்தியில் ஊருக்கு வந்து நாலு எருமைமாட்டை வாங்கி பால் வியாபாரம் பண்ணுவோங்கிற அளவுக்கு வந்தாச்சி. வழக்கறிஞர் வெங்கட்ரமணி டில்லிக்கு கூப்பிட்டார். நான் சட்ட உதவிக் கழகத்துல ஈடுபட்டோடு இருந்தேன். ராஜா என்பவர் ரொம்ப அக்கறையோடு பணி செய்தார். அவருடன் சேர்ந்து பல பணிகள் செய்தேன். அப்ப டெல்லி போய் அங்கிருந்து 1982 செப்டம்பரில் குஜராத் போனேன்.<br /><br />குஜராத்தில் உங்களது பணிகள் பற்றி...?<br /><br />பரோடாவுக்கும், சூரத்துக்கும் நடுவே ப்ரூச் மாவட்டத்துல சட்ட உதவி மையம் இருந்தது. அங்கு முழுக்க முழுக்க பழங்குடி மக்களுக்கான பணிகளைச் செய்து வந்தனர். 2பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். நல்ல Active ஆக இருப்பார்கள். கிறித்துவ பாதிரிமார்கள் சர்ச்க்கு கூட போகமாட்டார்கள். Libration theology-ல் ஈடுபாடு உள்ளவர்கள். 2, 3 வண்டி வைத்திருந்தார்கள். அவர்களே இரவு, பகலாக வண்டி ஓட்டுவார்கள். நிலப்பரப்பு சமமாக இருக்காது. ரோடெல்லாம் மேடு பள்ளமாக இருக்கும். அங்கு சட்ட உதவி மையம் செயல்பட்டது.<br /><br />அங்கு என்ன மாதிரியான வழக்குகள் வரும்?<br /><br />வனத்துறையினர், காவல்துறையினர் பழங்குடி மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவார்கள். நிலம் கையப்படுத்தலால் ஏற்படும் வழக்குகள், அவர்களுக்குள்ளாக அடித்துக்கொள்ளும் வழக்குகள் போன்று வரும். ‘மகுடா’ என்ற மரத்தின் பூக்களை சீசனில் சேகரித்து காயவைத்து பரணில் வைத்துக் கொண்டு, அதிலிருந்து சாராயம் காய்ச்சுவார்கள். அது போதை மட்டும் கொடுக்கும். ஆனால் unhealthy ஆக இருக்காது. இங்கு போல் கண்டதை போட்டு காய்ச்ச மாட்டார்கள். பழங்குடி ஆண்கள் சிலர் காலையிலேயே குடித்துவிட்டு படுத்துவிடுவார்கள். பெண்கள் ஏர் உழுவார்கள்.<br /><br />குடி மீதான வெறுப்பு இதனால் தான் தோன்றியதா?<br /><br />நமது கிராமங்களில் ஆண்கள் குடியில் விழுந்து விடுகிறார்கள். பெண்கள் இதனால் பாதிக்கப் படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் குடி காரணமாக இருக்குதில்லையா? அதனால் தான் குடி மீது வெறுப்பு இயல்பாகவே வந்துவிட்டது.<br /><br />குஜராத்தில் நர்மதை அணை பிரச்சினையை முதன் முதலாக நாங்கதான் எடுத்தோம். அணை கட்டத் தொடங்கும் போது உடனடியாக வெளியேற்றப்பட்ட 19 கிராம மக்களுக்கு பாதிரியார்கள் உதவினார்கள். அந்த நிலத்துல இருக்கிற ஒருவித களிமண்ணை கால்வாய் கட்ட தேர்வு செய்கிறார்கள். Globla tender எடுக்கிற கம்பெனி. கம்பெனியை தொழிலாளி எதிர்த்தா கொன்று தூக்கியறிஞ்சிடுவாங்க. யூனியன் எல்லாம் கட்ட முடியாது. பாதிரியார்கள் தான் இயக்கம் கட்டி எதிர்த்து நின்னாங்க. Father ஜோசப்ன்னு ஒருத்தர் இருந்தார். ரொம்ப reliable person. காங்கிரஸ் அகமது பட்டேல் பாதருக்கு நெருங்கிய நண்பர். அந்த 3 மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு ஒரே பாதுகாப்பு இந்த கயவாநச தான். நாங்க ஒரு குழுவாக இருந்து வேலை செய்தோம்.<br /><br />RSSன் நடவடிக்கைகள் அப்போது எப்படி இருந்தது?<br /><br />அப்ப ரொம்ப கொறைச்சல் தான். பழங்குடி மக்கள் மரங்களைத்தான் கும்பிட்டுகிட்டு இருப்பாங்க. அப்புறம் இவங்க பூந்து பிள்ளையாரை கையில கொடுத்திட்டாங்களே! நான் அங்கு இருந்த போது, CPI லிருந்து விலகி சுயேட்சையாக MLA வுக்கு நின்னு நிறைய வோட்டு வாங்கினார். அவர் RSS உள்ளே நுழைவதை எதிர்த்து கிட்டதட்ட 1 லட்சம் பேரை திரட்டி ஊர்வலம் நடத்தினார். பாதிரியார்கள் கிருஸ்தவத்தைப் பரப்பவில்லை. சர்ச்க்கு கூட போகாமல் மக்கள் பணிகளில் ஈடுபாடாக இருந்தார்கள். RSS க்கு எதிராக மக்களோடு சேர்ந்து அமைப்புக்களை உருவாக்கவில்லை.<br /><br />பழங்குடி மக்கள் பெருமளவு கிருஸ்தவத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தால் RSS மயப்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்குமோ?<br /><br />பழங்குடி மக்களுக்கான அமைப்பைக் கட்டியிருந்தால் சாத்தியப்பட்டிருக்கும். பழங்குடி மக்களுக்கு சூதுவாது தெரியாது. யாரையும் ஏமாத்தமாட்டாங்க. நீங்கள் சரியா இருந்தா உங்களை நம்புவார்கள். உயிரையும் கொடுப்பார்கள். பாதிரியார்கள் அவர்களிடம் நிறைய வேலைகள் செய்தார்கள். Libration Thelogy என்று இருந்த இவர்கள் மதம் மாற்றம் குறித்து யோசித்ததெல்லாம் கிடையாது. பாதர் மேத்யூஸ் நுஞறுல் EPW எழுதியிருக்கிறார். அவர் அங்கு Law படிச்சார். பழங்குடி மக்களின் நடனம் நன்றாக ஆடுவார்.<br /><br />பழங்குடி மக்களின் வழக்கு அனுபவங்கள் பற்றி கூறுங்கள்?<br /><br />ரொம்ப வறட்சியான அந்த பகுதிகளில் போலீஸ்காரர்கள் மாதம் 1 லட்சம் வசூல் பண்ணி விடுவார்கள். மயில் செத்துக் கிடந்தா கேசு போட்டு விடுவார்கள். தேசிய பறவை இல்லையா? பெரிய கேசு போட்டு பணத்தை புடுங்கிடுவார்கள். பழங்குடி மக்களிடம் arranged marriage இருக்காது. வயது வந்த ஆணும் பெண்ணும் அவங்களுடைய நண்பர்களால் முறையான ஆண்/பெண் உடன் அனுப்பிவிடுவார்கள். பிறகு ஊர் கூடி பையன் side ல் ஒரு தொகை ஊருக்கு கட்டுவார்கள். ஊர் சாப்பாடு போடும். இப்படித்தான் திருமணம் நடக்கும்.<br /><br />ஒருமுறை அடுத்த ஊரிலிருந்து வந்த பெண் இங்குள்ள முறைப்பையனை கூட்டிக்கிட்டு போய்ட்டு. அந்த ஊர்ல அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்க இருந்தவனுக்கு தாங்க முடியல. போலீஸுக்கு பணம் கொடுத்து புகார் பண்ணி அந்த °டேஷன் SI லாரி எடுத்துக்கிட்டு வந்து ஊர்ல உள்ள எல்லாரையும் அள்ளிக்கொண்டு போனார். வண்டியில கொண்டு வரும்போதே 2 பேர் அந்த பெண்ணை Rape பண்ணுறான். காலை 5 மணிக்கு °டேஷன் மாடியில பாரஸ்ட் ஆபீஸ் இருக்கு. அங்கே கொண்டு போய் வைத்து 3 பேர் Rape பண்ணுறான். SI காலையில் வந்து ரூ.3000/- கொடுத்தால் இந்த பெண்ணை விட்டு விடுகிறேன் என்கிறான். ரூ.2000/- கொடுத்துவிட்டு ரூ.1000/-க்கு ஜாமீன் சொல்லிவிட்டு அந்தப்பெண்ணை அழைத்துப் போய் விடுகிறார்கள்.<br /><br />அப்ப Father மேத்யுஸ் Final year law படிக்கிறார். அவர் கிராமத்துல போய் “Know your right’ ன்னு வகுப்பு எடுக்கிறார். எங்களுக்கு ஏது உரிமை? நாங்க தான் ஆடு மாட்டைவிட கேவலமாக இருக்கிறோமே? என்று சொல்லும்போது இந்த விவரம் கேள்விப்பட்டு அந்தப் பெண்ணை அழைச்சிட்டு டாக்டர்கிட்ட போறாங்க. ஒரு trible தான் டாக்டர். அவர் போலீஸ் மெமோ வாங்கிட்டு வாங்கன்னு திருப்பி அனுப்புகிறார். இங்கக்கூட இதைத்தான் சொல்றாங்க. அது ரொம்ப தப்பு. பாதிக்கப்பட்டவங்க வந்தவுடன் treatment பண்ணனும். அவங்களுக்கு Intimation form ஒண்ணு இருக்கு. அதைப் போட்டு போலீஸுக்கு அனுப்பணும்.<br /><br />அங்கேயே பட்டேல் வகுப்பைச் சார்ந்த ஒரு டாக்டர் பிராமின் லேடி டாக்டரை திருமணம் செய்திருக்கிறார். அவங்க ரெண்டு பேரும் தென்னாப்பிரிக்காவுல இருந்திருக்கிறாங்க. போபால் எல்லாம் போய் research எடுத்தாங்க. நல்ல டீம். Rape நடந்து 7 நாட்கள் மேல் ஆகிறது. அதனால் medical evidence கிடைக்கிறது கஷ்டம். அந்த அம்மா நல்ல experience hand. அந்த பெண்ணோட பின்புறத்தை நோட் பண்ணி சான்று father கிட்ட கொடுத்தாங்க. father ஜோசப் அதிகம் பேசமாட்டார். ஆனா காயை அருமையாக நகர்த்துவார். SP Office போனா treatment எடுத்துக்கச் சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.<br /><br />வழக்காடும் போது SP பொய் வழக்குன்னு pressure கொடுக்கிறான். அது குஜராத்துல பெரிய வழக்காயிடிச்சு. நான் சுப்ரீம் கோர்ட்ல பெட்டிஷனர். பகவதி தலைமை நீதிபதி ஆயிட்டார். வழக்கை சீரியஸாக எடுத்துக் கொண்டார். தலைமை நீதிமன்றம் ஐ.ழு. கே.வி.ஜோசப் மற்றும் ஒரு பெண் பேராசிரியர் ஆகியோரை விசாரணைக் குழுவாக நியமித்தது. அவர்கள் 400 சாட்சிகள் எடுத்தார்கள். அந்த கேசுல மதராஸ் வக்கீல்ன்னு என்னை state பூராத் தெரியும். போலீசார் 5 பேருக்கு 10 வருடம் தண்டனை கிடைச்சுது.<br /><br />தளி, அத்தியூர் விஜயா வழக்கிற்கு முன்னதாகவே பெரிய வழக்கு அனுபவம் இருக்கிறது.<br /><br />ஆமாம். கலெக்டர், போலீஸ் எல்லாம் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் நடத்தை கெட்டவள்னு சொல்வாங்க. பாதிக்கப்பட்ட பழங்குடிப்பெண்ணுக்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்தன. ஊர்வலம், பொதுக்கூட்டம், அரங்கு கூட்டம் என இயக்கமாகி குஜராத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது இந்த வழக்கு.<br /><br />அதன் பிறகு டெல்லி போனீங்களா?<br /><br />குஜராத்திலிருந்து வந்து போய்க்கிட்டு இருந்தேன். இந்த father ரோட அக்கா பையன் Teacher Training படிக்க வேண்டும் என்று வந்தார். நான் Law படிக்கச் சொன்னேன். அப்போது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுப்பிரமணிய போற்றி என்ற கேரளாக்காரர் இருந்தார். அவர்தான் எமர்ஜென்சி காலத்தில் நடந்த ராஜன் கேஸை மர்டராக பதிவு பண்ணவைத்தவர்.<br /><br />டெல்லியிலிருந்து எப்போது சென்னை திரும்பினீர்கள்?<br /><br />987ல் சென்னை வந்தேன். அப்ப எனக்கு வயசு 41. எப்பவும் ஊர்ல தங்கியதில்ல.. நாமக்கல்லில் ஒரு அறை எடுத்து, சைக்கிளில் சுத்தி வருவேன். டெல்லிலேர்ந்து வந்து சைக்கிளா ஓட்டுகிறேன்னு கேட்டாங்க. சிவில் பார்ல மெம்பரானேன். ரசீது கொடுத்தாங்க. கிரிமினல் பார்ல மெம்பர் ஆகணுன்னேன். “நீங்கள் சிக்கலான ஆளாச்சே. எல்லாத்தையும் தோண்டுவீங்க பை லா கேட்பீங்க. பதிவு பண்ணணும்பீங்க. ரசீது கேட்பீங்க” என்றனர். இதெல்லாம் இல்லாம எப்படிங்க என்றேன்.<br /><br />கொல்லிமலைப் பகுதியில் மக்கள் நிலை பற்றி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன். கொல்லிமலை பழங்குடி மக்களோட பெரிய சோகம் என்னன்னா, கிருஸ்டியன் காலேஜ்லிருந்து UGL-ல ஒரு Study எடுத்தாங்க. ரிப்போர்ட்டும் கொடுத்தாங்க. அந்த ரிப்போர்ட் Copy வாங்க போனேன். ஒரு நண்பர் அதை வாங்கிக் கொடுத்தார். அதுல அவங்களுக்கு நிறைய Venereal disease இருப்பதாக எழுதியிருந்தது. படிச்சதும் அங்க போய் சத்தம் போட்டேன். “எதுக்காக study எடுக்கிறீங்க.. நீங்க பெரிய நிபுணர் பட்டம் வாங்கவா? Health Department-க்கு எழுத வேண்டாமா”, என்று திட்டிவிட்டு வந்தேன்.<br /><br />பிறகு சேலம் தமிழ்நாடன் பழக்கமானார். முதல்வர் கருணாநிதி ஒவ்வோர் ஆண்டும் கொல்லிமலையில் ஏப்ரல் மாதம் வல்வில் ஓரி விழா நடத்துவார். அப்ப என்னைக் கூப்பிட்டுருந்தார்கள். குஜராத் மக்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு இங்குள்ளவர்களுக்கு Venereal disease போன்ற பிரச்சினை இருப்பது பற்றி எழுதினேன். மலையில் ஒரு கொலை நடந்தது என்றால் அந்த உடலை அக்குடும்பமே தலையில் சுமந்து கொண்டு வந்து போஸ்ட் மார்ட்டம் செய்த பிறகு திரும்ப அவர்களே எடுத்துச் செல்லும் அவலம் இருந்தது. அதுமாதிரி பள்ளிகளுக்கு வாத்தியாருங்க வெள்ளிக்கிழமை போய் மொத்தமாக கையெழுத்து போட்டுட்டு வந்துருவாங்க. இந்த அவலங்களைக் கட்டுரையாக எழுதிக்கொடுத்தேன். கலெக்டர் கூட இதைப் பார்க்காமல் புத்தகத்துல சேர்த்துட்டார். அச்சாகி வந்தபின் தலையைப் பிய்த்துக்கொண்டனர்.<br /><br />மீண்டும் கிராமத்துல வந்து தங்கினபிறகு வழக்கு நடத்தினீங்களா?<br /><br />நாமக்கல்லில் ஒரே ஒரு வழக்குல appear ஆனேன். நாமக்கல் கவிஞரோட செயலாளர் ஒரு இஸ்லாமியர். பக்கத்து வீட்டு வாய்த்தகராறில் அவர் வீட்டுல புகுந்து அவர் பையனை ரொம்ப அடிச்சிட்டாங்க. அவர் பலருக்கு கடிதம் கொடுத்திருந்தார். CPM ல காளியண்ணன் வழக்கறிஞராக இருந்தார். அவர் அதை எங்கிட்ட கொடுத்தார். நான் சைக்கிளை எடுத்துக்கிட்டு அவர் வீட்டுக்குப் போனேன். அந்தப் பையனோட அம்மாவும், அக்காவும் இருந்தாங்க. அந்தப் பொண்ணுதான் என்னம்மா வெளியே நின்னுக்கிட்டு இருக்காங்க. உள்ளே கூப்புடுமான்னு சொல்லிச்சு. உட்கார்ந்து எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு வந்தேன் அவங்க அப்பா வந்தார், ‘அய்யா இது மாதிரியெல்லாம் நடந்தது இல்லய்யா, முதல்ல எங்களோட சுதந்திர போராட்ட காலத்துலதான் இந்த மாதிரி இருக்கும். மக்கள் ஒண்ணுன்னா வந்துருவாங்க. போய் கேட்பாங்க. உதவுவாங்க. இப்ப அழிஞ்சு போயிருச்சு. ஒவ்வொரு கட்சிக்கும், வக்கீலுக்கும் வீடு பூரா கொடுத்துட்டு வந்தோம். உங்களுக்கு கொடுக்கலை. நீங்க வந்துருக்கீங்க என்று ஆச்சரியப்பட்டார். நிறைய பேர் இருக்காங்க அதான் சமூகம் உயிர்ப்போடு ஓடிக்கிட்டு இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன்.<br /><br />நாமக்கல்ல இருக்கும்போது சின்னப்ப பாரதியுடனான தொடர்பு பற்றி...?<br /><br />தாகம் நாவல்ல கொல்லிமலையைப் பத்தி அந்த வட்டார வழக்கு வார்த்தைகளைப் போட்டு எழுதியிருப்பார். அவர் என்னை உட்கார வைச்சுக்கிட்டு, தோழர் நீங்க கல்யாணம் பண்ணிகிடனுன்னு ஆரம்பிச்சிட்டார். “நானெல்லாம் சாதிக்குள்ளதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சாதி வேணான்னு எல்லாம் பாத்துக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது தோழர்”ன்னார். இல்லை தோழர் நான் கொஞ்சம் யோசிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.<br /><br />தளி வழக்கு பற்றி சொல்லுங்கள்?<br /><br />நான் டெல்லியிலிருந்து வந்திருந்த போது இந்த வழக்கு வந்தது. அப்ப கல்பனா சுமதிக்கு 22 வயசு இருக்கும். டீச்சர் டிரெயினிங் முடிச்சுட்டு ஒரு தனியார் ஆரம்பப்பள்ளியில டீச்சராக வேலை பாத்துக்கிட்டு இருந்தாங்க. பாதிக்கப்பட்ட கல்பனா சுமதியின் உடல்நலம் பத்தி மாலை முரசுல டெய்லி நியூஸ் வரும். அதைப் பார்த்துட்டு இன்னொரு வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு தளிக்குப் போயிருந்தேன். அவங்க ரொம்ப மயக்கநிலையிலிருந்து பெங்களூர்ல ஒரு கிருஸ்டியன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. தலைமை நீதிமன்றத்தில் நான் வழக்கு போட்டேன்.<br /><br />தமிழ்நாட்டுல அப்ப president rule. சுப்ரீம் கோர்ட்ல வழக்கு வந்தபோது இவ்வளவு மோமான வன்கொடுமையான்னு அரண்டு போய்ட்டாங்க. மருத்துவச் செலவுக்கு ரூ.25,000/-ம், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு தண்டனை கிடைச்சுது. பின்னர் உயர்நீதிமன்றத்தால் 5 லட்சம் கிடைத்தது. கல்பனா சுமதி தற்போது ஆசிரியர் பணியில் உள்ளார்.<br /><br />சின்ன வயதுலேருந்து Victim பக்கமா இருக்கிறது பழக்கமான ஒண்ணு. பேராசிரியர் கல்யாணி அடிக்கடி சொல்வார் ரத்தினத்துக்கிட்ட போனா நக்கீரனும் ஜுனியர் விகடனும் இருக்கும்ன்னு. தொடர்ந்து வாங்கி விடுவேன். ஏதாவது அதுல வந்ததுன்னா ஆட்களைக் கூப்பிட்டுக்கிட்டு கிளம்புடுவேன்.<br /><br />பேரா. கல்யாணியுடன் எப்போது பழக்கம் ஏற்பட்டது?<br /><br />1991ல் பாண்டிச்சேரி சட்டக்கல்லூரி மாணவர் சுடப்பட்டார். தமிழ்நாட்டு பார்டரில் பனையடிக்குப்பம் என்ற ஊர்; தமிழரசன் தங்கியிருந்த ஊர்; போலீஸ் கண்காணிப்பு அதிகம். அந்த மாணவர் சுடப்பட்டது பாண்டிச்சேரி பகுதியில். இங்கு இழுத்துக் கொண்டு வருகிறார்கள். அம்மா காலில் விழுந்து கெஞ்சுகிறார். அம்மாணவர் இறந்துவிடுகிறார். அப்ப ஒரு கமிஷன் போடுகிறார்கள். அந்த வழக்குக்கு பாண்டிச்சேரி போனபோது முதல்நாள் கல்யாணி வந்து போனதாக சொன்னார்கள். அதிகமாக இருவரும் இணைந்து செயல்பட்டது அத்தியூர் விஜயா வழக்கில்தான்.<br /><br />அம்பேத்கர் மேல் எப்போது ஈடுபாடு வந்தது? அம்பேத்கரை முழுமையாய் படித்தல் - பவுத்தம் பற்றி....?<br /><br />அம்பேத்கர் அரசியல் சட்டம் எழுதினார் என்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படிச்சுக்கிட்டு இருக்கோம். தலித் தலைவர்கள்ன்னு சொல்லிக்கிட்டு அம்பேத்கரை ஏமாற்றுகிறார்கள். அதிலிருந்துதான் அம்பேத்கரை முழுமையாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.<br /><br />அம்பேத்கரை பொருத்தவரையில் போதுமான ethics அதாவது அறம் தொடர்பான விஷயங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள்?<br /><br />மார்க்சீய அணியில போதுமான ethics இல்லாம இருக்குதுல்ல. அதைத்தான் அம்பேத்கர் “மார்க்சியர்கள் புத்தரைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார். சோவியத் யூனியன் போன்று மற்ற இடங்களில் பெற்ற அனுபவங்களிலிருந்து அவர் இதைச் சொல்கிறார். சமூகவியல் என்பதில் தனி மனித வாழ்வியலும் சேர்ந்திருக்க வேண்டும் அல்லவா?<br /><br />அம்பேத்கரைப் பற்றிய விமர்சனம் குறிப்பாக மார்க்ஸியத்திற்கு எதிரான கருத்துக்கள் பற்றி...?<br /><br />இரத்தினம்: அம்பேத்கர் பற்றி சில விமர்சனங்கள் உண்டு. சில இடங்களில் மார்க்ஸை கடுமையாக சாடுகிறார். மார்க்ஸியம் ஒழிந்து விட்டது என்கிறார். டாங்கே போன்ற பார்ப்பனர்கள் பண்ற சேட்டைகளால் ஏற்பட்ட விரக்தியில் அவ்வாறு கூறுகிறார். கம்யூனிஸ்டுகளை விரட்டுவோம் என்று கூட எழுதுகிறார். அவர் சொல்வது போலி கம்யூனிஸ்டுகளை விரட்டுவோம் என்று. அது கொஞ்சம் emotional. அதையே நீங்க focus பண்ணினா வேற மாதிரி ஆகிவிடும். நாய் செத்ததுக்கு வருத்தப்பட்டு 1 மாதம் வீட்டை விட்டு வெளியே வரல. பையன் ஒருத்தன் இறந்ததற்கு அம்பேத்கர் மிகவும் பாதிக்கப்பட்டு 2, 3 மாதம் சாமியார் மாதிரியே ஆகிவிடுகிறார்.<br /><br />காரல் மார்க்ஸுக்கும் அம்பேத்கருக்கும் ஒரு similarity இருக்குது. அம்பேத்கரோட செகட்டரியின் பதிவுல, செகட்டரி கிளம்புற நேரத்துல இரவு 9 மணிக்கு படிச்சுக்கிட்டு இருப்பாராம். காலையிலே 8 மணிக்கு திரும்பி வந்தால் இன்னும் வீட்டுக்கு போகலயான்னு கேட்பாராம். நான் வீட்டுக்கு போய் தூங்கிட்டு வர்றேன்னு சொன்னபிறகு, அடடா இந்த புத்தகத்தை படிச்சி முடிச்சிரலாமுன்னு இருந்தேன். படிச்சிக் கிட்டே இருக்கிறேன். அப்படியிம்பாராம். அவ்வளவு ஈடுபாட்டோட இருந்தார். பாலி மொழி படிச்சார். சமஸ்கிருதத்தைப் படிச்சு ஆரியத்தை அம்பலமாக்கினார். ஆரிய ஒழுக்கக்கேடுகளை, சோமபானம், சுராபானம் அருந்தி பெண்கள் யாகங்களில் குதிரைகளைப் புணர்வார்கள் என்பதை அவங்க நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். வீணாய் போன கும்பல்னு அவங்கக்கிட்டேயிருந்து எடுத்து காட்டுகிறார். யாரும் அம்பேத்கர் பொய் சொல்லிட்டாருன்னு சொல்ல முடியாது.<br /><br />அம்பேத்கரை படித்த அளவுக்கு பெரியாரை படித்தது உண்டா?<br /><br />பெரியாரை படிச்சுகிட்டு இருக்கேன். ஆனா அம்பேத்கர் கொடுமைகளை நேரடியாக அனுபவிச்சவர். இந்து மதத்தை விட்டு வெளியேறணும் என்றால் இஸ்லாத்துக்குப் போங்கள் என்கிறார் பெரியார். அம்பேத்கர் ஆழமாக ஆய்வு பண்ணிதான் பவுத்தத்திற்கு செல்லும் முடிவை எடுக்கிறார்.<br /><br />அம்பேத்கரிடம் மார்க்ஸியத்தின் மீது emotional ஆன ஒரு வெறுப்பு இருந்ததைப் போல இஸ்லாம் மீது இருந்ததாகப் படுகிறதே...?<br /><br />இஸ்லாம் மீது அம்பேத்கர் வைக்கும் குற்றச்சாட்டு பெண்களை நடத்தும் விதந்தான். படையெடுப்புகளில் புத்த பிக்குகளும் கொலை செய்யப்பட்டார்கள். இஸ்லாம் உருவ வழிபாட்டை மறுக்கிறது. இருப்பினும் அம்பேத்கர் பார்ப்பனியத்தைச் சாடுவது மாதிரி இஸ்லாத்தைச் சாடவில்லை. பார்ப்பனீயந்தான் பவுத்தத்தை ஒழித்தது என்கிறார்.<br /><br />அம்பேத்கர் இஸ்லாத்தில் சேராததன் காரணம்...?<br /><br />ஒன்று இஸ்லாத்தில் இறை நம்பிக்கை இருக்கிறது. மற்றொன்று பெண்களை சமமானவர்களாகப் பார்க்க மறுக்கிறார்கள். பௌத்தத்தில் இவையிரண்டும் இல்லை. புத்த மதத்தை உருவாக்கியவர்களே பார்ப்பனர்கள் தான். இருந்தாலும், அப்ப இருந்த நிலையிலேயே மதத்திற்கு போகாமல் இயக்கமாக்கியிருக்க வேண்டும். அது தப்பா தெரியுது. கடவுள் இல்லாத மதம் ஒன்னு தேவைங்கிறார். புத்தர் அப்படிச் சொன்னார்ங்கிற மாதிரி கொண்டு வர்றார். ஆனால் புத்தர் ஒழுக்கமே தம்மம், தம்மமே ஒழுக்கம் என்றார். சமூகத்திற்கு வழி நடத்தக்கூடிய சமூகவியல் அடிப்படைத் தேவை என்பதே புத்தரின் பார்வை, மதமல்ல. கடவுள் இல்லை, மறுபிறப்பு இல்லை, உயிர் என்று எதுவும் இல்லை என்பதே புத்தரின் கருத்து.<br /><br />பவுத்தத்தில் திருத்தங்கள் செய்து விட்டதாக அம்பேத்கர் மீது விமர்சனங்கள் கூட உண்டு.<br /><br />புத்தர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். மதம் ஆதிக்கங்கள் உருவாக்கியது; பகுத்தறிவுக்கு எதிரான சதி என்பதே அவர் பார்வை. அதனால்தான் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், அவரது தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் சத்திரியர்கள், அவரது இடுப்புப் பகுதியிலிருந்து தோன்றியவர்கள் வைசியர்கள், பிரம்மனின் பாதத்திலிருந்து தோன்றியவர்கள் சூத்திரர்கள் என்ற கட்டுக் கதைகளை உடைத்து மக்களைத் தெளிவாக்கினார்.<br /><br />ஒரு millitant புத்தரை கட்டமைக்க வேண்டுமென்று நீங்கள் அடிக்கடி பேசுகிறீர்கள். புத்தருக்கு அறம் தானே முக்கிய பலம்?<br /><br />அப்ப இருக்கிற சூழல்ல அவர் அரசக்குடும்பத்திலிருந்து பிரிந்து தனியே வருவதை சங்கக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கிறார். அடுத்த அரசை தாக்க வேண்டுமென்றும் மற்றவர்கள் சங்கத்தில் முடிவு செய்கிறார்கள். அப்ப அவர்கிட்ட தளர்வற்ற போக்கு இருக்கு. அதை அறிவு ரீதியான போர்க்குணம் என்றே நினைக்கிறேன்.<br /><br />அறிவு ரீதியான millitant. ஒரு நல்ல புதிய விளக்கமாக உள்ளது.<br /><br />அதனால்தான் சொல்கிறார். ஒவ்வொரு புத்த பிக்குக்கும் சமூகக் கடமை இருக்கிறது. தீமையை ஒழிப்பதற்கு ஆயுதம் எடுக்க வேண்டுமானால் தயங்கக் கூடாதுங்கிறார். அப்படி இருக்கிற சூழல்ல ரொம்ப millitancy ல இருந்தா regulate பண்ணமுடியாது.<br /><br />புத்த கயாவில் கொஞ்ச நாட்கள் இருக்கப் போறேன்னு சொன்னதாக நினைவு...?<br /><br />இல்லை நாக்பூர். நாக்பூர்ல அம்பேத்கர் இயக்கம் செயல்பட்ட முறையை யாரும் சரியாக வெளிக்கொண்டு வரவில்லை. ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் பவுத்த குடும்பங்கள் கூடுகிறார்கள். அந்த உறவு முறை பரவலாக இருக்கு. பவுர்ணமி வெளிச்சம் மக்கள் கூடுவதற்கு வசதியாகவும் இருக்கு. கயர்லாஞ்சி நிகழ்வுக்காக Spontaneous ஆக 10,000 பெண்கள் திரண்டார்கள். புத்தக் குடும்பங்களின் தொடர்புகள் மூலமாக ஆதிக்கம் செலுத்தும் தலித் தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுகமாக இருப்பதற்காக ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் அம்பேத்கருடன் இணையாமல் காங்கிரஸில் சேர்ந்தனர்.<br /><br />அவங்க எல்லாம் அம்பேத்கருடன் இணைந்து இருந்தால் மாபெரும் இயக்கமாகி இருப்பார்கள். அம்பேத்கர் இயக்க செயல்பாட்டை புரிந்து கொள்வதற்காக நாக்பூர் செல்வது குறித்து பேசியிருக்கிறேன். ஒவ்வொரு முறை தீட்சை பெற்ற நாள் வரும்போது கூப்பிடுவார்கள். சடங்குக்கு எல்லாம் நான் வரவில்லை. கும்பகோணத்துல போய் அழுக்குத் தண்ணியில மூழ்கிறாங்கல்ல அதுமாதிரி. மண்டை காய்ந்த, காலில் செருப்பு இல்லாத தலித் மக்கள் படிச்சவன் ஏதாவது செய்வான்னு நம்பி வருகிறார்கள். விடுதலைக்கான பணி நடக்கணும் என்ற ஆசையில் மக்கள் வர்றாங்க. பல வருசமாக போய்க்கிட்டு இருக்கேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.<br /><br />இன்று பவுத்தத்தின் நிலைமை...?<br /><br />பவுத்தத்தை மதமாக ஆக்கியதே பாப்பனர்கள்தான். பவுத்தம் சங்கமாக இருந்தது. பார்ப்பனர் அதை மதமாக்கினர். மொட்டையடித்து பவுத்த பிக்குவாக ஆக்கினர். உள்ளிலிருந்து அழிக்கிறது சுலபம். நான் புத்தரை விவேகானந்தர் மாதிரி கம்பீரமாக நிறுத்தனும்னு எல்லா ஓவியர்கிட்டேயும் கேட்டேன். ஓவியர் புகழேந்திக்கிட்டேயும் சொன்னேன். யாரும் வரையவில்லை. புத்தருக்கு கம்பீரமான உடல். அவரை எப்ப பார்த்தாலும் தியானத்துல இருக்கிற மாதிரி வரைந்து வைத்திருக்கிறார்கள். அவர் கொஞ்ச நேரந்தான் தியானம் பண்ணினார். மிகவும் கம்பீரமானவர். அவர் ஒரு great teacher.<br /><br />இப்போது பவுத்தத்திற்கு, அதைப் பின்பற்றுபவர்கள் தடையாக இருக்கிறார்களா?<br /><br />விரோதிகளாக இருக்கிறார்கள். பல வீடுகளில் தியான புத்தரை வச்சு பூசை பண்றாங்க. சென்னையில் ஒரு நண்பரிடம் விவேகானந்தர் மாதிரி புத்தரை நிறுத்தனும்ன்னு சொன்னேன். அவர் பதறிப்போய் அப்படியெல்லாம் செஞ்சிடாதிங்கய்யா. அவர் தியானமுல்ல பண்ணிக்கிட்டு இருந்தார்ன்னு சொல்றார். உங்களைவிட பவுத்தத்திற்கு துரோகி யாருமில்லைன்னு சொல்லிட்டு வந்தேன்.<br /><br />இப்போது சமத்துவப் போராளிகள் அப்படின்னு ஒரு அரசியல் இயக்கம் தொடங்கியிருக்கிறீர்கள்?<br /><br />நான் ஏதோ புரட்சிகர அமைப்பிலிருந்து உதிரியாக வெளிவந்துவிட்டேன் என்று மேசைப்போராளி ரத்தினம் அவர்களுக்குன்னு கடிதமெல்லாம் எழுதுறாங்க. எதையும் தெரிஞ்சுக்காமல் எழுதுறதுதான் இவங்களுடைய மனநோய். நான் என்ன பார்வையில இருக்கிறேன் என்பதைக் காட்ட வேண்டியுள்ளது. மார்க்சியம் தான் அடிப்படை. வர்க்கத்துக்குள் சாதியும் சாதிக்குள் வர்க்கமும் இருக்கு. இதை மார்க்சியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சாதியத்தை ஒழிக்க தீவிர மக்கள் இயக்கம் வேண்டும். படிநிலைச் சாதியம் - உள்நாட்டு ஏகாதிபத்தியம், தீண்டாமை - சாதியப் பாசிசம் - இதனை அம்பேத்கர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார். ஆனால் தமிழ் அமைப்புகள் பல உதட்டுச் சேவைதானே செய்கின்றன. இதனை தெளிவுபடுத்தவே ‘சமத்துவப் போராளிகள்’ அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ளேன்.<br /><br />அடித்தட்டு தலித் மக்கள் பாதிப்படைந்திருக்கிற பல்வேறு வழக்குகளில் வாதாடியிருக்கிறீர்கள். நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கிறது?<br /><br />முதல்ல நீதிமன்றம் என்ற சொல்லே தவறானது. ‘வழக்கு மன்றம்’ அப்படின்னுதான் சொல்லணும். அவர்கள் நீதிபதிகளும் அல்ல. “Judical decision are lottery” என்று பகவதி ஒருமுறை சொன்னார். ஒரு ஜட்ஜ் ஒண்ணு சொல்றார். வேறொருவர் வேறுமாதிரி சொல்கிறார். எதுவுமே மக்கள் சார்பாக இல்லை. “நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் போலிருக்கு. நீதிமன்றத்து மேல் மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கிவிட்டேன்”, என்று ஓய்வு பெறும்போது கிருஷ்ணய்யர் வருத்தப்பட்டார். இது மாதிரியான போக்குதான் இருக்கு. அரசியல் சட்டத்தை தேவையான போது சடங்குக்காக பயன்படுத்து கிறார்கள்.<br /><br />அடித்தட்டு மக்களுக்கு எதிராக உதாரணமாக இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் நீதிமன்றத்தின் செயல்பாடு, Judicial activism போன்றவற்றை எவ்விதம் அணுகுகிறீர்கள்?<br /><br />வழக்கு மன்றம் என்பது ஒரு நிறுவனம். அதன் செயல்பாடு அந்த நிறுவனத்துக்குள் வரும் மனிதர்களைப் பொருத்தது. நமது சமூகம் சாதீயச் சமூகம் என்பதை முழுதாக புரிந்து கொண்ட அம்பேத்கர் எல்லா நாட்டு அரசியல் சட்டங்களையும் படிச்சு நம்ம அரசியல் சட்டத்தை நல்லாத்தான் எழுதியிருக்கிறார். தீர்ப்புகள் மோசமாக வரும்போது கமாவெல்லாம் போட்டு நல்லாத்தானே எழுதியிருக்கேன்னு வருத்தப்படுகிறார். இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சட்டத்துல இடம் இருக்கு. பார்ப்பனத்தனமானவர்கள் அதை மீறுகிறார்கள்; திரிக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே ஒரு கோர்ட் இருந்தால் 2 சத தீர்ப்புகள் மட்டுமே உறுதி செய்யப்படும்ன்னு கிருஷ்ணய்யர் ஒருமுறை சொன்னார். எவ்வளவு அநியாயம் பாருங்க. 98 சத தீர்ப்புகள் மோசமாத்தான் இருக்குதுங்கிற சூழல் வேகமாக பரவிவருகிறது.<br /><br />நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுடைய தீர்ப்புகள் சில நன்றாக வந்திருப்பதாக தெரிகிறதே...?<br /><br />அவருடைய தாத்தா freedom fighter ஆக இருந்தவர். நல்ல குடும்பம். நல்ல மனிதர். சில சமூக அநீதிகளைச் சாடி வருகிறார். சாதிமுறை மக்களைப் பிரித்து வைக்கிறது, சமூகத்திற்குக் கேடு செய்கிறது, வேகமாக சாதியை ஒழிக்க வேண்டும், இதற்கு சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என ஒரு தீர்ப்பில் எழுதியுள்ளார். ஆனாலும் சில அதிரடி போக்குகளையும் மேற்கொண்டுவிடுகிறார். கிருஷ்ணய்யர் மாதிரி mould பண்ணி தீர்ப்பு எழுத மிகப் பலருக்கு தெரியாது. அவருக்கிருந்த vast experience எல்லாருக்கும் இல்லைங்குகிறது ஒரு காரணம்.<br /><br />நீதிபதி கண்ணதாசன் மீது புகார் மனு கொண்டு போயிருந்தோம். அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மார்கண்டேய கட்ஜு இருந்தார். நீதிபதி கண்ணதாசன் தலித் கொலைக்கேஸில் bail கொடுத்திருந்தது பற்றி எழுதியிருந்தோம். “Are you all Dalits?” என்று கேட்டார். “We are all peculicat combination”. எங்களுக்கு “No religion, no caste, no nation” அப்படின்னு சொன்னோம். “Very fantastic. I am also like you”ன்னார். தலித்துகள் fraud ஆக இருந்தாலும், ஆதரிப்பார்கள் என்ற ஒரு தப்பெண்ணம் இருக்கு. நீதிபதி கண்ணதாசன் பிரச்சினையில் அப்படி இல்லையென்று எடுத்துச் சொன்னோம்.<br /><br />உங்களுடைய அனுபவத்தில் யாரை சிறந்த ஜட்ஜ் ஆக பார்க்கிறீர்கள்?<br /><br />இதுவரைக்கும் கிருஷ்ணய்யர். அப்புறம் பகவதி, சின்னப்பரெட்டி போன்றோர். கே.ராமசாமி தலித் ஜட்ஜ். நல்ல மனிதர். தென்னாப்பிரிக்கா டர்பன் மாநாட்டுல கலந்து கொண்டார். கர்நாடகாவுல தலித் மற்றும் BC பகுதிக்கு நடுவில் குடிநீர் பைப் போடுறாங்க. அந்த திறப்பு விழாவுல தலித் மக்களும் வரிசையா குடத்தை வச்சிருக்காங்க. பஞ்சாயத்து தலைவர் நீங்க தீட்டுக்காரர்கள் குடத்தை எடுங்க என்று சொல்கிறார். அது தொடர்பான வழக்கு வரும்போது உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் சரியாக இல்லையென தள்ளுபடி செய்யப்படுகிறது. அதோட அப்பீல் சுப்ரீம் கோர்ட்ல வரும்போது நீதிபதி கே.ராமசாமி தலித்துகளின் Socioogy-ஐ கிருஷ்ணய்யர் மாதிரி அமெரிக்க கருப்பின அடிமையின் கவிதையை கோட் பண்ணி, “என் காலில் விலங்கு போட்டுவிட்டு சுதந்திர தின விழாவிற்கு அழைக்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லை”, என்று தனது தீர்ப்பில் அழகாக குறிப்பிட்டு இருப்பார்.<br /><br />லிபரான்னு ஒரு ஜட்ஜ் இருந்தார். அவர் ரூமுக்குள்ள ஒரு தடவை செருப்பை கழற்றி போட்டுட்டு உள்ளே போனேன். “You are entering comrade place” அப்படின்னு சொன்னார். மனைவியைக் கூப்பிட்டு, இவரால்தான் தமிழ்நாட்டுல தலித் மக்களுக்கு நிறைய கொடுமைகள் இருக்குன்னு தெரியும்” அப்படின்னு சொல்லி அறிமுகப்படுத்தி என்னை encourage பண்ணினார்.<br /><br />கண்ணதாசன் ஜட்ஜ்க்கு எதிரான போராட்டங்கள் குறித்து...?<br /><br />ஹெராயின் கேசுல 250 கிராம் மேலே இருந்தால் Bail கொடுக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்கு. இவர் 20 கிலோவுக்கு கூட பெயில் கொடுத்திருக்கார். அதோட மதிப்பு 20 கோடி. இவருக்கு 20 லட்சம் கொடுப்பார்கள். அது அவர்களுக்கு பெரிய தொகை இல்லை. இப்படியே 3 மாதத்துல 3, 4 கோடி சம்பாதிச்சார். அவருக்கு எதிராக நாங்கள் கொடுத்த புகாரில் மீண்டும் வழக்கறிஞர் தொழிலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். நீதிபதி கற்பக விநாயகம், நீதிபதி கண்ணதாசனைப் பற்றிச் சொல்லும் போது “சட்டம் தெரியாமல் ஜாமீன் கொடுத்தார். வேறு குறை சொல்லமுடியாது.” என்றார். இதற்குப் பின் அவரை சந்திப்பதை முழுமையாக விட்டுவிட்டேன்.<br /><br />தலித் மக்கள் முதுகில் குத்தும் நீதிபதிகளைக் குறித்து சொல்லுங்கள்.<br /><br />நீதிபதி முகோபாத்தியாய மற்றும் நீதிபதி தனபாலன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் முன்பு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டது பொதுநல வழக்காக விசாரணைக்கு வந்தது. தாக்கப்பட்ட 29 பேரில் 23 பேர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தலித் மாணவர்கள் படிக்க அரசு போதுமான ஒத்துழைப்பைச் செய்வதில்லை என்றும் சொன்னேன். அப்போது முகோபாத்தியாய “Don’t bring caste factor, that is imaginary thoughts” என்றார். தலித் என்ற சொல் சாதியைக் குறிப்பது அல்ல. ஒடுக்கப் பட்டவர் எனும் பொருள் கொண்ட சொல் என்றேன். இவ்வளவுக்கும் தனபாலன் ஒரு தலித் ஜட்ஜ்.<br /><br />இதே போல் பழைய அனுபவம் ஒன்று உள்ளது. கொத்தடிமைகளாக பிடித்து வைக்கப்படிருந்த தலித் மக்களை விடுதலை செய்ய போடப்பட்ட ஆள் கொணர்வு மனுவை விசாரித்த சிவப்பா பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். தங்கராசு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். நீதிபதி சிவப்பா “Dalits are fraud; Dalits are cheat” என்று Open Court லேயே சொல்லியிருந்தார். இதையும் சுட்டிக்காட்டினேன். நீதிபதிகள் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க விருப்பமில்லை என்று எழுந்து சென்றுவிட்டனர். இந்த விஷயத்தை மூத்த நீதிபதி சதாசிவத்திடம் சொன்னபோது முகோபாத்தியாய மிகவும் நல்லவர் என்றும் தலித் என்ற சொல் நல்லதுதானே, அரிஜன் என்பதைவிட நல்ல சொல்லா யிற்றே! தற்போது தலித் என்ற சொல்லைத் தானே அதிகம் பயன்படுத்துகிறோம் என்றார். தலித்துகளை மோசடிப் பேர்வழிகள் என்று சொல்லிய நீதிபதிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பொது விசாரணை நடத்த குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பினோம். போஸ்டர் போட்டோம்; துண்டறிக்கை கொடுத்தோம்.<br /><br />இந்த மாதிரியான பணிகளினால் உங்கள் மீது Contempt of Court எதுவும் வரவில்லையா?<br /><br />“நீதித்துறையினரே! தலித் மக்கள் முதுகில் குத்துவதை நிறுத்துங்கள்!” என்று துண்டறிக்கை போட்டுருக்கோமே. எப்படி செய்வார்கள்? நிறைய விஷயங்கள் வெளியே வந்துவிடும். Contempt of Court போட்டுட்டு தப்ப முடியாது.<br /><br />விருத்தாச்சலம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு பற்றியும் அதன் மூலம் அம்பலத்திற்கு வந்தவர்கள் பற்றியும்...?<br /><br />கண்ணகி வன்னியர் பொண்ணு. துடுக்கான பொண்ணு. முருகேசன் தலித். பொறியியல் பட்டதாரி. இரண்டு பேரும் லவ் பண்ணி திருமணம் பதிவு பண்றாங்க. பொண்ணு வீட்ல தேடறாங்க. முருகேசன் ஊருக்கு வர்றார். அவரைக் கூப்பிட்டு கண்ணகி எங்கே என்று கேட்க, மறுக்கவும், NLC போட்ட 300 அடி போரில் தலைகீழாக கட்டிவைத்து சேந்துகிறார்கள். அப்போது முருகேசன் உண்மையைச் சொல்லிவிடுகிறார். 12 பேர் திரண்டு இருவரையும் அழைத்து வந்து மரத்தில் கட்டி வாயை இறுகக்கட்டிக் கொண்டதால், மூக்கு மற்றும் காதில் விஷயத்தை ஊற்றி கொலை செய்கிறார்கள். அப்போது முருகேசனின் சித்தப்பாவை மற்றொரு மரத்தில் கட்டி வைத்திருக் கிறார்கள். அவர் கண் முன்னாடிதான் இவ்வளவும் நிகழ்கிறது. இருவரது பிணத்தையும் தனித்தனியே எரிக்கிறார்கள்.<br /><br />ஊரே பயந்து போய் கிடக்கு. முருகேசன் அப்பா மற்றும் உறவினர்களை 4, 5 நாட்கள் கழித்து அங்கிருக்கிற தலித் இளைஞர்கள் சென்னை கூட்டி வந்து பத்திரிக்கையாளர் கூட்டம் வைத்தனர். Local பத்திரிக்கைகள் மற்றும் நக்கீரன்ல படம் போட்டு செய்தி வந்தது. அப்ப நான் திருச்சியில தங்கியிருந்தேன். நக்கீரனைப் பாத்துட்டு எல்லாருக்கும் போன் பண்ணி நெய்வேலி துரைக்கண்ணுவுடன் காரில் முருகேசன் வீட்டுக்குப் போறோம். வழக்கு CBI விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை தலித்துகள் 4 பேரை கொலைக்கேஸில் போட்டிருந்தனர். ஆனால் தற்போது சி.பி.அய். முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை 4வது நபராக குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த அய்யாசாமி கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியன் டம்ளரில் ஊற்றிக்கொடுத்த பூச்சிக் கொல்லி மருந்தை முருகேசனின் மூக்கு, வாய், காதில் ஊற்றி சாவுக்குக் காரணமாக இருந்தார் என CBI அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர். கொலை வழக்கு என்பதால் இருதரப்பும் சமரசம் ஆகிவிடும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.<br /><br />சொந்தக்கார பையன் சண்முகம் மூலமாக திருமாவளவனுக்கு போன் போட்டு முருகேசன் அப்பாக்கிட்ட பேச கொடுத்திருக்காங்க. அவர் நலம் விசாரிட்டு, “எதுக்கு வீண் பகை. செத்தவன் திரும்பியா வரப் போறான். பெரிய தொகை தர்றதா சொல்றாங்க. வாங்கிக்கிட்டு வழக்கை நிறுத்தி விடுங்கள்.” என்று சொல்லியிருக்கார். அவர்கள் மறுத்தவுடன் “ஒரு வேளை நீங்க தண்டனை வாங்கிக் கொடுத்திட்டீங்க என்றால் வன்னிய மக்கள் கொதிச்சுருவாங்க. உங்களுக்கு பாதுகாப்பு இல்லை”, என்று சொல்லியிருக்கார். “பையனே செத்துட்டான். நாங்க இருந்து என்ன பண்ணப்போறோம்” என்று முருகேசனின் அப்பாவும் அதற்கடுத்து சித்தப்பாவும் மறுக்க, மேலும் சிந்தனைச் செல்வனுக்கும் போன் போட்டுக்கொடுக்க அவரும் அதே கருத்தைச் சொல்லியிருக்கார்.<br /><br />முருகேசனின் சித்தப்பா எனக்கு போன் பண்ணி, “எங்களை திருமாவளவன் சென்னைக்கு கூட்டிக்கிட்டு வரச் சொன்னான்னு சொல்லி ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறான். விரட்டிகிட்டு இருக்கிறோம்” என்று சொன்னார். அவனை விரட்டுங்கள் எங்கேயும் போக வேண்டாம்” என்று சொன்னேன். வி.சி. விவசாய அணியைச் சேர்ந்த கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி என்னிடம் போனில் “வழக்கு சம்மந்தமாக அய்யா சாமியிடம் பேச, ஆள் அனுப்பி அழைத்து வர அனுப்பினேன். அவர்கள் வர மறுக்கிறார்கள். நீங்கள் சொன்னால் வருவார்கள்” என்றார். நான் “அவர் ளுக்கு வழக்கு சம்மந்தமாக எதுவும்தெரியாது. என்னோட செல்போன் எப்போதும் ஆனில் இருக்கும். மனசாட்சி உள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னுடன் வழக்கு பற்றி பேசலாம்” என்றேன். இதை அப்படியே வி.சி. வழக்கறிஞர் அலெக்ஸிடமும் சொன்னேன். அவர் மிகவும் வருத்தப்பட்டார். பிறகு ஒரு துண்டறிக்கையும் போட்டோம்.<br /><br />இந்த நிகழ்வுக்குப்பின் முருகேசனின் ஊருக்கு உண்மை அறியும் குழு சென்றதே...?<br /><br />மக்கள் சில விஷயங்களை நேரடியாக சொல்ல யோசித்தார்கள். பேரா. அய். இளங்கோவன், கோ. சுகுமாறன், வழக்கறிஞர்கள் லூசி, செபாஸ்டியன், ரஜினிகாந்த், மங்கம்மாள், செங்கொடி, ‘புதுவிசை’ ஆதவன் தீட்சண்யா, மூர்த்தி மற்றும் பலருடன் 17.02.2007 குப்பநத்தத்திற்கு உண்மை அறியும் குழு சென்றது. மாட்டுக்கறி போட்டு சாப்பிட்டுவிட்டு அவர்களிடம் பேசினோம். திருமாவளவன், சிந்தனைச் செல்வன் ஆகியோர் சண்முகம் மூலம் செல்போனில் பேசியதை உறுதி செய்தனர். அதுல கசப்பான அனுபவம் என்னன்னா ‘புதுவிசை’யில ஆதவன் தீட்சண்யா, நான் உள்பட பலரின் வாக்குமூலமாக வடிவமைக்கப்பட்ட கட்டுரையில் நாங்க சொல்லாததை எல்லாம் சொன்னமாதிரி எழுதிட்டார். வழக்கை காப்பத்துறதுக்கு நாங்க கர்ணம் போட்டுக்கிட்டு இருக்கோம். வழக்கின் பின்னணியை அறியாமல் அவர் செயல்பட்டிருக்கிறார். அவர் என்னிடம் பேசியிருந்தால் உண்மை அறியும் குழுவின் அறிக்கையை குழுவினருடன் விவாதித்து வெளியிட்டு இருக்க முடியும். அதை விட்டுவிட்டு கம்பராமாயணம் மாதிரி கண்டதையெல்லாம் எழுதிவிடலாமா?<br /><br />‘புதுவிசை’யை அடிப்படையாக வச்சு ‘புதிய ஜனநாயக’த்துல 2 பக்கம் எழுதியிருந்தார்கள். இது எவ்வளவு அபத்தம் பாருங்க. வழக்கறிஞர் இராஜு ‘புதிய ஜனநாயக’த்தின் தோழர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். வழக்கு பற்றி கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். நேரடியாக தகவல் திரட்டி வெளியிட வாய்ப்புகள் இருந்தும், ‘புதுவிசை’யை ஆதாரமாகக் கொண்டு எழுதியிருப்பதை என்ன சொல்வது? இதற்கு 4 பக்க கடிதம் ஒன்றை மறுப்பாக எழுதினேன். ‘புதிய ஜனநாயகம்’ வெளியிடவில்லை.<br /><br />இந்த வழக்கில் பலர் அம்பலப்பட்டு போவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே?<br /><br />இரத்தினம்: இன்னும் நிறைய இருக்கு. சமீபத்தில் காலமான தோழர் புலவர் கலியபெருமாளின் மகன் வள்ளுவன் என்னிடம் மூன்றுமுறை செல்போனில் பேசினார். திருச்சியில இருக்கும்போது ஒருமுறை பேசினார். அப்பாவின் புத்தகம், மற்றும் உடல் நலம் பற்றி பேசிவிட்டு, முருகேசன் - கண்ணகி வழக்கு நடந்து தண்டனை ஆனா குடும்பமெல்லாம் சிதறிப்போய்டும். அதை கொஞ்சம் சமாதானம் பண்ணுங்க.. அப்படின்னார். அப்போது திருச்சியில் என்னிடம் பேசிக் கொண்டிருந்த சந்திரபோஸ், வடிவேல்ராவணன், பெரியசாமி போன்றோரிடம் சொன்னேன். மறுமுறை என்னிடம் சமாதானம் பேசவேண்டும் என்றபோது நான் மாமா வேலை பார்ப்பதில்லை என்று கடுமை யாகவே பேசினேன்.<br /><br />உங்க குடும்பம் புரட்சின்னு சொல்லி ஜெயில் உள்ள இருந்து பட்டபாடு எனக்குத் தெரியும். நான் மறக்கமாட்டேன். இப்ப நீங்க படையாச்சியா பேசுறீங்க. தோழர்ன்னு சொல்லாமல் இரத்தினம்ன்னு பேரைச் சொல்லுங்க. தோழர்ங்கிற வார்த்தைக்கெல்லாம் ஒரு வரலாறு உண்டு என்று சொன்னேன். இல்ல தோழமையோடத்தான் பேசுறேன்னார். எவ்வளவு சாதீயக் கொடூரம் நடந்துருக்கு. எனக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. பேசாமல் ஒதுங்கியாவது இருக்கலாம். அதைவிட்டு குடும்பம் சிதறிப்போகும் என்பது எவ்வளவு கொடூரமானது என்று சொல்லிட்டு போனை கட் பண்ணிடாதீங்கன்னு சொல்லி “CBI தலித் மக்களோட Statements எல்லாம் தமிழ்ல எழுதாமல் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். நீதிபதி “வக்கீலுக்கு தமிழும் ஆங்கிலமும் தெரியும்”ன்னு சொல்றார். தமிழ்தான் கீழ்கோர்ட்களின் மொழி. எனவே, தமிழ் படுத்தனுன்னு சொல்லி முதன்முதலா உயர்நீதி மன்றத்தில் உத்தரவு வாங்கியிருக்கோம். தமிழ் பாதுகாப்பு இயக்கம் வச்சிருக்கீங்க. இதையாவது செய்யலாமே”, என்று கேட்டபோது சிரித்துக் கொண்டார்.<br /><br />“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்ற புலவர் கலியபெருமாள் புத்தகத்துல வன்னியர் சங்கத் தலைவர் முன்னுரை எழுதியிருக்கார். ஜூனியர் விகடன் அட்டைப்படத்தைப் போட்டு வீரப்பன் என் தலைவர்ன்னு எழுதுகிறார். இவங்களெல்லாம் மார்க்சியம் பேசுறாங்க. SVR இதில் ஏன் எழுதுனார்ன்னு தெரியல.<br /><br />மேலவளவு முருகேசன் கேசு சுப்ரீம் கோர்ட்ல இருக்கு. அதோட நிலைமை என்ன?<br /><br />அந்த வழக்கைக் கெடுப்பதற்கு நீதிபதிகள் சிலர் பண்ணின சேட்டைகள் பல. நான் பல நாட்கள் தூங்கியிருக்கவே மாட்டேன். அரசு சிறப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் கண்ணபிரானை நியமிக்க காலதாமதம் செய்தனர். விசாரணை நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து மற்ற 23 பேரையும் விடுதலை செய்தது. 23 பேர் சம்மந்தமாக, சதி பற்றியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் போதுமான சாட்சியத்தின் மூலம் அரசு நிரூபிக்க வில்லை என்று சொல்லியது. 17 பேரும் மேல்முறையீடு செய்தனர். அரசு தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை. உயர்நீதிமன்றத்தில் 17 பேர் மீதான ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், 23 பேர் மீது போதுமான சாட்சியங்கள் உள்ளன என்றும் அவர்களை விடுதலை செய்தது சரியல்ல என்றும் அரசுத் தரப்பு அப்பீல் செய்யாததால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை என தீர்ப்பு. இந்த நேரத்தில்தான் பெஸ்ட் பேக்கரி தீர்ப்பும் வருது. வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் இருக்கு. இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது.<br /><br />இறுதியாக, தமிழகத்தில் தலித் இயக்கங்களிடையே ஒற்றுமையை எவ்வாறு ஏற்படுத்துவது?<br /><br />தமிழ்நாட்டைவிட மகாராஷ்டிராவில் தலித் இயக்கங்களின் போக்கு மோசமாகவே உள்ளது. இயக்கம் கட்டுவோர் எல்லோரிடமும் நியாயமாக இருக்க வேண்டும். சட்டப்படி நடக்க வேண்டும். அப்பத்தான் மக்களின் மதிப்பைப் பெற முடியும். பள்ளர் பள்ளராகவும் பறையர் பறையராகவும், அருந்ததியர், அருந்ததியராகவும் இருக்கிறார்கள். படித்தவர்கள் இப்படி இருப்பது ரொம்பக் கொடூரமாக இருக்கு. ஆனா, பாமர மக்கள் நல்லா இருக்காங்க. அவங்களுக்கு வழி காட்டுவோர் தான் சரியாக இல்லை. “தலித் இளைஞர்களை சிலரை படிக்க வைத்து, பதவி பெற்றுத்தந்தேன். அவர்கள் தம் மக்கள் நலனில் அக்கறை இல்லாது சுகவாசிகளாக இருக்கிறார்களே” என்று அம்பேத்கர் தனது இறுதி காலத்தில் தேம்பி அழுத வரலாறு இன்னமும் தொடர்கிறது.<br /><br />தமிழகத்தில் இனிவரும் நாட்களில் உருவாகக் கூடிய தலித் குழுக்கள் இடதுசாரி தத்துவத்தை உள்வாக்க முடியும். இனிவரும் இடதுசாரி குழுக்களும் தலித் மக்களை புரட்சிகரமான சக்தி என புரிந்து கொள்ள முடியும். இவற்றின் இணைந்த தோழமையில் தான் சமூக மாற்றத்திற்கான இயக்கப்பணிகள் பரவலாக்க முடியும். தனித்து தலித் அமைப்பு என்பது கட்டப் பஞ்சாயத்து கும்பலாகவும், ரசிகர் மன்ற எடுபிடிகளுமாகவே தலித் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். வர்க்கத்துக்குள் சாதியமும், சாதியத்தில் வர்க்கமும் இந்தியச் சூழலில் பின்னிப் பிணைந்திருப்பதை உணரும் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான, தலித் விடுதலைக்கான உந்து சக்திகளாகி விடுவார்கள். இது மிகவும் சாத்தியமே. நம்பிக்கைத் தளர்வின்றி முன்னோக்கிச் செல்வோம்.<br /><br /><br /><br /><br /></span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7886821998241280081.post-9411241503991564262010-01-13T08:37:00.000-08:002010-11-21T10:28:32.817-08:00இராமன் கடந்த தொலைவு -அ.மார்க்ஸ்<span><span><br />(இராவணனின் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா? “வானரங்களின் உதவியோடு இராமனால் அன்று கட்டப்பட்ட ‘நளசேது’ என்பதும் தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடரான ‘ஆதம் பாலமும்’ ஒன்றா? என்பது குறித்து 1930களில் எழுதப்பட்ட ஒரு அரிய ஆங்கில நூல் பற்றியது இக்கட்டுரை. இன்றைய ‘இராமர் சேது’ பிரச்சினை முளைவிடாத ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டது இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது)<br /><br />தான் படித்துக் கிளர்ச்சியுற்ற நூல்கள் குறித்து உடனடியாக தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார் நண்பர் ராமாநுஜம். ஓர் அரிய நூல் குறித்து சமீபத்தில் அவர் கூறியதோடு தமிழ்ச் சூழலில் அதை அறிமுகப்படுத்தி வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி அதைப் பிரதி எடுத்து உடனடியாக அனுப்பவும் செய்தார். இன்றைய சூழலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை குறித்து, அந்த பிரக்ஞை எதுவுமற்று சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது இந்நூல். ‘Ramayana and Lanka’ என்கிற இந்த சுமார் 100 பக்கம் உள்ள ஆங்கில நூலை எழுதியவர் பரமசிவ அய்யர் என்ற ஒரு தமிழர்.<br /><br />பெங்களூர் நகரத்திலிருந்து பெங்களூர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1940ல் வெளி வந்துள்ளது இந்நூல். தான் மிக மதிக்கும் தனது மூத்த சகோதரர் மறைந்த நீதிநாயகம் சர். கூ.சதாசிவ அய்யர், எம்.எல்., அவர்கட்கு மிக்க பணிவுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்நூல். காலத்தின் தூசு படிந்து கிடந்த இந்நூலைக் கண்டு பிடித்து ராமாநுஜத்திடம் அளித்தவர் திரு. எஸ்.விஜயன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த, எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்ட தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் (ஏ.பி) அவர்கள் நூலாசிரியர் பரமசிவ அய்யரின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />நூலாசிரியர் பரமசிவ அய்யர் ஒரு நாத்திகரோ, இல்லை, அவரே சொல்வது போன்று காந்தியடிகளைப் போல ‘இராமாயணம் என்பது ஒரு வெறும் கற்பனைக் காவியம்’ என்று கருதுபவரோ அல்ல. சிறுவயது முதற்கொண்டு வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தையும், சுந்தர காண்டத்தையும் பலமுறை பயின்றவர். தனது வழிகாட்டியாக கருதிய அவரது தமயனாரோ வால்மீகி இராமாயணத்தை பாராயணம் செய்தவர். பரமசிவ அய்யர் அவர்களின் கருத்துப்படி, ‘பால காண்டம் சிறு பிள்ளைத்தனமான புராணிக சம்பவங்களின் தொகுப்பு; சுந்தர காண்டம் அதீத அலங்காரங்கள் மிகுந்த அழகிய விவரணக் கவிதை’.<br /><br />1922ல் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த போது அவர் இதர மூன்று காண்டங்களையும் ஆழமாகப் பயின்று இருக்கிறார். அயோத்தியா, ஆரண்யா மற்றும் கிஷ்கிந்தா காண்டங்களில் நம்பத்தகுந்த உண்மையான, வரலாறு பொதிந்துள்ளது என அவர் உணர்ந்தார். ‘ஆதிகாவ்யம்’ என இந்திய மரபில் போற்றப்படும் இராமாயணத்தில் அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வு குறித்த ஒரு விமர்சன பூர்வமான ஆய்வை உருவாக்குவதில் அவரது எஞ்சிய வாழ்நாள் கழிந்தது. அயோத்யா காண்டத்தில் (சர்கம்: 8, பாடல்: 16) ஒரு வரி: “கிரஹணத்திற்கு ஆட்பட்ட சூரியனைப் போலவும், உண்மையற்ற ஒன்றைச் சொல்ல நேர்ந்த ஒரு ரிஷியைப் போலவும் தசரதன் (திகைத்து) நின்றான்”. பொய் சொல்ல நேர்வது என்பது எத்தகைய ஒரு பேரவலம் என்று வால்மீகி கருதியது பரமசிவ அய்யரின் கவனத்தை ஈர்த்தது. வால்மீகி முனிவரின் உண்மையின் மீதான விசுவாசத்தை வியந்து ஏற்று அந்த அடிப்படையில் அவரது ஆதி காவ்யத்தின் புவியியலை ஆராயத் தொடங்கினார்.<br /><br />மைசூரில் உள்ள சிவசமுத்திர நீர்மின் ஆற்றல் திட்டத்தை நிறுவிய புகழ்மிக்கப் பொறியாளர் சர்.கே. சேஷாத்ரி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் பரமசிவ அய்யருக்கு கைகொடுத்தது. பிரிட்டிஷ் அரசு வெளியிட்டிருந்த புவியியல் நுண் விளக்க வரைபடத்தாள்களை (Coloured mile to inch Toppo Sheets) பார்த்துப் புரிந்து கொள்ளும் பயிற்சி இதன் மூலம் அவருக்கு வாய்த்திருந்தது. எனவே, அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் ‘சர்வே’ துறையிலிருந்து 63ஆம் எண்ணுள்ள வரைதாளை (Survey of India Standard Sheet - 63) பெற்று அவர் ஆய்வு செய்தபோது வால்மீகி குறிப்பிடும் தமஸா, வேட°ருதி, கோமதி, சயந்திகா, °சிறிங்கவேரபுரம் ஆகிய கங்கையின் வடகரைப் பகுதிகள் அனைத்தும் இன்றும் டோன் (தமஸா), பிஸ்வி (வேடஸ்ருதி), கும்தி (கோமதி), சாய் (சயந்திகா), சிங்ரார் (ஸ்சிறிங்கவேரபுரம்) என கிட்டத்தட்ட அதே பெயர்களில் நிலவுவது அவருக்கு வியப்பளித்தது.<br /><br />தொடர்ந்து அவர் செய்த ஆய்வுகள் அயோத்தியிலிருந்து ‘லங்கா’ வரை ராமர் கடந்த பாதையைத் துல்லியமாகக் கண்டறிய வைத்தது. மிக விரிவான, பிரமாண்டமான வரைபடங்களின் உதவியோடு துல்லியமாக இதை நிறுவுகிறார் பரமசிவ அய்யர். தாமோ மாவட்டத்தின் 800 சதுரமைல்கள் பரப்புள்ள சோனார் ஆறு மற்றும் அதன் கிளை நதிகளான கோப்ரா, பிவாஸ் ஆகியவற்றால் வற்றாது வளமூட்டப்பட்ட ‘ஜனாஸ்தன்’ எனப்படும் வண்டல் படிந்த, மக்கள் செறிவுமிக்க பகுதிகளில் ‘கோண்டு’ பழங்குடியினருக்கும் பரவிவந்த ஆரியர்களுக்கும் இடையில் நடந்த போராட்ட வரலாறே இராமாயணம் என்கிற உறுதியான முடிவுக்கு வந்தார்.<br /><br />இடையில் தமயனார் இறந்துபோன (1928) சோகத்தில் உறைந்து செயலற்றுப் போன பரமசிவர் 1934ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து தனது அரிய ஆய்வு முடிவுகளை ஒரு நூலாக்கி வெளியிட வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். ‘இந்து’ நாளிதழில் வெளியான செய்திதான் அது. பரமசிவரால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரும் கவிஞரான ரவீந்தரநாத தாகூர் அவர்கள் சென்னைக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, “அயோத்தியின் அரசி (சீதை) ஒரு 10 தலை ராட்ஷசனால் கடத்திச் சென்று சிறைவைக்கப்பட்டது உங்களுடைய தீவில்தான் என நான் சிலோன் மக்களிடம் சொன்னேன்”, எனக் குறிப்பிட்டிருந்தார்.<br /><br />“தெய்வீகப்பண்புகள் நிறைந்த அம்மாமனிதர் உதிர்த்த இச்சொற்கள் என்னை அதிர்ச்சியடைய மட்டுமல்ல, வேதனையுறவும் செய்தன” என்கிறார் பரமசிவ அய்யர். கவி தாகூர் மட்டுமல்ல, பண்டித நேரு, ஸ்ரீராஜாஜி ஆகிய பெரும் அறிஞர்களும் கூட இந்தக் கருத்தை அவ்வப்போது உதிர்த்தது பரமசிவ அய்யரை துன்புறுத்தியது. ஜுன் 1934ல் சிலோனில் பேசும் போது பண்டித நேரு ‘லங்கா’வையும் ‘சிலோனை’யும் ஒன்றாகவே குறிப்பிட்டார். திரும்பிவரும் வழியில் சென்னையில் நேருவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது, பண்டித நேரு “அனுமனைப் போல இலங்கையிலிருந்து பறந்து”, வந்ததாக ராஜாஜி குறிப்பிட்டார். இராமாயணப் ‘போர்’ இல்லாமலேயே தனது முயற்சிகளில் நேரு வெல்வார் எனவும் ராஜாஜி வாழ்த்தினார்.<br /><br />அப்போது ராஜாஜி சென்னைப் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரங்களில் உள்ளவர் கள், பொறுப்புமிக்க உயர் பதவிகளில் உள்ளவர்கள், அறிஞர் பெருமக்கள் இருநாட்டு மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடிய, தவறான தகவல்களின் அடிப்படையிலான வார்த்தைகளை உமிழ்வது பரமசிவரைத் துன்புறுத்தியது. “அப்படியானால் சர். பரோன் ஜெயதிலக (அன்றைய இலங்கைப் பிரதமர்?) இராவணனா?” என ஸ்ரீ.எஸ். சீனிவாச அய்யங்கார் விமர்சித்ததும் பரமசிவரைக் கவர்ந்தது.<br /><br />கிட்டத்தட்ட அயர்லாந்தை ஒத்த இலங்கைத் தீவில் இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் வேறுபட்ட, ‘பவுத்த சிங்களர்களுக்கும், பிராமணியப்படுத்தப்பட்ட தமிழர்களுக்கும்’ இடையில் உருவாகியுள்ள பகை உணர்வுக்கு அடிப்படையாக சோழ, பாண்டிய மன்னர்கள் மேற்கொண்ட படையெடுப்புகள், அழித்த பவுத்த கலாச்சாரச் சின்னங்கள், நிறுவிய கட்டாயக் குடியிருப்புகள் ஆகியன பின்னணியில் உள்ளதை நினைவு கூறுகிறார் பரமசிவர். மஹா வம்சத்தில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. அனுராதபுரத்தையும் பொலனறுவையும், தீக்கிரையாக்கி ‘ஜனநாத மங்கலம்’ எனத் தன் பெயரை அவற்றிற்கு ராஜராஜ சோழன் சூட்டியதை நாமும் அறிவோம்.<br /><br />இந்தப் பின்னணியில் பரமசிவ அய்யர் தனது நூலை அச்சிட்டு வெளியிடுகிறார் (1940). புவியியல் அடிப்படையில் கல்வி சார்ந்த ஆழமான அணுகல் முறையுடன் எழுதப்பட்ட இந்நூலை தமிழில் பெயர்த்து வெளியிடுவது இன்றைய சூழலில் மிக அவசியமான பணி, என்ற போதிலும் பரமசிவர் வந்தடைந்த சில முடிவுகளை மட்டும் இங்கு தொகுத்துத் தர முயற்சிக்கப்படுகிறது.<br /><br />கிருஸ்துவுக்கு முந்திய/பிந்திய சமஸ்கிருத இலக்கியங்கள் அனைத்திலும் போஜ மன்னனின் (கி.பி. 1010 - 1050) ஜம்பு ராமாயணம் வரைக்கும் சிங்களம் (சிலோன்) என்பது திரிகூட மலைமீது உள்ள இராவணனின் ‘லங்கா’வுடன் இணைத்துப் பேசப்பட்டதில்லை. குணாத்யாவின் காலம் தொடங்கி சாதவாகனர்களின் காலகட்டத்திலிருந்தே சிங்களம் என்பது நாகரீக மேம்பாடு அடைந்த ஒரு பவுத்த அரசாக குறிப்பிடப்படுகிறது. இரத்தினக்கற்களுக்குப் பேர் பெற்றதாக அது கருதப்பட்டது. கி.பி.330ல் சிங்கள அரசன் மேகவர்மன் பேரரசன் சமுத்ரகுப்தனுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருளுடன் தூது ஒன்றை அனுப்பினான்.<br /><br />புகழ்பெற்ற சீனப்பயணி பாஹியான் (கி.பி.5ம் நூற்றாண்டு) தமிழகத்திலிருந்து 14 நாள் பயணத்தில் சிலோனை அடைந்து புத்தரின் புனிதப்பல்லைக் காட்சிப்படுத்திய திருவிழாவில் கலந்து கொண்டார். ஹர்ஷ மன்னரின் (கி.பி.608-648) ‘இரத்னாவளி’யில் சிங்களம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உள்ளன. இராமாயணம் குறித்த அறிதல் ஹர்ஷருக்கு உண்டு. ‘இரத்னாவளி’யில் மேகநாதன் லட்சுமணனை வென்றது பற்றிய பதிவும் உண்டு. இருந்தபோதிலும் இராவணின் ‘லங்கா’வை அவர் சிங்களத்துடன் ஒன்றாக்கவில்லை.<br /><br />வால்மீகி இராமாயணத்தில் ஒரே ஓரிடத்தில்தான் இராவணனின் இலங்கையும் இன்றைய சிலோனும் ஒன்று என பொருள்படும் குறிப்பு உள்ளது (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்: 41, பாடல்கள்: 17-25). சிங்களம் என்கிற பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் மகேந்திரமலைக்கு எதிரே உள்ள தீவு எனப்படுகிறது. ‘பாண்டிய காவ்வதம்’ அல்லது கொற்கைக்கு அருகில் தாமிரபரணி கடலுக்குள் கலக்குமிடத்தில் அகஸ்தியர் அதை அமைத்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. பின்னாளில் சிலோனையும் கொற்கைத் துறைமுகத்தையும் படையெடுத்து ஆக்ரமித்து, தலைநகர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி சிங்கள மன்னனை வீழ்த்திய இந்திய மன்னனை முகஸ்துதி செய்யும் நோக்குடன் இந்த வரிகளை இடைச்செருகலாகச் சேர்த்தனர் என்பதை விரிவான ஆதாரங்களுடன் பரமசிவர் நிறுவுகிறார்.<br /><br />10ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழமன்னர்கள் (ராஜராஜன், ராஜேந்திரன்) மிகப்பெரிய ஆற்றலாக வளர்ந்த காலத்தில்தான் இராமாயண ‘லங்கா’வும், இன்றைய சிலோனும் ‘ஒன்றாகப்பட்டது’. சுமார் 2 நூற்றாண்டுக் காலம் சூரியவம்சத்தவர்களாகத் தங்களை கூறிக்கொண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்தது. தமிழ்க் கல்வெட்டுக்களில் சிலோன், ‘ஈழ’ என்றே குறிப்பிடப்படுகிறது. ‘ஈழ’ என்பது இலங்கை என்பதன் சுருக்கமாக இருக்கலாம். சோழ மன்னர்களின் காலத்தவரான கம்பர் தனது இராமாவதாரத்தின் கிஷ்கிந்தா காண்டம், நாடவிட்ட படலத்தில் ‘லங்கை’யை தமிழ்நாட்டிற்குத் தெற்கே உள்ளதாக ‘தெளிவாக’ வரையறுத்து விடுகிறார்.<br /><br />சற்று முன் குறிப்பிட்டடபடி போஜனின் காலம் வரை (கி.பி.1050) இராவணனின் ‘லங்கா’வும் இன்றைய சிலோனும் ஒன்றாக்கப்பட்டதில்லை. லட்சுமண சூரிதான் தனது யுத்த காண்டத்தில் முதன்முதலாக ‘சிங்களதீபம்’ என்கிற பொய்யை இடைச்செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும். “(திரிகூட) மலையுச்சி நகரமான லங்காவும் சிலோன் தீவும் மட்டுமல்ல. இராமேஸ்வரத்துக்கும் மன்னார் தீவுகளுக்கும் இடையில் அமைந்த மணற்திட்டுகளின் தொடரான ஆதம் பாலமும், கற்கள், மலைப்பிஞ்சுகள், மரங்கள், முட்புதர்கள் ஆகியவற்றால் இராமனின் உத்தரவின் பேரில் (யுத்தகாண்டம், சர்கம்: 22, பாடல்கள்: 50-70) வானரங்களால் அமைக்கப்பட்ட ‘நளசேது’வும் கூட இவ்வாறு ஒன்றாக்கப்பட்டது”.<br /><br />ஒரு காலத்தில் ஆதம்பாலம் ஒரு தொடர்ச்சியான பூசந்தியாக இருந்து கி.பி.1480ல் புயல் ஒன்றில் சிதைக்கப்பட்டது என ராமேஸ்வரம் கோயில் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. வால்மீகி இராமயணத்தில் குறிப்பிடப்படும் மகேந்திர மலைக்கும் சுவேல மலைக்குமிடையில் 100 யோஜனை நீளமுள்ள வடக்குத் தெற்காகக் கட்டப்பட்ட ‘நளசேது’விற்கும் ஆதம் பாலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டையும் ஒன்றாக்கியதன் மூலம் இராமனின் படையெடுப்பை கொற்கைத் துறைமுகத்திலிருந்து தனுஷ்கோடி என்பதாக மாற்றிய செயல், இராமேஸ்வரத்தில் லிங்கம் நிறுவப்பட்டு இராமேஸ்வரக் கோயில் கட்டப்பட்ட காலத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆக ஆதம்பாலம் ‘நளசேது’வாக - ‘இராமர் சேது’வாக மாற்றப்பட்டது கி.பி.1000-1100 காலகட்டத்தில்தான் என்பது பரமசிவரின் உறுதியான முடிவு.<br /><br />தொடர்ந்து இதையொட்டி பல கதைகள் கட்டப்பட்டன. கிழக்கிலங்கையில் அமிர்தகலி என்னுமிடத்திலுள்ள ஒரு குளம்தான் அனுமான் தீர்த்தம், அதாவது ‘லங்கை’யை எரித்தபின் தனது வால் நெருப்பை அனுமன் அணைத்த இடம் அது எனவும் குறிப்பிடப்படுகிறது. அமிர்தகலியில் உள்ள லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது இராமன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் (சுந்தரகாண்டம், சர்கம்: 54, பாடல்: 50) அனுமன் தன் வால்நெருப்பை சமுத்திரத்தில் அணைத்ததாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.<br /><br />ஈஸ்வரன் அதாவது சிவன் ராட்சசர்களின் கடவுள். இராவணன்தான் லிங்கத்தை வணங்குபவன். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும், இராமன் சென்ற இடமெல்லாம் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக கதை கட்டியது சமயவெறி பிடித்த சைவர்களின் வேலை என்கிறார் பரமசிவ அய்யர். கி.மு. 180ல் ப்ருகத்ரதனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பார்ப்பனன் புஷ்யமித்ர சுங்கனின் காலத்தில் பவுத்தம் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதை டாக்டர் அம்பேத்கர் விரிவாக எழுதியுள்ளதை நாம் அறிவோம் (‘பார்ப்பனியத்தின் வெற்றி’). சிரமண முனிவர்களின் தலைக்கு 100 தினார்கள் பரிசளிக்கப்பட்ட விவரத்தைப் பரமசிவரும் குறிப்பிடுகிறார்.<br /><br />புஷ்யமித்ரனைப் புகழ்ந்து எழுதியுள்ள வடமொழியின் முக்கிய இலக்கண ஆசிரியன் பதஞ்சலி அசோக மன்னனைப் புறக்கணிப்பதையும், அவர் காலத்தில் உயிர்ப்பலிகள் தடுக்கப்பட்டதை மறைமுகமாகக் கண்டித்ததையும் குறிப்பிடுகிறார். இராமாயணத்திலும் கூட இராமனைப் பயன்படுத்தி புத்தரை இழிவு செய்யும் போக்கு மதவெறியர்களால் இடைச்செருகலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமன் புத்தருக்கு முற்பட்டவன் என்பது யாவரும் ஏற்றுக் கொள்ளும் வரலாற்று உண்மை. ஆனால் அயோத்தியா கண்டத்தில் (சர்கம்: 109, பாடல்: 34) இராமன் புத்தரைத் திருடன் எனவும், நாஸ்திகன் எனவும் ஏசுகிறான். எல்லாம் புஷ்யமித்ரன் மற்றும் பதஞ்சலியின் காலத்திற்குப் பிந்திய செயல்கள் என்கிறார் பரமசிவ அய்யர். இப்படித்தான் சிங்களதீபம், திரிகூட ‘லங்கா’வாகவும், மகேந்திர மன்னர்கள் இராவணர்களாகவும், பவுத்த சிங்களர்கள் ராட்சசர்களாகவும், புத்தர் திருடராகவும் கட்டமைக்கப்பட்டது. கி.பி.1000க்கு பின் இதுவே இந்திய வரலாறாக மாறியது. ‘இன்றைய தென்னிந்தியாவின் ஸ்ரீ ராமனான ராஜாஜிவாள்’, “இன்னொரு இராமாயண யுத்தத்தைத் தூண்டாதே”, என சிலோன் ஆட்சியாளர்களை எச்சரிக்கவும் நேர்ந்தது.<br /><br />அயோத்தியாவில் தொடங்கி சரபுங்க மற்றும் பைசுனி ஆறுகளின் சங்கமத்தில் அமைந்த சரபுங்க முனிவரின் ஆஸ்ரமம் வரைக்குமான இராமனின் பயணவழியைத் தெளிவாக வரைகிறார் பரமசிவர். கங்கையின் வடகரையில் உள்ள சிங்ரார் (ஸ்சிறிங்க வேரபுரம்) தொடங்கி அவரது பாதை வருமாறு:<br /><br />1. பிரயாகை, 2. யமுனையின் தென்கரையிலுள்ள புனித ஆலமரம் (வடசியாமா), 3. சித்ரகூடமலை, 4. அத்ரியின் ஆஸ்ரமம், 5. ராட்சசன் விராடன் புதையுண்ட குழி, 6. சரபுங்க முனிவரின் ஆஸ்ரமம். இவற்றில் சிங்ராரும் சித்ரகூடமும் (இராமாயணத்தின் ஸ்சிறிங்கவேரபுரமும்) மாவட்ட கெஸட்டியரில் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. பரமசிவர் விரிவான ஆதாரங்களுடன் பிரயாகை எனப்படுவது கங்கையும், யமுனையும் கலந்து உருவான ஒரு பெரிய ஏரி என நிறுவுகிறார்.<br /><br />தேவலுக்கு அருகில் உள்ள கத்ராவில் (அட்சம் 250 15’, தீர்க்கம் 810 30’) வளர்ந்த புனித ஆலமரம் கஜினி முகமதின் படையெடுப்பின் போது அழிந்திருக்கலாம். அத்ரியின் ஆஸ்ரமம் சித்ரகூட மலையிலிருந்து, 9 மைல் தொலைவிலுள்ள அனசுயா மலைதான். ‘டோப்போ’ வரைபடத்தில் அனசுயா குன்றுகளுக்குத் தெற்கே 3 மைல்கள்் தொலைவில் உள்ள பீரத் குண்டுதான் இராம-லட்சுமணர்களால் விராடன் புதையுண்ட குழி. பீரத்குண்டுக்குத் தெற்கே ஒரு யோஜனை தொலைவில் இரு நதிகளின் சங்கத்தில் அமைந்தது சரபுங்க ஆஸ்ரமம்.<br /><br />விந்தியமலைக்கும், சைவலாவிற்கும் இடையில் உள்ளதாக கூறப்படும் தாண்டகவனம் (தண்டகாரண்யம்) பண்ணாதொடருக்கும் (வடக்கே) விந்தியத்திற்கும் (தெற்கே) இடைப்பட்ட பகுதி. பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட ‘கெஸட்டியர்’ மற்றும் சர்வே மேப்புகளின் உதவியுடன் பரமசிவர் வந்தடையும் முடிவுகள் இவை. ‘லங்கா’வை உச்சியில் கொண்ட சித்ரகூடமலை அட்சம் 250 10’ தீர்க்கம் 800 51’ -ல் அமைந்துள்ளது. மகேந்திரமலையிலிருந்து சுவேல மலையில் உள்ள திரிகூட ‘லங்கா’வை வந்தடைவதற்கு இராவணன், அனுமன், வானரப்படை சகிதம் இராம-லட்சுமணர் ஆகியோர் 100 யோஜனை தூரமுள்ள சமுத்திரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. இவர்களில் யாரும் இடையில் நர்மதையைக் கடக்கநேரவில்லை. நர்மதையைத் தாண்டி இராமன் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் அறுதியாக பரமசிவர். எந்த வகையிலும் இன்றைய இலங்கை மலையுச்சி நகரமான வால்மீகியின் ‘லங்கா’ அல்ல.<br /><br />இராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இராமனின் பஞ்சவடியில் தொடங்கி இராவணனின் ‘லங்கா’வில் முடிகிறது. இராவணன் கழுதை பூட்டிய ரதம் ஒன்றிலேயே சீதையைத் தூக்கி வந்தான். குதிரை இந்திய மிருகமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பம்பை ஏரி, சீதை தன் ஆபரணங்களை எறிந்த குன்று, இராவணன் சுபார்வாவைச் சந்தித்த மலைப்பிளவு ஆகியன இடையிலுள்ள முக்கிய நிலக்குறிகள். மகேந்திர மலையிலிருந்து அனுமன் கடலைக் கடந்தான் என்பதாகவும் குறிப்பு வருகிறது. ஆக மகேந்திர மலைக்கும் ‘லங்கா’ அமைந்திருந்த சுவேல மலைக்கும் இடைப்பகுதி இராவணனால் கழுதை பூட்டிய ரதத்தால் கடக்கப்பட்டது. அனுமன் அதை நீந்திக் கடந்தான். இராமனோ தனது வானரப்படையின் உதவியோடு தற்காலிகப் பாலம் அமைத்துக் கடந்தான்.<br /><br />இடைப்பட்ட கடலைக் கடந்தது (லங்கண) பற்றிச் சொல்லுகையில் இராவணனைக் குறிக்கும் போது செல்லுதல் (கமண) எனவும், அனுமனைக் குறிக்கும் போது நீந்துதல் (பிளவண) எனவும் குறிப்பிடப்படுகிறது. எங்கும் ‘தயண’ (பறந்து கடத்தல்) என குறிப்பிடப்படவில்லை. அதாவது மகேந்திர மலைக்கும் திரிகூடத்திற்குமுள்ள 100 யோஜனைத் தொலைவு என்பது வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் (மார்ச் - ஜூன்) கழுதை வண்டி ஒன்றால் கடக்கக்கூடிய ஒரு ஆற்று நீர் வற்றிய பகுதிதான் என்பது கவனிக்கத் தக்கது. பிற காலங்களிலேயே நீந்துதலோ, பாலமோ தேவைப்படுகின்றன.<br /><br />“யோஜனை’ என்கிற தொலைவு குறித்து இரு விளக்கங்கள் வால்மீகியில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு யோஜனை என்பது 4 குரோசாக்கள் அளவுடையது. 1 குரோசா என்பது 1000 வில்நாண் நீளமுடையது. 1 வில் நாண் என்பது 6 அடி நீளம். எனவே, 1 யோஜனை இந்தக் கணக்கில்படி 41/2 மைல்கள் என்றாகிறது. பிறிதோரிடத்தில் ‘யோஜனை’ என்பது ஒரு நூறு வில் நாண், அதாவது 600 அடி நீளமுடையது எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மகேந்திர கிரிக்கும், ‘லங்கை’க்கும் இடையே ‘கடலால்’ பிரிக்கப்பட்ட தொலைவு ஒரு கணக்கின்படி 450 மைல்கள், இன்னொரு கணக்கின்படி 111/2 மைல்கள். இந்த இரண்டுமே தனுஷ்கோடியையும் மன்னாரையும் இணைக்கும் 30 கல் தொலைவு நீளமுள்ள கடற்பகுதியுடன் பொருந்தி வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.<br /><br />உண்மையை அருளிய குருவின் முன் சீடன் வீழ்ந்து வணங்கியது போல இந்த உண்மைகளை விளக்கப்படுத்திய 55.M என்கிற எண்ணுள்ள வண்ண டிகிரி வரைபடத்தின் முன் தான் வீழ்ந்து வணங்கியதாக உணர்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் பரமசிவர். பரமசிவர் வந்தடைந்த முக்கிய முடிவுகளை மீண்டும் ஒருமுறைத் தொகுத்துக் கொள்வோம்.<br /><br />மகாபாரத்திலிருந்து இலியத் வரையிலான மகா காவியங்களின் அடித்தளமாக சில வரலாற்றுண்மைகள் உள்ளன. அவை குறிப்பிடக் கூடிய புவியியல் பகுதிகள் அடையாளம் காணக்கூடியன. அந்த வகையில் பரமசிவ அய்யர் இராமாயணத்தின் புவியியலைத் துல்லியாக வரைந்து விடுகிறார்.<br /><br />இராமேஸ்வரம் தீவிற்கும் மன்னார் தீவிற்கும் இடைப்பட்ட சுமார் 30 கல் தொலைவிலுள்ள மணல் திட்டுகளின் தொடரான ஆதம் பாலம் வடமேற்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசையில் அமைகிறது. ஆனால் வால்மீகியில் குறிப்பிடப்படும், வானரப் படைகளின் உதவியோடு இராமன் கட்டிய பாலம் மகேந்திரகிரிக்கும் சுவேல கிரிக்கும் இடையில் 100 யோஜனைத் தொலைவு உடையது; வடக்குத் தெற்கு திசையில் அமைந்துள்ளது. இரண்டும் வேறு வேறு. இராவணனின் ‘லங்கா’ இன்றைய சிலோன் அல்ல.<br /><br />‘லங்கை’ச் சுற்றியுள்ள ‘சாகரம்’ என்பது என்ன? திரிகூடம் என்பது இந்த்ரான மலை. 1932 அடி உயரம் உடையது. அதன் முப்புறங்களிலும் கிரண் நதி தழுவி ஓடுகிறது. ‘லங்கை’ திரிகூட மலையில் உச்சியில் உள்ளது. (ஆரண்ய காண்டம் - சர்கம்: 47 பாடல்: 29) ஜபல்பூர் கெஸட்டியர் கூறுவது: “பருவ மாதங்களில் ஹவேலிச்சமவெளி ஒரு மிகப்பெரிய ஏரியைப் போலத் தோற்றமளிக்கும். விந்தியமலை இந்தச் சமவெளியி லிருந்து மேலெழுந்தது போல் தெரியும். இந்த்ரான மலையின் மூன்று பகுதிகளிலும் தழுவிச்செல்லும் கிரண் நதி பனகர் - சிங்கள் தீபம் - மசோலி சாலையில் 15வது மைல்கல் வரை பழங்காலங்களில் ஒரு ஏரியைப் போல் பரவித் தோற்றமளித்திருப்பது சாத்தியம். இந்த மலையுச்சி அமைந்துள்ளது அட்சம் 23 டிகிரி 24’, தீர்க்கம் 79 டிகிரி 54’ல்”. ஆறுகளுக்கு இடையில் உள்ள திட்டுக்களை ‘லங்கா’ என்று அழைக்கும் மரபு இந்தியாவில் உண்டு என்பதை பல ஆதாரங்களுடன் பரமசிவ அய்யர் நிறுவுகிறார். உதாரணமாக கோதாவரி லங்கா, சோனா லங்கா, ரூப்யா லங்கா போன்றவையும், இதேபோல் தால் ஏரியில் உலார் ஏரியும் பரமசிவரால் குறிப்பிடப்படுகின்றன.<br /><br />அடுத்ததாக ராட்சசர்கள் என்பது யார்? வானரர்கள் என்பது யார்? கிட்கிந்தை எங்கே இருக்கிறது? இராம - இராவண யுத்தம் எதைக் குறிக்கிறது? என்கிற கேள்விகள் எழுகின்றன. கோண்டுகள் என்னும் பழங்குடியினரே ராட்சசர்கள். பார்ப்பனியமயமான விபீஷணனும் அவனது வழியில் வந்தவர்களும் ராஜகோண்டுகள் எனப்படுவர் என்றும், சாதாரண கோண்டுகள் (துர்கோண்டுகள்) இன்றும் மத்திய மாகாணங்களில் இராவண வம்சிகள் என்று அழைக்கப்படுவதாகவும் பரமசிவ அய்யர் குறிப்பிடுகிறார். திரிகூட மலை ஒரு காடு நிறைந்த பகுதி. “தாண்டவ வனத்தின் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவோம் (ஆரண்ய காண்டம், சர்கம்: 17, பாடல்: 28)” என சூர்ப்பனகை இராமனை அழைப்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />வன மாமிசங்களில் மிகவும் வேட்கையுடையவர்களாகவும், அழுகிய மாமிசமானாலும் கூட விரும்பி உண்ணுபவர்களாகவும் இவர்களைப் பற்றி மாண்டியா கெஸட்டியர் குறிப்பிடுகிறது. நிமரிலிருந்து ஹசரிபாக் வரை பரவியுள்ள சாத்பூரா, சோட்டா - நாக்பூர் பீடபூமியின் காடுகள் அடர்ந்த பகுதியில் கோண்டு களோடு வசிக்கக் கூடியவர்கள் கோர்க்கர்கள் (குறவர்கள்). இவர்களைப் பற்றி வழிப்பறி செய்யும் குற்றப்பரம்பரையினர் என்ற வகையில் கெஸட்டியர்கள் குறிப்பிடுகின்றன. கோண்டுகள் ‘கோண்டி’ எனப்படும் திராவிட மொழியைப் பேசுபவர்கள், கோர்க்கர்கள் ‘முண்டா’ மொழி பேசுவோர். இவர்களே வால்மீகி குறிப்பிடும் வானரர்கள் என்பது பரமசிவ அய்யரின் முடிவு.<br /><br />வால்மீகி இவர்களை எங்கும் ஆடையுடுத்தாத அம்மணர்களாகக் குறிப்பிடவில்லை. சுக்ரீவன் தன்னைப்பற்றிச் சொல்லும்போது கூட தனது சகோதரன் வாலி எல்லா மக்களையும் அமைச்சர் களையும் அழைத்துத் தன்னைப்பற்றி ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்து ஒற்றைத்துணியுடன் நாடு கடத்தியதாக குறிப்பிடுவான். (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்: 10, பாடல்: 26). சுக்ரீவனும், வாலியும் போரிடுவதற்கு முன் தங்கள் இடைக்கச்சுகளை இறுக்கிக் கட்டிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்: 6, பாடல்: 26, 27). வளமான ஜனஸ்தானத்தைக் கோண்டுகளிடமிருந்து ஆரியர்கள் கைப்பற்றியதற்கான போரே இராம-இராவண யுத்தம்.<br /><br />விரிவான வரைபடங்கள், இராமாயணத்தில் காணப்படும் புவியியற் பகுதிகளைக் குறிப்பிடும் சர்வே வரைபடங்களின் எண், அட்ச, தீர்க்கக் குறிகள் ஆகியவற்றைக் காட்டும் அட்டவணைகள் ஆகியவை நூலில் பிண்ணினைப்பாகத் தரப்பட்டுள்ளன. நூலின் இரண்டாம் பாகத்தில் இராமன் 11000 ஆண்டுகள் வாழ்ந்தது உண்மையா? இராமன் நாடு கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன? லட்சுமணன், பரதன் இவர்களில் யார் மூத்தவர்? வால்மீகியின் மானுடப் பின்புலம், பெண்கள் குறித்த அவரது பார்வை, சீதை லட்சுமணனை அவமானப்படுத்தியது உண்மையா? காயத்ரி இராமாயணம் என்பது என்ன? ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு தமது விளக்கங்களையும் ஆய்வு முடிவு களையும் முன் வைக்கிறார் பரமசிவர்.<br /><br />வால்மீகியின் ‘லங்கை’ வட இந்தியாவில்தான் உள்ளது என்கிற உண்மை புதிதல்ல. மார்க்சிய அறிஞர்களும் வேறு பல வரலாற்று ஆசிரியர்களும், இதனை நீண்ட காலமாகச் சொல்லி வருகின்றனர். கங்கைச் சமவெளியின் அரசு உருவாக்கத்திற்கும் இனக்குழு மக்களுக்குமிடையேயான முரணே இராமாயண வரலாறு என்பதும் முன்பே பேசப்பட்டுள்ளன (பார்க்க: அ.மா. வால்மீகி ராமாயணம் சில குறிப்புகள், விலகி நடந்த வெளிகள்- கருப்புப்பிரதிகள்).<br /><br />பரமசிவ அய்யர் அதிர்ச்சியடையக்கூடிய புதிய உண்மை எதனையும் சொல்லிவிட்டார் என கூற முடியாது. எனினும் அவர் எழுதிய காலம், சூழல், இதற்கென அவர் எடுத்துக் கொண்ட பிரயாசை ஆகியன மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. விரிவான ஆய்வு ஆதாரங்களுடன் தனது முடிவுகளை நிறுவும் பாங்கு குறிப்பிடத்தக்கது. பிறப்பால் பார்ப்பனர் ஆயினும் அவரது நேர்மையும், அறிந்த உண்மைகளை அது தமது கருத்தியலுக்கு எதிரானதாக இருந்த போதிலும், சொல்லத் துணிவதும் நாம் வணங்கத்தக்க பண்புகளாகின்றன. நேர்மை, அறம், அன்பு ஆகிய வற்றைக் காட்டிலும் வேறென்ன பண்பு மானுடமாக இருக்க முடியும்?<br /><br />பரமசிவ அய்யர் எந்தச் சூழ்நிலையில் இதை எழுத நேர்ந்தார் என்பது நம் அனைவரது மனச்சாட்சியையும் உரசிப் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வாக அமைகிறது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று திரிபுகள் ‘உண்மை’களாகவே இறுகி நாமறியாமலேயே நமது ஓர்மையின் ஓரங்கமாகிவிட்ட நிலையில் அதன் வெளிப்பாடுகள், சமகாலத்தில் மானிடர்களுக்கிடையே வெறுப்பையும், பகையையும் ஏற்படுத்திவிடலாகாது என்கிற பதைபதைப்பு... ஓ! எத்தனை உன்னதமானது.<br /><br />மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனச் சொல்வது ரொம்பவும் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கிய ஒன்று. அது ஏதோ ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதையோ, அரசியல் பேசுவதையோ குறிப்பிடுகிற விஷயம் அல்ல. ஜியார்ஜியோ அகம்பன் போன்றவர்கள் குறிப்பிடுவது போல மனிதன் ஒரு ‘Bios Politikon’. அரசியலைத் தாண்டி அவனுக்கு உயிர் வாழ்க்கை கிடையாது. அரசியல் அவனுக்கு மறுக்கப் படும்போது அவன் வெற்று வாழ்க்கைக்கு (Bare Life), அதாவது உயிர் மட்டுமே உள்ள ஒரு புழுவைப் போல ஆகிவிடுகிறான். சக மனிதர்கள், சமூகம் குறித்த எந்தக் கரிசனமும் இல்லாத முண்டங்களாக வாழ்வது குறித்த மன அதிர்வுகளை பரமசிவ அய்யரின் கரிசனம் நம்மில் ஏற்படுத்திவிடுகிறது என்பது மிகையல்ல. அரசியல் பேசுவது தேவையற்றது என்பதை ஒரு கொள்கையாக அறிவிப்பதன் மூலமும், மவுனமாக இருப்பதன் மூலமும் இந்த முண்டங்கள் வெறுப்பு அரசியலுக்கும் பாசிச உருவாக்கத்திற்கும் அளிக்கும் பங்களிப்பை நாம் கவனிக்காதிருக்க கூடாது.<br /><br /></span></span>ஆசிரியர்:மு.சிவகுருநாதன்http://www.blogger.com/profile/15260374305435775258noreply@blogger.com0